Pages

Saturday, February 06, 2021

தொப்புள்கொடி தாயத்து

நம் தமிழ் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல…வெளியானது அதிர்ச்சி தகவல்கள்...!!!

இனியும் ஏமாறாதீர்கள்...

இரத்த புற்றுநோய் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட மனித நோய்களை குணப்படுத்த உதவ மற்றும் எதிர்த்து போராடும் சக்தி படைத்த தொப்புள்கொடி ஸ்டெம்செல்களை பணம் செலுத்தி ஹைடெக் முறையில் சேமித்து வைத்து பாதுகாத்திடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

தாயின் கர்ப்பத்திலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து மற்றும் பிராய வாயுவை எடுத்துச் செல்வது தொப்புள்கொடியாகும். குழந்தைக்கும் தாய்க்கும் உண்டான உன்னதமான உறவை உணர்த்தும் மகத்துவமானது தொப்புள் கொடியாகும்.

இருப்பினும் குழந்தை பிறந்த சில நிமிடங்களில் இந்த தொப்புள் கொடியின் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்து அதை அறுத்து அகற்றிவிடுகிறோம்.

ஆனால் தொப்புள்கொடியின் பயன்பாடுகள் ஆயுட்காலம் முழுவதும் உள்ளது என்பது ஆச்சரியமான ஒன்றாகும்.

இத்தகைய சிறப்புமிக்க தொப்புள் கொடியில் தான் நோய்களை எதிர்த்து போராடிடும் ஸ்டெம்செல்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.

அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. 

தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.

அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.

பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும்.

இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்.

உண்மையில் இன்று நாம் முட்டாளா இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா என்று சிந்தித்து பார் தமிழா… இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்...