Pages

Tuesday, July 26, 2022

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்!

ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.

கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றும்தன்மை கொண்டது.

இரைப்பையில் பாக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும்.

கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.

தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ் சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட வேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

கருஞ்சீரகத்தில் "தைமோகியோனின்" என்ற வேதிப்பொருள் உள்ளது.  இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.  இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும்.

தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். 

குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து, பயன்படுத்துவது நல்லது.

புற்று நோய்க்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்தாக செயல்படுவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி உள்ளது. குறிப்பாக கணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. 

கருஞ்சீரகத்தில் இன்டெர்பிதான் என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி புற்று நோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.

புற்று நோய் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை சுடுநீரில் கலந்து காலையும், மாலையும் பருகலாம். சுடுநீருக்கு பதிலாக தேன் கலந்தும் சாப்பிடலாம்.

சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதனை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடவேண்டும்.  இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.

பிரசவத்திற்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

கருஞ்சீரகம் பல முக்கியமான சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

திருப்பதி - தங்குவதற்கு ஓரு அறைக்கு வெறும் 200

இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம். 

Tirumala Sri Kasimath,

Ring road, Near S.V. Museum,

Tirumala - 517507 (A.P)

Ph : 0877-2277316

திருமலையில் தங்குவதற்கு  ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால், 

இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், பயன்படுத்தி கொள்ளுங்கள்.

கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம். ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன.

மூல் மட் மின்: +918772277499 0877-2277499.

புஷ்பா மண்டபம் : 0877-2277301.

ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.

உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.

ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316.

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட்  Ph-0877-2277302.

ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை 

Ph: 0877-2277282.

ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் 

Ph : 0877-2277370.

ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.

ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.

உடுப்பி மட் Ph-0877-2277305.

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் : 0877-2277826.

ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.

ஸ்ரீ திருப்பதிஸ்ரீமன்னாரயன ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.

ஸ்ரீ சிருங்கரி சாரதா மடம்

Ph: 0877-2277269, 2279435.

ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் Ph : 0877 222 77301)

ஸ்ரீ காஞ்சி காமகோடி 

பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் , Ph : 0877 222 77370

ஸ்ரீ வல்லபச்சரிய மடம் தொலைபேசி: 222 77317

மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் 

Ph : 0877 222 77302

ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி

Ph  : 0877 222 77436

ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி ஆதித்யான் ஆஷ்ரம் 

Ph : 0877 222 77826

ஸ்ரீ வைகநாத ஆசிரமம்

Ph : 0877 222 77282

ஸ்ரீ அஹோபில மட்  

Ph : 0877-2279440

ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் Ph : 0877 222 77269

ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால் பன்சிலால் தர்மசாலா Ph : 0877 222 77445

ஹோட்டல் நரிலமா சௌல்ரி Ph : 0877 222 77784

ஸ்ரீ சீனிவாச சொல்ரி 

Ph : 0877 222 77883

ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின் 

Ph : 0877 222 77240

கர்நாடகா விருந்தினர் 

மாளிகை 

Ph : 0877 222 77238

தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் அறநெறிகள் 

Ph : 0877 222 77245

ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் 

Ph : 0877 222 79435

ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் Ph : 0877-2220015

வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளுவது என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.

65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?

நிபந்தனைகள் :

******************

1) ஆதார் அட்டை அவசியம்.

2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்

3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.

4) காலை 10 மணி முதல் 

மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.

5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.

6.) உதவி செய்வதெற்கென உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.

7) காலை உணவு பால் இலவசம்.

8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.

9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப் படுவர்.

10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை !  

ௐ நமோ நாராயணா....!

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!

யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.

இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். 

சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனநிம்மதி உண்டாகிறது.

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..

ஸ்ரீராமானுஜர் யந்திர சக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும் போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.

பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது , இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.

வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..

செல்வம் மலை போல குவியும்.

உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள். 

அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது. 

வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத் திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.

இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.

குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்கு கிறார்கள்.

நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.

நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும். 

சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு இத் திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.

திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.

திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம் 

அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .

மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்...இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.? மேஷம் , ரிஷபம் , மிதுனம், கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் " 

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,

வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

பொதுப் பொருள்: 

திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே,  நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டுபவர் வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே  நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகிய மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா 

நின் திருவடிகளே 

சரணம் ! சரணம் !! சரணம் !!!

சிவகாமியின் செல்வன் 07

இந்தி பிரசாரசபை வெள்ளி விழாவில் கலந்து கொள்ள 1946ம் ஆண்டு காந்திஜி தமிழ்நாட்டுக்கு வந்தார்.  அவர் ஒரு வார காலம் தியாகராய நகரில் தங்கி இருந்தபோது அவரை காண லட்சக்கணக்கான மக்கள் தமிழ் நாட்டில் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் வந்து கூடியிருந்தார்கள்.  ஆகஸ்ட் போராட்டத்துக்கு பின் காந்திஜியின் புகழும் காங்கிரசின் செல்வாக்கும் நாட்டு மக்களிடையே பெரும் அளவில் ஓங்கியிருந்தது. அப்போது காமராஜ்தான் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர்.  ஆனாலும் காந்திஜி எப்போது வருகிறார், எந்த ஸ்டேஷனில் அவரை சந்தித்து வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதெல்லாம் காமராஜுக்கு தெரியவில்லை.  எல்லா ஏற்பாடுகளும் போலிஸாருக்கு மட்டுமே தெரிந்திருந்தன.

எல்லா விவரங்களையும் போலீசார் மூடு மந்திரமாகவே வைத்திருந்தார்கள்.  ராஜாஜி, கோபாலசுவாமி அய்யங்கார், இந்தி பிரசார சபா காரியதரிசி சத்திய நாராயணன் போன்ற ஒரு சில முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே விவரம் தெரிந்திருந்தது.  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் மகாத்மாஜியை நேரில் சென்று வரவேற்கும் பொறுப்பு காமராஜிடம் இருந்தது.  ஆனாலும் ஆருக்கு எந்த விவகாரமும் தெரியாததால் நேராக இந்தி பிரசார சபைக்கு போய் விசாரித்தார்.

ராஜாஜி முதலியவர்கள் ஏற்கெனவே காந்திஜியை வரவேற்க புறப்பட்டு போய்விட்டார்கள் என்கிற தகவல் மட்டுமே காமராஜுக்கு கிட்டியது.  இன்னும் கொஞ்சம் நேரத்தில் காந்திஜி வந்து விடுவார்.  அதற்குள் அவர் இறங்கும் ஸ்டேஷனை கண்டுபிடித்து ஆக வேண்டும்.  இதற்கு என்ன செய்வது? காமராஜுக்கு ஒன்றும் புரியவில்லை.

இந்த சமயத்தில் காமராஜின் நண்பரும் பத்திரிக்கை நிருபருமான கணபதி அங்கே வந்து சேர்ந்தார்.  மகாத்மாஜி எந்த ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்க போகிறார் என்கிற ரகசியம் பத்திரிக்கைக்காரர் என்ற முறையில் அவருக்கு தெரிந்திருந்தது.  கணபதி தம்முடைய காரிலேயே காமராஜரை அழைத்துக் கொண்டு அம்பத்தூர் ஸ்டேஷனுக்கு பறந்து சென்றார். அந்த ஸ்டேஷனில்தான் மகாத்மாவை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.  

