Pages

Friday, December 11, 2020

இறந்தவரின் ATM Card

இறந்தவர்களின்  ATM Card லிருந்து  குடும்பதினர் பணம் எடுப்பது சரியா?

முத்துக்குமார் என்பவர் பிரபல வங்கி ஒன்றின் கிளையில் கணக்கு வைத்திருந்தார். அதே வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டும் போட்டிருந்தார். இந்த நிலையில் முத்துக்குமார் எதிர்பாராதவிதமாக மரணமடைந்துவிடுகிறார். அவருடைய ஏ.டி.எம் கார்டு அவருடைய குடும்பத்தாரிடம் இருந்தது. அந்தக் கார்டின் (pin) பின் நம்பர் தெரிந்த காரணத்தால் அவருடைய மனைவி அவர் இறந்த பிறகு, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த பணம் அனைத்தையும் எடுத்தார்.

ஆனால், ஃபிக்ஸட் டெபாசிட்டிலிருந்து அவரால் அவ்வாறு பணத்தை எடுக்க முடியவில்லை.

வங்கிக் கிளையை அணுகி தன் கணவரின் ஃபிக்ஸட் டெபாசிட் தொகையைத் தனக்குத் தருமாறு கடிதம் கொடுக்கிறார். இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழை இணைத்து தன் கணவரின் சேமிப்பு பணத்தை தன் கணக்குக்கு மாற்றித் தருமாறு வேண்டுகோள் விடுத்தார். இறந்தவரின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்த வங்கி அதிகாரிகள் இறப்புச் சான்றிதழில் உள்ள தேதிக்குப் பிறகு, இறந்தவரின் கணக்கிலிருந்து பணம் எடுத்ததை அறிகின்றனர்.

நம்மில் பலருக்கும் இது போன்ற நிலை ஏற்படக்கூடும். வங்கி விதிமுறைகளின்படி இறந்தவரின் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது தவறாகும். அவர்கள் இறந்தவரின் நேரடி வாரிசுதாரர் ஆக இருந்தாலும்கூட இதுபோன்று பணம் எடுப்பது தவறாகும்

ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் விரைவாக வங்கியை அணுகி வாடிக்கையாளர் இறந்த தகவலை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தவுடன் வங்கி உடனடியாக இறந்தவரின் கணக்கை முடக்கி வைக்கும். அதன் பிறகு, அந்த வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து ஏ.டி.எம் வாயிலாகவோ, காசோலை அல்லது வங்கியின் வலைதளங்கள் வாயிலாகவும் பணத்தை யாராலும் எடுக்க முடியாது. இவ்வாறு செய்வது முறையற்ற பரிவர்த்தனைகள் நடைபெறுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்.

இறந்தவரின் கணக்கிலிருந்து பணத்தைப் பெறுவதற்கு வங்கிகள் பல நடைமுறைகளைக் கொண்டிருக்கும். இந்த நடைமுறைகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் சரியான நபரிடம் இறந்தவரின் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் குறுக்கு வழியில் பணத்தை எடுக்க முயல்வது ஒருவருக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

ஒருவர் சேமிப்பு கணக்கு அல்லது வேறு கணக்குகள் தொடங்கும்போது அந்த வாடிக்கையாளர் தமது கணக்குக்கு நாமினியை நியமிக்க வேண்டும். அவ்வாறு நாமினியை நியமித்து இருந்தால் இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வங்கி அதிகாரிகளிடம் அந்த நாமினி வழங்க வேண்டும். மேலும், நாமினியாக நியமிக்கப்பட்டவர் உரிய கே.ஒய்.சி அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறையில் வங்கிகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் இருக்கலாம்.

வங்கி அதிகாரிகள் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைச் சரிபார்த்து அதன் பிறகு, இறந்தவரின் கணக்குகளை முடித்து அந்தப் பணத்தை நாமினிக்கு மாற்றித் தருவர்.

வங்கியில் கணக்கு ஆரம்பிக்கும்போது நாமினியாக ஒருவரையும் குறிப்பிடவில்லை என்றால் இறப்புச் சான்றிதழ் உடன் இறந்தவர்களுடைய வாரிசுதாரர் சான்றிதழை (Legal Heir) இணைக்க வேண்டும். மேலும் ரிஜிஸ்டர் பத்திரத்தில், அனைத்து வாரிசுதாரர்களும், நாங்கள்தான் இறந்தவரின் வாரிசுகள் என்ற உறுதி மொழியை அளிக்க வேண்டும். இந்த உறுதிமொழியை நோட்டரி பப்ளிக் அல்லது அரசு அதிகாரிகளிடமிருந்து உறுதிப்படுத்தி கையொப்பம் பெற்று இருக்க வேண்டும். இந்த நடைமுறையும் வங்கிகளுக்கு இடையே சிறு மாற்றத்துடன் விளங்கலாம்.

இந்தச் சான்றுகளை வங்கி அதிகாரிகள் சரிபார்த்து சேமிப்புப் பணத்தை வாரிசுதாரர்களுக்கு வழங்குவார்கள். இறந்தவர்களுக்கு பல வாரிசுகள் இருந்து அவர்களில் ஒருவருக்கு இந்தப் பணத்தை வழங்க வேண்டும் என்றால் மற்ற வாரிசுதாரர்கள் இந்தப் பணம் தனக்கு வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்ட அந்த வாரிசுதாரருக்கு பணத்தை வழங்குவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கடிதம் கொடுக்க வேண்டும். அந்தக் கடிதத்துடன் மற்ற வாரிசுதாரர்கள் உடைய KYC சான்றுகளையும் வழங்க வேண்டும். இவற்றை வங்கி அதிகாரிகள் சரிபார்த்து குறிப்பிட்ட வாரிசுதாரருக்கு பணத்தை வழங்குவார்கள்.

இறந்தவர் வங்கியில் நகைக் கடன் அல்லது வீட்டுக் கடன் பெற்று இருந்தால் இதே நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். அந்தக் கடன் தொகையை வாரிசுதாரர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். வாரிசுதாரர்கள் கடனை மீட்பதற்கு முன்வந்தால் கடன் நிலுவைத் தொகையை இறந்தவரின் கணக்கில் செலுத்தி பிற சான்றிதழை வழங்க வேண்டும். அவற்றை வங்கி அதிகாரிகள் சரிபார்த்து கடனை முடித்து வைத்து அடமானமாகப் பெற்ற நகைகளையோ, வீட்டுப் பத்திரத்தையோ வாரிசு உரிமையாளரிடம் வழங்குவார்கள்.

வங்கிக் கணக்கில் நாமினியாக நியமிக்கப்படும் நபர் அந்த பணத்தை நிர்வகிக்கும் நபராகத்தான் கருதப்படுவார். நாமினியின் கடமையானது பெறப்பட்ட பணத்தை வாரிசுதாரர்களுக்குப் பிரித்துத் தருவது ஆகும். அவ்வாறு இல்லாமல் நாமினியாக இருப்பவர் முழுவதுமாகப் பணத்துக்கு உரிமை கோர முடியாது.

வாரிசுகளுக்கு இடையே அல்லது நாமினியாக நியமிக்கப்பட்டவருக்குள்ளே பணத்தை பங்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டால் வழக்கு மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும். அந்த வழக்கு தீர்க்கப்படாத வரை வாரிசுதாரர்கள் யாரும் அந்தப் பணத்துக்கு உரிமை கோர முடியாது.a

நமது நாட்டில் உரிமை கோரப்படாத பல லட்சம் கோடி பணம் பல வங்கிகளிலும், தொழிலாளர் வைப்பு நிதியிலும் இருக்கின்றது. இவற்றுக்கு மூல காரணம் வாடிக்கையாளர்கள் முறையாக நாமினியை இந்தக் கணக்குகளில் தாக்கல் செய்யாதது ஆகும். சேமிக்கும் பணத்தைக் குடும்ப உறுப்பினர்களிடம் முறையாகத் தெரிவிக்காததும் இந்தப் பிரச்னைக்கு வழி வகுக்கும். மேலும், அந்தப் பணத்தைத் தெளிவாக உயில் போன்ற ஆவணங்களில் குறிப்பிட்டு தெரிவிக்காதது குடும்ப உறுப்பினர்களிடம் சட்ட சிக்கலை ஏற்படுத்தக் கூடும். அதனால், சேமிப்புக் கணக்குகளில் மட்டுமில்லாது கடன் கணக்குகளையும் குடும்ப உறுப்பினர்களிடம் முறையாகத் தெரியப்படுத்தி வங்கிக் கணக்கு புத்தகத்தில் நாமினியைத் தேர்வு செய்வது இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்றும்.

ஒருவரை தினமும் தொடர்வது மரணம் என்றால் அது மிகையல்ல. தனக்கு ஒன்றும் ஆகாது என்ற அதீத தைரியத்தில் பலர் வங்கிக் கணக்குகளில் முறையாக நாமினி விவரங்களைப் பதிவதில்லை. நம் பணம் நமக்குப் பிறகு முறையாக நமது குடும்ப உறுப்பினர்களுக்குச் செல்வதற்கு உறுதி செய்வது நமது கடமை. அதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுவது மரணத்துக்குப் பிறகு, நமது குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்றும்.

சரி முத்துக்குமார் விஷயத்துக்கு வருவோம்.

முத்துக்குமார் விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அவருடைய மனைவி செய்த தவற்றைச் சுட்டிக் காட்டினார்கள். அவருடைய வாரிசுதாரர்கள் முத்துக்குமாரின் மனைவி பணம் எடுத்ததை ஆட்சேபிக்கவில்லை. அதனால், வங்கி அதிகாரிகள் முத்துக்குமாரின் குடும்ப உறுப்பினர்களிடம் மன்னிப்புக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு ஆவணங்களை சரிபார்த்து முத்துக்குமாரின் பணத்தை அவரின் மனைவிக்கு மாற்றிக் கொடுத்து உதவினர்.

Tuesday, November 24, 2020

ஸ்ரீதர ஐயாவாள்

ஆண்டுதோறும் திருவிசநல்லூர் ஐயாவாள் இல்லக் கேணியில், இன்றும் கங்கை பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம்.

கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணி புரிந்தவர் ஸ்ரீதர ஐயாவாள்.

இவர் தன் பதவி, சொத்துக்களைத் துறந்துவிட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவிசநல்லூரில் குடியமர்ந்துவிட்டார். தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார்.

அர்த்தஜாம பூஜையும் காண்பார்.

சிவன்மேல் அபார பக்தி கொண்டவர்.

இவரது தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும்.

அத்தகைய ஒருநாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த சமையல் தயார்செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, காவிரியில் நீராடச்சென்றார்.

நீராடி இல்லம் திரும்பும்போது எதிரேவந்த வயதான ஏழை ஐயாவாளிடம், "சுவாமி, ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன் " என கேட்டார்.

அவர்மீது இரக்கம் கொண்ட ஐயா அவரை இல்லத்திற்கு அழைத்து வந்தபோது சிரார்த்த சமையல் மட்டுமே தயாராக இருந்தது.

பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல் உணவைக்கொடுத்து பசியாற்றினார். 

சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும்.

மீதம் உள்ளதை பசுவுக்குத்தான் தருவார்கள்.

அந்த நியதியை மீறினார் ஐயாவாள்.

அதனால் கோபமடைந்த அந்தணர்கள் வெளியேறி

"பரிகாரம் செய்தால் தான் நாங்கள் திதி கொடுப்போம்" என்றனர்

' ஒரேநாளில் காசியிலுள்ள கங்கையில் நீராடி விட்டு வா 'என்பதுதான் அவர்கள் சொன்ன பரிகாரம்.

ஒரேநாளில் எப்படி அவ்வளவு தூரத்திலுள்ள காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு அன்றே திரும்பமுடியும்?

இதை நினைத்து வருத்தத்துடன் படுத்தவர் அசதியில் உறங்க, கனவில் சிவன் காட்சி கொடுத்து, உன் இல்லக் கேணியில் நாளை கங்கையைப் பிரவேசிக்கச் செய்வேன் என உறுதியளித்து மறைந்தார். 

இக்கனவை ஐயா எல்லாரிடமும் சொன்னார்.

கார்த்திகை மாத அமாவாசை. 

ஊரே திரண்டு ஐயா வீட்டுமுன் கூடிவிட்டது. 

ஐயாவாள் கிணற்றடியில் நின்றபடி மனம் உருக கங்காஷ்டகம் பாடினார். 

ஐந்தாம் பாடல் பாடியவுடன் கேணியில் கங்கை பொங்கி வழிந்து,

திருவிச நல்லூர் சாலை முழுவதும் வெள்ளமாய்ப் பாய்ந்தோடினாள்!

அந்தணர்கள் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கங்கை நீராடினார்கள். 

இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று,

300 ஆண்டுகளுக்குமுன் கங்கை பொங்கி வந்தது போல, ஐயாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம். நீராடலாம்.

கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும்.

பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு பூஜை செய்வார்கள்.

முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள் நீராடுவார்கள்.

அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்!

Thursday, November 19, 2020

அன்பு மகனுக்கு அப்பா

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது

வசதியாகத்தான்

இருக்கிறது மகனே…

நீ

கொண்டு வந்து சேர்த்த

முதியோர் இல்லம்.

பொறுப்பாய்

என்னை

ஒப்படைத்து விட்டு

வெளியேறிய

போது,

முன்பு நானும்

இது போல் உன்னை

வகுப்பறையில்

விட்டு விட்டு

என் முதுகுக்குப்

பின்னால்

நீ கதறக் கதறக்

கண்ணீரை மறைத்தபடி

புறப்பட்ட காட்சி

ஞாபகத்தில்

எழுகிறது!


முதல் தரமிக்க

இந்த இல்லத்தை

தேடித் திரிந்து

நீ தேர்ந்தெடுத்ததை

அறிகையில்,

அன்று உனக்காக

நானும்

பொருத்தமான பள்ளி

எதுவென்றே

ஓடி அலைந்ததை

ஒப்பீடு செய்கிறேன்!


இதுவரையில்

ஒருமுறையேனும்

என் முகம் பார்க்க

நீ வராமல்

போனாலும்,

என் பராமரிப்பிற்கான

மாதத் தொகையை

மறக்காமல்

அனுப்பி வைப்பதற்கு

மனம்

மகிழ்ச்சியடைகிறது.

நீ விடுதியில்

தங்கிப் படித்த

காலத்தில்

உன்னைப் பார்க்க

வேண்டும் என்ற

ஆவல் இருந்தாலும்,

படிப்பை நினைத்து

உன்னை சந்திக்க

மறுத்ததன்

எதிர்வினையே இது

இப்போது அறிகிறேன்.


இளம் வயதினில்

நீ சிறுகச் சிறுக

சேமித்த

அனுபவத்தை

என் முதுமைப்

பருவத்தில்

மொத்தமாக எனக்கே

செலவு செய்கிறாய்.

ஆயினும்

உனக்கும் எனக்கும்

ஒரு சிறு வேறுபாடு;


நான்

கற்றுக்கொடுத்தேன்

உனக்கு;

வாழ்க்கை இதுதான் என.

நீ கற்றுக்

கொடுக்கிறாய்

எனக்கு,

உறவுகள்

இதுதானென்று!


