Pages

Friday, April 17, 2026

சக்கரங்கள் அடைபட்டிருந்தால்?

நீ கோயிலுக்கு போகிறாய்...

மருத்துவரிடம் போகிறாய்...

மாத்திரை சாப்பிடுகிறாய்...

ஆனால் உன் உள்ளே இருக்கும் சக்கரங்கள் அடைபட்டிருந்தால்?

எந்த மருந்தும் வேலை செய்யாது.

எந்த பூஜையும் முழுமை பெறாது.

எந்த தியானமும் ஆழமாக இறங்காது.

ஆனால் இயற்கை அம்மா?

அவள் உன்னை இலவசமாக குணப்படுத்துவாள்.

சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை அறிந்திருந்தார்கள்.

இன்று விஞ்ஞானமும் இதை உறுதிப்படுத்துகிறது.

வா — ஒவ்வொரு சக்கரத்தையும் இயற்கையால் எப்படி திறப்பது என்று பார்ப்போம்! 

1. மூலாதாரம் — Root Chakra

(அமைவிடம்: முதுகெலும்பின் அடிப்பகுதி)

இந்த சக்கரம் அடைபட்டால்:

பயம், பாதுகாப்பின்மை, பண கஷ்டம், உடல் சோர்வு, "என்னால் முடியாது" என்ற எண்ணம் — இவை தொற்றிக்கொள்ளும்.

இயற்கை தீர்வு: பூமியில் படு

செருப்பை கழற்று.

புல்வெளியில், மண்ணில், பாறையில் — படுத்துக்கொள்.

கண்களை மூடு.

உன் முதுகு முழுவதும் பூமியை உணரட்டும்.

பூமிக்கு "Earthing" என்ற சக்தி இருக்கிறது.

உன் உடலில் இருக்கும் எதிர்மறை மின்னணுக்கள் (free radicals) பூமியில் கரைந்துவிடும்.

வேர்கள் ஆழமாகும்போது மரம் சாயாது —

உன் மூலாதாரம் திறந்தால் நீ சாயமாட்டாய். 

திருமூலர் கூறினார்: "மண்ணில் பிறந்தோம், மண்ணே நம் தாய்."

2. ஸ்வாதிஷ்டானம் — Sacral Chakra

(அமைவிடம்: தொப்புளுக்கு கீழ்)

இந்த சக்கரம் அடைபட்டால்:

உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் திணறுவாய்.

படைப்பாற்றல் குறையும். உறவுகளில் தடை வரும்.

வாழ்க்கை சுவையற்றதாக தோன்றும்.

இயற்கை தீர்வு: தண்ணீரில் இறங்கு

ஆறு, குளம், கடல், அருவி — எதுவாக இருந்தாலும் சரி.

நீரில் இறங்கி நீந்து.

அல்லது வெறுமனே கால்களை தண்ணீரில் வை.

தண்ணீர் உன் உணர்வுகளின் கண்ணாடி.

அது ஓடும்போது உன் மனதில் இருக்கும் தேக்கமும் ஓடும்.

உன் படைப்பாற்றல் மீண்டும் பொங்கும்.

"நீரின்று அமையாது உலகு" — திருவள்ளுவர் வெறுமனே நீரின் அவசியத்தை மட்டும் சொல்லவில்லை — நீரின் ஆன்மீக சக்தியையும் குறிப்பிட்டார்.

3. மணிபூரகம் — Solar Plexus Chakra

(அமைவிடம்: தொப்புளுக்கு மேல்)

இந்த சக்கரம் அடைபட்டால்:

தன்னம்பிக்கை இல்லாமல் போகும்.

முடிவு எடுக்க பயமாகும்.

"நான் யார்?" என்ற குழப்பம் வரும்.

செரிமான பிரச்சினைகள் கூட வரலாம்.

இயற்கை தீர்வு: சூரிய ஒளியை உள்வாங்கு

காலை 6-8 மணிக்கு சூரிய ஒளியில் நில்.

தொப்புள் பகுதியில் சூரிய ஒளி படட்டும்.

கண்களை மூடி, சூரியனை நோக்கி முகம் திருப்பி நில்.

சூரியன் என்பது வெறும் வெப்பம் அல்ல —

அவன் சக்தியின் ஆதிமூலம்.

சித்தர்கள் "சூரிய நமஸ்காரம்" செய்தது வெறும் உடற்பயிற்சி அல்ல 

சூரியனிடம் தன்னம்பிக்கையை பெறும் வழிபாடு! 

சூரிய நமஸ்காரம் செய்த பிறகு உன்னுள் ஒரு தீ மூளும் — அது மணிபூரக அக்னி!

4. அனாஹதம் — Heart Chakra

(அமைவிடம்: இதயம்)

இந்த சக்கரம் அடைபட்டால்:

நேசிக்க முடியாது, நேசிக்கப்படுவதை ஏற்க முடியாது.

தனிமை, கோபம், பொறாமை, மன்னிக்க மறுக்கும் மனம்.

சில நேரங்களில் மார்பு வலி கூட வரும்.