காந்திஜி ரயிலை விட்டு இறங்கியதும் காங்கிரஸ் தலைவர் காமராஜ் தம் கையேடு கொண்டு போயிருந்த பெரிய மாலையை போட்டு அவரை வரவேற்றார்.  இந்தி பிரசார சபையின் வெள்ளி விழா முடிந்ததும், காந்திஜி பழனிக்கும், மதுரைக்கும் ரயில் மார்க்கமாகவே யாத்திரையாக சென்றார். அந்த பயணத்தின் போது ராஜாஜியும் காமராஜும் போயிருந்தனர்.  காந்திஜியிடம் ராஜாஜிக்கு அதிக செல்வாக்கு இருந்த காரணத்தினாலே என்னவோ காமராஜ் அந்த பயணத்தின் போது சற்று ஒதுங்கியே இருந்தார்.

பழனி ஆண்டவர் சந்நிதியில் கூட ராஜாஜிக்கு, காந்திஜிக்கு தான் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்கள். பழனிமலை படிகளில் எரிக் கொண்டிருந்தபோது காமராஜும் கூடவே சென்றார்.  அப்போது ராஜாஜி காமராஜரை காட்டி, இவர்தான் காமராஜ், காங்கிரஸ் ப்ரெசிடெண்ட் என்று காந்திஜிக்கு அறிமுகப்படுத்தினார்.

காந்திஜி தெரியுமே எனக்கு என்று பதில் கூறினார். மதுரைக்கும், பழனிக்கும்  போய்வந்த பிறகு தான் காந்திஜி கிளிக் (ஒரு சிறு கும்பல்) என்று காமராஜ் குழுவை குறிப்பிட்டார்.  காந்திஜி தங்களை பார்த்து இப்படிச் சொன்னது காமராஜுக்கும் அவரை சேர்ந்த காங்கிரஸ்காரர்களுக்கும் பெரும் வேதனையை அளித்தது.  அதை தொடர்ந்து மதுரையில் ராஜாஜிக்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டமும் கலவரமும் நடந்தன.

காந்திஜியை கண்டிக்கும் வகையில் காமராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை வருமாறு:

"ஹரிஜனில் தம் கையெழுத்துடன் எழுதியுள்ள காந்திஜியின் கட்டுரை எனக்கு மிகுந்த திகைப்பை உண்டாக்கியது.  நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்.  சட்டப்படி காரிய கமிட்டியை அமைத்தது நான்தான்.  ஆகவே, காந்திஜியின் குறிப்பு எனக்குத்தான் பொருந்த முடியும்.  சென்னையிலும், தமிழ்நாட்டிலும் காந்திஜி போகுமிடங்களுக்கெல்லாம் நானும் போய்க் கொண்டிருந்தேன்.  எப்பொழுதும் அவர் கூப்பிடும் தூரத்தில் தான் நான் இருந்தேன்.  காரியக் கமிட்டி அங்கத்தினர்கள் பலரும் கூடவே இருந்தனர்.  தமிழ் நாட்டு காங்கிரஸ் விவகாரங்கள் பற்றி காந்திஜி இங்கிருந்தபோது எங்களிடம் எதுவும் பேசவில்லை.  அங்கே போனபின் கும்பல் என்ற வார்த்தையை அவர் உபயோகித்துள்ளது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. 

சட்டசபை வேலைத் திட்டம் தேச சுதந்திர போராட்டத்தை பலப்படுத்துவதற்கு ஒரு சாதனம் என்பதை தவிர அதில் எனக்கோ, என் சகாக்களுக்கோ அதிக நம்பிக்கை கிடையாது.  என் நிலையை விளக்கி நான் பல மேடைகளில் பேசியுள்ளேன். எது என்னவாயினும் நான் சட்டசபை வேலைத்திட்டத்தில் எவ்வித பதவியும் பெற ஆசைப்படவில்லை.

காந்திஜியின் கட்டுரைக்குப் பின் பார்லிமெண்டரி போர்டிலிருந்து நான் ராஜினாமா செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை.  ஏனென்றால் இந்த சண்டை முழுவதும் சட்டசபை திட்டத்தால் ஏற்பட்டதுதான்.