இந்தக் கவிதையைப்

படித்ததும் கண்கள்

குளமாகின்றது.

தாய் தந்தை மீது பாசம்

உள்ள ஒவ்வொருவரும்

பகிர வேண்டிய

பதிவு இது...

Thursday, November 12, 2020

வைதீகர்கள் மரியாதை

நமது வாழ்நாளில் வைதீகாளை எத்தனை முறை அழைத்து தக்ஷிணை கொடுப்போம்? புண்யாஜனம், ஆயுஷ்ய ஹோமம், உபநயனம், கிரஹப்ரவேசம், கல்யாணம், சில வீடுகளில் திவசம் , ஏதோ சில பேரு வேத பாராயணம் , சுப ஹோமங்கள் வச்சுப்பா , இது அத்தனையும் எத்தனை வருட இடைவெளியில் வருது பார்த்தேளா, இதுக்கு நடுவுல நாம உழைச்சு உத்யோகத்துல முன்னேறி ஆயிரத்துலேந்து பல ஆயிரங்கள், சில பேர் லக்ஷம் கூட எட்டிப் புடிச்சுடறா சம்பாத்தியத்துல, namaku ltc. Hra. Medical ன்னு ஏகப்பட்ட perks , வருஷத்துல போனஸ், performance போனஸ் ன்னு வேற தர்றா, நாமளும் என்ன படிச்சோமோ அதை வச்சுண்டு அனுபவத்தை உபயோகிச்சு தான் மேலே மேலே வளர்றோம், one bhk, அப்பறம் two bhk, three bhk, nnu வீட்டை பெரிசா வாங்கிண்டே போறோம் , வில்லா கூட புக் பண்ணிடறோம், மாருதி கார்ல ஆரம்புச்சு லேட்டஸ்ட் மாடல் வரைக்கும் வாங்கி அனுபவிக்கிறோம், பிள்ளைகளை பல லக்ஷங்கள் கொட்டி படிக்க வைக்கிறோம், பெண்ணுக்கு அதிவிமரிசையா கல்யாணம் பண்றோம், நாம நம்மளோட emplaayerai fulla நம்பி வாழ்கிறோம், தவறே இல்லை , யதார்த்தம் அல்லவா? இந்த வைதீகாளுக்கு நாம தானே employer? அவாளுக்கு என்ன சௌகரியம் செய்து கொடுக்கிறோம்? நம்மளை நம்பித் தானே வேதம் படிச்சுட்டு வர்றா? அவாளுக்கும் குடும்பம் உண்டு, கடமைகள் உண்டு, ஆசைகளும் உண்டு, நியாயம் தானே,? ஒரு பிராமணன் தனது பூரா வாழ் நாள்ல வெகு சில முறையே அவர்களுக்கு தக்ஷிணை, சம்பாவனை பண்றோம், ஆனா என்ன எதிர்பார்கிறோம்னா அவா இன்னிக்கும் 100, 200 ருபாய் தான் வாங்கிக்கணும் 500ரூ கேடடுவிட்டால் கொள்ளை போய்ட்டா மாதிரி அங்கலாய்க்கிறோம், இது சரியா? Job guarantee இல்லாத வேலை. தற்போது காதல் கல்யாணம் அதிகம் ஆனதால் ரோம்ப பாதிக்க பட்டவா, உபநயனத்தைக் கல்யாணத் தோடு வைத்துக் கொள்வதால் அந்த வரவும் போச்சு, என்ன தான் பண்ணுவா ? ஓரு reference book வச்சுக்காம மணிப்ரவாளமா மந்திரத்தை சொல்ற அந்த ரிதம் , முடியுமா நம்மளால, எதுக்கு எடுத்தாலும் கூகுளை நம்பி வாழறோம், அவாளுக்கு எத்தனை ஞாபக சக்தி? பாராட்டறோமா எப்பவாவது? எத்தனை பேரு சத்தமா பேசிண்டே இருந்தாலும் தனது மந்திரம் உச்சாடனம் பிரேக் ஆகாம சொல்ற நேர்த்தி திறமை ,  அதைப் பாராட்டியே ஆகணும் இல்லியா? நம்மாத்து நல்லதுக்காக அவா காயத்ரி ஜெபிச்சு, ஒருவேளை சாப்பிட்டு, விடியக்காலை எழுந்து குளிச்சுட்டு ஓடி வர்ற கடமையுணர்வு, பாராட்டணும் இல்லியா? ஆனா நாம அவாளை எத்தனை துச்சமா மதிக்கிறோம்? அவா பணத்துக்கு ஆலா பறக்கிறா , ஏன் நாம பறக்கலியா? நம்மாத்து பெரியவாளுக்கு மேல் உலகத்துல நல்ல பதவி கிடைக்க அவா தானே வழி வகுக்கரா? நம்ம வாழ்க்கைல வைதீகாள் இல்லாத நிலைமையை யோசிச்சா புரியும் அவா நமக்கு எத்தனை ஒத்தாசை பண்ரான்னு. நாம ப்ராமணாளா இருந்துண்டு அவாளை அவமதிக்கிறது சரியா? வைதீகாளை நன்றியோடும் மரியாதை யோடும் ஆதரிக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.

Monday, November 09, 2020

தெளிவு - IAS அதிகாரி

நாராயணமூர்த்தி ஓய்வு பெற்ற உயர்நிலை IAS அதிகாரி.

ஆரவாரம் மிக்க பணியில் இருந்து ஓய்வுபெற்றபின்

தனது மகன் பெங்களூரில் வாங்கியிருந்த டீலக்ஸ் பிளாட்டில் குடியேறினார்.

அது சுமார் 2000 குடியிருப்புக்கள் கொண்ட மிகப்பெரிய ரிசிடென்ஷியல் காம்பளக்ஸ்.

அதிகார தோரணையில் மிதந்து பழக்கப்பட்ட அவருக்கு இந்த ஓய்வான வாழ்க்கை நிறையவே சலிப்பையும் வெறுப்பையும் தந்தது.

செட்டிலாகி சில நாட்கள் ஆனபின் ஒருநாள் காலாற குடியிருப்பின் கீழ்தளத்தில் அமைந்துள்ள நீண்ட

நடைபாதையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

இவரை யாருக்கும் தெரியாததால் எவரும் கண்டுகொள்ளவில்லை.

யாரிடமும் பேசாது விரக்தியோடு சில நிமிடம் நடந்துவிட்டு அங்குள்ள பூங்காவில் உள்ள பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தார்.

பெஞ்சில் சுமார் 80 வயதுக்கு மேற்பட்ட ஒருமுதியவரும் அமர்ந்திருந்தார்.

அரைக்கை கதர்ச் சட்டை கதர் வேஷ்டியுடன் ஒரு காங்கிரஸ் தியாகி போல் இருந்தார்.

சிறிதுநேரம் சென்றது.

பெரியவர்

"நீங்கள் புதிசா குடி வந்திருக்கீங்களா" என வினவினார்.

அவ்வளவு தான்.

மடைதிறந்த வெள்ளம் போல நாராயணமூர்த்தி தனது சுயபுராணத்தைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

தான் தனது 25 ஆம் வயதில் IAS தேர்வில் சிறப்பாகத் தேறியது

35 ஆண்டு காலம் IAS அதிகாரியாக பல அரசுத் துறைகளில் பணியாற்றியது தான் பெற்ற விருதுகள் மற்றும் சாதனைகள சிறப்புச் செயலராக ஓய்வு பெற்றது

தனது மகன்,மகள் இருவரும்  ஐ ஐ டி யில் படித்து பின் அமெரிக்காவில் செட்டில் ஆனது அவரது நாலு பேரக்குழந்தைகள் என ஒன்று விடாமல் சுமார் 

அரை மணி நேரம் தனது பெருமைகளை சற்று கர்வத்தோடு விரிவாகக் கூறி போரடித்து விட்டார்.

பெரியவர் அமைதி காத்தார்.

வியந்து பாராட்டுவார் என எதிர்பார்த்த நாராயணமூர்த்தி ஏமாற்றமடைந்தார்.

பின்னர் "இங்கு யாரும் ஒருத்தர் கூடவும் சரியா பேசமாட்டேங்கறாளே " என வெகுவாக ஆதங்கப்பட்டார்.

"நீங்க பேசினா அவங்களும் பேசுவாங்க"  என பெரியவர் ஆரம்பித்தார்.

அங்கு சற்று தள்ளி மற்றொரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த தன்னைப்போன்ற ஒரு முதியவரைக்காட்டி அவன் பெயர் ஆறுமுகம் பிள்ளை. என் பால்ய நண்பன். கிளாஸ்மேட்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியராய் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன்.

இங்குள்ள தமிழ்க் குழந்தைகள் ஆங்கிலமும் இந்தியும் சரளமா எழுதும். பேசும். ஆனா தமிழ் பேசவரும். எழுத படிக்கத் தெரியாது. அந்தக் குழந்தைகளுக்குன்னு பிரத்யேகமாக ஒரு தமிழ் ஸ்கூல் நடத்தறான் அவன். இங்கு அவனை எல்லாருமே தமிழ்த் தாத்தான்னு தான் கூப்பிடுவாங்க. அவனை இங்கு தெரியாத ஆளே கிடையாது" ன்னு தூரத்தில் இருந்தபடியே அறிமுகம் செய்தார்.

"அதோ, சிவப்பா உயரமா இருக்கிறவர் தான் வாசுதேவன் நாயர் "என இன்னொருவரை அடையாளம் காட்டினார்.

அவர் ISRO விஞ்ஞானியாய் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றார்.

அடுத்து ஒருவரைக்காட்டி

"அவர் தான் ஸ்ரீதரமேனன். சவுத் சென்ட்ரல் ரெயில்வே ஜெனரல் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்"என அறிமுகம் செய்தார்.

அடுத்து ஆஜானுபாவனாய் இருந்த சர்தார்ஜியைக் காட்டி

"அவர் தான் உத்தம் சிங். இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்

பரம் வீர் சக்ரா விருதுபெற்றவர்" என அறிமுகம் செய்தார்.

கடைசியாக காக்கிபேண்ட் நீல ஷர்ட் போட்டிருந்த ஒருவரைக்காட்டி அவர் தான் கலியமூர்த்தி.

BHEL ல் போர்மேனாய் இருந்து ஓய்வுபெற்றவர்.

இந்தக்குடியிருப்பின் முதுகெலும்பே அவர் தான்.

எங்களது கௌரவ Facility Manager.

எங்களது பிளம்பிங் எலக்டிரிக் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் மகான்." என 

அறிமுகம் செய்தார்.

மேலும் கூறினார்.

"இவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். பொதுவான விஷயங்களைப் பேசி மகிழ்வார்.

யாரும் தங்களது கடந்த கால பெருமைகளை அசை போடுவதில்லை"

மேலும் என்னையும் ஆறுமுகத்தையும் தந்தை போல் பாவித்து மரியாதை செலுத்துவர் என விரிவாக எடுத்துக்கூறினார்.

"தங்களைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே" என நாராயணமூர்த்தி வினவினார்.

பெரியவர் மெதுவாக

நான் இருமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன்.

திருமணம் ஏதும் செய்து கொள்ளவில்லை.

இங்குள்ள குடியிருப்போர் சங்கத்தின் கௌரவத் தலைவராகச் செயற்படுகிறேன்" என ஆர்ப்பாட்டமின்றி கூறினார்.

ஆடிப் போனார் நாராயணமூர்த்தி.

பெரியவர் மேலும் அறிவுரையாக சில விஷயங்களைக் கூறினார்.

ஓய்வு பெற்ற நிலையில் உள்ள நாம் அனைவரும் Fused Bulb மாதிரிதான்.

 பல்புகளில் பலவகை உண்டு.

0 வாட் பல்பு விடிவிளக்காய் பயன் தரும்.

40 வாட் பல்பு குறைவான வெளிச்சம் தேவைப்படும் பகுதிகளில் பயன்படுத்தப்படும்.

டியூப் லைட் பரவலான வெளிச்சத்தைத் தரும்

ஹெட்லாம்ப் காரில் பயன்படும்.

ஹாலஜன் லாம்ப் உயர்நிலைகளில் பயன்படும். ஆனால் எல்லாம் வெளிச்சம் தரும்.

பயன்பாடுகள் தான் வெவ்வேறு. ஆனால் பியூஸ் ஆன நிலையில் அவை மாற்றப்படும்.

அதுபோல நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் வெவ்வேறு பணிநிலைகளை மேற்கொண்டு அதற்குரிய பணிகளைச் செய்கிறோம்.ஓய்வு என்பது Fused Bulb நிலை. இதை உணர வேண்டும்.

நமக்கு மாற்றாக மற்றவர் தயாராக இருக்கையில் வழிவிட்டு ஒதுங்குகிறோம்.

ஆனால் உதிக்கும் சூரியனின் மதிப்பே தனி.

அதனை மகிழ்ச்சியோடு வரவேற்கும் நாம் மறையும் சூரியனை கண்டு கொள்வதே இல்லை.

ஆனால் இரண்டுமே சூரியன் தான்

ஔி தரும் காலைக் கதிரவன் நமது பணிக்காலம் போன்றது

சுறுசுறுப்பாய் இயங்குகிறோம்.

மாலை நேரத்தில் ஓய்வை நாடுகிறோம்.நமது பணிஓய்வும் மாலைக் கதிரவன் போன்றதே.

அமைதி நாடி ஓய்வுற்று இருக்கவேண்டிய மாலை வேளைகளில் காலை நேரக் கனவுகள் அர்த்தமற்றவை. அவற்றை அசைபோடுவது பேதமையே.

மாலை நேர நிஜங்களில்கா லை நேரக் கனவுகள் அர்த்தமற்றவை என போதனை செய்தார்.

மனத் தெளிவு பெற்றார் நாராயண மூர்த்தி.

பின்குறிப்பு:-

1) சுய புராணங்கள் அளவுக்கு அதிகமாகையில் தீரா சலிப்பைத் தரும். நமது அன்பான நண்பர்களைத் தூர விரட்டும்.

Wednesday, November 04, 2020

பணமதிப்பிழப்பு Demonetization

பணமதிப்பிழப்பு.இந்தியாவிற்கு வெற்றி..!

பாகிஸ்தானின் வீழ்ச்சி.!

இந்தியாவில் பணமதிப்பிழப்பு ( Demonetization ) நடவடிக்கை எடுத்து 4 வருடம் காலம் (8 நவம்பர் 2016) ஆகிறது..!

இன்றைய பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சிக்கு, இது தான் காரணம் என்று பலரும் சொல்லுவதை, உலகமே வியந்து பார்க்கிறது. 

இது எப்படி சாத்தியமாயிற்று.?

ஒரு நாட்டின் பொருளாதார விருத்திக்கு முக்கிய காரணம் மக்களிடையே பணம் பரிமாற வேண்டும். அப்போது மக்களுக்கான வேலை வாய்ப்புகள் மட்டுமல்ல, அதன் மூலம் அரசுக்கு வரியாகவும் அதில் பணம் வரும்.

அதற்காக கள்ளச்சாராயம் காய்ச்சவும், கஞ்சா விக்கவும் ஒரு அரசு அனுமதிக்க முடியாதல்லவா..?  

ஏனெனில் அது மக்களின் நலத்தை கெடுத்து, நாட்டில் அமைதியின்மையை புகுத்திவிடும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் அல்லவா..?