இயற்கை தீர்வு: மரத்தை கட்டிப்பிடி

ஒரு பெரிய மரம் தேடு — ஆலமரம், அரசமரம், வேப்பமரம்.

அதை இரு கைகளாலும் கட்டிப்பிடி.

மார்பு அந்த மரத்தை தொட்டிருக்கட்டும்.

5 நிமிடம் மூச்சு விடு.

மரங்கள் உயிரோட்டமுள்ளவை.

அவை ஆக்சிஜன் மட்டும் தருவதில்லை —

ஒரு அமைதியான அதிர்வை (vibration) வெளிப்படுத்துகின்றன.

அந்த அதிர்வு உன் இதயத்தை மென்மையாக்கும்.

சித்தர்கள் மரத்தடியில் தவம் செய்தது தற்செயல் அல்ல — மரங்கள் அவர்களின் குரு! 

5. விசுத்தி — Throat Chakra

(அமைவிடம்: தொண்டை)

இந்த சக்கரம் அடைபட்டால்:

உன் உண்மையை சொல்ல தயக்கம் வரும்.

"என் கருத்து முக்கியமில்லை" என்று நம்புவாய்.

தொண்டை வலி, தைராய்டு பிரச்சினைகள் வரலாம்.

கலை, இசை, எழுத்தில் தடை ஏற்படும்.

இயற்கை தீர்வு: சுத்தமான காற்றை ஆழமாக சுவாசி

காட்டுக்கு போ, மலைக்கு போ, கடற்கரைக்கு போ.

நின்று, கண்களை மூடு.

மூக்கால் ஆழமாக சுவாசி — 4 விநாடி.

நிறுத்து — 4 விநாடி.

வாயால் மெதுவாக விடு — 8 விநாடி.

காற்றே வாக்கு சக்தியின் ஆதாரம்.

சுத்தமான காற்று தொண்டையை சுத்தப்படுத்துவதோடு —

உன் வார்த்தைகளில் வலிமையையும் சேர்க்கும்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" — அந்த தமிழ் மொழி வெளிப்பட காற்றே வாகனம்! 

6. ஆஜ்ஞா — Third Eye Chakra

(அமைவிடம்: புருவ மத்தியம்)

இந்த சக்கரம் அடைபட்டால்:

குழப்பம், தலைவலி, கனவுகள் இல்லாமல் போவது.

நுண்ணறிவு குறைவு.

"என் வாழ்க்கையில் திசை தெரியவில்லை" என்ற உணர்வு.

இயற்கை தீர்வு: நட்சத்திர தியானம்

இரவில் வெளியே போ.

மின்சார விளக்கு இல்லாத இடம் தேடு.

வானத்தை பார் — நட்சத்திரங்களை பார்.

கண்ணிமைக்காமல் ஒரு நட்சத்திரத்தை பார்.

படிப்படியாக உன் கண்களும், மனமும் அமைதியாகும்.

ஆஜ்ஞா சக்கரம் என்பது "உள்கண்."

வெளிக்கண்கள் வெளியை பார்க்கும்போது —

உள்கண் உள்ளே திரும்பும்.

நட்சத்திரங்களின் ஒளி கோடி ஆண்டுகள் பயணித்து உன்னை வந்தடைகிறது —

அதை உணர்ந்தால் உன் சிறுமை புரியும், பிரபஞ்சத்தின் பெருமை புரியும். 

ரமண மகரிஷி கூறினார்: "உள்ளே பார் — அங்கே எல்லாம் இருக்கிறது."

7. சஹஸ்ராரம் — Crown Chakra

(அமைவிடம்: தலையின் உச்சி)

இந்த சக்கரம் அடைபட்டால்:

"நான் தனிமையாக இருக்கிறேன், யாரும் இல்லை" என்ற உணர்வு.

ஆன்மீக தொடர்பு துண்டிக்கப்பட்ட உணர்வு.

வாழ்க்கையில் அர்த்தம் தெரியாமல் போகும்.

இயற்கை தீர்வு: பௌர்ணமி மௌனம்

பௌர்ணமி இரவில் வெளியில் உட்கார்.

நிலவை நோக்கி மௌனமாக இரு.

எந்த மந்திரமும் வேண்டாம், எந்த எண்ணமும் வேண்டாம்.

வெறுமனே இரு.

நிலவின் ஒளி சூரியனிடம் கடன் வாங்கியது —

அது மெல்லிய, ஆழமான சக்தி.

அந்த மெல்லிய ஒளியில் உட்காரும்போது

உன் தலையின் உச்சி திறக்கும் —

பிரபஞ்சத்துடன் இணைவு கிடைக்கும்.

"சிவமாகி நின்றாய் எனக்கே சிவமே" — அந்த நிலை சஹஸ்ராரம் முழுமையாக திறந்தால் மட்டுமே! 🌕

இன்றிலிருந்து தொடங்கு:

காலையில் 10 நிமிடம் — மண்ணில் வெறும் காலில் நட

வாரம் ஒருமுறை — ஆற்றில் அல்லது கடலில் இறங்கு

தினமும் — சூரிய நமஸ்காரம் செய்

மரத்தடியில் — தினமும் 5 நிமிடம் உட்கார்

இரவில் — ஒரு நட்சத்திரத்தை தியானி

பௌர்ணமியில் — மௌனமாக நிலவை பார்

இயற்கை உன்னை குணப்படுத்த காத்திருக்கிறது.