டி.எஸ். அவினாசிலிங்கம், சி.என்.  முத்துரங்க முதலியார், ராமசாமி ரெட்டியார், ருக்மிணி லட்சுமிபதி ஆகிய நால்வரும், தாங்களும் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கருதினார்.  ஆனால் தேர்தலுக்கு முன் நமக்குள்ள அவகாசம் மிக குறுக்கியதாயிருப்பதால் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டாம் என்று அவர்களை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.  என் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்கள் போர்டில் இருக்க சம்மதித்தனர்.

என்னை பொறுத்தவரை நான் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை.  20 ஆண்டுகளாக நான் விசுவாசத்துடன் பின்பற்றி வந்துள்ள தலைவர் காந்திஜி, அவரிடம் என் பக்தி இன்றும் குறையவில்லை. என்னால் அவருக்கு வருத்தம் ஏற்பட வேண்டிய நிலை வந்ததேயென்ற காரணத்தால் தான் நான், ராஜினாமா செய்ய தீர்மானித்தேன்.  தேசிய போர்டும், மத்திய போர்டும் எந்த முடிவுகளை செய்தாலும் அவற்றை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உறுதி கூறுகிறேன்".  

காமராஜின் அறிக்கையை படித்துப் பார்த்த காந்திஜி மீண்டும் ஹரிஜன் பத்திரிகையில் விளக்கம் எழுதினார்.  கிளிக் என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதியில் தவறான அர்த்தம் எதுவுமில்லை என்று சமாதானம் கூறி, காமராஜ் தம்முடைய ராஜினாமாவை வாபஸ் வாங்கி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  ஆனாலும் காமராஜ் தம்முடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

அந்த ஆண்டு நடக்கவிருந்த அசெம்பிளி தேர்தலுக்கான பார்லிமெண்டரி போர்டில் காமராஜ் இல்லை.  பார்லிமெண்டரி போர்டார் ராஜாஜியின் உதவியுடன் அபேட்சகர்களை தேர்ந்தெடுத்தார்கள்.  ஆனாலும், சில நாட்களுக்கெல்லாம் சூழ்நிலை சரியில்லை என்பதை அறிந்த ராஜாஜி, தாம் காங்கிரஸ் விவகாரங்கள் எதிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று அறிக்கை வெளியிட்டு விட்டு விலகிக் கொண்டார். 

அப்போது டாக்டர் வரதராஜுலு நாயுடு காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்:

"காந்தி தர்மத்தைப் பரப்புவதிலும், காங்கிரஸ் திட்டங்களை செயல்படுத்துவதிலும் காமராஜ் தென்னாட்டிலேயே முதன்மையானவர்.  அவரைக் குறித்து தாங்கள் தவறாக எழுதியது சரியல்ல.  இதில் தாங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்." 

உடனே காந்திஜி, நாயுடுவுக்கு பதில் எழுதினார்:

"உங்கள் இஷ்டப்படியே நடந்து கொள்கிறேன்.  இந்த தகராறில் இனி நான் ஈடுபடுவதில்லை" என்பதே அந்த பதில்.

ராஜாஜியை ஒரு சிறு கும்பல் எதிர்ப்பதாக காந்திஜி எழுதியதும், தமிழ் நாட்டில் ஒரு பெரிய கொந்தளிப்பே ஏற்பட்டுவிட்டது.  ராஜாஜி கோஷ்டி, காமராஜ் கோஷ்டி என்று இரு பிரிவுகள் தோன்றின.

1942ல் அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராஜாஜி பாகிஸ்தான்  பிரிவினை குறித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.  அதற்கு சாதகமாக 15 வோட்டுக்களே கிடைத்ததால் தீர்மானம் தோற்று போனது.  இதனால் ராஜாஜி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டீயில் இருந்தும், காரியாக் கமிட்டியில் இருந்தும் ராஜினாமா செய்து விட்டு தம்முடைய பாகிஸ்தான் பிரசாரத்தாய் சுதந்திரமாக நின்று நடத்தினார்.  ராஜாஜியின் இந்த போக்கு தமிழக காங்கிரசுக்குப் பிடிக்கவில்லை.  அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக நோட்டீஸ் கொடுத்தது.  