சரி, விஷயத்திற்கு வருவோம்..

முதலாவது  பணப்புழக்கம் அதிகரிக்க தொழில்கள் பெருகி, ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்து பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.  

இரண்டாவ்து  அது இல்லாமல் வேறு வழி என்பது, அரசே ரூபாய் நோட்டுக்களை அதிகமாக அச்சடித்து புழக்கத்தில் விடவேண்டும். அப்போது பணப்புழக்கம் அதிகமாகும். ஆனால்  நாட்டின் பண மதிப்பு குறைந்து டாலர் மிக வேகமாக ஏறி விடும்,, இது கொஞ்ச காலம் சந்தோசமாக இருந்தாலும் வருங்காலம் மிக பெரிய சிக்கலை உண்டு பண்ணி விடும் 

அந்த இரண்டாவது விஷயம்தான் 2004 காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியாவில் நடந்தது. 

முதலாவது கிழிந்த நோட்டுக்களை மீண்டும் அச்சடித்து கொள்ளலாம் என்ற அரசு முடிவை தவறாக பயன்படுத்தி புழக்கத்தில் இருக்கின்ற நோட்டுக்களையே UPA காங்கிரஸ் அரசு அச்சடித்தது, அது ஒரு பெரிய தவறு.

இரண்டாவது மிக பெரிய தவறாக, நாசிக்கில் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரங்கள் பழையது ஆகிவிட்டது என்று அதை பாதுகாப்பாக அழிக்காமல், அதை (₹1000, ₹500 நோட்டுக்களை அடிக்கும் இயந்திரம்) ஏலத்தில் விட்டது. அந்த ஏலத்தை பாகிஸ்தான் அரபு நாடுகள் மூலம் எடுத்து, இந்திய ரூபாய்களை இலவசமாக, அதன் இஷ்டத்திற்கு அச்சடித்தது. அதாவாது நமது எதிரிக்கு நம் பணம் அச்சடிக்கும் இயந்திரம் கிடைத்தால் என்னவாகும்?

என்ன ஆனது என்பதை பார்ப்போம்..!

பாகிஸ்தான் இயந்திரத்தை வைத்து மாதம் 1 லட்சம் கோடி அளவில் கள்ள நோட்டு அச்சடித்து இந்தியாவில் புழக்கத்தில் விட்டது.  பாகிஸ்தானுக்கு அதனால் கிடைக்கும் வருமானம் இந்திய மதிப்புக்கு 50 ஆயிரம் கோடி. பாகிஸ்தான் மதிப்புக்கு 1 லட்சம் கோடி..!

ஒரு நாடு உழைக்காமல் ஏற்றுமதி செய்யாமல் GST இல்லாமல்  1 லட்சம் கோடி கிடைக்கிறது என்றால் அது மிக பெரிய வருமானம் அல்லவா.. ?

மேலும்  அவர்கள்  ₹500, ₹1000 நோட்டுக்களை பிரிண்ட் செய்து தீவிரவாதிகளுக்கு நம் பணத்தையே கொடுத்து நம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தியது..!

மேலும் நம்ம நாட்டுக்கு எதிராக உள்ளவர்களுக்கு பணத்தை  கொடுத்து புழக்கதில் விட்டது இன்னும் எவ்வளவோ சொல்லாம்..!

இதை செய்தவர் பொருளாதார மேதை சிதம்பரம் அவர்கள்,, இந்த காரியத்தை செய்யும் போது எந்த நோபல் பரிசு பெற்றவரும் அதை எதிர்க்க வில்லை 

“செட்டி ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போவானா?” என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு அர்த்தம் இப்போது பலருக்கும் புரிய ஆரம்பித்து இருக்கிறது.

அப்படி நடக்கும்போது எல்லோரிடம் ₹100 ஆக இருந்த பணம் ₹1000 ஆக பண புழக்கம் மூலம் தவறான வழியில் பெருகியது. அப்போது விலைவாசிகள் உயரும், பணவீக்கம் அதிகமாகும். அதிகமாகியது.

அப்படி பண புழக்கம் அதிகரித்ததால் இந்தியாவின் பண வீக்கம் வரலாற்றில் முதன் முறையாக இரட்டை இலக்கத்தை தொட்டது காங்கிரஸ் ஆட்சியில்

என்ன தான் நாம் கள்ள நோட்டுக்கள் அச்சடிப்பதை கட்டுப்படுத்தினாலும் பாகிஸ்தான் அடிக்கும் கள்ள நோட்டு ஒரிஜினல் தரத்தில் இருந்ததால், அதை நம்மால் தடுக்க இயலவில்லை. அதனால் பாகிஸ்தான் பர்மா, பங்களாதேஷ் அகதிகளுக்கு இந்திய பணத்தை கொடுத்து இந்திய ராணுவம் மீது தினந்தோறும் காஷ்மீரில் கல்வீச வைத்தது. 

அது மட்டுமல்ல இந்திய அரசியல் ஆட்சியாளர்களோடு சேர்ந்து கொண்டு பணத்தை நேரடியாக புழக்கத்தில் விட்டு நாட்டின் பொருளாதரத்தின் ஆணியான ரிசர்வ் வங்கியையே ஆட்டம் காண செய்தது.

பாகிஸ்தான் அரசை நாம் நோட்டுக்களை அச்சடிக்க முடியாமல் தடுக்க வேண்டும். அதை செய்ய உலக அரங்கில் இந்த விஷயத்தை எடுத்துச்செல்ல வேண்டும், ஆனால் அதை செய்ய முடியாததிற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளது. 

முதலில் இந்தியா இந்த ரகசியத்தை வெளியில் சொன்னால் ரூபாயின் நம்பகத்தன்மையே கெட்டுவிடும். 

இரண்டாவது, இந்திய ரிசர்வ் வங்கியின் Integrity கேள்விக்குறியாகிவிடும். இவ்வாறு நடந்தால் நாடே திவலாகும் என்ற நிலை..

மேலும் நோட்டுக்களை அடிக்கும் இயந்திரத்தை ஏலம் விட்டது நீங்கள் தானே என்று உலக நாடுகள் கேக்கும்

இந்த நேரத்தில் தான் மோடி அவர்கள் பிரதமராக பதவி ஏற்றார்.. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தார்

அதை நிறுத்த வழி என்ன..? 

அதற்கு மாற்று வழி, பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது.. அது இரண்டு நாடுகளும் அணு ஆயுதம் வைத்திருந்ததால் முடியாது என்றானது. அதனால், நம் அரசுக்கு பணம் மதிப்பு இழப்பு என்ற ஒரு வழியை தவிர வேறு வழியே இல்லை. 

இருந்தும் அது போன்ற முயற்சிகள் உலகத்தில் முன்பு முயற்சிக்கப்பட்டு சில நாடுகளில் தோல்வி அடைந்தது. அதில் இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது இந்தியாவிலும் ஒருமுறை முயற்சித்தும் தோல்வி கண்டது.

மிகப்பெரிய ஒரு ஆபரேஷன் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை. மோடி அரசு நாட்டின் நலன் கருதி, வெற்று அரசியலாக்காமல் துணிவாக எடுத்தது. இது வாஜ்பாயால் கூட முடியாது என்பது உண்மை..!

பணமதிப்பிழப்புக்கு பின்பு அரசு எதிர்பார்த்த பணத்தை விட அதிகமாக ரிசர்வ் வங்கிக்கு ₹1000, ₹500 நோட்டுக்கள் வந்தாலும், அதை மோடி அரசியலாக்க முடியாது.

ஏனென்றால் அது இந்திய RBI இன் integrity க்கும், இந்திய ரூபாயின் நம்பகத்தன்மைக்கும் கேடாக முடியும் என்பதால் மோடி அதை ஒரு போதும் செய்ய வில்லை! அதனால்தான் அவர் ஒரு சிறந்த தேசியவாதி என்று இந்த உலகம் அவரை இன்று மதிக்கிறது. 

இவ்வளவு பெரிய காரியத்தை செய்து சாதித்து விட்டார் என்பதை உலகம் அறிந்ததால் அவரை அமெரிக்கா, ரஷ்யா, ஃப்ரான்ஸ், ஜப்பான் போன்ற பல நாடுகள் அவரை மிகவும் மதிக்கிறார்கள்.

அது மட்டுமா, போர் செய்யாமல், உலக நாடுகளிடம் கெஞ்சாமல் பாகிஸ்தான் பொருளாதாரத்தை நீர்முலம் ஆக்கினார். மேலும் நம் பொருளாதாரத்தை உயர்த்தியும் விட்டார்..!

பணமதிப்பு இழப்பு நடந்த உடனே காஷ்மீரில் நடந்த கல்வீச்சு, பாகிஸ்தான் மூலம் பணம் மதிப்பு இழப்பால் அந்த நாடு அடிக்கும் ₹500, ₹1000 நோட்டுக்கள் செல்லாதாதாக போனதால் சப்ளை நின்றது, கல்வீச்சும் அப்படியே குறைந்து பின் நின்றது. அது மட்டுமல்ல பாகிஸ்தானின் பொருளாதாரமே வீழ்ந்தது. இன்று அந்நாட்டை உலக நாடுகள் கைவிட்டு விட்டன. இது தான் சாணக்யத்தனம்...!

அவ்வளவு பகைமை உணர்வுகளையும் உள்ளே அடக்கிக் கொண்டு, புத்திசாலித்தனமாக இந்தியா இதைச் செய்து முடித்தது. பல இன்னல்களை மக்கள் சந்தித்தாலும், மீண்டும் மோடிக்கே வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தனர்.

பாரத் மாதா கி ஜெய்.

Sunday, November 01, 2020

வெள்ளியங்கிரி ஆண்டவன் போட்ட பிச்சை

 ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் அதிபர் சிவகணேஷ் அவர்களை சந்திக்க இரவு 10.30 மணிக்கு அவரின் ஜவுளி சாம்ராஜ்ஜியத்திற்கு சென்றிருந்தோம்.

தீபாவளி சமயம் என்பதால் மிக பிஸியாக காணப்பட்டார். ஒருவழியாய் பணிகளை முடித்து இரவு 11.30க்கு நம்மோடு பேசத் தொடங்கினார்.  கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசியிருப்போம்.

கோவை நகரில் இருந்து தொலைதூர புறநகர் பகுதியான நரசிபுரத்தில் இருக்கும் அவரின் கோசாலைக்கு செல்ல தற்போது தார்சாலை வசதி உள்ளது. ஆனால் ஐந்தாறு ஆண்டுகள் முன்பு வெறும் மண்சாலைதான். சிவகணேஷ் அவர்கள் நகரில் இருக்கும் தன் ஜவுளிக்கடை பணிகளை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு 30 கிலோமீட்டர் பயனித்து நரசிபுரம் கோசாலை பணிகளை பார்வையிட புறப்படுவாராம். நள்ளிரவு வரை மாடுகளின் நலனை பார்வையிட்டு விட்டுதான் வீடு திரும்புவாராம். 

பசுக்களுக்காக உயிரையும் கொடுக்க தயங்காதவர். கொல்லப்பட இருந்த பசுக்களை மீட்பதற்கு இவர் சந்தித்த சவால்களையும், எதிர்கொண்ட வழக்குகளையும் விவரிக்க ஒரு திரைப்படமே எடுக்கலாம்.  இத்தனை அசாத்தியமான செயலை சாதித்துள்ள சிவகணேஷ் அவர்களை, இது குறித்து கேட்ட போது...."நான் என்ன செய்தேன் ? எல்லாம் அந்த வெள்ளியங்கிரி ஆண்டவன் போட்ட பிச்சை" என்கிறார். தன்னுடைய ஆசானாக சத்திரபதி சிவாஜி மகாராஜை கருதுகிறார் கர்மயோகி சிவகணேஷ்.  அடுத்த ஜென்மத்தில் கால பைரவராக பிறப்பெடுத்து அதர்மத்தை வேரறுக்க வேண்டும் என்கிறார்.  அவர் தனிப்பட்ட முறையில் பகிர்ந்த பலவற்றை பொதுவெளியில் பகிர்ந்திட இயலாது. 

வெள்ளியங்கரி ஆண்டவர் மீது அத்தனை பக்தி. அவர்தான் எனக்கு அம்மா, அப்பா, நண்பன் ஏன் மகன் கூட என்கிறார். காசிக்கு கிட்டத்தட்ட இருநூறு முறை சென்று வந்து விட்டாராம்.

கிட்டத்தட்ட மூவாயிரம் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கின்றார். 

இத்தனை அசாத்தியமான செயலை புரிந்து வரும் தனியொருவன் சிவகணேஷ் அவர்களை,  அவரின் மிகப்பெரும் ஜவுளிக்கடையில் மிக எளிமையான ஒரு கடைநிலை ஊழியராகதான் நாம் பார்க்க இயலும். அத்தனை எளிமை. அதுவும் செயற்கைதன்மை இல்லாத இயல்பான எளிமை. 

மிக ஏழ்மையான இளமைப் பருவத்தை கடந்து வந்தவர். சிறுவயதில் அவரின் வீடு மழை பெய்தால் ஒழுக வேக வேகமாய் சென்று பாத்திரம் எடுத்து வந்து வைப்பார்களாம். நேர்மையாலும், கடின உழைப்பாலும் மேலே வந்தவர். இன்றும் கூட தன் சட்டை அழுக்காகாமல் வீடு திரும்புவதில்லை அந்த கர்ம யோகி. 

இதில் ஹைலைட் என்னவென்றால், பளபளக்கும் அதிநவீன 75000 சதுர அடி பரப்பளவில் உள்ள ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தின் உரிமையாளர் சிவகணேஷ் வசிப்பது பசுக்களோடு பசுக்களாக, ஷீட் போட்ட ஒரு கொட்டகையில் தான்.  பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு விதவிதமான புத்தாடைகளை விற்பனை செய்பவர்,  தன் அறையில் அணிவதற்கு பயன்படுத்துவது ஒரு சில காவி வேட்டிகளைதான். அவரின் சாதாரண இரும்பு கட்டிலை சுற்றியும் பசுக்கள்தான் அமர்ந்திருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் வாங்க என் பேலஸுக்கு என்று அவர் கூட்டிப் போனதுதான். 

துறவிகளும், மகான்களும், பற்றற்ற துறவு நிலையில் எங்கோ இமயமலையில் மட்டும் வசிப்பது இல்லை. நம்மோடு ஒருவராகவும் வாழ்கிறார்கள் என்பதற்கு கர்மயோகி சிவகணேஷ் அவர்கள் ஒரு சிறந்த உதாரணம்.

அவரின் கோசாலை குறித்து விரிவாக பார்க்க விரும்பினால்

கீழ்கண்ட வீடியோவை பார்க்கவும்.

https://youtu.be/X7Lw0Dha9b0

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

The Udyan Effect

In the year 2006, I had finished college and was striving hard to make a living in Dubai. I was going through the worst phase of my life when I met a man named Udayan through a friend. Udayan was working as a delivery boy in a flower shop in Dubai and was earning just 900 dhirams a month as salary. He was almost ten years older to me and used to refer to me as Aniya, which means younger brother in Malayalam. So I called him Ettan or elder brother.

My Dubai visa was going to expire in a few days. I had to stay for atleast 15 more days to get a small payment from a company that I worked for. 