நீ மட்டும் வெளியே வர வேண்டும்.

"இயற்கையோடு வாழ்பவன் என்றும் நோயற்றிருப்பான்" — சித்தர் வாக்கு 

Thursday, April 09, 2026

சிவாஜி மஹாராஜ்

அது ஒரு பொற்காலம். அப்போது நம் பத்திரிக்கைகள் தர்மத்திற்குக் கட்டுப்பட்டு நடந்தன.

சிவாஜி மஹாராஜ் தனது கோட்டைகளை மிகவும் பாதுகாப்பாக கட்டியிருப்பதாக எண்ணி பெருமிதம் கொண்டிருந்தார்.*

ஆனால் ஒரு முறை ஒரு குறிப்பிட்ட கோட்டையில் பால் , மற்றும் தயிர் விற்க வந்த இடைப்பெண் ஒரு நாள் மாலை வீடு திரும்புவதற்குள் சூரிய அஸ்தமனம் ஆகிவிடும் போலிருந்தது._

கோட்டைக் கதவை   காவலர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பாக  அடைத்து விட்டனர். அந்த இடைப்பெண் அன்றிரவு வீடு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது._

அந்தப் பெண் காவலர்களை கெஞ்சிக் கேட்டும் அவர்கள் திறக்க மறுத்துவிட்டார்கள். ஏனென்றால் அது அரசரின் உத்தரவு.*_

ஆனால் மறுநாள் காலையில் அந்தப் பெண் கோட்டையில் காணப்படவில்லை._

எங்கு தேடியும் அவளைக் காணவில்லை._

காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விஷயம் சிவாஜி மஹராஜின் காதை எட்டியது._

விஷயத்தை கேள்விப்பட்ட உடன் மஹராஜ் தானே மலைக் கோட்டை அடிவாரத்தில் இருந்த அப்பெண்ணின் வீட்டில் சென்று பார்த்திட விரைந்தார்.*_

என்ன ஆச்சர்யம்!! அந்த இடைப்பெண் அவள் வீட்டில் தான் இருந்தாள்._

மஹராஜை பார்த்ததும் அவள் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்து விட்டாள். அவள் முகத்தில் கலவரம் தென்பட்டது.*_

அந்த இடைப் பெண்ணைப் பார்த்து எப்படி நீ நேற்று இரவு கோட்டையில் இருந்து வெளியேறினாய் என்று சிவாஜி மஹாராஜ் கேட்கிறார்._

பின்னணியில் கோட்டை தெரிகிறது. அந்த இடைப்பெண்ணோ தனது கையில் தனது பச்சிளங் குழந்தையோடு சிவாஜி மஹாராஜை எதிர் கொள்கிறாள்._

இந்த காட்சியைத்தான் இந்த 1951  - ஆனந்த விகடன் தீபாவளி மலர் அட்டைப்படம் சித்தரிக்கிறது.*_

அந்த இடைப்பெண் தன் கையில் உள்ள பச்சிளங் குழந்தையை காட்டுகிறாள்._

ஒருவேளை தான் வீடு வராது போனால் தாயிடம் பால் குடிக்கும் அக்குழந்தையின் நிலை  என்னாகும் என நினைத்து மனம் பதைத்தாள் அப்பெண். எப்படியாவது கோட்டையில் இருந்து வெளியேறும் வழியை தேடிய போது ஒரு பக்க மதில் சுவர் ஓரமாக வளர்ந்துள்ள ஒரு மரத்தின் உதவி கொண்டு எப்படியோ உயிரை பணயம் வைத்து இரவோடு இரவாக கோட்டையின் மதில் சுவரைத் தாண்டி வீடு வந்ததாகவும்,_

நிலை கொள்ளாமல் அழுது கொண்டிருந்த அந்த இளம் சிசுவை மார்போடு அணைத்து பாலமுதம் தந்து ஆசுவாசப்படுத்தியதை அரசனிடம் அப்பெண் தெரிவிக்கிறாள்.*_

இந்த தாயின் மனநிலையை தெளிவாக எடுத்துக் காட்டும் விதமாக, குறிப்பால் உணர்த்தும்படியாக பின்னணியில் ஒரு பசுவும் கன்றும் இருக்குமாறு காட்டி,_

*அக்கன்று தன் தாய்ப் பசுவிடம் பால் குடிப்பதைப் போல காட்சியை அமைத்த ஓவியரை என்ன பாராட்டினாலும் தகும்.*_

பாதுகாப்பான ஒரு கோட்டைக் காவலையும் ஒரு தாயுள்ளம் கொண்ட பெண் நினைத்தால் தாண்டி வந்திடுவாள் என்னும் உண்மையை சிவாஜி அங்கே நேரடியாக பார்த்து தெரிந்து கொண்டார்.*_

