Pages

Wednesday, October 25, 2023

மூக்கிரட்டை கீரை

பெரும்பாலும் மக்கள் அறியாத கீரை... அவ்வளவாக பயன்படுத்தப்படாத கீரை.. அதுதான் மூக்கிரட்டை கீரை.. 


நம் கண் முன்பேயே, வீட்டை சுற்றியும், சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் தரையிலேயே இந்த கீரை படர்ந்திருக்கும்..

ஆனாலும், இந்த கீரைக்குள் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதை பலரும் அறிந்திருக்கவில்லை.. இதற்கு மூக்கரட்டை கீரை என்றும் சொல்வார்கள்.

சிறுநீரகம் + மூலம் இந்த 2 பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டுமானால், மூக்கிரட்டையை மட்டும் விடாமல் பயன்படுத்த வேண்டும்.

சிறுநீரக கோளாறு: மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து அம்மியில் மை போல அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வாயில் போட்டு விழுங்கி வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். இப்படி தினமும் 2 வேளை காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். மூலக்கட்டி இருந்தாலும் அவை சுருங்கி பூரணமாக குணமாகும்.

இந்த கீரையுடன் சேர்த்து, அதன் தண்டுகளையும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது ஒரு டம்ளர் வரும்வரை காய்ச்சி குடித்தால், சிறுநீரகத்துக்கு அவ்வளவும் நல்லது..

கல்லீரல்: சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், அதை கரைத்துவிடும்.. அதேபோலசிறுநீரகத்தில் தொற்றுநோய்கள் இருந்தாலும், இந்த கீரை குணப்படுத்திவிடும். மஞ்சள் காமலை இருப்பவர்களுக்கு கீழாநெல்லியுடன் இந்த கீரையையும் சேர்த்து தருவார்கள்.

இந்த இலைகளை பேஸ்ட் ஆக்கி கண்களின் மேல் தடவி வந்தால் இமை வீக்கங்கள் குணமாகும்... இந்த செடியின் வேர்கூட மருத்துவ குணம் நிறைந்தது.. இந்த வேரினை காயவைத்து, அரைத்து பொடித்து வைத்து கொண்டு, சுடுநீரில் கலந்து குடித்தால், கண்கள் சம்பந்தமான நோய்கள் தீரும்.. கண்பார்வையும் கூர்மைப்படும்..

உடல் எடை குறைய: உடல்எடை குறைபவர்கள் இந்த மூக்கிரட்டை கீரையை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிடும்போது, சில மாதங்களில் உடல் எடையில் மாற்றம் காணலாம்.. மூக்கிரட்டை பொடியானது, உடல் பருமனை எதிர்த்து போராடி இதய செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.புற்றுநோய் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடியது.

கல்லீரல்: சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், அதை கரைத்துவிடும்.. அதேபோலசிறுநீரகத்தில் தொற்றுநோய்கள் இருந்தாலும், இந்த கீரை குணப்படுத்திவிடும். மஞ்சள் காமலை இருப்பவர்களுக்கு கீழாநெல்லியுடன் இந்த கீரையையும் சேர்த்து தருவார்கள்.

இந்த இலைகளை பேஸ்ட் ஆக்கி கண்களின் மேல் தடவி வந்தால் இமை வீக்கங்கள் குணமாகும்... இந்த செடியின் வேர்கூட மருத்துவ குணம் நிறைந்தது.. இந்த வேரினை காயவைத்து, அரைத்து பொடித்து வைத்து கொண்டு, சுடுநீரில் கலந்து குடித்தால், கண்கள் சம்பந்தமான நோய்கள் தீரும்.. கண்பார்வையும் கூர்மைப்படும்..

உடல் எடை குறைய: உடல்எடை குறைபவர்கள் இந்த மூக்கிரட்டை கீரையை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிடும்போது, சில மாதங்களில் உடல் எடையில் மாற்றம் காணலாம்.. மூக்கிரட்டை பொடியானது, உடல் பருமனை எதிர்த்து போராடி இதய செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.புற்றுநோய் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடியது இந்த மூக்கிரட்டை..

இளமையை தக்க வைக்கும்.. வயிறு செரிமானத்துக்கும், ஜீரணி சக்திக்கும் இந்த கீரை உதவுகிறது.. மலட்டுத்தன்மையை நீக்கும்.. இது ஆண்மைக்குறைவு மற்றும் விறைப்புத்தன்மை குணப்படுத்தும். மேலும் சில வகையான புற்றுநோய்கள் தீவிரமாவதையும் குறைக்க உதவும். ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் உணவுக்கு முன் இந்த இலை சாறு 10 மில்லி அளவு குடித்துவந்தால் நிவாரணம் கிடைக்கும்.

பொரியல்: இந்த கீரையை பெரும்பாலும் கூட்டு செய்வார்கள்.. எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உ.பருப்பு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.. பிறகு, கீரை சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு வேகவைத்தால் மூக்கிரட்டை பொரியல் ரெடி..

அல்லது மூக்கிரட்டை கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாக செய்து சாப்பிடலாம். இதனால், ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்... உடலுக்கு பலம் கொடுக்கும். உடலில் வாத நோய்கள் இல்லாமல் செய்யும்.

மூக்கிரட்டை கீரை எடுத்துகொள்ளும் போது அதிக காரம் உணவில் சேரக்கூடாது. உடலுக்கு குளிர்ச்சித்தரும் உணவுகள் தான் எடுக்க வேண்டும் என்பார்கள்.. ஆனால், எவ்வளவுதான் மருத்துவ குணம் இருந்தாலும், டாக்டர்களின் அறிவுரையோடு இந்த கீரையை எடுப்பது கூடுதல் பாதுகாப்பானது.. அந்தவகையில், நடைமுறை வாழ்வில் தவிர்க்கவே முடியாத கீரைதான், மூக்கிரட்டை கீரை.