Also, my financial situation was such that I couldn't afford to buy a ticket to fly back to India. To add to my woes, I was on the verge of getting kicked out of the place I was renting. I was desparate for 300 dirhams that amount would tide me over till I received my payment. But everyone I had asked had refused my request for a loan.

At last, I called Udayan Ettan for money, well aware of the fact that his salary was only 900 dirhams, most of which he had to send to his family back in India. As soon as I told him what the problem was, he asked me whether I had enough money to come to Mamzar, the area where he worked. When I kept quite, he realised that I didn't, so he asked me to take a cab from Sharjah and call him once I reached Mamzar.

As promised, he was waiting for me near the Al Mamzar Centre.

He paid for the cab, took me to a nearby cafeteria and after treating me to dinner, gave me the 300 dirhams that i had asked for.  He told  the owner of the dinner that i was his younger brother and that whenever I come there to eat , the owner should write it in his account book, which he would settle at the end if the month. He even offered me a bed in the room that he was staying in. But I told him goodbye and came back to Shajah.

15 days later, i got my pending payment and on the way to airport, i went to return the money i had borrowed from Udayan ettan. At first, he kept insisting that i should keep it but at last, he accepted 200 dirhams and told me to keep 100 dirhams if I really thought of him as my elder brother.

Years passed.  In 2011, i saw him again standing in front of my shop in Trivandrum. He was searching for me.  The old jovial Udayan ettana looked very different now. He had lost his job and was staying at his wife's parents house with his 2 kids. When he started speaking to me, I realised he was a little drunk.  He looked at my clothes, smiled and innocently teased me. You have made money aniya. You are rich now. 

I smiled back and a few minutes later we went to the tea shop nearby. As we sipped tea, he shared with me how difficult his life was with no job and an ongoing case at the court. I offered him Rs.1500, which was roughly equivalent to the 100 dirhams that he had given me then. He accepted the money without hesitation.

A few days later, he came again to the shop, called me outside and asked Rs 500 more. After some more time, he came again and asked for another Rs 1000. My cousin , friends and staff started noticing the frequent payoffs and told me that the man was exploiting me by calling me aniya.

I don't part with my money if  I don't feel like it and I can easily refuse to give money to even my best friend, but for some odd reason, i could never say no to Udayan ettan.  My brain telling me that he was exploiting me, but my heart said, "He gave you 300 dirhams when he earned only 900 himself.  He didn't even expect the money back. So even if you are giving him a little money now, it is far smaller gesture than what he did for you back then".

Inspite of all these justifications, I sometimes got pissed off at him for coming to me drunk and asking for money. He would listen to me like a child and come back few days later with a five rupee chocolate or Prasad from some temple. My cousin and staff would tease me and say, "Now here's a man who sells five rupee chocolates and free sindoor from the temple to you for a thousand rupees*.

Years passed. One day when I reached my shop in the morning, my employer told me that the man who regularly took money from me had come and gone just a few minutes ago.  I smiled thinking it was great that I had reached late, otherwise I would have lost some more money.

I sat at the counter and the employee brought me a packet that Udayan Eytan had left for me.  I saw the square package covered with newspapers and thought that it was probably a packet of biscuits. I wondered if that meant that he was going to ask me for a bigger sum of money. But I was amazed when I opened the packet and found two bunches of 500 rupee notes.  There was a total of 1 lakh rupees along with a grimy old piece of paper with writings on it in different colours in Malayalam where Udayan ettan had kept an account of the dates and the amounts he had taken from me. The loan came to a total of 77,350 rupees. 

Still reeling, I phoned him and he started giggling. He said, "I sold my ancestral property near Chempazanthy for 45 lakhs rupees. Today was the registration and I received the entire amount. That's why I came to thank you for helping me and being patient for the last two years".

But why did you pay me extra?

He laughed and told me  in his usual tone, I am the elder brother and you are my aniya. An aniya can always take money from his elder brother but not the other way around. I will come and see you in a day or two".

He ended the call.

I walked to the Bank to deposit the money and thought about how genuine Udayan ettan was. I had assumed that he addressed me as aniya just to be able to borrow money from me, if it were not for his helping me back in Dubai, U would never have helped the man.

He had  never told me even once that he was planning to return the money he was taking from me, simply because he didn't consider me any less than his sibling. I always feel proud about my achievements, but that day I felt happen than ever, not because I had got the money back but because a once perfect stranger considered me his own. I felt honoured to be his aniya.

Have you met your Udayan ettan yet?  Don't be  fooled, they may not be the best dressed or the most well behaved. You can't meet them by design, either.

In the most unexpected moment, one day, they will just happen to you.

####################

FROM

SUDHA MURTHY, AUTHOR

BOOK

SOMETHING HAPPENED ON THE WAY TO HEAVEN

Friday, October 30, 2020

மறைக்கப்பட்ட வரலாறு

 ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையரை நமக்குத் தெரியும்.

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.

1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.

2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.

ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு  நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது..

ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற பஞ்சாப் இளைஞன் சபதம் செய்தான்...

சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங்.

உத்தம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இதை “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறி காந்தி அறிக்கை வெளியிட்டார்.

நேருவும், காந்தியும் பஞ்சாப் காங்கிரஸ் அரசை, உத்தம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்ற வைத்தனர்.

இதனை கடுமையாக எதிர்த்து, உத்தம் சிங்கின் செயலைப் பாராட்டி கடிதம் எழுதினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இதனால் காந்தியின் வெறுப்புக்கு ஆளானார்.

காந்திக்கும் நேதாஜிக்கும் பிளவு ஏற்பட்டு காந்தியால் நேதாஜி காங்கிரசில் இருந்து திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.

"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்துவிடுங்கள்.

இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"என்று முழங்கினர் உத்தம் சிங்.

ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிட்டார்.

“தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங்.

“உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்துவர வேண்டும்” என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம்மீதி எலும்புக்கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.

உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜ மரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.

தேசத்தை நேசிக்கும் அனைவரும் அவரது தியாகத்தைப் போற்றுவோம். எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் உத்தம்சிங் பற்றி? 

இந்த பதிவைப் படித்தறிந்து இக்கால தலைமுறையினரையும் உத்தம் சிங் பற்றி தெரிந்து கொள்ள செய்யுங்கள்.

திருச்செந்தூர் முருகப்பெருமானின் விக்கிரகம்

ஒருமுறை டச்சுக்காரர்கள் திருநள்ளாறு என்னும் திருத்தலத்திற்குச் சென்று அங்குள்ள நடராஜர் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு கப்பல்மூலம் கடல் வழியாகத் திருச்செந்தூர் வந்தனர். திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சண்முகர் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு தங்கள் நாட்டுக்குக் கப்பல்மூலம் செல்ல ஆரம்பித்தனர்.

அந்த நேரம் - மிகப்பெரிய அளவில் காற்று வீசியதால் கடல் கொந்தளித்தது. கடல் கொந்தளிப்பால் அவர்களால் மேலும் பயணம் செய்ய இயலவில்லை.

கப்பல் கடலில் மூழ்கும் அளவுக்கு ஆபத்து அதிகமானது. அப்போது கப்பலில் பயணம் செய்த ஒருவர் “நாம் இந்த திருச்செந்தூர் முருகப்பெருமானின் விக்கிரகத்தை திருடி எடுத்துக்கொண்டு வருவதால்தான் கடல் கொந்தளிக்கிறது. எனவே என்ன செய்ய வேண்டும்” - என பதட்டத்தோடு கேட்டார். பின்னர், கப்பலில் பயணம் செய்த அனைவரும் “இந்தச் சிலைகளை கடலில் போட்டுவிடுவோம்“ என்ற முடிவுக்கு வந்தனர்.

முதலில் நடராஜரை எடுத்து அந்தச் சிலைகளை அதை கயிற்றில் கட்டி இறக்கினார்கள். அப்போதும் கடல் கொந்தளிப்பு அடங்கவில்லை. பின்னர் முருகன் சிலையை எடுத்து கயிற்றினால் கட்டி கடலில் போட்டார்கள். அதன் பின்னரும் கொந்தளிப்பு தொடர்ந்து இருந்தது.  கப்பலில் பயணம் செய்த அனைவரும் பயந்து நடுங்கினார்கள். “இது தெய்வ குற்றம்....” என்று நினைத்து கப்பலின் பயணத்தை வேறு திசைக்கு மாற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்.

முருகன் விக்கிரகம் திருடப்பட்டுவிட்டது என்ற செய்தி அறிந்ததும் திருச்செந்தூர் நகரிலுள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.  இந்தநிலையில் செய்தி அறிந்த திருநெல்வேலியை ஆட்சி செய்த வடமலையப்ப பிள்ளை மனம் வருந்தினார். திருச்செந்தூரில் முருகன் சிலை இல்லை என்பதால் மனம் கலங்கி சாப்பிடாமல் பல நாட்கள் இருந்தார். மேலும் புதிதாக முருகன் விக்கிரகம் ஒன்றையும் செய்து அதனைத் திருச்செந்தூர் கோவிலில் வைக்கவும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்.

அப்போது வடமலையப்ப பிள்ளையின் கனவில் முருகப் பெருமான் தோன்றினார். “என்மீது பக்தி கொண்ட வடமலையப்பரே... என்னைக் காணவில்லை என நீர் வருத்தப்பட வேண்டாம். நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சற்று தொலைவில் கடலுக்குள்தான் உள்ளேன். நீர்... படகின்மூலம் கடலில் பயணம் செய்தால் கடலில் ஓர் எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அந்த இடத்தில் கடலுக்கடியில் நான் இருக்கிறேன். எலுமிச்சம்பழம் மிதக்கும் இடத்திற்குமேல் ஒரு கருடன் வட்டமிடும். அந்தக் கருடன் பறக்கும் இடத்தை வைத்தே நீர் என்னைக் கண்டுகொள்ளலாம்” - எனக் கூறினார்.

முருகப் பெருமான் தனது கனவில் கூறியவற்றை நினைவில் வைத்துக்கொண்டு வடமலையப்பர் சிறிய படகில் புறப்பட்டார். கடலில் முத்தெடுக்கும் திறன்கொண்டவர்களையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். முருகப் பெருமான் கூறியபடி கருடன் வானத்தில் வட்டமடித்தது. அந்தக் கருடன் பறக்கும் இடத்திற்குக் கீழே கடலில் ஒரு எலுமிச்சம்பழம் மிதந்தது.

எனவே, - அடையாளம் கண்டுகொண்ட வடமலையப்ப பிள்ளை உடன் வந்தவர்களை கடலில் மூழ்கி முருகப் பெருமான் விக்கிரகத்தை எடுத்துவரச் சொன்னார்.  கடலில் மூழ்கியவர்கள் கையில் முதலில் திருநள்ளாறு நடராஜர் விக்கிரகம் கிடைத்தது. ஆனால் முருகப்பெருமான் விக்கிரகம் கிடைக்கவில்லை.

வடமலையப்பப் பிள்ளை மிகவும் மனம் வருந்தினார். “முருகப்பெருமானே! நீர் எம் கனவில் வந்தீர்! உம்மைக் கடலில் காணலாம் என்று சொன்னீர். இப்போது உம்மைக் காணவில்லையே” - எனக் கவலையோடு கடலில் குதித்தார் வடமலையப்பப் பிள்ளை. கடலில் முருகப்பெருமானைத் தேடினார். சிறிதுநேரத்தில் முருகப்பெருமான் விக்கிரகம் வடமலையப்பப் பிள்ளை கையில் கிடைத்தது. அந்த விக்கிரகத்தை படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்தார்கள்.  பின்னர் 1653ஆம் ஆண்டு தை 29ஆம் தேதி முருகப்பெருமான் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார்கள்.

கடலில் சிலகாலம் இருந்ததால் சண்முகரின் முகத்தில் கடல்நீர் அரித்துவிட்டதாக ஆன்மீக அன்பர்கள் கூறுவார்கள். கடல்நீர் அரித்த நிலையை இன்றும் சண்முகரின் முகத்தில் காணலாம். (நெல்லை கவிநேசன் கட்டுரையிலிருந்து)

Thursday, October 29, 2020

மதுரை மீனாட்சிக்கு காணிக்கை

 நீங்க என்ன பெரிய பீட்டரா...?? 

எப்படி வந்தது இந்த வழக்கு சொல்...???

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்

மதுரையில் எப்போதும் அம்மாவின் ஆட்சிதான். மற்ற ஆலயங்கள் போலில்லாமல் மீனாட்சி கோவிலில் பெண் தெய்வம் அம்மன்தான் முதலில் வணங்கப்படுகிறார். சுந்தரேஸ்வரர் பக்கத்து சன்னதியில் பொறுமையாக இருந்து அன்புடன் அருள்பாலிக்கிறார்.

மீனாட்சிக்கு நகைகள், பொக்கிஷங்கள், தான பட்டா நிலங்கள் என்று அளவிட முடியாத சொத்துக்கள் இருக்கின்றன. இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்தது, விரிவானது இந்த நகை கலெக்ஷன். இந்த நகைக்குவியலில் உள்ள ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை இருக்கிறது.

அயல் தேசத்து மன்னர்கள், கொள்ளையர்களின் படையெடுப்பு காலங்களில், அம்மனின் நகைகள் ராமேஸ்வரம் போன்ற தூரதேசக் கோயில் லாக்கர்களில் டெபாசிட் பண்ணப் பட்டிருக்கிறது.

1837 முதல் இந்தியாவை ஆண்ட விக்டோரியா மகாராணிக்கு வைர நகைகள் என்றாலே தனி காதல். தனது கணவரிடம் சொல்லி உலகில் உள்ள பிரபல வைர நகைகளை கைப்பற்றித் தனது அலமாரியில் சேர்த்து வைப்பார்.

மீனாட்சி தேவியின் நகைகளில் பத்துப் பெரிய சபையர் (Sapphire) கற்கள் பதித்த ஒரு நீலப் பட்டயம் உலகப் பிரசித்தம். அதன் ஆபூர்வ அழகு கண்களை பறிப்பதாக இருக்கிறது என்பதை மகாராணியும் கேள்விப்பட்டார் . அதன் மேல் காதல் கொண்டார்; "காண" விரும்பினார். கம்பெனிக்காரர்கள் ஏற்பாட்டில் பதக்கம் லண்டனுக்குக் கப்பலில் சென்றது.

பதக்கத்தை பார்த்ததுமே, மனிதக் காதல் கொள்ள அது சாதாரண நகையல்ல; மகாராணியாக இருந்தாலும் தான் அணிந்து கொள்ள ஏற்புடையதல்ல என்று உணர்ந்தார். மறு கப்பலில் பத்திரமாக அனுப்பப்பட்ட அந்தப் பதக்கம் மீனாட்சியை அலங்கரிக்க மீண்டும் மதுரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

மீனாட்சிக்கு அழகு சேர்க்க இப்படிப் பல வைர, வைடூரிய நகைகள் இருந்தாலும், ஒரு ஆங்கிலேயே முரட்டு பக்தன் இருநூறு வருடங்களுக்கு முன்னால் அம்மனுக்கு காணிக்கையளித்த ஷூக்கள் பற்றித்தான் இந்த பதிவு.

தங்கத்தால் இழைக்கப்பட்ட விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள் பதித்த ஒரு ஜோடிக் காலணிகளைத் தன் பக்தியின் காணிக்கையாக வழங்கியவர் அப்போதைய மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர்.