தாய்மைக்கு முன் எதுவும் தடை போட முடியாது என்பதையும் அவர் புரிந்து கொண்டார்._

அப்பெண்ணின் தாய்மை உள்ளத்தைப் பாராட்டி பரிசளிக்கச் செய்தார்._

*இந்த மாதிரி உயர்ந்த லட்சியங்கள், சாகசங்கள், சரித்திர பெருமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்த நமது பத்திரிகை தர்மம்...*_

தற்போது  எங்கேயிருக்கிறது? என்பதை நாமே அறிவோம்!!_

*மேன்மக்கள்.., போலி மதச்சார்பின்மை  பேசி ...சொந்த தர்மத்தை அழித்து,  அழிக்க காரணமாகி விடாதீர்கள்*_

Tuesday, March 31, 2026

ராமரின் பரம்பரை ~ லாஹூர்

லவ மற்றும் குசா இறந்த பிறகு ராமரின் பரம்பரைக்கு என்ன நேர்ந்தது?

ஸ்ரீ ராமர் 11,000ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாக கீழ்க்கண்ட சுலோகம் கூறுகிறது.

"சததஸ து சஹஸ்த்ராணி ராமே ராஜ்யதி".

ஸ்ரீ ராமருக்கு பிறகு அவரது கோசல நாடு பல பாகங்களாக பிரிக்கப்பட்டு லவன் குசன் மற்றும் லட்சுமண பரத சத்ருகனர்களின் மகன்களுக்கும் தரப்பட்டது.

லவன் ஷ்ரவஸ்தி / தற்போது லாஹூர் என்று அழைக்கப்படும் லவ்புரி எனும் நகரை தலைநகராக கொண்டு அவனது பகுதியை அரசாண்டார்.

குசன் அயோத்தியை தலைநகராகக் கொண்டு அரசாண்டார். பின்னர் தற்போது குஷிநகர் என அழைக்கப்படும் குஷாவதியை புதிய தலைநகராகக் கொண்டு அரசாண்டார்.

இதன் காரணமாக ராமனுக்கு அடுத்து குசனது பெயர் தான் ராம பரம்பரையில் வருகிறது. அவருக்கு பின் அவரது மகன் அதிதி அவரது மகன் நிசாதன் என ராம பரம்பரை நீளுகிறது.

(குசன் மட்டுமே ராம சீதையின் மகன் என சில பேச்சுவழக்கு கற்பனைக் கதைகள் உண்டு. வனத்திற்கு சென்ற கர்ப்பிணியான சீதை வால்மீகி ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்தார் அங்கே அவருக்கு குழந்தை பிறந்தது, பின்னர் வால்மீகி முனிவர் தவம் செய்யும் போது இடையூறாக இருக்கக்கூடாது என தண்ணீர் எடுப்பதற்காக குடத்துடன் குழந்தையையும் சீதை ஆற்றங்கரைக்கு எடுத்து செல்கிறாள். விழித்த முனிவரோ குழந்தையை காணாமல் சீதைக்கு என்ன பதில் சொல்வது என எண்ணி தர்ப்பை கொண்டு குழந்தையை உருவாக்குகிறார். திரும்பி வந்த சீதை அக்குழந்தையையும் தன்னுடையதாய் எண்ணி வளர்க்கிறாள். பின்னாளில் சீதை நிலத்தில் உறைந்த பிறகு லவனும் குசனும் புனித நெருப்பினை வலம் வருகின்றனர். லவன் நெருப்பில் மறைந்து விட நிலைத்து நின்ற குசனுக்கு ராஜ்ஜியம் வழங்கப்பட்டதாக கதை உண்டு. ஆனால் மூல ராமாயணத்தில் இவ்வாறு இல்லை.இது வெறும் செவிவழிக் கதையாகும்)

ரகு வம்சத்தில் மொத்தம் 146 அரசர்கள், அதில் முதல் அரசன் சூரியனின் மகனான மனு ஆவார் எனவேதான் அவ்வம்சம் சூரியவம்சம் அல்லது ரகுவம்சம் என்று அழைக்கப்பட்டது. ஸ்ரீ ராமர் அவ்வம்சத்தின் 81வது அரசர், குசன் 82வது அரசர்.

குசனுக்கு பிறகு 64 தலைமுறைகள் அரசாண்டனர். லங்குல் அல்லது சித்தார்த் என அறியப்படும் கௌதமபுத்தர் சூரியவம்சத்தின் 141வது அரசராவார் (BCE 563-483). அவரது மகன் ராகுல் / ப்ரசஞ்சித் அவருக்கு அடுத்த அரசன் ஆவார்.

லங்குல் மற்றும் அவரது மகன் ப்ரசஞ்சித் ஆகியவர்கள் புத்தர், ராகுல் இல்லை வேறு ஆட்கள் என்ற கருத்தும் உள்ளது. எனவே ராம வம்சத்தில் புத்தர், ராகுல் பெயர்களுக்கு பதிலாக லங்குல், ப்ரசஞ்சித் ஆகிய பெயர்களே பயன்படுத்தப்படுகிறது. (புத்தரை விஷ்ணுவின் ஒன்பதாம் அவதாரமாக வட நாட்டில் வணங்குவர் ஆனால் தென்னாட்டில் அது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை)

ராமனுடைய வம்சத்தின் கடைசி அரசர் சௌமித்ரன் / சுமித்ரன் ஆவார். கிமு 362ல் சுமித்ரனை மகாபத்மநந்தன் வென்ற பிறகு உலகின் மிகப்பெரிய அந்த அரச வம்சம் முடிவுற்றது.

