Pages

Wednesday, December 29, 2021

இதயத்தில் அடைப்பு உள்ளதா ?

இதயத்தில் அடைப்பு உள்ளதா ?

இதோ உடனே செல்லுங்கள் திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார்.

நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்.

வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் வைத்தியம்.

இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு மாறுகிறது.

பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம் 

தேவையுள்ளவர் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர் .

Sukumaran Vaidyans 

G A Pharmacy & Nursing Home. 

Neyyattinkara P.O.,

Thiruvananthapuram-695572, 

Kerala State.

தாம்பரம் 卐 செங்கோட்டை புதிய ரெயில்

 *புதிய ரெயில் அறிமுகம்.*


 *பகல் நேரத்தில்...புதுக்கோட்டை வழியாக ... Chair Car வசதியுடன்... முழுவதும் முன்பதிவில்லா புதிய ரெயில்.* 


*தாம்பரம் 卐 செங்கோட்டை* 


 *ரெயில் எண் 16189* 


தாம்பரம் பு. நேரம்  …….….07:00

செங்கல்பட்டு....................07:30

விழுப்புரம்  ………………….…09:20

மயிலாடுதுறை ................11:35

கும்பகோணம் ..................12:10

தஞ்சாவூர்..........................12:45

திருச்சிராப்பள்ளி.............14:25

*புதுக்கோட்டை.................15:15* 

காரைக்குடி........................16:00

மானாமதுரை....................15:30

அருப்புக்கோட்டை............18:15

விருது நகர்........................18:45

சிவகாசி.............................19:05

ராஜபாளையம்.................19:40

சங்கரன்கோவில்.............19:55

தென்காசி..........................20:35

செங்கோட்டை...................22:30


*செங்கோட்டை 卐 தாம்பரம்* 


 *ரெயில் எண் 16190* 


செங்கோட்டை  பு. நேரம்   06:00

தென்காசி...........................06:12

சங்கரன்கோவில்...............06.56

ராஜபாளையம்...................07.22

சிவகாசி...............................07.52

விருதுநகர்...........................08:20

அருப்புக்கோட்டை..............08.45

மானாமதுரை......................09.20

காரைக்குடி..........................10:30

*புதுக்கோட்டை...................11.35* 

திருச்சிராப்பள்ளி...............13.00

தஞ்சாவூர்.............................13.45

கும்பகோணம்.....................14.22

மயிலாடுதுறை....................15.30

விழுப்புரம்............................19.40

செங்கல்பட்டு.......................21.20

தாம்பரம்...............................22:30

Tuesday, December 28, 2021

அப்பா அப்பாதான்

“அம்மா, ரொம்ப வெயிலா இருக்கு. இந்தப் பதை பதைக்கிற வெயில்ல உன்னால இப்ப பாங்க் வர முடியுமாம்மா?” எழுபது வயது அம்மாவை அக்கறையோடு கேட்டார் பரந்தாமன்.

“பரவாயில்லைடா… நான் வரேன். சீக்கிரமா பாங்க் வேலையை முடிச்சுட்டு ஆத்துக்கு திரும்பி வந்துடலாம்…”

“மறக்காம லாக்கர் கீயை எடுத்துக்கோ.. அப்பாக்கும் உனக்கும் பாங்க் லாக்கர் ஜாயின்ட் அக்கவுண்ட்ல இருக்கு….”

அம்மா எடுத்துக் கொண்டதும், ஒரு ஆட்டோ பிடித்து இருவரும் கிளம்பினர்.

பரந்தாமன் பேங்க் மானேஜரைப் பார்த்து அவரிடம், தன்னுடைய அப்பா இறந்து போனதைச் சொன்னார். ஒரு நல்ல கஸ்டமர் இறந்துபோனதை நினைத்து சற்றுநேரம் வருந்தினார் மனேஜர்.

டெத் சர்டிபிகேட்; வாரிசு சர்டிபிகேட்; பாஸ் புக்; மானேஜரிடம் கொடுத்தபின், ஒரு கவரிங் லெட்டர் அவரிடம் எழுதிக் கொடுத்துவிட்டு “என்னுடைய அம்மா வேதவல்லி பெயர்லயே எல்லாத்தையும் மாத்திடுங்க சார்…” என்றார் பரந்தாமன்.

அம்மா தலையைக் குனிந்தபடி சோகமாக அமர்ந்திருந்தாள். அப்பா இறந்துபோன இந்த இருபது நாட்களில் அம்மா ரொம்பவும்தான் ஆடிப்போய்விட்டாள். பரந்தாமனும் அவர மனைவியும், “இறப்பு என்பது எல்லோருக்குமே நிரந்தரமானது… அப்பா எழுபத்தியைந்து வயதுவரை நன்றாக வாழுந்துதானே இறந்தார்” என்று அம்மாவை சமாதானப் படுத்தினர்.

மானேஜர் அவர்களை சற்று நேரம் வெளியே அமரச் சொன்னார்.

செப்டம்பர் மாதக் கடைசியில் மகன் ரமணனுக்கு உபநயனம் செய்துடலாம்னு அப்பாவிடம் கடந்த ஜூன் மாதமே நாள் பார்க்கச் சொல்லியிருந்தார் பரந்தாமன்.

அப்பா உடனே பத்துப் பதினைந்து வயது குறைந்தவராக, ஆட்டோ பிடிச்சு நாலு இடம் போய் நல்ல நாள் பார்த்து குறித்துக்கொண்டு வந்தார். . அப்போது பரந்தாமனுக்குத் தெரியாது செப்டம்பர் முதல் வாரமே அப்பா போயிடுவார்ன்னு…

“பரந்து, நீ பணம் எதுவும் கொண்டு வரவேண்டாம், என் பேரன் ரமணனை மட்டும் இங்க கூட்டிண்டு வா, என் பேரனுக்கு எல்லாச் செலவையும் நான்தான் செய்வேன்” என்று சந்தோஷமாகச் சொன்ன அப்பா இப்போது இல்லை.