யார் இந்த ரவுஸ் பீட்டர்? (நாமள்லாம் கேப்பமே "என்ன ரவுஸ்" விட்றியான்னு அதுக்கு மூலமே இவருதாங்க)_

பீட்டர் துரை 1812ல் ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாவுக்குக் கலெக்டராக ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்டவர்.

பீட்டர் துரை பதினாறு நீண்ட வருடங்கள் அதாவது 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர்.

அப்போதெல்லாம் மதுரை கலெக்டர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தக்கார். கோயில் தக்கார் என்றால் கோயிலுக்கு தக்கவர் (Fit Person) மரியாதைக்குரியவர் என்று அர்த்தம்.

கோவில் தக்காரின் பணி என்னவென்றே தெரியாமல் முதலில் திணறிப் போனார் பீட்டர் துரை. பின்னர் அம்மனின் மகிமைகளை ஒவ்வொன்றாகக் கேட்டறிந்து, அவள் மேல் மரியாதையும், பக்தியையும் செலுத்த ஆரம்பித்தார்.

தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வருவார். அதன் பிறகே தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.

கிழக்கு கோபுரத்துக்கு முன்பகுதிக்கு வந்ததும் குதிரையில் இருந்து இறங்கி விடுவார். தன் ஷூக்களை அகற்றிவிட்டு அனலாய் சுடும் அந்த கற்தரையில் வெறும் பாதங்களில் நின்று மீனாட்சியை வணங்குவார்.

தினமும் கோவில் கோபுர வாயிலில் நின்று மனமுருக வணங்கும் இந்த முரட்டு பக்தனை பார்த்து மதுரை மக்களுக்கு மட்டுமல்ல, அந்த மீனாட்சிக்கே மனசுருகிப் போயிருக்கும்.

பீட்டர் ஆங்கிலேயராக இருந்தாலும்கூட, நம்முடைய கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவராக இருந்தார். மக்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வராமல், அம்மனின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தார்.

மதுரை மக்கள், தங்களுக்கு யாரையாவது பிடித்துப் போனால் எல்லையில்லா அன்பும் நன்றியும் செலுத்துவார்கள். தங்களிடம் மிகுந்த பரிவு காட்டிய இந்தக் கலெக்டரை ஒரு மன்னனுக்கு நிகராக நினைத்த மதுரை மக்கள் அவரைப் பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தனர். ("நீ என்ன பெரிய பீட்டரா" அதுக்கும் இவருதாங்க மூலம்)

சம்பவத்துக்கு வருவோம்.

ஒருநாள் இரவு மதுரையில் இடியும் மின்னலுமாகப் பெருமழை பெய்தது. பெருத்த காற்றுடன் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது.

வெள்ளத்தினால் மதுரைக்கும், மக்களுக்கும் பெரிய இடையூறு வருமே என்று கவலையுடன் உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார் பீட்டர் துரை.

நள்ளிரவாகிவிட்டது. பங்களாவுக்கு வெளியே ஒரு சிறுமி அழைப்பது போல பீட்டருக்குக் கேட்டது. எழுந்து வெளி வராந்தாவுக்கு வந்தார்.

அந்த இடத்தில் அவரை நெருங்கி வந்த மூன்று வயது மதிக்கும் சிறுமி ஒருத்தி தன்னுடைய தளிர்க் கரங்களால் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து மாளிகைக்கு வெளியில் அழைத்துப் போனாள்.

சிறுமியும் கலெக்டரும் வெளியில் வந்ததுதான் தாமதம், அந்த மாளிகை அப்படியே இடிந்து விழுந்தது. மிரண்டு போனார் பீட்டர். தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய அந்த சிறுமிக்கு நன்றி சொல்லத் தேடினார். சிறுமியைக் காணவில்லை. 

பின்னர் கொட்டும் மழையில் சற்றுத் தொலைவில் அந்தச் சிறுமி சென்று கொண்டிருப்பதைப் பார்த்த கலெக்டர் பின்தொடர்ந்து ஓடினார். பிடிக்க முடியவில்லை. இறுதியில் அந்தச் சிறுமி மீனாட்சியின் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தே போனாள்.

தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது அம்மன் மீனாட்சிதான் என்று கலெக்டர் ரவுஸ் பீட்டர் உறுதியாக நம்பினார்.

கொட்டும் மழையில் வெறும் காலோடு தன்னைக் காப்பாற்ற ஓடோடி வந்த அம்பிகையின் பாதங்களுக்கு அணியும்படி ஏதாவது அணிகலன் செய்து தரவேண்டும் என்று ஆலோசனை செய்தார். அவை தான் மேலே சொன்ன அந்தக் காணிக்கைக் காலணிகள்.

நன்றியுணர்வின் அடையாளமாக அவர் மீனாட்சிக்கு காணிக்கை அளித்த இந்த ஒவ்வொரு தங்க ஷூவின் எடை 28 டோலாக்கள் (ஒரு டோலா தங்கம் தோராயமாக 12 கிராம்).

இதுபோக 412 சிவப்பு கற்கள், 72 மரகதங்கள், 80 வைரங்கள் மற்றும் பூனை கண், முத்துக்கள், சபையர் என்று நவரத்தினங்கள் காலணிகளை அலங்கரிக்கின்றன.

அத்துடன் விட்டாரா?

அம்மனைத்தவிர அந்த நாட்களில் மதுரையில் குதிரை வலம் வருபவர் பீட்டர் மட்டும்தான். குதிரை சவாரி எவ்வளவு சிரமம் என்று அவருக்குத்தான் தெரியும். விழாக் காலங்களில் குதிரையில் வலம் வரும் அம்மன், சேணம் இல்லாததால் பேலன்ஸ் பண்ண சிரமபடுவதாக அவரின் பக்திக்கண்களுக்கு பட்டது.

வெள்ளைக்காரர்கள் எதையும் மிஸ் பண்ண மாட்டார்கள். "எடுறா தங்கத்தை, அடிறா சேணத்தை" என்று நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இரண்டு தங்க சேணங்களையும் செய்து, அவற்றையும் அம்மனுக்கு காணிக்கையாகச் சமர்ப்பித்தார்.

இன்றைக்கும் சித்திரை திருவிழாவின் ஐந்தாவது நாளில், மீனாட்சி தேவி தங்கக் குதிரையில் இந்த விசித்திரமான அணிகலங்களை பூட்டி, புன்னகையுடன் மாசி வீதிகளைச் சுற்றி வருகிறாள்.

பக்தியில் திளைத்த அவர், மீனாட்சி நடக்கும்போது அவள் திருப்பாதங்கள் தன் மேல் நடந்து போவதாக இருக்கட்டும் என்று சொல்லி, அவள் காலணிகளுக்கு அடிப்பாகத்தில் தன் பெயரை எழுத சொல்லிவிட்டார்.

பணி ஓய்வுக்குப் பின்னரும் பீட்டர் இங்கிலாந்துக்குத் திரும்பவில்லை. தனது கடைசி நாட்களை மீனாட்சிப் பட்டிணத்திலேயே கழித்தார்.

மதுரையிலேயே காலமான அவர் மதுரை, மேல ஆவணி மூல வீதி் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

பீட்டரின் கல்லறை, தேவாலயத்தின் பலிபீடத்தின் அடியில் ஒரு பாதாள அறையில் அமைந்துள்ளது.

கிருஸ்துவ தேவாலயத்தின் அறையில் அவரது இறுதி விருப்பப்படி, அவர்தம் முகம் மீனாட்சி கோயிலை நோக்கி இருக்குமாறு அடக்கம் செய்யப்பட்டார்.

மதுரையின் முதல் புலம் பெயர் தொழிலாளி  திரு. பீட்டர் பாண்டியன்! உங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்...!!

Saturday, October 24, 2020

தாயின் கடைசி காலம்

 காசி கயா போன்ற புண்ணிய ஷேத்திரங்களில் ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது

அப்போது அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதேவிட்டனர்...

சிறிது நிதானமாகப் படியுங்களேன் .. உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்.. உங்கள் தாயை நினைத்து..

கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள்

விஷ்ணு பாதம்

பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம்.

''கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.

ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.

ஜீவதோர் வாக்ய கரணாத்

ப்ராத்யாப்தம் பூரி போஜணாத் கயாயாம் பிண்ட தாணாத்த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய

'' அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .

“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம் 64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம்.

ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு, நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத' என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே திரு ஆலம் காடு (திருவாலங்காடு - வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)

இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். அந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த 3வது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே.

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக -- ஒரு பரிசு -- என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன்.

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏண்டி மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ'' .என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''

6. ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்'' என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'

7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த 7வது பிண்டம்..\

8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்துக்கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த 8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \

9. தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம்ப்ரயச்சதி|

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது.நீ தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த 9வது பிண்டம்.

10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ''கடிக்காதேடா..'' . நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக ப்ளீஸ் இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.'' காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பிண்டம், 11வதாக எடுத்துக்கொள்.'

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள், எத்தனை மனவியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் . அதற்காகத்தான் இந்த 12வது பிண்டம் தருகிறேன்.

13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு . ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யமலோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான் அம்மா.

14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால் நானே எது.? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த 14வது பிண்டம் தான் அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால் தர முடிந்தது.

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

திருப்பி திருப்பி சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ''தன்னலமற்ற'' தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த 15வது பிண்டம் ஒன்றே.

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே. தெய்வமே. என்னை மன்னித்து ஆசிர்வதி.

மஹா பூதாந்தரங்கஸ்தோ

மஹா மாயா மயஸ்ததா

ஸர்வ பூதாத்மகச்சைவ

தஸ்மை ஸர்வாத்மனே நமஹ

( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையை உடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )...

Saturday, October 17, 2020

அப்பா எக்ஸாம் பீஸ்

 என்னை மிகவும் பாதித்த பதிவு !

படிக்கும்போதே  உயிர் பிரிவதைப் போன்றவோர் உணர்வு !

பகிர்வு:

அப்பா, நேத்து கேட்டேனே, எக்ஸாம் பீஸ் எடுத்துக்கவா...?

கேட்டுக் கொண்டே அப்பா நேற்று போட்டிருந்த சட்டைப் பாக்கெட்டில் கை விடுகிறான்.

டேய், அப்பா வந்து எடுத்து தருவாங்க, பாக்கெட்டில் கை விடறது என்ன பழக்கம்...? 

அம்மாவின் அதட்டலுக்கு...

என் அப்பா பாக்கெட்டில் நான் கை விடறேன், உனக்கு ஏம்மா வயிறு எரியுது...?

அம்மாவிற்கு பதில் சொல்லிக் கொண்டே, எடுத்ததை தன் பாக்கெட்டில் நுழைத்தவாறு, தேங்க்ஸ்பா, பாய்... சொன்னவாறு ஓடிப் போனான், மூன்றாமாண்டு பொறியியலில் இயந்திரவியல் படிக்கும் ராஜா.

எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம். எதுக்கும் ஒரு அளவு இருக்குதுங்க, பொறிந்தாள் அப்பளம் பொறித்தபடி.

சிரித்தபடியே தலைதுவட்டிக் கொண்டு வெளியே வந்த குமாரசாமி, 

நேத்து ஒரு ஃப்ரெண்ட் கேண்டீன்ல செலவு பண்ணியிருப்பான், இவன் ஒருநாள் செலவு பண்ண ஆசைபடுவான், இதுக்கெல்லாம் உங்கிட்ட கணக்கு சொல்லமுடியுமா?

அதுவுமில்லாம நீ பயப்படற மாதிரிலாம் தப்பா நீ வளர்க்கலய மகா...! காலையிலய கோபப்படாதடா, டாக்டர் சொன்னாரில்லையா... என்றபடி மனைவியின் கன்னத்தில் செல்லமாய் தட்டியபடி... ரூமிற்குள் நுழைந்து புறப்பட தயாரானார் அலுவலகத்திற்கு.

யாரு டாக்டரு, உங்க ஃப்ரெண்ட் தானே...

நீங்க சொல்லிக் கொடுக்கறத, அப்படியே வந்து ஒப்பிப்பாரு, எனக்குத் தெரியாதா...?ஒங்க ரெண்டு பேர பத்தியும்...

சொல்லிக் கொண்டே காபியுடன் வெளிவந்த மகாவை...

என்னம்மா, காலையிலயே என்னை போட்டுட்ட மிக்ஸியில... சொல்லியபடி உள்ளே நுழைந்தார் பக்கத்து வீட்டு டாக்டரும் குமாரசாமியின் பால்ய நண்பருமான ரத்னவேல்.

மகா, நாக்கை கடித்துக்கொண்டு அசடு வழிந்தபடி, இந்தாங்கண்ணா, உங்களுக்குத்தான் காபி, என்றாள்.

நம்பாதடா, நம்பாதடா, இவ்ளோ நேரம் அவ்ளோ திட்டு திட்டினாள் உன்னை, சிரித்தபடி வெளியே வந்த குமாரசாமியிடம், 

என் தங்கை என்னை திட்டினா, திட்டட்டும், என்னைத் தானே திட்டறா, உனக்கென்ன என்றார் ரத்னவேல் சிரித்துக்கொண்டே.

ஒன்னு அசடு வழியுது...

ஒன்னு வெட்கமே இல்லாம பேசுது...

ஆளை விடுங்க சாமி, என்றபடி தன்னிடம் தந்த காபியை வாங்கி குடிக்கத் தொடங்கினார். 

திடீரென அரண்டு எழுந்தார் குமாரசாமி.

கனவு.

திரும்பி செல்போனை எடுத்து நேரம் பார்த்தார்.

5:20.

பத்து நிமிடம் கழித்து எழுந்து கொள்ளலாம் என நினைத்தபடி, ஈரமான கண்களை துடைத்தபடி திரும்பி படுக்கிறார். 

தன் மருமகள் மகனிடம் பேசுகிறாள்...

என்னங்க, நான் சொல்றது கேட்பீங்களா, கேட்க மாட்டீங்களா...? 

என்ன ஷீலா, நீ சொல்லி நான் எதை கேட்கல...?

காலையிலயே கோபப்படற‌. 

பின்ன என்னங்க, நானும் மூனு மாசமா சொல்றேன், செய்யறீங்களா...?

எதை சொல்ற...?

ஹூம்... அது மட்டும் மறந்துடுமே...

உங்கப்பாவை எங்கயாவது தூரமான ஊருல முதியோர் இல்லத்தில சேருங்கனு சொல்லிக்கிட்டு இருக்கேனே... அதைத்தான்.

இந்த மாசம் ஏற்பாடு பண்றேன் ஷீலா, கொஞ்சம் பொறுத்துக்கோடா.... என்கிறான்.

குமாரசாமியின் கண்களின் பக்கவாட்டில் நீர் வழிந்து, காதுகளை தொடுகிறது. 

துடைத்துக் கொண்டே நினைத்துக் கொள்கிறார்.

ஏங்க, எனக்கு ஒங்கள நெனச்சாதாங்க கவலையா இருக்கு...?

இவுங்ககிட்ட உங்களால தாக்கு பிடிக்க முடியுமானு தெரியலையே...?

உங்கள அனாதையா விட்டுட்டு போறேனே... 