Friday, March 20, 2026

தஞ்சாவூர் சங்கரன்

கும்பகோணத்தில் வசித்து வந்த திரு சதாசிவம் ஒவ்வொருஅனுஷ தினத்தன்றும் காஞ்சியில் பெரியவாள் இருக்கிறாரா என்று உறுதி செய்து கொண்டு தன் பயணத்தை துவங்கி விடுவார்.வேறு எங்கேனும் வெளியூர்களில் முகாமிட்டிருந்தால் அப்போது பயணிக்கமாட்டார்.அப்படி ஒரு அனுஷதினத்துக்கு முதல் நாள் மாலை.....

பழங்கள்.கல்கண்டு வாங்கப் போனவருக்கு ஒரு சின்ன அதிர்ச்சி.ஒரு கடையும் காணவில்லை இவரின் முகத்தைப் பார்த்த கீரை வியாபாரி" என்ன சாமீ பையும் கையுமா கடைக்குப் பொறப்படறயா..மெட்ராஸ்ல ஏதோ அரசியல் பிரச்னையாம்.ஒரு கட்சிக்காரங்க கூட்டமாக திரண்டு வந்து எல்லாக் கடைகளையும் மூடச் சொல்லி உத்தரவு போட்டுட்டு போறாங்க. "அட ஈஸ்வரா வெளியூருக்கு பஸ்ஸெல்லாம் போறதோ!" என்று ஒரு கேள்வி போட்டார். கடைகளயே பூட்ட வெச்சவங்க பஸ்ஸுகளை போக விடுவாங்களா.. பிறகு மனைவியிடம் "என்ன ஜானகி இப்படி ஆயிடுத்து? நாளைய அனுஷத்திற்கு காஞ்சிபுரம் போக முடியமானு தெரியலயே..ஏன் இந்த சோதனை? என்று கலங்கியவர் மகா ஸ்வாமிகளை மனதுக்குள் நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டார். ப்ராப்தம் இருந்தா அங்கே இருப்போம் என்று சொல்லிவிட்டு வாசலில் இரு பக்கத்தையும் பார்வையால் துழாவிக் கொண்டிருந்தார். வாசலில் நின்று கொண்டிருந்த சதாசிவத்தின் அருகே வெள்ளை நிற அம்பாஸடர் கார் ஒன்று வேகமாக வந்து நின்றது.. பஞ்சகச்சம் அணிந்து தும்பைப்பூ மாதிரியான வெள்ளை நிறத்தில் சட்டையுடன் விபூதி தரித்த ஒருவர்காரிலிருந்து கீழே இறங்கினார்.

இறங்கியதைப் பார்த்ததும் சதாசிவ தம்பதிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. "சார் நமஸ்காரம்...எம்பேரு சங்கரன். உள்ளே இருக்கிறது என் மனைவி. தஞ்சாவூர்லேருந்து வந்திண்டிருக்கோம். மனைவிக்கு திடீர்னு தலைவலி. அவளுக்கு நல்ல டிகிரி காபி சாப்பிட்டா சரியாயிடும். இன்னிக்குன்னு பார்த்தா ஓட்டல் எதுவும் இல்லை.உங்களுக்கு சிரமம் இல்லேன்னா இரண்டு பேருக்கும் ஸ்ட்ராங்கா காபி போட்டு கொடுக்க முடியுமா?


"தாராளமா..உள்ளே வாங்கோ.காபி என்ன..டிபன் பண்ணணும்னா கூட பண்ணித் தர்றேன்" என்று கனிவாகச் சொன்னார். மணக்கும் காபியைக் குடித்து விட்டு வாயார வாழ்த்தினார்கள் அப்போது சதாசிவம்,"இப்போது எதுவரைக்கும் பயணப் பட்டுண்டுண்டிருக்கேள்?" ஒருவேளை சென்னை என்று சொன்னால் தொற்றிக்கொண்டு போகலாமே என்ற ஒரு நப்பாசை. "நான் காஞ்சிபுரத்துல பெரியவாளைத் தரிசிக்கப் போயிண்டிருக்கேன். ஆறு மாசம் ஆஸ்திரேலியாவில் இருந்துவிட்டு போனவாரம்தான் தஞ்சாவூர் வந்தேன். நாளைக்கு அனுஷமா இருக்கு.நீங்களும் வரேளா? என்று அழைப்பு விடுத்தபோது சதாசிவம் தம்பதிகளுக்குஅடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நள்ளிரவு வேளையில் கார் வந்து நிற்பதைப் பார்த்து ஓடோடி வந்தார் மடத்து வாட்ச்மேன். சங்கரன் உடனே அவர்களைப் பார்த்து "உங்களை மடத்து வாசலில் இறக்கி விடுவதற்காகத்தான் இங்கே வந்தேன். நண்பர் பக்கத்துல இருக்கார். அவா கிரஹத்துல தங்கிட்டு நாளைக்குக் காத்தால உங்களை வந்து பார்க்கிறேன். என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சங்கரன். காலை மடத்துக்கு அருகே உள்ள கடைகளில் வாங்கிய பழங்கள், கல்கண்டு, புஷ்பங்கள் போன்றவற்றை ஒரு மூங்கில் தட்டில் எடுத்துக்கொண்டு பஞ்சகச்சம் மற்றும் மடிசார் உடையுடன் பெரியவா தரிசனத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர் சதாசிவம் தம்பதிகள். சங்கரனை இடை இடையே தேடினார் நன்றி சொல்ல வேண்டும் என்ற அவாவில். ஸ்ரீமடத்தின் உதவியாளர் ஒருவர், சதாசிவத்தின் தோளைத் தொட்டு, 