பென்ஷன் பணம்; நிலத்தில் கிடைக்கும் கொஞ்சம் மகசூல் பணம்; இதெல்லாம் சேர்த்து வைத்திருப்பாரோ… தவிர ஊர்ல ஒரு வீடு இருக்கு, அதையும் வாடகைக்கு விட்டிருந்தார். வாடகைப்பணத்தை நேராக பேங்குக்கு அந்த டெனன்ட் அனுப்பிவிடுவார்.

“லாக்கர்ல அதிகம் எதுவும் இல்லை… எதுக்கு அதுக்கு வேஸ்ட்டா வருஷத்துக்கு ஆயிரத்து ஐநூறு வாடகைவேற கொடுக்கணும்” என்று அம்மா ஒருமுறை சொன்னபோது, “நம்ம பையன் சீக்கிரமா நிறைய நகைகள் வாங்கி அதுல அடுக்குவான் பாரு” என்று அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார்…

பரந்தாமன் சம்பாதிக்க ஆரம்பித்து முதல் மாதச் சம்பளம் வாங்கியவுடன், அவர் பெயரிலேயே ஒரு பாங்க் அக்கவுண்ட் திறந்து அதில் மாதா மாதம் சம்பளப் பணத்தைப் போட்டு சேமிக்கக் கற்றுக் கொடுத்தவர் அப்பா…

தற்போது பரந்தாமனுக்கு கல்யாணமாகி பல வருடங்கள் முடிந்த நிலையில் – பிள்ளைகள் படிப்பு; நகர வாழ்க்கையில் வீட்டு வாடகை; இதர குடும்பச் செலவுகள் என்று எப்போதும் செலவுக்கு மேல் செலவுகள்தான்…

எந்த மாதமும் அப்பா பரந்தாமனிடம் பணம் அனுப்பச்சொல்லி கேட்டதேயில்லை. ஆனால் அதற்கு மாறாக அவர்தான் தீபாவளி, பொங்கல், கார்த்திகை தீபம், ஆடிப்பெருக்கு என்று எல்லோருக்கும் உடைகள் வாங்கி அனுப்புவதும்… அவர் மனைவியிடம் “டவுன்ல உனக்கு இதெல்லாம் செய்ய நேரமே இருக்காது” என்று சொல்லி, அம்மா வித விதமான பஷணங்கள் செய்து அனுப்புவதும் வருடா வருடம் நடந்த இன்பமான நிகழ்வுகள்…

அப்பாவும், அம்மாவும் தனியாக இருக்கிறார்கள் என்று லீவு விடும் போதெல்லாம் மகனை அவர்களிடம் அனுப்பி வைப்பார் பரந்தாமன். அப்பா அலுக்காது ஒவ்வொரு முறையும் பேரனுக்கு செயின்; மோதிரம்; ப்ரெஸ்லேட்; சைக்கிள் என்று விலை உயர்வான பொருட்களை வாங்கிக் கொடுப்பார். அவருக்கு செலவுக்கு பணம் இருக்கான்னு எப்போதாவது பரந்தாமன் கேட்டாலும், “நிறைய இருக்கு… கவலையே படாதே, சிக்கனம்தான் சேமிப்பு. பகவான் கொடுக்கிறதை பத்திரமா எண்ணி எண்ணி செலவு பண்ணினாலே நிறைய சேமிப்புதான்” என்பார்….

“சார்… மானேஜர் உங்களைக் கூப்பிடறார்…”

அப்பா பற்றிய நினைவுகள் கலைந்து உள்ளே சென்றார் பரந்தாமன்.

“உங்க அப்பாவோட அக்கவுண்ட்ல நான்கு லட்சத்து எண்பதாயிரம் இருக்கு…அதை அப்படியே உங்க அம்மா அக்கவுண்டுக்கு மாத்திடவா?”

“சரி சார்…”

வெளியே வந்து அம்மாவிடம் சொன்னார்.

அம்மா உடனே, “அது எல்லாத்தையும் ரமணனோட உபநயனத்துக்கு நீயே எடுத்துக்கொள்… அதுக்குத்தான் உன்னோட அப்பா சேர்த்து வைத்திருந்தார்…” என்றாள்.

“இந்த நிலையில் உபநயனம் எப்படிம்மா?”

“அதை நீ எப்போது செய்தாலும் இந்தப் பணத்தில்தான் செய்யணும்… அதுதான் அப்பாவோட ஆசை.”

“சரிம்மா..இப்ப மேனேஜரிடம் சொல்லிக்கொண்டு ஆத்துக்கு கிளம்பலாம்”

மானேஜர், “லாக்கர்ல எதுவும் பார்க்கலையா?” என்றார்.

“ஓ சாரி சார்… அதை மறந்தே போயிட்டோம்.”

அம்மாவும், பையனும் பேஸ்மென்ட் சென்று லாக்கரை சாவி போட்டுத் திறந்தார்கள்.

உள்ளே இரண்டு பெரிய பேப்பர் கட்டுகள். பிரித்துப் பார்த்தபோது அவைகள் அந்தப் பேங்கின் ஷேர் பத்திரங்கள். ஆயிரம் ஷேர்கள், ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு. ஷேர்கள் எல்லாவற்றையும் அம்மாவின் பெயரில் வாங்கி வைத்திருந்தார் அப்பா.

பத்து லட்சம் ரூபாய்க்கான ஷேர்கள்….

அது தவிர, தனியாக ஒரு சுருக்குப் பை லாக்கரில் இருந்தது.

பரந்தாமன் அவசரமாக அதை எடுத்து பிரித்துப் பார்த்தார்.

உள்ளே ஒரு செட் வெள்ளிப் பூணல்! ஒரு செட் தங்கப் பூணல்!!

அதைப் பார்த்த பரந்தாமனுக்கு துக்கம் பீறிட்டது. குலுங்கிக் குலுங்கி அழத் தோடங்கினார்.