Sunday, October 15, 2023

தமிழன்

தானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை எட்டாகப் பிரித்தான் 

கிழக்கு

மேற்கு

வடக்கு

தெற்கு

வட கிழக்கு

வட மேற்கு

தென் கிழக்கு

தென் மேற்கு

திசையை எட்டாகப் பிரித்த தமிழன் இசையை ஏழாகக் கொடுத்தான்... 

ச ரி க ம ப த நி

இசையை ஏழாக கொடுத்த தமிழன் சுவையை ஆறாக பிரித்தான்... 

இனிப்பு

கசப்பு

கார்ப்பு

புளிப்பு 

உவர்ப்பு

துவர்ப்பு

சுவையை ஆறாக பிரித்த தமிழன் நிலத்தை ஐந்தாக பிரித்தான்... 

குறிஞ்சி  (மலைப்பகுதி) 

முல்லை   ( வனப்பகுதி) 

நெய்தல்  ( கடல் பகுதி) 

மருதம்      ( நீர் மற்றும் நிலம்) 

பாலை      ( வறண்ட பகுதி) 

நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன் காற்றை நான்காக பிரித்தான்... 

தென்றல்

வாடை 

கோடை 

கொண்டல்

கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல் 

தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல்

மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை 

வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை

காற்றை நான்காக பிரித்த தமிழன்

மொழியை மூன்றாக பிரித்தான்... 

இயல் ( இயற் தமிழ் ) 

இசை  ( இசைத்தமிழ்) 

நாடகம் ( நாடகத்தமிழ்) 

இம்மூன்றும் தமிழுக்கு இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்து கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 

இம்மூன்று மொழிகளுக்கும் தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 

மொழியை மூன்றாக பிரித்த தமிழன்

வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்... 

அகம் 

புறம் 

கணவன் மனைவி வாழும் வாழ்க்கை அக வாழ்க்கை... 

வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம் புற வாழ்க்கை... 

வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்... 

ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்... 

ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான் 

அதை... 

உயிரினும் மேலாக வைத்தான்... 

இதைத்தான் அய்யன் வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார்... 

ஒழுக்கம் விழுப்பந் தரலான் 

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.

அம்மா சொன்ன அற்புதமான பொய்

அம்மா நீ அற்புதம்! 

அம்மா சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :

கடைசி உருண்டையில்தான் எல்லா சத்தும் இருக்கும், இத மட்டும் வாங்கிக்கோடாகண்ணா!

நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் அம்மா'வின் பால்தான்.

தன் 'அம்மா' தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை.

அவன் அதை உணரும்போது அவள் உயிரோடு இருப்பதில்லை.

அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.

சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.

என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.

ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!

என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.

நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக, பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'அம்மா'

குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின் அர்த்தம் புரிந்த ஒரே டிக்ஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்.

தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'அம்மா' வுடன் சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்

தேங்காய் திருகும்போது, 'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!

அம்மா...! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக் கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித் தந்த அந்த (தொட்டில்) வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.

 நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு

உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா? எனக்கு 'அம்மா'! உங்களுக்கு..?

அம்மா' என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.

ஆயிரம் கைகள் என்* கண்ணீரைத் துடைத்துப்

போனாலும், ஆறாத துன்பம் 'அம்மா' வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.

கடைசி தோசை சாப்பிடும் போது, சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து, சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'அம்மா'வின் அன்பு.

நான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'!

மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். 'அம்மா', நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!

மூச்சடக்கி ஈன்றாய் என்னை என் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை.

அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.

உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'அம்மா' வின் கருவறை.

வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா. வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'!

அம்மா...!அன்று நம் தொப்புள் கொடியை அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல. 

அது நம் பாசத்தின் தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு விழா ரிப்பன்!     

Sunday, October 08, 2023

புத் என்கிற நரகம்

மஹாபெரியவா சத்யவாக்கு

இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான்.

ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில் உள்ளது.

அப்போ பொண்ணப் பெத்தவாக்கு?

"தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம் ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம் கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும் யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"......

கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.

தசாநாம் பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள் . 

தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள். 

ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து 21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும் தானமாகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது

ஒரு நல்ல பெண்ணைப் பெற்றெடுத்து அவளைத் தன் குலத்துக்கு இல்லாமல் வேறு குலத்துக்கு திருமணம் செய்வித்து அந்த குலத்தினுடைய சந்ததியை வ்ருத்தி செய்வதற்கு உதவுகின்றார் என்றால் இந்த தானம் எவ்வளவு பெரிய தானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்..

ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்.

பெண்ணைப் பெற்ற தந்தைக்கு?

தனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள், பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள், தன்னுடன் சேர்த்து 21 தலைமுறைகள், நிலைத்த விஷ்ணு லோகத்தை அடைவதற்கு மாபெரும் தானமாகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது.

மஹாபெரியவா அருள்,

“தெய்வத்தின் அருள் இருந்தால் ஆண் குழந்தை. 

அந்த தெய்வமே நேரில் வந்தால் பெண் குழந்தை.”

ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர.

Monday, October 02, 2023

அண்ட சராசரங்களின் கணக்கு

பிரமிக்க வைக்கும் அண்ட சராசரங்களின் கணக்கு. இத்தனையும் தாண்டி நம்பெருமாள் நம் ஒவ்வொருவர் மீதும் ப்ரத்யேகமாய் அனுக்கிரஹம் பண்ணுகிறார் என்றால்,அவருக்கு நம் மீது இருக்கும் கருணை வாத்ஸல்யத்தை என்னெவென்று சொல்வது? 

"ஸ்ரீமதே  நாராயணாய நமஹ"