ஏங்க, சீக்கிரம் வந்துடுங்க... நான் உங்களுக்கா காத்துகிட்டு இருப்பேன், சரியா...!

எல்லாரையும் உள்ளங்கையில வைச்சித் தாங்கனீங்க, ஆனால் ...

மேற்கோண்டு பேச முடியாமல் தேம்பும் மனைவியின் கண்ணைத் துடைத்தபடி, 

உனக்கு ஒன்னும் இல்லையாம்டா...

இப்போதான் ரத்னம் சொல்லிட்டுப் போறான்...

நீ இன்னும் ஒரு வாரத்துல எழுந்து அவனுக்கு காபி போட்டு கொடுப்பியாம், சொன்னான்.

அழுகையை அடக்கிய படி ஆறுதல் சொல்ல, 

எல்லாத்தையும் நானும் கேட்டுட்டேங்க...!

எனக்கு நான் போவதை பத்திலாம் கவலையே இல்லங்க... உங்கள நெனச்சாதான். 

தன் மடியில் மனைவி தன்னை விட்டுப் போனதை நினைத்துப் பார்த்தபடி படுத்திருக்கிறார்.

ஏங்க, மணி 7:20 ஆகுது, உங்கப்பாவை எழுப்புங்க, நியூஸ் போயிடுச்சினா, உலகமே இரண்ட மாதிரி ஆயிடுவாரு உங்கப்பா.

என்னவோ இவர கேட்டுதான் உலகமே இயங்கற மாதிரி...

சொல்லிக்கொண்டே மனைவி தந்த காபியை வாங்கிக் கொண்டு போய்... அப்பா, காஃபி... என்றவாறே அவர் அருகிலிருந்த டீப்பாயின் மீது வைத்து விட்டு உள்ளே போய்விட்டான்.

அய்ந்து நிமிடம் கழித்து வெளியே வந்தவன், காபி எடுக்காததை கண்டு, 

அப்பா, அப்பா...

இரண்டு தடவை கூப்பிட...

பதில் வரவில்லை.

ஒரே குரலுக்கு பதில் தரும் அப்பாவிற்கு என்ன ஆயிற்று...?

உடம்பு சரியில்லையோ...?

மெல்ல குனிந்து அப்பாவின் கையை தொட்டு உலுக்குகிறான் அப்பா, அப்பா...!?!?!

சற்றே அதிர்ச்சியோடு தற்போது கன்னத்தை இருபுறமும் பிடித்து...

தலையை ஆட்டுகிறான், அப்பா, அப்பா...

இவன் கத்தும் சத்தம் கேட்டு ரத்னவேல் உள்ளே வருகிறார், 

என்ன ராஜா...

தெரியல அங்கிள், நாலஞ்சு தடவை கூப்பிட்டும் எந்திரிக்கவே மாட்டேங்கிறாரு...?

ரத்னவேல் மெல்ல உட்கார்ந்து...

கையைத் தூக்கி பல்ஸ் பார்க்கிறார்.

கையை கீழே வைத்தபடி...

தன் நண்பனை மெல்ல குனிந்து முகத்தைப் பார்க்கிறார்.

மேலும் குனிந்து குமார், குமார் என குரல் கொடுத்தபடி...

இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டு விட்டு எழுகிறார்.

என்ன அங்கிள்...

திரும்பி கண்ணாடியை கழட்டுகிறார். 

கண்ணீர அதற்குள் கழுத்தை தொடுகிறது.

அவன் தோளை தட்டியபடி, அவன் மகாகிட்ட போயிட்டாம்பா... 

சொல்லிக் கொண்டே வெளியேறுகிறார்.

மாலை 4 மணி.

இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த ரத்னவேலுவை நோக்கி, 

பால்ய நண்பர்கள்  ஆறேழு பேர் வருகின்றனர்.

டேய், நீ ஒரு டாக்டரு, இவ்ளோ நாளா அவனை செக் பண்ணாமயாட இருந்த...? எரிச்சலோடு சேகர் கேட்கிறார்.

நிமிர்ந்து ஒரு பார்வை. அவ்வளவுதான்.

ஒட்டிப்பிறந்த ரெட்டையனுங்க மாதிரியே சுத்தித் திரிஞ்சிங்களேடா...

அவனுக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்கிறது உனக்குத் தெரியாமலா இருந்தது...? பாலாவின் கேள்வி.

அவன்கிட்ட கூட காசை எதிர்பார்த்தியோ...? சம்பத்.

எதற்கும் பதிலில்லை.

சிவா அவரைப் பிடித்து திருப்புகிறார்.

என்னடா, நாங்க கேட்டுகிட்டே இருக்கோம், அவனை அனுப்பற வேலையிலயே இருக்க...? 

அவர் கண்கள் முழுக்க கண்ணீர்...!

சிவாவின் தோளை பாலா தொட்டார்.

சிவா அமைதியாயிருடா. 

அவன், அவங்கம்மா செத்ததுக்கே கலங்காதவன். 

எப்படி அழறான், பாரு.

அவனை பேச வை.

எனக்கு பயமாயிருக்கு... பாலா தவிப்போடு சொல்ல,

பேசுடா, என்ன நடந்ததுன்னு சொல்லுடா... உலுக்குகிறார் சிவா.

அவன் செத்து மூனு வருஷமாச்சு.

நாமதான் லேட்டா கண்டுக்குறோம்... என்கிறார் ரத்னவேல்.

எல்லோரும் அதிர்ச்சியாகி பார்க்க...

ஆமாம்டா... அவன் செத்து மூனு வருஷமாச்சு.

மூன்று

ஆண்டுகளுக்கு முன்னால்... 

மகா போனபோதே அவனும் போயிட்டான்.

நாமதான் கவனிக்கல...!

அதுக்கப்புறம், "சாப்பிட்டியா?"

என்று கேட்க கூட யாரும் இல்லாத நேரத்திலேயே அவன் செத்துட்டான்; ஆனால் நாமதான்  கவனிக்கல...!?!

"பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே" 

என்று தம் காதுபடவே -  மருமகள் பேசியபோதே அவன் போயிட்டான்; அப்போதும் நாமதான் கவனிக்கல...!

'தாய்க்குப் பின் தாரம்... 

தாரத்துக்குப் பின் வீட்டின் ஓரம்...!'

என்று அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு 

வாழும்நிலை வந்தபோதே 

அவன் போயிட்டான்; நாமதான் யாருமே கவனிக்கல...!

"காசு இங்கே மரத்திலேயா காய்க்குது"  என்று மகன் அமில வார்த்தையை வீசிய போதே அவன் போயிட்டான்;

நாமதான் கவனிக்கல...!

நேத்து விடிகாலம் வாக்கிங் போகறதுக்காக, 

அவனை எழுப்ப கதவை தட்டப் போனேன்... அப்போ...

"என்னங்க... ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டுவிட்டுத் தலைமுழுகிட்டு வந்திடுங்க...!" என்று மருமகளின் சுடுசொற்கள் 

என் காதில் விழுந்தது போல் அவனும் கேட்டிருப்பானு நெனைக்கிறேன்.

அதான் போயிட்டான், தூரமா...!

என்று கதறிய ரத்னவேலை...

பாலா தழுவிக்கொண்டே தட்டிக் கொடுத்தார்.

நேத்து பழைய ரிமோட்ட கையில வச்சிகிட்டு உட்கார்ந்திருந்தான், சேனலை மாத்துடா, என்னடா இந்தி பாட்டு கேட்கிற...? என்றபோது... 

அதோ இருக்கு பாரு ரிமோட்டு, மாத்திக்கோ என்றான்.

நீ வச்சிருக்கயே அது என்னடா? என்றபோது..

இது போயிட்டிச்சி, ஆனா மகா யூஸ் பண்ணது என்றான்

பார்க்கும் எல்லாவற்றிலும் அவன் மகாவோடு வாழ்ந்தான்.

ஒருவேளை மகன் நம்மை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டால்....? என்று நினைக்கும்போதே செத்துட்டிருப்பான்...!

அவனுக்கு ஒரு பிராப்ளமும் இல்லடா...! என்று கதறும் ரத்னத்தை ஆற்றுப்படுத்த வழியின்றி....

எல்லோரும் அழுகின்றனர்...!

தோழர்களே...!

நீங்கள் செல்லும் வழியிலும் இப்படி யாராவது இறந்து கொண்டிருப்பார்கள்... 

ஓரிரு மணித் துளிகளாவது 

நின்று பேசிவிட்டுச் செல்லுங்கள்...! 

இல்லையேல்...

உங்கள் அருகிலேயே - 

உங்கள் வீட்டிலேயே இறந்து கொண்டிருப்பார்கள்... 

புரிந்து கொள்ள முயலுங்கள்...

வாழ்க்கை என்பது... 

வாழ்வது மட்டுமல்ல...! 

வாழ வைப்பதும்தான்...

சுடுசொற்களால், புறக்கணிப்பால்... 

பலர் உயிருடனேயே இறந்து விடுகின்றனர். 

புதைக்கத்தான்... 

சில ஆண்டுகள் ஆகின்றன...!

இந்தக் கதையை படிக்கும் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்...

நிச்சயம் இது உங்களுக்கான கதை அல்ல.

நம்புகிறேன்...

உங்களுக்கானதாக மாறிவிடக் கூடாது என்றும் வேண்டுகிறேன்.

நிச்சயமாக உங்களிடமிருந்து ஏதோ ஒரு பிரதிபலிப்பை எதிர்பார்க்கிறேன்.

அதுவே என்னை மேலும் முயற்சிக்கத் தூண்டும்.

Wednesday, October 14, 2020

மாமியாருக்கு 10 மடங்கு

தனது மாமியாரை பிடிக்காத ஒரு இளம் பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்தாள்.  தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள்.

அவளது தவத்தால் மனம் இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் அவன் முன் தோன்றி மகளே உனது மனவலிமையை மெச்சி மகிழ்ந்தேன்! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக்கொள் என்றார்.

அப்பனே...எனக்கு ஒரு வரம் போதாது மூன்று வரம் வேண்டும் என்று  பெண் கெஞ்சினாள்.

பெண் புத்தி பின் புத்தி ! 

உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான்.

சரி குழந்தாய் !

ஒரு கண்டிஷனுடன் உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும்.

கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்டார்.

அவளோ அழகாய் சம்மதித்தாள்.

பகவான் கண்டிஷனை கூறினார்.

இதோ பார் மகளே நீ எது கேட்டாலும் கிடைக்கும்!  ஆனால்  உனக்கு கிடைப்பதுபோல் உன் மாமியாருக்கு பத்து மடங்கு அதிகமாக கிடைத்துவிடும்! என்ன சொல்கிறாய்?

மிக்க மகிழ்ச்சியுடன் முகம்குளிர சம்மதித்தாள் மருமகள்.

விதி யாரை விட்டது என்று எண்ணியபடி அவள் கேட்கும் வரத்தை கொடுக்க தயாரானார் சிவபெருமான்.

முதல் வரம்

எனக்கு 100 கோடி ரூபாய் வேண்டும்.

மாமியாருக்கு ஆயிரம் கோடி கிடைத்தது!

இரண்டாவது வரம்

இந்திய கண்டத்திலேயே  மிக அழகிய பெண்ணாக நான் மாறவேண்டும்.

உலகிலேயே அதீத அழகான பெண்ணாக மாமியார் மாறினார்!

மூன்றாவது

எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்.

மாமியார் இதயம் வெடித்து செத்தாள்.

சிவபெருமான் மூர்ச்சையானார்.

யாருகிட்ட..என்கிட்டயா..


Sunday, October 11, 2020

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வாழ்க 

30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். 

(கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்).

40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான்

 (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க).

50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.

 (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்).

60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான்.

 (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்).

70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான்

 (மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்).

80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்.

 (அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்).

90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான்

 (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்).

100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான்

 (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது).

அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..

என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டு விடுவோம்.

மனித வாழ்வில் நாற்பது வயதுக்குள் நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழப்போகிறோம் என்பது முடிவு செய்யப்பட்டு விடுகிறது...

Tuesday, September 29, 2020

ராணி பத்மினி

அலாவுதீன் கில்ஜி எனும் அயோக்கியனின் காமப்பசிக்கு இரையாவதைவிட, தீயில் குளிப்பது “மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே” என்று தீயில் குளித்தாள் பேரழகி பத்மினி; அவள் நூறு கிளியோபாட்ராவின் அழகுக்குச் சமமானவள்! இதோ அந்தக் கதை:–

ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜி, டில்லியிலிருந்து அரசோச்சிய காலத்தில் ரஜபுதனத்திலுள்ள சித்தூரை பீமசிங்கன் என்பவன் ஆண்டு வந்தான். அவளுடைய மனைவியின் பெயர் பத்மினி. தாமரை போன்ற அழகிய முகம் வாய்ந்தவள். தைரியசாலி, நல்ல புத்தி சாதுர்யமிக்கவள். அவளுடைய அழகு பற்றிய செய்தி வட இந்தியா முழுதும் பரவியிருந்தது.

அலாவுதீன் கில்ஜிக்கு, எல்லா முஸ்லீம் மன்னர்களுக்கும் இருந்தது போல பல மனைவியர் இருந்தனர். அவன், சித்தூர் ராணி பத்மினியையும் அபகரிக்க விரும்பினான். ஆகவே பெரும்படையுடன் புறப்பட்டு ராஜஸ்தானுக்கு வந்து சித்தூரை முற்றுகையிட்டான். சித்தூரை வெல்ல முடியாதென்று தெரிந்தது. ‘கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாக, “நான் சித்தூரை வெல்ல வரவில்லை என்றும், பத்மினியின் அழகை ஒரே ஒரு முறை பார்த்துச் செல்லவே வந்ததாகவும்” பீம சிங்கனுக்குச் செய்தி அனுப்பினான்.

பீம்சிங்கன், அவன் வார்த்தையை நம்பி, ஓரிரு வீரர் துணையுடன் கோட்டைக்குள் வரலாமென்றும், ரஜபுத்ரப் பத்தினிப் பெண்கள் வேறு ஆடவரைப் பார்க்கக் கூடாதாகையால் நிலைக் கண்ணாடியில் மட்டும் அவள் உருவத்தைப் பார்க்கலாம் என்றும் நிபந்தனை போட்டான். உடனே அலாவுதீனும் இரண்டொரு வீரருடன் வந்து கண்ணாடியில், பேரழகி பத்மினியைப் பார்த்தான். ஏதேனும் சதி செய்து அவளைக் கவரவேண்டும் என்று எண்ணி, மனதில் சதித்திட்டம் தீட்டினான்.

 “நான் உன்னை நம்பி, உன் கோட்டைக்குள், தனியே வந்தேனே. நீயும் என்னை நம்பி என் கூட வந்து வழியனுப்பக்கூடாதா?” என்று பீம சிங்கனிடம் அலாவுதீன் சொன்னான். ரஜபுத்ர இந்துக்கள், சத்ய சந்தர்கள்; உண்மை விளம்பிகள்; டில்லித் துலுக்கர்கள் போல உடல் முழுதும் விஷ ரத்தம் ஓடுபவரல்ல. ஆகவே அலாவுதீனை நம்பி அவன் கூட குதிரையில் செல்லுகையில், அலாவுதீன் உத்தரவிட்டவுடன் ஆப்கானியப் படைகள், பீமசிங்கனைச் சூழ்ந்து கொண்டன. அவனைக் கைது செய்து டில்லிக்குக் கொண்டு சென்றான் அலாவுதீன்.