பேரனின் உபநயனத்துக்கு எவ்வளவு ப்ளான் செய்து வைத்திருக்கிறார் அப்பா? ஆனால் அதை சிறப்பாக நடத்தி வைக்க அவர் உயிருடன் இல்லையே… வேதனையில் உருகினார் பரந்தாமன்.

கண்கள் கலங்கிய அம்மா, மகனை கட்டியணைத்து ஆறுதல் சொன்னாள்.

எல்லாவற்றையும் பத்திரமாக எடுத்துக்கொண்டு இருவரும் வெளியேறினர்.

ஆட்டோவில் வீட்டுக்கு வரும்போது பரந்தாமன் “எனக்குன்னு ஒரு செலவுகூட வைக்கலையே அப்பா… உங்களுக்கும்கூட பேங்க் ஷேர் பத்து லட்சத்துக்கு வாங்கி வச்சிட்டுப் போயிட்டாரே… அவரோட காலத்துக்குப் பிறகும் அவர் காசு நமக்கு வந்து கொண்டிருக்கு…” அம்மாவின் கரத்தைப் பிடித்துக்கொண்டு சோகத்தில் மனம் கலங்கினார்.

“அதாண்டா அப்பா…”

“அப்பா… அப்பா… அப்பா” என்று பரந்தாமன் உள்ளம் நெகிழ்ந்தார்.

ஒரு அப்பா இறந்த பிறகே உலகம் அவரை முழுதாகப் புரிந்துகொள்கிறது.

தாய் பத்து மாதங்கள் தன் குழந்தையைச் சுமந்தாள் என்றால்; தகப்பனோ தன் வாழ்நாள் பூராவும் உழைப்பிலும், மனதிலும், தோளிலும் குழந்தையைச் சுமக்கிறான்.

அப்பா அப்பாதான்

வாழ்க வளர்க நலமுடன் வளமுடன். வாழ்க வாழ்கவே எந்நாளும் மகிழ்வுடன்.

Monday, December 27, 2021

274 சிவாலயங்கள்

274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். 

காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது.

எண் - கோயில் - இருப்பிடம் - போன் 

சென்னை மாவட்டம்

01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706.

02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151.

03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670.

04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477.

காஞ்சிபுரம் மாவட்டம்

05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084.

06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006. 

07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108.

08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., - 044-2722 2084. 

09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664. 

10. திருமாகறலீஸ்வரர் - திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. - 94435 96619.

11. தெய்வநாயகேஸ்வரர் - எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., - 044 - 2769 2412, 94448 65714.

12. வேதபுரீஸ்வரர் - திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ - 044-2627 2430, 2627 2487.

13. கச்சபேஸ்வரர் - திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., - 044 - 2746 4325, 93811 86389.

14. ஞானபுரீஸ்வரர் - திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., - 044 - 2742 0485, 94445 23890.

15. வேதகிரீஸ்வரர் - திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., - 044 - 2744 7139, 94428 11149.

16. ஆட்சிபுரீஸ்வரர் - அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) - 044 - 2752 3019, 98423 09534.

திருவள்ளூர் மாவட்டம்

17. திரிபுராந்தகர் - கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., - 94432 53325.

18. வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.

19. வாசீஸ்வரர் - திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., - 98944 86890.

20. ஊன்றீஸ்வரர் - பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., - 044 - 2763 9725, 

21. சிவாநந்தீஸ்வரர் - திருக்கண்டலம். சென்னை - பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., - 044 - 2762 9144, 99412 22814.

22. ஆதிபுரீஸ்வரர் - திருவொற்றியூர். - 044 - 2573 3703.

வேலூர் மாவட்டம்

23. வில்வநாதேஸ்வரர் - திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., - 0416-223 6088.

24. மணிகண்டீஸ்வரர் - திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., - 04177 - 248 220, 93454 49339.

25. ஜலநாதீஸ்வரர் - தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., - 04177 - 246 427.

திருவண்ணாமலை மாவட்டம்

26. அண்ணாமலையார் - திருவண்ணாமலை. - 04175 - 252 438.

27. வாலீஸ்வரர் - குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., - 99432 95467.

28. வேதபுரீஸ்வரர் - செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., - 04182 - 224 387.

29. - தாளபுரீஸ்வரர் - திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ., - 044 - 2431 2807, 98435 68742.

கடலூர் மாவட்டம்

30. திருமூலநாதர் - சிதம்பரம். (நடராஜர் கோயில்) - 94439 86996.

31. பாசுபதேஸ்வரர் - திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். - 98420 08291, 98433 88552.

32. உச்சிநாதர் - சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., - 98426 24580.

33. பால்வண்ணநாதர் - திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., - 98426 24580. 

34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் - ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. - 04144 - 264 845.

35. பதஞ்சலீஸ்வரர் - கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 04144 - 208 508, 93457 78863.

36. சவுந்தர்யேஸ்வரர் - திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., - 94425 71039, 94439 06219.

37. அமிர்தகடேஸ்வரர் - மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 93456 56982.

38. தீர்த்தபுரீஸ்வரர் - திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ., - 04143 - 246 467.

39. பிரளயகாலேஸ்வரர் - பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., - 04143 - 222 788, 98425 64768.

40. நர்த்தன வல்லபேஸ்வரர் - திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ., - 04144 - 208 704.

41. திருக்குமாரசாமி - ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) - ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., - 04143 - 243 533, 93606 37784.

42. சிவக்கொழுந்தீஸ்வரர் - தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. - 94434 34024.

43. மங்களபுரீஸ்வரர் - திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., - 94425 85845.

44. வீரட்டானேஸ்வரர் - திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை - 98419 62089.

45. விருத்தகிரீஸ்வரர் - விருத்தாச்சலம். சென்னை - மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., - 04143 - 230 203.

46. சிஷ்டகுருநாதேஸ்வரர் - திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ., - 04142 - 248 498, 94448 07393.

47. வாமனபுரீஸ்வரர் - திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ., - 04142 - 224 328.