இந்த சமயத்தில் காந்திஜி ராஜாஜிக்கு ஒரு யோசனை கூறினார்.  காங்கிரஸ் அங்கத்தினர் பதவி, அசெம்பிளி பதவி இரண்டையும் அவர் ராஜினாமா செய்து விட வேண்டும் என்பதே அந்த யோசனை.  காந்திஜியின் யோசனைப்படியே அந்த இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்து விட்டு ஆகஸ்ட் போராட்டத்தையும் எதிர்க்க தொடங்கினார் ராஜாஜி.  இவை எல்லாம் தான் காங்கிரஸ்காரர்களுக்கு ராஜியின் மீது கோபம் உண்டாக காரணங்கள் ஆயின.  

இதை தொடர்ந்து 1946ல் தென்னாட்டுக்கு வந்த காந்திஜி கிளிக் என்று சொன்னதும் காங்கிரஸ்காரர்களின் கோபம் எரிமலையாக வெடித்தது.

(தொடரும்)



 







 

Tuesday, July 12, 2022

சிவகாமியின் செல்வன் 06

ஆகஸ்ட் போராட்டத்துக்கு முன் இந்தியாவுக்கு வந்த க்ரிப்ஸ் மிஷன் இந்தியத் தலைவர்களுடன் பேசி ஓர் உடன்பாட்டுக்கு வர எண்ணினார்கள்.  அந்த தூது கோஷ்டியின் முயற்சி வெற்றி பெறாததால், அவர்கள் தோல்வியுடன் திரும்பி சென்றார்கள்.  இந்த நேரத்தில்தான் ராஜாஜி முஸ்லீம் லீகின் பாகிஸ்தான் கோரிக்கையை ஒப்புக் கொள்ளலாம் என்றும், அவர்களையும் சேர்த்துக் கொண்டு தேசிய சர்க்கார் அமைக்கலாம் என்றும் ஒரு யோசனையை வெளியிட்டார்.  இந்த யோசனையைக் காங்கிரஸ் காரியக் கமிட்டீ ஏற்று கொள்ளவில்லை.  இதனால் ராஜாஜி காங்கிரஸிலிருந்து விலகித் தனி மனிதராக நின்று தம்முடைய பாகிஸ்தான் பிரசாரத்தைக் தொடங்கினார்.

இதற்குப் பிறகுதான் பம்பாயில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி அடுத்தாற்போல் காங்கிரசின் போராட்டம் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி ஆலோசித்தது.  இந்த சரித்திர புகழ் வாய்ந்த கூட்டத்துக்கு நாட்டின் எல்லாத் திசைகளில் இருந்தும் காங்கிரஸ் தலைவர்களும், பிரமுகர்களும், தொண்டர்களும் போயிருந்தார்கள்.  

ஆகஸ்ட் 8 அன்று பம்பாய் நகரமே அல்லோல கல்லோலப்பட்டது.  காந்திஜி, படேல், நேருஜி போன்ற பெருந்தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  தமிழ் நாட்டில் இருந்து தலைவர் சத்தியமூர்த்தி, காமராஜ், பக்தவச்சலம் முதலானோர் போயிருந்தார்கள்.

வெள்ளையரே, வெளியேறுங்கள், என்று பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து மஹாத்மா குரல் கொடுத்தார்.  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அப்படியே தீர்மானம் நிறைவேற்றியது.

அவ்வளவுதான் மறுநாளே, காந்தி, நேரு போன்ற பெருந்தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள்.  இதற்குள் யார் யாரை எங்கெங்கே கைது செய்ய வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி ஒரு பட்டியலை தயாரித்து வைத்திருந்தது. 

பம்பாய் கூட்டம் முடிந்து ரயில் ஏறி ஊருக்கு திரும்புவதற்குளளாகவே பல காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  தமிழ் நாட்டில் இருந்து போன சத்திய மூர்த்தி முதலானவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

உங்களை எப்ப கைது செய்தாங்க என்று காமராஜரைக் கேட்டேன்.