"மாமா...கூப்பிட்டுண்டே இருக்கேன்..அப்படி யாரைத் தேடறேள்? பெரியவா உங்களைக் கூப்பிடறா....வாங்கோ,.எம்பின்னால்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தார். பின் தொடர்ந்தனர் தம்பதிகள் ."வாப்பா சதாசிவம்.. கும்பகோணத்துல உனக்கு பழம் ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே வாங்கிண்டு வந்திருக்கே போலிருக்கு" என்று கேட்டபோது ஆடித்தான் போனார் சதாசிவம்."ஆமாம் பெரியவா.. அங்கே ஏதோ பிரச்னை.கடைகளும் இல்லை..பஸ்ஸும் இல்லை..." "அதான் சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே...அப்புறம் என்ன...இந்தா" என்று பிரசாதத்தை நீட்டவும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்.பிறகு "சங்கரன்னு ஒருத்தர்..அவர்தான் தன்னோட கார்ல என்னைக் கூட்டிண்டு வந்து நேத்து ராத்திரி இறக்கி விட்டுட்டுப் போனார்.அவருக்குத்தான் நன்றி சொல்லணும்" என்றார் குழைவாக."மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே......இனிமே சங்கரனாவது,கிங்கரனாவது"என்று பெரும்குரல் எடுத்து, சிரிக்க ஆரம்பித்தது அந்த பரப்பிரம்மம். சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.ஆனால் புரியாதது மாதிரியும் இருந்தது. "பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடத்து...மடத்துல போஜனம் பண்ணிட்டு,ஜாக்கிரதையா ஊர் போயிட்டு வா"என்று ஆசிர்வதித்தார் பெரியவா.

நடந்து முடிந்த காட்சிகளின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமல் வெளியே வந்த சதாசிவம்,நேற்று நள்ளிரவு தான் மடத்து வாசலில் இறங்கியபோது பணியில் இருந்த வாட்ச்மேனைக் கண்டு அருகில் அழைத்து ""ஏம்ப்பா..நேத்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி ஓட்டிண்டு வந்தாரே ...அவர் திரும்ப இன்னிக்கு வந்தாரா?" என்று கேட்டார்.

"என்ன சாமீ.....நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே இல்லியே சாமீ...கலையில்தானே நான் வந்திருக்கேன்" சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார்,"இல்லேப்பா....நேத்து ராத்திரி உன்னைப் பார்த்தேனே....இதே இடத்து வாசல்ல..." என்றார்.புருவம் உயர்த்தி, "என்ன சாமீ நீங்க...சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க.. நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்கு இல்ல சாமீ" என்று சொல்லிவிட்டுப் போனார். சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது. "அப்படி என்றால் ...நேற்று இரவு என்னையும் என் மனைவியையும் கும்பகோணத்தில் இருந்து இங்கே கூட்டிக்கொண்டு வந்த சங்கரன் யார்?" என்று மனம் நெகிழ்ந்து அரற்றினார்.சர்வமும் உணர்ந்த சங்கரனாக அவருக்கு மகா பெரியவா ஒரு விநாடி காட்சி தந்து மறைந்தார், "பெரியவா,,," என்று பெரும் குரலெடுத்து அழைத்து அந்த மடத்தின் வாசலில் ....மண் தரையில்..... பெரியவா இருக்கும் திசையை நோக்கி சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் சதாசிவம் கூடவே அவரது மனைவியும்..

Thursday, February 26, 2026

புற்றுநோய் தோற்கடிக்கப்பட்டது

புற்றுநோய் தோற்கடிக்கப்பட்டது

அன்னாசிப்பழம் கலந்த வெந்நீர்:-

ICBS பொது மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர். கில்பர்ட் ஏ. க்வோக், இந்தச் செய்தியைப் பெறும் ஒவ்வொருவரும் பத்து பேருக்குப் பத்து பிரதிகளை அனுப்பினால், குறைந்தபட்சம் ஒரு உயிராவது காப்பாற்றப்படும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அன்னாசிப்பழம் கலந்த வெந்நீர் உங்களைப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றும்;

சூடான அன்னாசிப்பழம் புற்றுநோய் செல்களைக் கொல்கிறது.