48. பாடலீஸ்வரர் - திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள், - 04142 - 236 728.

விழுப்புரம் மாவட்டம்

49. பக்தஜனேஸ்வரர் - திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ., - 94861 50804, 04149 - 224 391.

50. சொர்ணகடேஸ்வரர் - நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ., - 04149 - 291 786, 94862 82952.

51. வீரட்டேஸ்வரர் - கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 93456 60711.

52. அதுல்யநாதேஸ்வரர் - அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., - 99651 44849.

53. மருந்தீசர் - டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 04146 - 216 045, 94424 23919. 

54. கிருபாபுரீஸ்வரர் - திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., - 93456 60711.

55. சிவலோகநாதர் - கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. - 04146 - 206 700.

56. பனங்காட்டீஸ்வரர் - பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., - 99420 56781.

57. அபிராமேஸ்வரர் - திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., - 04146 - 223 379, 98430 66252.

58. சந்திரமவுலீஸ்வரர் - திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., - 0413 - 268 8949.

59. அரசலீஸ்வரர் - ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 - 235 472.

60. மகாகாளேஸ்வரர் - இரும்பை. புதுச்சேரி - திண்டிவனம் வழியில் 12 கி.மீ., - 0413 - 268 8943, 98435 26601.

நாமக்கல் மாவட்டம்

61. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., - 04288 - 255 925, 93642 29181.

ஈரோடு மாவட்டம்

62. சங்கமேஸ்வரர் - பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., - 04256 - 230 192, 98432 48588.

63. மகுடேஸ்வரர், - கொடுமுடி,ஈரோடு - கரூர் ரோட்டில் 47 கி.மீ., - 04204 - 222 375.

திருப்பூர் மாவட்டம்

64. அவிநாசி ஈஸ்வரர் - அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., - 04296 - 273 113, 94431 39503.

65. திருமுருகநாதர் - திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., - 04296 - 273 507.

திருச்சி மாவட்டம்

66. சத்தியவாகீஸ்வரர் - அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., - 0431 - 254 4927.

67. ஆம்ரவனேஸ்வரர் - மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ., - 99427 40062, 94866 40260. 

68. ஆதிமூலேஸ்வரர் - திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ. - 0431 - 246 0455. 

69. ஜம்புகேஸ்வரர் - திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ., - 0431 - 223 0257.

70. ஞீலிவனேஸ்வரர் - திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ., - 0431 - 256 0813.

71. மாற்றுரைவரதர் - திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., - 94436 - 92138.

72. மரகதாசலேஸ்வரர் - ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., - 04326 - 262 744, 94439 50031.

73. பராய்த்துறைநாதர் - திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. - 99408 43571.

74. உஜ்ஜீவநாதர் - உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி - வயலூர் வழியில் 7 கி.மீ., - 94431 50332, 94436 50493.

75. பஞ்சவர்ணேஸ்வரர் - உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் - 0431 - 276 8546, 94439 19091. 

76. தாயுமானவர் - திருச்சி. மலைக்கோட்டை - 0431 - 270 4621, 271 0484. 

77. எறும்பீஸ்வரர் - திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. - 98429 57568.

78. திருநெடுங்களநாதர் - திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ. - 0431 - 252 0126.

அரியலூர் மாவட்டம்

79. வைத்தியநாதசுவாமி - திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., - 04329 -292 890, 97862 05278.

80. ஆலந்துறையார் - கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ. - 99438 82368.

கரூர் மாவட்டம்

81. ரத்தினகிரீஸ்வரர் - அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., - 04323 - 245 522.

82. கடம்பவனேஸ்வரர் - குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., - 04323 - 225 228

83. கல்யாண விகிர்தீஸ்வரர் - வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்து ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., - 04324 - 262 010, 99435 27792.

84. பசுபதீஸ்வரர் - கரூர் - 04324 - 262 010.

புதுக்கோட்டை மாவட்டம்

85. விருத்தபுரீஸ்வரர் - அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., - 04371 - 239 212

தஞ்சாவூர் மாவட்டம்

86. பசுபதீஸ்வரர் - பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., - 98657 78045. 0435 - 2450 595.

87. அக்னீஸ்வரர் - கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை - 0435 - 247 3737.

88. கோடீஸ்வரர் - திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ., - 94866 70043. 

89. பிராணநாதேஸ்வரர் - திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) - 0435 - 247 0480.

90. அருணஜடேஸ்வரர் - திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., - 94431 16322, 0435 - 245 6047. 

91. பாலுகந்தநாதர் - திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., - 94421 67104.

92. சத்தியகிரீஸ்வரர் - சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) - 93459 82373, 0435 - 2457 459.

93. யோகநந்தீஸ்வரர் - திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. - 0435 - 200 0679, 94447 47142.

94. கற்கடேஸ்வரர் - திருந்துதேவன்குடி. கும்பகோணம் - சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., - 99940 15871, 0435 - 200 0240.

95. கோடீஸ்வரர் - கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., - 0435 - 245 4421.

96. எழுத்தறிநாதர் - இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., - 96558 64958, 0435 - 200 0157.

97. சாட்சி நாதேஸ்வரர் - திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) - 94446 26632, 0435 - 245 9519.

98. விஜயநாதேஸ்வரர் - திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) - 0435 - 294 1912, 94435 86453.

99. வில்வ வனேஸ்வரர் - திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., - 94435 86453, 96552 61510.

100. தயாநிதீஸ்வரர் - வடகுரங்காடுதுறை. கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. - 04374 - 240 491, 244 191.

101. ஆபத்சகாயர் - திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் - 04362 - 326 668.

102. ஐயாறப்பர் - திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., - 0436 - 2260 332. 

103. நெய்யாடியப்பர் - தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., - 04362 - 260 553.

104. வியாக்ரபுரீஸ்வரர் - திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. - 94434 47826, 94427 29856.

105. செம்மேனிநாதர் - திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., - 04362 - 320 067, 93450 09344.