நான், முத்துராங்க முதலியார், பக்தவத்சலம், கோபாலரெட்டி எல்லோரும் ரயிலில் வந்துக்கிட்டிருந்தோம்.  எனக்கு ஒரு சந்தேகம்.  வழியிலேயே எங்காவது எஎன்னைப் பிடிச்சுடுவாங்களோன்னு.  ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னாலே தமிழ் நாடு பூராவும் சுற்றிப் போராட்டத்தை எப்படி நடத்தணும்கிறதை பற்றி அங்கங்கே உள்ளூர் காங்கிரஸ்காரங்கக்கிட்டே பேசிடனும்னு நினைச்சேன்.  அதுக்குள்ளே அரெஸ்ட் ஆயிடக்கூடாதுங்கிறது என்னுடைய பிளான். 

சஞ்சீவ ரெட்டியுடன் குண்டக்கல் வரைக்கும் போய், அங்கிருந்து பெங்களூர் மார்க்கமா ஆந்திராவுக்குப் போய், சஞ்சீவ ரெட்டியோடு 2/3 நாட்கள் தங்கி, சரியானபடி திட்டம் போட்டு, அப்புறம் தமிழ் நாட்டுக்கு வரணும்னு முதல்லே நினைச்சேன்.  ரெட்டியும் அவங்க ஊருக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டாரு.  ஆனா எனக்கு ஒரு சந்தேகம், இந்த நிலையிலே சஞ்சீவ ரெட்டியை பாதி வழியிலேயே கைது பண்ணிடுவாங்க.  அப்ப என்னையும் போலீஸ் சும்மா விடாதுன்னு.

சரி நீங்க போங்க, நான் தமிழ் நாட்டுக்கே போயிடுறேன்னு சஞ்சீவ ரெட்டி  கிட்டே சொல்லிட்டு, அரக்க்கோணம் வரை வந்துட்டேன்.  அரக்கோணத்தில் எட்டிப் பார்த்தா பிளாட்பாரம் பூரா ஒரே போலீசாயிருந்தது.  வந்தது வரட்டும்னு தைரியமா பிளாட்பாரத்தில் இறங்கி நடந்தேன்.  நல்லவேளையா என்னை யாரும் கைது செய்யல்லே.  அவங்க லிஸ்டில் என்பேரு இருந்ததா, இல்லையான்னும் தெரியலை.  மளமளன்னு ஸ்டேஷனுக்கு வெளியே போய்  ஒரு வண்டியை பிடிச்சு சோளங்கிபுரம் போயிட்டேன்.  

அங்கே எதுக்குப் போனீங்க ?  அங்கே ஓட்டல் தேவராஜய்யங்கார்னு ஒரு காங்கிரஸ்காரர் இருந்தார். அவருக்கு 2 பிள்ளைங்க.  ஒருத்தர் ஏதோ சினிமா தியேட்டரோ, கம்பெனியோ நடத்திகிட்டுருக்கார்னு கேள்வி.  அவர் ஓட்டல்லே சாப்பிட்டுவிட்டு கார் மூலமா அன்னைக்கே ராணிப்பேட்டை போயிட்டேன்.  ராத்திரி 10 மணியிருக்கும்.  கல்யாணராமைய்யார் வீட்டுக்குப்போய் கதவை தட்டினேன்.  அவர் கதவை திறக்கல்லே.  அவருக்கு பயம், போலீசார் தன்னை கைது செய்ய வைத்திருப்பாங்கன்னு.  என் குரலைக் கேட்டப்புறம் தான் மெதுவாக கதவை திறந்து எட்டிப் பார்த்தார்.  அந்த நேரத்தில் என்னைக் கண்டது அவருக்கு ஆச்சரியமா போய்டுச்சு.