2 முதல் 3 துண்டுகள் அன்னாசிப்பழத்தை மெல்லியதாக நறுக்கி ஒரு கோப்பையில் போட்டு, வெந்நீரைச் சேர்க்கவும், அது "காரத்தன்மை கொண்ட நீராக" மாறும்; இதை தினமும் குடித்தால், அது அனைவருக்கும் நல்லது.

சூடான அன்னாசிப்பழம் புற்றுநோயை எதிர்க்கும் பொருட்களை வெளியிடுகிறது; இது பயனுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவத்தில் சமீபத்திய முன்னேற்றமாகும்.

அன்னாசிப்பழத்தின் சூடான பழம் நீர்க்கட்டிகள் மற்றும் கட்டிகளைக் கொல்லும் விளைவைக் கொண்டுள்ளது; இது அனைத்து வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அன்னாசிப்பழம் கலந்த வெந்நீர் ஒவ்வாமை காரணமாக உடலில் உள்ள அனைத்து கிருமிகளையும் நச்சுக்களையும் நீக்குகிறது.

அன்னாசிப்பழச் சாற்றிலிருந்து பெறப்பட்ட ஒரு மருந்து *தீய செல்களை* மட்டுமே அழிக்கிறது மற்றும் ஆரோக்கியமான செல்களைப் பாதிப்பதில்லை.

மேலும், அன்னாசிப்பழச் சாற்றில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் பாலிஃபீனால்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உள் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் இரத்த உறைவைக் குறைக்கவும் உதவும்.

படித்த பிறகு, மற்றவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் சொல்லுங்கள், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

Monday, January 19, 2026

Govinda Damodara Madhavedhi

ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய ஜய காமாக்ஷி. 

இது சுவாமிகள் எனக்கு 36 வருஷத்துக்கு முன்னாடி எழுதிக் கொடுத்த ஒரு நாம மந்திர உபதேசம். பில்வமங்களாச்சார்யார்னு ஒரு மகான் குருவாயூரப்பனுக்கு ரொம்ப நெருக்கமா இருந்தவர். அவர் கோவிந்த தாமோதர ஸ்தோத்திரம்னு ஒண்ணு பண்ணிருக்கார். அது சுவாமிகளுக்கு ரொம்ப இஷ்டமானது. அந்த ஸ்லோகத்தைப் பத்தி சுவாமிகள் பேசினதை நான் ஷேர் பண்றேன். அதுல இருந்து சிலது படிக்கிறேன்.

"சுகாவஸானே த்விதிதமேவ ஸாரம்" சுகத்தின் எல்லை நிலையில் நீ இருப்பாய், எதைச் சொன்னால்? "கோவிந்த தாமோதர மாதவேதி". கோவிந்தா, தாமோதரா, மாதவான்னு சொல்லிண்டு இருந்தா நீ அனுபவிக்கிற ஆனந்தம் பிரம்மாதி தேவதைகளுக்குக் கூட கிடையாது. அப்பேர்ப்பட்ட ஆனந்தம் நீ அனுபவிப்பாய்.

"துக்காவஸானே து இதமேவ கேயம்" கடுமையான துக்கம், அதை மறக்கவே முடியல. நினைக்க நினைக்கத் தேம்பித் தேம்பி அழணும்னு தோன்றுது, புலம்பணும்னு தோன்றுது. உடம்பும் வீணா போயிட்டு இருக்கு. யாராலயும் அதுக்கு மருந்து கொடுக்க முடியல. அப்பேர்ப்பட்ட துக்கம் ஒருத்தர் அனுபவிக்கிறார்னா, அவரைப் போய் நாடி, இப்படிப் புலம்புறதாலயும், அழுறதாலயும் இந்த துக்க நிவர்த்தி ஏற்படாதுப்பா. மகான் பில்வமங்களாச்சார்யார் சொல்லியிருக்கார் **"கோவிந்த தாமோதர மாதவேதி"**ன்னு விடாமத் தொடர்ந்து சொல்லிண்டு வா. இந்த துக்கம் பறந்து போயிடும். துக்கத்தினுடைய எல்லையிலிருந்துண்டு ஒருத்தர் கஷ்டப்படுறபோது அவாளுக்கு "கோவிந்த தாமோதர மாதவேதி"ன்னு அந்த திருநாமங்களைச் சொன்னால் பரம சாந்தி ஏற்படும்.

"தேஹாவஸானே து இதிதமேவ ஜாப்யம்" ஸ்ரீமத் பாகவதத்துலயும் ஸ்ரீமன் நாராயணீயத்துலயும் ‘மனஸைக் கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம். அதற்குச் சிறந்த உபாயம் என்ன? இந்த மனஸு அடங்க, மனஸு எங்க வேணாலும் போகட்டும், வாயில திருநாமத்தைப் பேத்தலாஜிக்கல் கண்டிஷன்ல (pathological condition) நம்மையறியாமல் வரக்கூடிய அளவுக்குப் பழகிக்கோ’ என்பதுதான் பாகவத உபதேசம், நாராயணீய உபதேசம். அப்படிச் சொல்லிட்டே இருந்தா, "தேஹாவஸானே த்விதிதமேவ ஜாப்யம்", சரீரம் கீழே விழும்போதும் நம்மையறியாமல் கோவிந்த தாமோதர மாதவேதி அப்படிங்கிற திருநாமம் வந்துடும். அந்த திருநாமம் வாக்குல வந்தவுடனே பகவான் கோலோகத்துக்கு அவனை அழைத்துக் கொண்டு போவார்.