106. அக்னீஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து 25 கி.மீ., - 94423 47433.

107. ஆத்மநாதேஸ்வரர் - திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., - 04365 - 284 573.

108. புஷ்பவனேஸ்வரர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., - 94865 76529.

109. பிரம்மசிரகண்டீசுவரர் - கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., - 04362 - 261 100, 262 222.

110. சோற்றுத்துறை நாதர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., - 99438 84377.

111. வேதபுரீஸ்வரர் - திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., - 93451 04187, 04362 - 262 334. 

112. பசுபதீஸ்வரர் - பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 97914 82102.

113. வசிஷ்டேஸ்வரர் - தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., - 04362 - 252 858. 

114. கரவாகேஸ்வரர் - கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,

115. முல்லைவனநாதர் - திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., - 04374 - 273 502, 273 423.

116. பாலைவனேஸ்வரர் - பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., - 94435 24410.

117. கல்யாண சுந்தரேஸ்வரர் - நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., - 93631 41676.

118. பசுபதீஸ்வரர் - ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., - 94863 03484.

119. சிவக்கொழுந்தீசர் - திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., - 94436 78575, 04374 - 267 237. 

120. பட்டீஸ்வரர் - பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., - 0435 - 241 6976.

121. சோமநாதர் - கீழபழையாறை வடதளி.கும்பகோணம் - ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் - 98945 69543.

122. திருவலஞ்சுழிநாதர் - திருவலஞ்சுழி.சுவாமிமலையில் இருந்து 1கி.மீ., - 0435 - 245 4421, 245 4026.

123. கும்பேஸ்வரர் - கும்பகோணம். - 0435 - 242 0276.

124. நாகேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே - 0435 - 243 0386.

125. சோமேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை - 0435 - 243 0349.

126. நாகநாதர் - திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., - 94434 89839, 0435 - 246 3354, 

127. மகாலிங்க சுவாமி - திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 - 246 0660.

128. ஆபத்சகாயேஸ்வரர் - ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., - 94434 63119, 94424 25809.

129. நீலகண்டேஸ்வரர் - திருநீலக்குடி. கும்பகோணம் - காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., - 94428 61634. 0435 - 246 0660. 

130. கோழம்பநாதர் - திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., - 04364 - 232 055, 232 005.

131. சிவானந்தேஸ்வரர் - திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., - 94436 50826, 0435 - 244 8138. 

132. சித்தநாதேஸ்வரர் - திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., - 0435 - 246 7343, 246 7219.

133. படிக்காசுநாதர் - அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., - 99431 78294, 0435 - 246 6939.

134. அமிர்தகடேஸ்வரர் - சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 98653 06840, 0435 - 241 4453. 

135. சிவகுருநாதசுவாமி - சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., - 98653 06840.

136. சற்குணலிங்கேஸ்வரர் - கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் - மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 99435 23852

137. சாரபரமேஸ்வரர் - திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ., 

138. ஞானபரமேஸ்வரர் - திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., - 94439 59839.

139. ஆபத்சகாயேஸ்வரர் - ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., - 04374 - 269 407.

140. பாஸ்கரேஸ்வரர் - பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) - 0437 - 256 910.

திருவாரூர் மாவட்டம்

141. தியாகராஜர் - திருவாரூர். - 04366 - 242 343. 

142. அசலேஸ்வரர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் - 04366 - 242 343. 

143. தூவாய் நாதர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி - 99425 40479, 04366 - 240 646. 

144. பதஞ்சலி மனோகரர் - விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98947 81778, 94894 79896.

145. கரவீரநாதர் - கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் - 04366 - 241 978.

146. வீரட்டானேஸ்வரர் - திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். - 94439 21146. 

147. வர்த்தமானீஸ்வரர் - திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., - 94431 13025, 04366 - 292 300.

148. ராமநாதசுவாமி - திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 292 300. 

149. கணபதீஸ்வரர் - திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 270 278.

150. கேடிலியப்பர் - கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. - 04366 - 276 733.

151. தேவபுரீஸ்வரர் - தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., - 94862 78810, 04366 - 276 113.

152. திருநேத்திரநாதர் - திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., - 98658 44677, 04366 - 244 714.

153. பசுபதீஸ்வரர் - திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., - 04366 - 228 033.

154. சவுந்தரேஸ்வரர் - திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., - 04366 - 237 007.

155. ஐராவதீஸ்வரர் - திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) - காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. - 04368 - 261 447.

156. பிரம்மபுரீஸ்வரர் - அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., - 04366 - 238 973.

157. மகாகாளநாதர் - திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. - 94427 66818, 04366 - 291 457. 

158. மேகநாதசுவாமி - திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.

159. சகல புவனேஸ்வரர் - திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170. 

160. முக்தீஸ்வரர் - செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., - 04366 - 238 818, 239 700, 94427 14055.

161. வெண்ணிகரும்பேஸ்வரர் - கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ., - 98422 94416. 

162. சேஷபுரீஸ்வரர் - திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. - 94439 43665, 0435 - 246 9555. 

163. சூஷ்மபுரீஸ்வரர் - செருகுடி.கும்பகோணம்-காரைக்கால் இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. - 04366 - 291 646. 

164. அபிமுக்தீஸ்வரர் - மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ., 

165. நர்த்தனபுரீஸ்வரர் - திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 94435 00235, 04366 - 269 235.

166. கோணேஸ்வரர் - குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., - 94439 59839.

167. சொர்ணபுரீஸ்வரர் - ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ., - 04374 - 265 130.

168. பாதாளேஸ்வரர் - அரித்துவாரமங்கலம், கும்பகோணம் - அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., - 94421 75441, 04374 - 264 586

169. சாட்சிநாதர் - அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ., - 04374 - 275 441.

170. வீழிநாதேஸ்வரர் - திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., - 04366 - 273 050, 94439 24825148.