சரி நீங்க இங்கே தங்கினால் ஆபத்து.  போலீசார் கண்டு பிடித்து விடுவார்கள்.  வாங்க இன்னொரு இடம் இருக்குன்னு சொல்லி ராணிப்பேட்டைக்கு வெளியே ஒரு மைல்  தள்ளி ஒரு காலி வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனார்.  அது ஒரு முஸ்லீம் நண்பருக்கு சொந்தம்.  அந்த வீட்டிலேயே ராத்திரி படுத்து தூங்கினேன். மறுநாள் பகலிலே கல்யாணராமைய்யரிடம் பேசிட்டு இருக்கிறப்போ கொஞ்ச தூரத்தில்  யாரோ ஒரு சப்இன்ஸ்பெக்டர் வர மாதிரி தெரிஞ்சுது. சப்ன்ஸ்பெக்டரை கண்டதும் கல்யாணராமைய்யருக்கு மறுபடியும் பயம் வந்துட்டுது.  

சரி கைது செய்யத்தான் வர்றாங்க, இனி தப்ப முடியாது, இப்ப என்ன செய்யலாம் என்று என்னைக் கேட்டார். வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லிட்டு நான் உள்ளே போய்  படுத்துட்டேன்.

வந்தவர் வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு இந்த இடம் போதாது, அவ்வளவு வசதியாயும் இல்லை. டி.ஸ்.பி. வர்றார். அவருக்கு தங்கறதுக்கு இந்த இடம் பார்க்கத்தான் வந்தேன்னு சொல்லிட்டு போயிட்டார்.  அப்புறந்தான் கல்யாணராமைய்யருக்கு மூச்சு வந்தது.

அன்று மாலையே நானும் கல்யாணராமரும் கண்ணமங்கலம் ஸ்டேஷனுக்குப் போய் ரயிலேறிட்டோம்.  அங்கிருந்து வேலூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வரைக்கும் போலீசார் கண்ணில் அகப்படாமலேயே போயிட்டோம்.  அங்கங்கே பார்க்க வேண்டியவர்களை பார்த்து, சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன்.  மதுரையில் குமாரசாமி ராஜாவை பார்த்துப் பேசினேன்.  அப்ப அவர் ஜில்லா போர்ட் ப்ரசிடெண்டாயிருந்தார்.  ஆனா மூவ்மெண்ட்லே அவ்வளவு தீவிரமா ஈடுபடல்லே. மதுரையில் என் வேலை முடிஞ்சதும் திருநெல்வேலி, ராமநாதபுரம் போயிட்டு அங்கிருந்து விருதுநகருக்கு போய்  அம்மாவைப் பார்த்துட்டு கடைசியா மெட்றாசுக்கு போயிடலாம்னு நினச்சேன்.  இதற்கிடையில், போலீஸ்காரங்க அரியலூருக்கு போய்  என்னை தேடிகிட்டு இருந்தாங்க. அப்ப காங்கிரஸ் மகாநாடு ஒன்று அங்கே ரகசியமா நடக்கப் போவதாய் போலீசுக்கு தகவல் கிடைச்சிருக்கு.  நான் எப்படியும் அங்கே வருவேன் பிடிச்சுடலாம்னு போலீசார் அங்கே போய்  உஷாரா காத்துக்கிட்டுருந்தாங்க.  நான் எல்லா இடத்துக்கும் போயிட்டு கடைசியா விருதுநகருக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்துக்கு போய்  சேர்ந்தேன்.  அங்கே ராமச்சந்திர ரெட்டியாரைப் பார்த்து அவர் வண்டியிலே விருதுநகருக்கு போனேன்.

வண்டியிலே எதுக்குப் போனீங்க? விருதுநகரிலே எங்க வீட்டுக்கு போற வழியிலே தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்குது. அந்த தெரு வழியில் போனால் போலீஸ்காரங்க பாத்துடுவாங்களேன்னு வண்டியிலே போனேன்.  அம்மாவைப் பாத்தீங்களா? ஆமாம், ராத்திரியிலே வீட்டிலே தான் இருந்தேன். அதுக்குள்ளே போலீசுக்கு எப்படியோ தகவல் தெரிஞ்சுடுத்து. அதனாலே, நான் வீட்டிலே தான் இருக்கேன், என்னை அரெஸ்ட் பண்ணுறதாயிருந்தால் அரெஸ்ட் பண்ணலாம்னு போலீசுக்கு சொல்லி அனுப்பிட்டேன்.  அப்புறம் என்னை அரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க. 