 “உன் மனைவியை என்னிடம் ஒப்புவித்தால் நான், உன்னை விடுவித்து, மீண்டும் சித்தூரின் மன்னனாக்குவேன்” என்று அலாவுதீன் சொன்னான். ஆனால் பீமசிங்கன் இணங்கவில்லை. இந்தச் செய்தி சித்தூர் வரை சென்றது.

பீமசிங்கனின் மனிவியான பத்மினி மஹா புத்திசாலி; வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வஞ்சனையை வஞ்சனையால்தான் வெல்ல வேண்டும் என்று கருதி, அலாவுதீன் கில்ஜிக்குச் செய்தி அனுப்பினாள். என் கணவனை நீ விடுவிப்பாயானால், நான் உன்னிடம் வரத்தயார். ஆயினும் ரஜபுதனப் பெண்கள், எல்லோரும் காணும்படி வெளியே உலவ மாட்டார்கள். ஆகவே என் பரிவாரம் புடை சூழ மூடிய பல்லக்குகளில் வருவோம்” என்றாள். அலாவுதீனும் ஆவலுடன் காத்திருந்தான்.

சித்தூர் கோட்டையிலிருந்து 70 மூடு பல்லக்குகள் புறப்பட்டன. ஒன்றில் கூட பெண்கள் கிடையாது. அத்தனையிலும், தேர்ச்சிபெற்ற 70 வீரர்கள் மறைந்திருந்தனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள், ஒவ்வொரு பல்லக்கையும் சுமந்தனர். அவர்கள் அனைவரும் வீரர்கள். பல்லக்குகளில் ஆயுதங்களை மறைத்து வைத்தனர். பாந்தால் என்பவன் அவர்களை டில்லியை நோக்கி அழைத்துச் சென்றான். அவன், “பத்மினி, கடைசியாக ஒரு முறை கணவனைப் பார்த்துவிட்டு உன்னிடம் வருவாள்” என்று அலாவுதீனிடம் சொன்னவுடன் “பத்மினியின் பல்லக்கை” கூடாரத்துக்குள் அனுப்பினான். அதிலிருந்த வீரன் வெளியே குதித்து பீமசிங்கனை குதிரையின் மேல் வைத்து தப்பிக்கச் செய்தான். உடனே பெரும் சண்டை நிகழ்ந்தது. இரு தரப்பும் வீரர்களை இழந்தன.

ஓரிரு ஆண்டுகள் உருண்டோடின. அலாவுதீனின் வெறி அடங்கவில்லை. எப்படியும் பத்மினியை அடைந்தே தீருவதென்று முடிவு செய்து, மீண்டும் படையெடுத்து சித்தூரை முற்றுகையிட்டான். இப்பொழுது பீமசிங்கன் பலவீனமான நிலையில் இருந்தான்; ஏனெனில் முந்தைய போர்களில் முக்கியப் படைத் தலைவர்களை இழந்து விட்டான். ஒரு கட்டத்தில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தது. தன் மகனை அருகாமையிலுள்ள ரஜபுதன ராஜ்யத்துக்கு அனுப்பி பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லிவிட்டு வீரதீரப் போரில் ஈடுபட்டு உயிர் துறந்தான் பீமசிங்கன்.

ரஜபுதனப் பெண்கள் வீராங்கனைகள்; அரண்மனையின் அந்தப் புரத்தில் மாபெரும் தீ வளர்த்தனர். அதில் நூற்றுக் கணக்கானோர், பேரழகி பத்மினியுடன் குதித்து சாம்பலாயினர். வெற்றிக் களிப்புடன் கோட்டைக்குள் நுழைந்த அலாவுதீனுக்கு, வீரர்களின் பிணங்களும், வீரத்தாய்மார்களின் சாம்பலுமே கிடைத்தது!

பாரத நாடு உள்ள வரை, பத்மினியின் புகழும் நீடிக்கும்! ராஜபுதனக் கோட்டை கொத்தளங்களும், பாலைவன மணல் துகள்களும் இன்றும் கூட பத்மினியின் புகழைப் பாடிக் கொண்டு இருக்கின்றன!!

படித்ததில் வலித்தது.

Sunday, September 27, 2020

பாக்கியசாலிகள்

 MUMBAI

பழைய மும்பையை பார்த்தவர்களே பாக்கியசாலிகள்.

 காரணம்? 

கங்கை வெள்ளம் போல படு வேகமாக தமது அன்றாட தொழிலுக்கு செல்லும் உழைப்பாளிகளையும், பெரிய - சிறிய நிறுவனங்களையும், வியாபாரிகளையும், நெரிசலான போக்குவரத்தையும் coronaவுக்கு முன் இருந்த மும்பை நகரை பார்த்தவர்கள், மனதினுள் பிரமித்து வியந்தவர்கள்.

25/09/2020 அன்று ஒரு பணி நிமித்தம் Ola வில் Dadar வரை சென்று திரும்பியபோது மனம் மிகவும் வேதனை அடைந்தது. 

வழி நெடுக ரோட்டில் நிறுத்தி வைக்க பட்டிருந்த வாடகை கார், ஆட்டோ, கை வண்டிகள்.

ஓட்டுவதற்கு ஆளில்லை. பாதி கட்டின  பில்டிங், மெட்ரோ project வேலைக்காக கட்டின உதிரி பாகங்கள் எடுக்க ஆளில்லை. அடைக்கப்பட்டிருந்த கடைகள், அலுவலகங்கள், காலியாக இருக்கும் வீடுகள்.  சொந்த ஊருக்கு சென்றவர்கள் அவர்கள் ஊரிலேயே பிழைக்க தொடங்கி விட்டார்கள், மும்பை திரும்ப கூடாது என்ற நோக்கத்துடன்.  

போதை பொருள் விவகாரத்தால் சினிமா பிரபலங்கள் பிடிபடுவதால் எந்த வேலையும் இல்லாமல் அவதிப்படும் திரைப்பட தொழிலாளிகள் ஏராளம்.

எனக்கு தெரிந்து நிறைய தமிழர்கள் சொந்த ஊருக்கு மும்பையிலிருந்து நபர் ஒருவருக்கு 15000 ரூபாய் கொடுத்து டூரிஸ்ட் பஸ்ஸில் சென்றார்கள். 

முகத்தில் சந்தோஷம் இல்லாமல், வருமானம் தேடி கட்டாய வேலைக்கு தற்போது செல்லும் மும்பை வாசிகள். 

தனியார் கம்பெனிகள் மூடியதால் வருமானத்திற்காக  காய்கறிகள் விற்பனை செய்யும் ஆட்கள்.  

மூடியிருக்கும் பெரிய சிறிய கோவில்கள்.

இந்த அவலமான நேரத்தை பயன்படுத்தும் மருத்துவமனைகள். பணம் இருந்தால் 15 நாட்கள் சிகிச்சைக்கு பின் மரணம். பணம் இல்லையேல் உடல் உறுப்பை எடுத்துவிட்டு  2 நாளில் மரணம். 

எந்த ரூபத்தில், யார் மூலமாக வைரஸ் வருமோ என்று பயந்து  அன்றாட தேவைக்காக முகத்தில் மாஸ்க் மாட்டிக்கொண்டு நிம்மதி இழந்து வெளியே போய் வரும் நபர்கள்.

நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை. 

என் கணிப்பு படி, இந்த மும்பை பழைய மாதிரி ஆவதற்கு குறைந்தது 2 வருடம் ஆகலாம். 

இறைவா மேற்கொண்டு வேறு எந்த அழிவையும் கொடுத்துவிடாதே என்று வேண்டுகிறேன்.

பழைய மும்பையை பார்த்தவர்களே பாக்கியசாலிகள்.

Friday, September 25, 2020

பாடும் நிலா பாடிய நிலாவானது (SPB)

பாடும் நிலா பாடிய நிலாவானது

அஞ்சலி அஞ்சலி...புஷ்பாஞ்சலி...

பாடும்நிலாவுக்கு இறுதி அஞ்சலி..!

நீ பாடியபாடல்களோ கீதாஞ்சலி...

கண்ணீரால்...

செலுத்துகிறோம் மௌன அஞ்சலி..!

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை...

நீ...காலமாகி விட்டாய் என்கிறார்கள்..!

இல்லை...இல்லவே இல்லை...

நீ...காலம் ஆகி விட்டாய்..!

எங்கேயும் எப்போதும் உன் குரல் ஒலிக்கிறதே...

எக்காலமும் உன் குரல் ஒலிக்குமே..!

அப்படியானால் காலம் கடந்தவன்தானே

ஆம்...நீ காலம் தான் ஆகிவிட்டாய்..!

பாட்டுத்தலைவன் மட்டுமல்ல நீ...

பண்புகளின் சிகரமல்லவா நீ...

திறமையால் 

எத்தனை சிகரத்தை தொட்டபோதும்

பண்புகளால்

அத்தனைக்கும் விஞ்சி நிற்கிறாயே..!

உன்னைப்பற்றி எழுதிக்கொண்டே போனால்...

அஞ்சலி...

காவியமாகிறது..!

துக்கம் தொண்டையை அடைக்கிறது 

எழுத வார்த்தைகள் எழவில்லை..!

உனது பரிமாணம் எட்டமுடியாதது...

உனதுமனிதாபிமானம் ஒப்பிடமுடியாதது

மீண்டுவந்துவிடுவாய்

என்று நம்பினோம்

இப்படி 

மீளாத் துயரில் ஆழ்த்திச் சென்று விட்டாயே..!

இனி இப்படி ஒரு கலைஞனைக் காணமுடியுமா 

எனத் தெரியாது...

இவர் பாடியபாடல்கள் காலத்தால் அழியாது..!

வணங்கி வாழ்த்தி விடை கொடுக்கிறோம்...

இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகின்றோம்..!

சிவாயநம 

திருச்சிற்றம்பலம் 

ஒரு இரசிகனாக...

ஒரு கலைஞனாக...

ஒரு அடியவனாக...

அருணை_முருகன்

Thursday, September 17, 2020

சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய திரு.வீரபாபு

கொரனோவால் எந்த உயிரிழப்பும் இல்லாமல் சிறப்பாக கட்டுப்படுத்தி, குணப்படுத்தியதாக  சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய சித்த மருத்துவர் திரு.வீரபாபு அவர்கள் கொரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக அவர் கண்டுபிடித்த மூலிகை தேநீரையும் சேர்த்துக் கொடுத்து தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஆங்கில மருந்து இல்லாமல், முழுவதும் சித்தா மருந்துகளைக் கொண்டே #கொரோனாவை ஒரே வாரத்தில் குணப்படுத்தி வருகிறார்

அவ்வாறு தாம் கொடுக்கும் மூலிகை தேநீரில் சேரும் பொருட்களை  மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார்.

அதன் விபரங்கள்

மூலிகை #தேநீர்

சுக்கு - 100 கிராம்,

அதிமதுரம் - 100 கிராம்,

சித்தரத்தை - 30 கிராம்

கடுக்காய்த்தோல்- 30 கிராம்

மஞ்சள் - 10 கிராம்

திப்பிலி - 5 கிராம்

ஓமம் - 5 கிராம்

கிராம்பு- 5 கிராம்,

மிளகு - 5 கிராம்

மேற்கூறிய அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தவும். 

ஒரு பாத்திரத்தில் 400 மி.லி நீர் விட்டு அதில் இந்த பொடியை 10 கிராம் அளவு போட்டு நன்கு கொதிக்க விடவும். இக்கசாய நீர் 100 மி.லி அளவாக வற்றியதும் ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது 10 மி.லி அளவு தேன் சேர்த்து கிளறி, இறக்கி ஆற வைக்கவும்.

இளம் சூடாக ஆறிய பின்பு இதை வடிகட்டி காலையில் உணவிற்கு பின்பு குடிக்கவும். இரவிலும் இதே போல் செய்து உணவிற்குப் பின்பு குடிக்கவும்.

பொதுவாக கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கபசுரக் குடிநீரை உணவிற்கு முன்பும், இந்த மூலிகை தேநீரை உணவிற்குப் பின்பும் கொடுக்கப் படுகிறது.

இந்த மூலிகை தேநீர் அடுப்பில் கொதிக்கும் போது 5 கற்பூரவள்ளி இலைகள், 10 புதினா இலைகளும் சேர்க்கலாம்.


இந்த மூலிகைத் தேநீரை பெரியவருக்கு ஒருவேளைக்கு 100 மி.லி அளவு கொடுக்க வேண்டும். 

சிறுவர்களுக்கு இதில் பாதி அளவு 50 மி.லி போதும்.

இதை கொரோனா அறிகுறிகள் குணமாகும் வரை கொடுக்க வேண்டும்.

கொரோனா இல்லாதவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை தினமும் ஒருவேளை வீதம் காலையில் குடித்து வரலாம்.!

பத்தியமில்லை

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசை  தமிழரின் மூலிகை மருந்து ஓட ஓட விரட்டுகிறது  என்பது வியப்பான நற்செய்தி.

வாழ்க சித்த மருத்துவம்.

வளர்க தமிழரின் புகழ்

மருத்துவர் வீரபாபு, சென்னை

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா?

 உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்

உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை.

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை

ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். 

செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்! 

நாம் இறந்த பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ

உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.

உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.

உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும். 

அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை! 

சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.

பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம். 

பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது! 

ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.

அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?

ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

பணம், புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.

அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.

நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். 

Wednesday, September 16, 2020

சில நேரங்களில் சில மனிதர்கள்

நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள். சிலர் பத்திரிகைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தார். அந்த சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத் தாண்டாதவர்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த அமைதி காணாமல் போயிற்று. குழந்தைகள் சத்தம் போட்டு விளையாட ஆரம்பித்து, பின்னர் சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பொருட்களை எடுத்து வீசிக்கொள்ள ஆரம்பித்தனர். அந்த தந்தையோ அந்த சிறுவர்களைக் கண்டிப்பதாகத் தெரியவில்லை. கண்களைத் திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

அங்கு அமர்ந்திருந்த மற்றவர்கள் எரிச்சலுடன் அவரைப் பார்த்ததை அவர் அறியவில்லை. அந்த எழுத்தாளரோ தன்னம்பிக்கை, பொறுமை பற்றியெல்லாம் நிறைய எழுதிக் குவித்த எழுத்தாளர். அவரே பொறுத்து பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன்னருகே கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த அந்த நபரிடம் சொன்னார். "உங்கள் பிள்ளைகள் மற்றவர்களைத் தொந்திரவு செய்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்துங்களேன்."