171. சதுரங்க வல்லபநாதர் - பூவனூர்.திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். - 94423 99273. 

172. நாகநாதர் - பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., - 93606 85073.

173. பாரிஜாதவனேஸ்வரர் - திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., - 04367 - 279 374.

174. பொன்வைத்த நாதர் - சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) - 94427 67565.

175. மந்திரபுரீஸ்வரர் - கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., - 99420 39494, 04369 - 262 014.

176. சற்குணநாதர் - இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 349.

177. கற்பக நாதர் - கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 632.

178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) - தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., - 98658 44677.

179. கொழுந்தீஸ்வரர் - கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 97861 51763, 04367 - 279 781. 

180. வண்டுறைநாதர் - திருவண்டுதுறை.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் - 04367 - 294 640.

181. வில்வாரண்யேஸ்வரர் - திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் - 04366 - 262 239.

182. ஜகதீஸ்வரர் - ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) - 04367 - 237 692.

183. அக்னீஸ்வரர் - திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., - 04369 - 237 454.

184. நெல்லிவனநாதர் - திருநெல்லிக்காவல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., - 04369 - 237 507, 237 438.

185. வெள்ளிமலைநாதர் - திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., - 94443 54461, 04369 - 237 454.

186. கண்ணாயிரநாதர் - திருக்காரவாசல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., - 94424 03391, 04366 - 247 824.

187. நடுதறியப்பர் - கண்ணாப்பூர், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., - 94424 59978, 04365 - 204 144.

188. கைச்சினநாதர் - கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 94865 33293

189. ரத்தினபுரீஸ்வரர் - திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) - 94438 06496, 04367 - 237 707. 

190. அக்னிபுரீஸ்வரர் - வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., - 0435 - 244 9578

191. சற்குணேஸ்வரர் - கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் - 94429 32942, 04366 - 273 900

192. மதுவனேஸ்வரர் - நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை ரோட்டில் 16 கி.மீ., - 94426 82346, 99432 09771

193. வாஞ்சிநாதேஸ்வரர் - ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்- நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் - 94424 03926, 04366 - 228 305

194. மனத்துணைநாதர் - திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) - 04366 - 205 636

195. கோளிலிநாதர் - திருக்குவளை. திருத்துறைபூண்டி - எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) - 04366 - 245 412

196. வாய்மூர்நாதர் - திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., - 97862 44876

நாகப்பட்டினம் மாவட்டம்

197. சிவலோகத்தியாகர் - ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., - 04364 - 278 272.

198. திருமேனியழகர் - மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., - 04364 - 292 309.

199. முல்லைவனநாதர் - திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., - 94865 24626.

200. சுந்தரேஸ்வரர் - அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., - 93605 77673, 97879 29799.

201. சாயாவனேஸ்வரர் - சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., - 04364 - 260 151

202. பல்லவனேஸ்வரர் - பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., - 94437 19193.

203. சுவேதாரண்யேஸ்வரர் - திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., - 04364 - 256 424

204. ஆரண்யேஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., - 94439 85770, 04364 - 256 273. 

205. வெள்ளடைநாதர் - திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ., - 92456 12705.

206. சட்டைநாதர் - சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., - 04364 - 270 235.

207. சப்தபுரீஸ்வரர் - திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., - 04364 - 274 175.

208. வைத்தியநாதர் - வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை -சீர்காழி வழியில் 18கி.மீ., - 04364 - 279 423.

209. கண்ணாயிரமுடையார் - குறுமாணக்குடி. மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. - 94422 58085 

210. கடைமுடிநாதர் - கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., - 94427 79580, 04364 - 283 261, 

211. மகாலட்சுமிபுரீஸ்வரர் - திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., - 94861 41430.

212. சிவலோகநாதர் - திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ., - 94867 17634. 

213. சோமநாதர் - நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., - 99436 68084, 04364 - 250 424, 

214. ஆபத்சகாயேஸ்வரர் - பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., - 04364 250 758.

215. கல்யாண சுந்தரேஸ்வரர் - திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., - 04364 - 235 462.

216. ஐராவதேஸ்வரர் - மேலத்திருமணஞ்சேரி.குத்தாலத்தில் இருந்து 6 கி.மீ., - 04364 - 235 487.

217. உத்வாகநாதர் - திருமணஞ்சேரி.கும்பகோணத்தில் இருந்து 27 கி.மீ., - 04364 - 235 002.

218. வீரட்டேஸ்வரர் - கொருக்கை.மயிலாடுதுறை- கொண்டல் ரோட்டில் 3 கி.மீ. 

219. குற்றம் பொறுத்தநாதர் - தலைஞாயிறு.வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து மணல் மேடு வழியில் 8 கி.மீ. - 04364 - 258 833.

220. குந்தளேஸ்வரர் - திருக்குரக்கா.மயிலாடுதுறையில்இருந்து 13 கி.மீ., - 04364 - 258 785. 

221. மாணிக்கவண்ணர் - திருவாளப்புத்தூர்.மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ.- 98425 38954, 04364 - 254 879.

222. திருநீலகண்டேஸ்வரர் - இலுப்பைபட்டு.மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ., (மணல்மேடு அருகில்) - 92456 19738.

223. வைகல்நாதர் - திருவைகல்.கும்பகோணம்-காரைக்கால்ரோட்டில் 18 கி.மீ. தூரத்திலுள்ள பழிஞ்சநல்லூர் அருகில் - 0435 - 246 5616.

224. உமாமகேஸ்வரர் - கோனேரிராஜபுரம்.கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள எஸ். புதூர் அருகில் - 0435 - 244 9830, 244 9800. 

225. கோமுக்தீஸ்வரர் - திருவாவடுதுறை.மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் 16 கி.மீ., - 04364 - 232 055.

226. உத்தவேதீஸ்வரர் - குத்தாலம். மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ., - 04364 - 235 225

227. வேதபுரீஸ்வரர் - தேரழுந்தூர். மயிலாடுதுறை- கும்பகோணம் வழியில் 10 கி.மீ., - 04364 - 237 650.