ஜெயில்லேயிருந்து எப்போ வெளியே வந்தீங்க?  3 வருஷம் கழிச்சு 1945 ஜூலை மாசம் வந்தேன்.  அதுவரைக்கும் நீங்கதான் தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ் ப்ரெசிடெண்டா? 

ஆமாம், எல்லோருமே ஜெயிலுக்குப் போயிட்டாங்க. காங்கிரசுக்கு சர்க்கார்லே வேறே தடை போட்டிருந்தாங்க.  ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகிப் பாகிஸ்தான் பிரசாரம் செய்துக்கிட்டிருந்தார். இதனாலே அவர் பேரில் காங்கிரஸ்காரர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு, ராஜாஜி எதிர்ப்பு கோஷ்டின்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே பலாமா வளர்ந்துவிட்டது.

காந்திஜி தமிழ்நாட்டில் சுற்று பயணம் செய்துட்டு போறப்போ ராஜாஜிக்கு எதிரா இருந்தவங்களைக் கிளிக் என்று சொன்னாரே அது அப்பத்தானே ?  ஆமாம், ஹரிஜன் பத்திரியிலே அப்படி எழுதினார்.  நான் அதை ஆட்சேபித்து அறிக்கை விட்டேன். காந்திஜி அப்படி சொன்னது தப்புன்னு சர்வோதயம் ஜகந்நாதன் மதுரைக் கோயில்லே போய்  உட்கார்ந்துகிட்டு உண்ணாவிரதம் இருந்தார்.

காந்திஜி சொல்லிட்டாரே அதை எப்படிக் கண்டிக்கிறதுன்னு நான் பயப்படல.  இதே மாதிரி படேலுடன் கூட ஒரு சமயம் சண்டை போட்டிருக்கேன்.  1945ல் மத்திய அசெம்பிளிக்கு யார் யாரைப் போடணும் என்பதில் எனக்கும் படேலுக்கும் தகராறு வந்தது.  மைனாரிட்டி வகுப்பிலிருந்து யாராவது ஒருத்தரைப் போடலாம்னு நான் சொன்னேன்.  தூத்துக்குடி பால் அப்பாசாமிங்கிறவரைப் போடலாம், கிறிஸ்துவராயும் இருக்கிறார், படிச்சவராயும் இருக்கார்னு சொன்னேன்.  அவருக்கு வயசாயிட்டுதுன்னு சொல்லி மறுத்துட்டார் படேல்.  அவருக்கு பதிலா மாசிலாமணி என்பவரை ஏன் போடக்கூடாதுன்னு என்னைக் கேட்டார்.  அவருக்கு உடல்நலம் சரியில்லை, அவர் வேண்டாம்னு நான் சொன்னேன். 

என்ன உடம்புன்னு என்னைக் கேட்டார்.  அவருக்கு லெப்ரசி இருக்குதுன்னு சொன்னேன்.  படேல் நம்பல்லே.  நான் பிடிவாதமாயிருந்தேன்.  நான் சொல்றதிலே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மெடிக்கல் ரிப்போர்ட் மூலமா செக் பண்ணிக்கலாம்னு சொன்னேன்.  அப்புறம் தான் மாசிலாமணி பெரி அடிப்பட்டுப் போச்சு.  அம்மு சுவாமிநாதனை போட்டாங்க.  எண்ணெய் படேல் நேரில் வராகி சொல்லி போன் பண்ணினார்.  நான் அப்பா பம்பாயில் தான் இருந்தேன்.  லிஸ்டை முடிவு செய்யுங்க, அதுக்கப்புறம் நான் வந்து சந்திக்கிறேன்னு சொல்லிட்டேன்.

(தொடரும்)