அந்த நபர் கண்களை மெள்ளத் திறந்தார். "ஆமாம்....ஏதாவது செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் தாய் இறந்து விட்டாள். அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவள் உடலைத் தர சிறிது நேரம் ஆகும் என்றதால் அங்கிருக்க முடியாமல் இங்கு வந்தேன். இனி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்கும் இதை எப்படி எடுத்துக் கொள்வது, என்ன செய்வது என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன்.... மன்னிக்கவும்" அந்த எழுத்தாளர் அதுவரை அந்த நபர் மீதும், அந்தச் சிறுவர்கள் மீதும் கொண்டிருந்த கோபமெல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் பறந்து போயிற்று. அதற்குப் பதிலாக இரக்கமும் பச்சாதாபமும் மனதில் எழ அவர் மனைவி இறந்ததற்கு வருத்தம் தெரிவித்து விட்டு ஏதாவது உதவி தேவையா என்று மனதாரக் கேட்டார். அந்த எழுத்தாளர் 'செயல்திறன் மிக்க மனிதர்களின் ஏழு பழக்கங்கள்' என்ற புகழ் பெற்ற புத்தகத்தை எழுதிய ஸ்டீபன் ஆர். கோவே. இந்த நிகழ்ச்சியில் அந்த சிறுவர்களின் செயல்கள் மாறவில்லை. அந்த அமைதியான சூழ்நிலை மீண்டும் திரும்பவில்லை. ஆனால் அந்த குழந்தைகளும், அவர்கள் தகப்பனும் இருக்கும் சூழ்நிலை விளங்கியதும் அவர் மனநிலை முற்றிலுமாக மாறி விட்டது.

இன்னொரு நிகழ்ச்சி. கராத்தே, குங்·பூ கலைகளில் எல்லாம் மிகவும் தேர்ச்சி படைத்த ஒரு வீரர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் தியான வகுப்புகளுக்கும் தொடர்ந்து செல்பவர். ரயிலில் நன்றாகக் குடித்து விட்டு ஒருவன் ரயில் பயணிகள் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு வம்பு செய்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தான். நேரமாக ஆக அவன் வார்த்தைப் பிரயோகங்கள் மிக மோசமாகப் போய்க் கொண்டு இருந்தன. ஒருசிலர் திரும்பப் பேசினர். ஒருசிலர் முகம் சுளித்துக் கொண்டு வேறிடத்திற்குப் போய் அமர்ந்து கொண்டார்கள். நீண்ட பயணமானதால் இதை நிறைய நேரம் பார்க்க நேர்ந்த கராத்தே வீரருக்கு கோபம் பொங்கி வந்தது. போய் இரண்டு தட்டு தட்ட வேண்டும் என்று நினைக்கையில் அத்தனை நேரம் அமைதி காத்த இன்னொரு பயணி அந்தக் குடிகாரனை நோக்கி சென்றதைக் கண்டு நிதானித்தார். அந்தப் பயணியும் தன்னைப் போலவே அடிக்கத் தான் செல்கிறார் என்று நினைத்த கராத்தே வீரருக்கு வியப்பு ஏற்படும் வண்ணம் அந்த நபர் குடிகாரன் அருகில் அமர்ந்தார். கனிவுடன் அவனிடம் கேட்டார். "உனக்கு என்ன பிரச்சனை?" அந்தக் குடிகாரன் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை போலத் தெரிந்தது. திகைத்துப் போய் அவரை ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் பார்த்த அவன் கண்களில் நீர் திரண்டது. அவர் தோளில் சாய்ந்து கொண்டு விம்மி அழ ஆரம்பித்தான். அழுகையினூடே தனக்குத் திடீரென்று வேலை போன செய்தியைச் சொன்னான். தன் சம்பாத்தியத்தை நம்பி வீட்டில் மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருப்பதைச் சொன்னான். அந்த முதலாளியின் இரக்கமற்ற குணத்தைச் சொன்னான். சொல்லி அழுது முடித்த பின் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நண்பர் குடிப்பது எந்தப் பிரச்சனையையும் வளர்த்துமேயொழிய குறைக்காது என்று சொன்னார். முதலாளி மேல் இருந்த கோபத்தை சக பயணிகளிடம் காட்டுவது சரியல்ல என்று சொன்னார். குடிப்பதற்கு பதிலாக அடுத்த வேலை எங்கு கிடைக்கும், அதற்காக யாரை அணுகலாம் என்று யோசித்திருந்தால் ஒரு வழி கிடைத்திருக்கலாம் என்று சொன்னார்.

அவர் பேசப் பேச அந்தக் குடிகாரன் அடைந்த மாற்றத்தைக் கண்ட கராத்தே வீரர் அது தனக்குப் பெரிய படிப்பினையாக அமைந்தது என்று ஒரு கட்டுரையில் எழுதியதை நான் படித்தேன். அவர் எழுதியிருந்தார். "அந்த நபர் ஒரு நிமிடம் என்னை முந்திக் கொண்டு அந்தக் குடிகாரனிடம் போயிருக்கா விட்டால் கண்டிப்பாக நன்றாக அவனை அடித்து காயப்படுத்தி இருப்பேன் என்பதில் சந்தேகமில்லை. முதலிலேயே வேலை போன அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் என்னாலேயே மேலும் துக்கம் விளைந்திருக்கும். அவனுடைய செய்கைகளுக்குப் பின் உள்ள துக்கத்தை அந்த நபர் உணர்ந்திருக்க வேண்டும். அவருடைய கனிவான செய்கை அவன் புண்ணுக்கு மருந்தாக அமைந்தது. அவன் அமைதியடைந்தான். அவன் இறங்க வேண்டிய இடம் வரை அவனிடமிருந்து அதற்குப் பிறகு ஒரு சத்தமோ, தொந்திரவோ இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்கும் அவன் மீதிருந்த எரிச்சலும், கோபமும் விலகியது என்பதை சொல்லத் தேவையில்லை."

முதல் நிகழ்ச்சியில் இருக்கும் நியாயம் இரண்டாவது நிகழ்ச்சியில் இல்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அந்த இரண்டாவது நிகழ்ச்சியிலும் அந்த செயலுக்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதாக உணர்ந்த ஒரு மனிதர் காட்டிய கனிவு எப்படி அந்த சூழ்நிலையை அடியோடு மாற்றியது என்பதைப் பாருங்கள். நமக்குத் தவறாகத் தோன்றும் பல செயல்களுக்குப் பின்னால் பல ஆழமான காரணங்கள் இருக்கின்றன. சில காரணங்கள் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிந்தவையாக இருக்கலாம். சில காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால் அந்தக் காரணங்களை அறியும் போது புரிந்து கொள்ளல் சாத்தியமாகிறது. மன்னித்தல் சுலபமாகிறது. எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்ள மனிதன் எந்திரமல்ல. எந்திரங்கள் கூட பழுதாகும் போது சில நேரங்களில் சில மனிதர்கள் நம் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறாக நடந்து கொள்வது அதிசயமல்ல. அது போன்ற சமயங்களில் அவர்கள் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக ஏதாவது காரணம் இருக்கலாம் என்ற சிந்தனை நமக்குள் எழுமானால் அதைப் பெரிதுபடுத்தாமல் நகர்கிற பக்குவம் நமக்கு வந்து விடும்.

Friday, September 11, 2020

சமஸ்கிருதம்

 சமஸ்கிருதம் பற்றிய இந்த 20 உண்மைகளை அறிந்த பிறகு நீங்கள் இந்தியன் என்பதில் பெருமை கொள்வீர்கள். 

எந்த இந்தியனையும் தலை நிமிர்த்தும்... சமஸ்கிருதம் பற்றி சில உண்மைகளை இன்று கூறுகிறோம்...

. 1. சமஸ்கிருதம் அனைத்து மொழிகளுக்கும் தாயாக கருதப்படுகிறது. 

2. சமஸ்கிருதம் ′′ உத்தர்காண்ட் ′′ இன் ஆட்சிமொழி

3.  இஸ்லாமிய படையெடுப்பு என்ற குறுக்கீடுக்கு முன் சமஸ்கிருதம் இந்தியாவின் தேசிய மொழியாக இருந்தது. 

4. நாசாவின் கருத்துப்படி, சமஸ்கிருதம் பூமியில் பேசப்படும் மிக ′′ தெளிவான மொழி ′′ ஆகும். 

5. உலகில் எந்த மொழியையும் விட சமஸ்கிருதத்தில் அதிக வார்த்தைகள் உள்ளன. 

தற்போது சமஸ்கிருத அகராதியில் ' 102 பில்லியன் 78 கோடியே 50 லட்சம் வார்த்தைகள் 

6.  சமஸ்கிருதம் எந்த பாடத்திற்கும் ஒரு ′′ அற்புதமான புதையல் ′′ ஆகும். 

யானைக்கு சமஸ்கிருதத்தில் 100 க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பது போல  

7. நாசாவில் சமஸ்கிருதத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ′′ 60,000 கையேடுகளை நாசாவில் வைத்துள்ளது. இதில் நாசா ஆராய்ச்சி செய்கிறது. 

8.  ஜூலை, 1987 ல் கணினி மென்பொருட்கள் உருவாக்க சமஸ்கிருதம் ′′ சிறந்த மொழியாக ′′ கருதப்பட்டது - ஃபோர்பார்ஸ் இதழ்

9. சமஸ்கிருதத்தில் வேறு எந்த மொழியையும் ஒப்பிடும்போது, குறைந்த வார்த்தைகளில் வாக்கியம் நிறைவடைகிறது. 

10.  உலகின் ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே, நாக்கின் எல்லா தசைகளை பேசுவதில் பயன்படுத்துகிறது. 

11. அமெரிக்க இந்து பல்கலைக்கழகத்தின் படி சமஸ்கிருதத்தில் பேசுபவர் BP, நீரிழிவு, கொலஸ்ட்ரால் முதலியவற்றிலிருந்து விடுவிக்கப்படுவார். 

 சமஸ்கிருதத்தில் பேசுவது, மனித உடலின் ′′ நரம்பியல் ′′ எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும், ஒரு நபரின் உடல் நேர்மறையான உணர்வுடன் சுறுசுறுப்பாக மாறுகிறது. 

12.  சமஸ்கிருதம் ′′ ஸ்பீச் தெரபி ′′ செறிவு மேம்படுத்துதலும் உதவியாக உள்ளது 

13.  கர்நாடக ′′ மூதூர் கிராம ′′ மக்கள் சமஸ்கிருதத்தில் மட்டுமே பேசுகிறார்கள். 

14. "சுதர்மா", சமஸ்கிருதத்தின் முதல் நாளிதழ்...

1970 ல் தொடங்கியது 

ஆன்லைன் பதிப்பு ′′ இன்றும் கிடைக்கிறது. 

15.  ஜெர்மனியில் அதிக அளவில் சமஸ்கிருத ஆசிரியர்கள் தேவை உள்ளது. 

Germany ஜெர்மனியின் 14 பல்கலைக்கழகங்களில் ′′ சமஸ்கிருதம் ′′ கற்பிக்கப்படுகிறது. 

16.  நாசா விஞ்ஞானிகளின் படி, விண்வெளி பயணிகளுக்கு ஆங்கிலத்தில் செய்தி அனுப்பிய போது... அந்த செய்தி வார்த்தைகள் இடம் மாறியதால் தலைகீழாக மாறியது. 

இதனால் அந்த செய்தியின் அர்த்தம் மாற்றப்பட்டது. 

அவர்கள் பல மொழிகளை பயன்படுத்தினார்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் இதே பிரச்சனைதான் வருகிறது. கடைசியில் சமஸ்கிருதத்தில் செய்தி அனுப்பினார் ஏனென்றால் சமஸ்கிருத வார்த்தைகள் திருப்பினாலும் பொருள் மாறுவதில்லை. 

அதாவது ...

👉🏽अहम् विद्यालयं गच्छामि।

👉🏽विद्यालयं  गच्छामि अहम्।

👉🏽गच्छामिअहम् विद्यालयं ।

மூன்று விதமாக எழுதப்பட்ட வாக்கியங்களின் அர்த்தத்திற்கும் வித்தியாசம் இல்லை. 

17. கணித வினாக்களை கணினியால் தீர்க்கும் முறை என்றால் அல்காரிதம், ′′ சமஸ்கிருதத்தில் ′′ ஆங்கிலத்தில் அல்ல என்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள். 

18. நாசா விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட 6 வது மற்றும் 7 வது தலைமுறையின் சூப்பர் கம்ப்யூட்டர்கள், 2034 இல்  சமஸ்கிருத மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 

19.  சமஸ்கிருதம் கற்பது மனதை கூர்மையாக்குகிறது மற்றும் நினைவுகளின் சக்தி அதிகரிக்கிறது. 

அதனால்தான் லண்டன் மற்றும் அயர்லாந்தின் பல பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. 

20. இந்த நேரத்தில் உலகின் 17 க்கும் மேற்பட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களில் இருந்து குறைந்தது ஒரு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப கல்வி பாடங்களில் சமஸ்கிருதம் படிக்கப்படுகிறது.

Thursday, September 10, 2020

ஸ்ரார்த்த/திதி சாப்பாடு

 ஸ்ரார்த்த/திதி சாப்பாடு


ஒருமுறை தன் முன்னோர் ஸ்ரார்த்தத்துக்கு [திவஸம்/திதி] தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வஸிஷ்டர் அழைத்தார்.


"அதற்கென்ன வந்தால் போச்சு.! ஆனால் 1008 வகை காய்கறி செய்து படைக்க வேண்டும்" என்றார்.


உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா.? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா.? அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச்சாப்பிட யாரால் முடியும்.?


விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டி வைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச்செய்கிறார் என்பது வஸிஷ்டருக்குத் தெரியாதா என்ன.?


இருந்தபோதிலும் விட்டுக்கொடுக்காமல், "ஆஹா.! 1008 வகை கறியமுது வேண்டுமா? அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன்" என்றார்.


ஸ்ரார்த்தச்சாப்பாடு நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார்.


பாகற்காய்கறி., பலாப்பழம்., பிரண்டைத்துவையல் இவைகளோடு., ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன.


1008 காய்கறிகள் இல்லை.


விஸ்வாமித்திரர் கோபத்துடன் "என்ன இது.? 1008 வகை காய்கள் எங்கே.?" என்று வஸிஷ்டரை வினவினார்.


அவரோ "நான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே! அவளையே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றார்.


இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த உலகம் போற்றும் உத்தமி அருந்ததி., தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தை கூறிவிட்டு., "இதுதானே ஸ்ராத்தகால விதி உங்களுக்கு தெரிந்திருக்குமே.!" என்றாள்.


விஸ்வாமித்திரர் வாயடைத்துப் போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்தி விட்டுப்போனார். அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம் என்ன.?


காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம் பனஸம் ஷட் ஸதம்சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே


कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते


"ஒரு ஸ்ராத்தத்திதியன்று சமைக்கப்படும் சமையலில்., 

பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம்., 

பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம், 

பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் 

என்று பாடல் கூறுகிறது.


ஆயிரம் காய்கள் ஆயிற்றா.?


மீதி இலையில் எண்ணிப்பாருங்கள்., எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன். 

ஆக மொத்தம் 1008.! " என்றாள்.


சாஸ்த்திரப்படி விளக்கம் சொன்ன அருந்ததியின் பதில் ஞாயம் தானே.?


ஸமயோசித புத்தியும்., இல்லற தர்மமும் அறிந்தவர்களாக., நம் பாரதத்தில் அன்றைய பெண்கள் இருந்திருக்கிறார்கள்.!


இதைப்போன்ற நாம் தெரிந்து கொள்ளவேண்டிய நல்ல விஷயங்கள் ஏராளமாக உள்ளது.