228. மாயூரநாதர் - மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 04364 - 222 345

229. உச்சிரவனேஸ்வரர் - திருவிளநகர்.மயிலாடுதுறை-செம்பொனார்கோவில் வழியில் 7 கி.மீ., - 04364 - 282 129.

230. வீரட்டேஸ்வரர் - கீழப்பரசலூர்(திருப்பறியலூர்). மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ., - 04364- 205 555.

231. சுவர்ணபுரீஸ்வரர்- செம்பொனார்கோவில்.மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரோட்டில் 8 கி.மீ., - 99437 97974. 

232. நற்றுணையப்பர் - புஞ்சை.மயிலாடுதுறை-பூம்புகார் வழியில் 10 கி.மீ. - 04364 - 283 188

233. வலம்புர நாதர் - மேலப்பெரும்பள்ளம்.பூம்புகாரிலிருந்து 7 கி.மீ., - 04364 - 200 890, 200 685. 

234. சங்காரண்யேஸ்வரர் - தலைச்சங்காடு. மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ. - 04364 - 280 757.

235. தான்தோன்றியப்பர் - ஆக்கூர்.மயிலாடுதுறை- நாகப்பட்டினம் வழியில் 16 கி.மீ., - 98658 09768, 97877 09742.

236. அமிர்தகடேஸ்வரர் - (அபிராமியம்மன் கோயில்).திருக்கடையூர் மயிலாடுதுறை-நாகப்பட்டினம் ரோட்டில், 26 கி.மீ., - 04364 - 287 429.

237. பிரம்மபுரீஸ்வரர் - திருமயானம். திருக்கடையூர் அபிராமி கோயிலில் இருந்து 1 கி.மீ., - 94420 12133, 04364 - 287 429. 

238. சரண்யபுரீஸ்வரர் - திருப்புகலூர். நாகப்பட்டினம் - திருவாரூர் ரோட்டில் 22 கி.மீ., - 94431 13025, 04366-237 198. 

239. திருப்பயற்றுநாதர் - திருப்பயத்தங்குடி. திருவாரூர்- திருமருகல் வழியில் 10 கி.மீ., - 98658 44677, 04366- 272 423.

240. ரத்தினகிரீசுவரர் - திருமருகல். நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ., - 04366- 270 823.

241. அயவந்தீஸ்வரர் - சீயாத்தமங்கை. நாகப்பட்டினம்- திருமருகல் ரோடு(நாகூர் வழி) - 04366-270 073.

242. காயாரோகணேஸ்வரர் - நாகப்பட்டினம். பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98945 01319, 04365- 242 844. 

243. நவநீதேஸ்வரர் - சிக்கல். நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ., - 04365- 245 452, 245 350.

244. திருமறைக்காடர் - வேதாரண்யம். நாகபட்டினத்திலிருந்து 63 கி.மீ., - 04369- 250 238

245. அகஸ்தீஸ்வரர் - அகஸ்தியன்பள்ளி.வேதாரண்யம்- கோடியக்கரை வழியில் 2 கி.மீ., - 04369- 250 012

246. கோடிக்குழகர் - கோடியக்கரை.வேதாரண்யத்திலிருந்து 9 கி.மீ., - 04369- 272 470

மதுரை மாவட்டம் 

247. மீனாட்சி சுந்தரேஸ்வரர் - மதுரை - 0452-234 9868.

248. திருவாப்புடையார் - செல்லூர். மதுரை கோரிப்பாளையம் அருகில் - 0452- 234 9868.

249. சத்தியகிரீஸ்வரர் - திருப்பரங்குன்றம்(முருகன் கோயில்)மதுரையில் இருந்து 7 கி.மீ., - 0452- 248 2248.

250. ஏடகநாதேஸ்வரர் - திருவேடகம். மதுரை- சோழவந்தான் ரோட்டில் 17 கி.மீ. - 04543-259 311.

ராமநாதபுரம் மாவட்டம்

251. ராமநாதசுவாமி - ராமேஸ்வரம். மதுரையில் இருந்து 200 கி.மீ., - 04573 - 221 223.

252. ஆதிரத்தினேஸ்வரர் - திருவாடானை. மதுரை- தொண்டி வழியில் 100 கி.மீ., - 04561 - 254 533.

சிவகங்கை மாவட்டம்

253. கொடுங்குன்றநாதர் - பிரான்மலை.மதுரை- பொன்னமராவதி வழியில் 65 கி.மீ., - 94431 91300, 04577- 246 170. 

254. திருத்தளி நாதர் - திருப்புத்தூர். மதுரை-தஞ்சாவூர் வழியில் 70 கி.மீ. - 94420 47593.

255. சொர்ணகாளீஸ்வரர் - காளையார் கோவில்.மதுரை- தொண்டி வழியில் 70 கி.மீ., - 94862 12371, 04575- 232 516.

256. புஷ்பவனேஸ்வரர் - திருப்புவனம். மதுரை-ராமேஸ்வரம் ரோட்டில் 18 கி.மீ., - 04575- 265 082, 265 084.

விருதுநகர் மாவட்டம்

257. திருமேனிநாதர் - திருச்சுழி. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழி 35 கி.மீ., - 04566 - 282 644.

திருநெல்வேலி மாவட்டம்

258. நெல்லையப்பர் - திருநெல்வேலி. மதுரையிலிருந்து 152 கி.மீ., - 0462 - 233 9910.

259. குற்றாலநாதர் - குற்றாலம். மதுரையிலிருந்து 155 கி.மீ., 04633 - 283 138, 210 138.

புதுச்சேரி 

260. தர்ப்பாரண்யேஸ்வரர் - திருநள்ளாறு. மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ., - 04368 - 236 530, 236 504.

261. சுந்தரேஸ்வரர் - திருவேட்டக்குடி.காரைக்கால் - பொறையார் வழியில் 6 கி.மீ. - 98940 51753, 04368 - 265 693.