அந்த ஸ்தோத்திரத்திலிருந்து இன்னொரு ஸ்லோகம்: 

"த்வாமேவ யாசே மம தேஹி ஜிஹ்வே

ஸமாகதே தண்டதரே க்ருதாந்தே |

வக்தவ்யமேவம் மதுரம் ஸுபக்த்யா 

கோவிந்த தாமோதர மாதவேதி ||

ஹே நாவே! நீ கேட்டபோது எத்தனையோ கோதுமை அல்வா, திரட்டுப்பால், எத்தனையோ விஷயம், தயிர் வடை எல்லாம் உனக்குக் கொடுத்திருக்கேன். சில பேருக்குத் தித்திப்புப் பிடிக்காது, இந்த மாதிரி காரம் பிடிக்கும். அதனால நீ சொன்னபடி நடந்திருக்கேன் ஜென்ம ஜென்மமா. உன்கிட்ட ஒரு சின்ன ஒப்ளிகேஷன் (obligation). என்ன? எமன் கையில காலதண்டத்தோடு வரும்போது, அந்த சமயத்தில் பக்கத்தில் யாரும் இருக்க மாட்டா. நாக்குதானே பக்கத்துல இருக்கும்? நாக்கைப் பார்த்து, ஹே நாவே! இப்படியே மதுரமா "கோவிந்த தாமோதர மாதவேதி"ன்னு சொல்லணும்னு உன்கிட்ட கேட்டுக்குறேன், உன்னையே கேட்டுக்குறேன். நாக்கு எப்பவுமே நம்முடைய தொண்டையில்தான் இருந்துண்டு இருக்கு. அதனால நாக்கையே கேட்டுப்போம் அப்படின்னு இந்த ஸ்லோகம் சொல்லுது.

சுவாமிகளுக்கு இத்தனை பிரியம் இந்த கோவிந்த தாமோதர நாமத்துல. அதுல இருந்து எனக்கு ஒரு அருமையான உபதேசமா எழுதிக் கொடுத்திருக்கார்.

"குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி" அப்படின்னு மஹா பெரியவாளையும், சிவன் சாரையும், சுவாமிகளையும், காமாட்சியையும் தியானம் பண்ணி நாலு தடவை இந்த "குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி" அப்படின்னு சொல்லு.

அதுக்கப்புறம்: 

த்⁴யேய꞉ ஸதா³, யோகி³பி⁴ரப்ரமேய꞉, சிந்தாஹர:, சிந்திதபாரிஜாத꞉ .

கஸ்தூரிகாகல்பிதநீலவர்ணோ, கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ..

இந்த ஸ்லோகத்துக்கு என்ன அர்த்தம்னா, யோகிகளால் எப்போதும் தியானம் பண்ணப்படுவதும், அப்ரமேய: - எல்லையற்றதும், சிந்தாஹர: - கவலைகளைப் போக்குவதும், சிந்தித பாரிஜாத: - தன்னை நினைப்பவர்களுக்குப் பாரிஜாதத்தைப் போல், கற்பக விருட்சத்தைப் போல் வேண்டுவதைக் கொடுப்பதும், கஸ்தூரிகா கல்பித நீலவர்ண: - கஸ்தூரியைப் போன்ற நீல வர்ணம் கொண்டதுமான அந்த கோவிந்தனுடைய நாமங்களை "கோவிந்த தாமோதர மாதவேதி" அப்படின்னு ஜபம் பண்ணு.

இதை ஒரு தடவை சொல்லிட்டு: 

"கோ³விந்த³ கோ³விந்த³ ஹரே முராரே, கோ³விந்த³ கோ³விந்த³ முகுந்த³ க்ருʼஷ்ண .

கோ³விந்த³ கோ³விந்த³ ரதா²ங்க³பாணே, கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி .. "

அப்படின்னு 72 தடவை சொல்லுங்கோ. 72 தடவை சொன்னா இந்த ஸ்லோகத்துல 14 பகவானுடைய நாமங்கள் இருக்கு. ஒரு சகஸ்ரநாமம் பண்ணிண மாதிரி ஆயிடும். விஷ்ணு சகஸ்ரநாமம் மாதிரி. எங்கேயும், யாரும், எப்போதும் சொல்லலாம். இந்த நல்ல நாள்ல உங்களுக்கும் இதைச் சொல்லணும்னு தோணித்து. 

ஜானகி ஜீவன ஸ்மரணம் 

ஜய ஜய ராம ராம!












Om.

Monday, November 03, 2025

நினைவாற்றல் பெருக

 

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து,

உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய், 

பொருபுங் கவரும் புவியும் பரவும்,

 குருபுங்கவ எண்குண பஞ்சரனே