262. பார்வதீஸ்வரர் - திருத்தெளிச்சேரி. காரைக்கால் பஸ்ஸ்டாண்ட் பின்புறம் - 04368 - 221 009. 

263. யாழ்மூரிநாதர் - தருமபுரம்.காரைக்காலில் இருந்து 4 கி.மீ. - 04368 - 226 616.

264. வடுகீஸ்வரர் - திருவண்டார்கோயில். புதுச்சேரியிலிருந்து 20 கி.மீ., - 99941 90417.

கேரளா

265. மகாதேவர் - திருவஞ்சிக்குளம்.திருச்சூரிலிருந்து 38 கி.மீ., - 0480 - 281 2061

கர்நாடகா

266. மல்லிகார்ஜுனர் - ஸ்ரீசைலம்.சென்னையில் இருந்து ஓங்கோல், ஓங்கோலில் இருந்து 80 கி.மீ., - 08524 - 288 881.

ஆந்திரா 

267. மகாபலேஸ்வரர் - திருக்கோகர்ணம்.மங்களூருவிலிருந்து உடுப்பி வழி 230 கி.மீ., - 08386 - 256 167, 257 167

268. காளத்தியப்பர் - காளஹஸ்தி, திருப்பதியில் இருந்து 30 கி.மீ., - 08578 - 222 240.

உத்தரகண்ட்

269. அருள்மன்ன நாயகர் - கவுரிகுண்ட் (அநேகதங்காவதம்) ரிஷிகேஷிலிருந்து 84 கி.மீ.,

270. கேதாரநாதர் - கேதர்நாத். ஹரித்துவாரிலிருந்து 253 கி.மீ., 

நேபாளம்

271. நீலாச்சல நாதர் - இந்திரநீல பருப்பதம். காட்மாண்டு

திபெத்

272. கைலாயநாதர் - கைலாஷ்(இமயமலை)

இலங்கை

273. திருக்கேதீச்வரர் - மாதோட்ட நகரம், தலைமன்னார்.

274. கோணேஸ்வரர் - திரிகோணமலை.

பிறசேர்க்கை கோயில்கள் தேவார பாடல் பெற்ற தலங்கள் 274 ஆக இருந்தது. 

சமீபத்திய ஆய்வின்படி, மேலும் இரண்டு கோயில்கள் பாடல் பெற்ற தலங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

275. அகஸ்தீஸ்வரர் - கிளியனூர். திண்டிவனம்- புதுச்சேரி வழியில் 18 கி.மீ., - 94427 86709. 

276. புண்ணியகோடியப்பர் - திருவிடைவாசல். தஞ்சாவூர்-திருவாரூர் ரோட்டில் (கொரடாச்சேரி வழி) நண்பர்களே ! 


276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகள் தந்துள்ளேன். 

காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இது.

கோயில் - இருப்பிடம் - போன் நம்பர் அனைத்தும் உள்ளது.

Sunday, December 26, 2021

சமஸ்கிருத மந்திர கணக்கு


*தமிழில் "கணக்கதிகாரம்"*

நீங்கள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வதற்கு முன்பு உங்கள் கைகளில் 2 உத்தரணி நீர் விட்டு கை சுத்தம் செய்ய சொல்லி நீரை கீழே விட்டுவிட்டு சங்கல்ப மந்திரம் சொல்வதன் கணித அறிவை அதன் அருமையை புரிந்து கொள்வது என்பது,  இந்த மானிட ஜென்மத்தின் சிறப்பை தெரிந்துகொள்வதற்கு சமம்....

சங்கல்ப மந்திரத்தின் கணக்கு தெரியாமல் அந்த மந்திரத்தை சொல்லுவதால் எந்தப்பயனும் இல்லை! ஆகவே சங்கல்ப மந்திரத்தின் சாரஹம்சத்தை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்....

கோவிலில் அர்ச்சனை செய்யும்போதோ அல்லது ஒரு சாஸ்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளாக  திருமணம் மற்றும் பூஜை, திதி சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவைகளை செய்யும்போதோ, முதலில் "ஸங்கல்பம்" செய்கிறோம். அப்படி சங்கல்பம் செய்யும்போது கூறும் சம்ஸ்கிருத மந்திரங்களின் விவரங்களை நாம் ஓரளவாவது தெரிந்துவைத்திருக்கவேண்டும்.

சங்கல்பம்" :- "மமோ பாத்த: ஸமஸ்த: துரிதக்ஷய த்வார: ஸ்ரீபரமேஸ்வர: ப்ரீத்யர்த்தம்.. என்று ஆரம்பித்து ..." ஆத்யப்ரஹ்மண: த்விதிய ப்ரார்தே ஸ்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மந்தரே, அஷ்டாவிம்ஸதிதமே, கலியுகே, ப்ரதமே பாதே ஜம்பூத்வீதே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே, சாலீவாஹண ஸகாப்தே அஸ்மிந்வர்த்தமானே வ்யவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி: ஸம்வத்ஸராணாம் மத்யே.. அன்றைய தினத்திற்க்கு  உள்ள திதி, வார, நக்ஷத்திரத்தைப் உச்சரித்து ஸங்கல்பம் செய்கிறோம்"

அது என்ன சங்கல்ப மந்திர கணக்கு என்றால்? மிக எளிமையான உங்களுக்கு தெரிந்த கணக்குதான் அது!!!!

30 நாள் = 1 மாதம்

12 மாதங்கள் = 1வருடம்

60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)

3000 சுழற்சிகள் = 1 யுகம் (அதாவது 3000' x 60 வருடங்கள்)

4 யுகங்கள் = 1 சதுர்யுகம்

71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்

14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்

ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மானுட வருடங்கள் (கணக்கதிகாரம்).தற்போது இதில் பாதி முடிந்து விட்டது. இப்பொழுது நடந்துகொண்டிருப்பது, த்விதீய பரார்த்தம் - இரண்டாவது பரார்த்தம்.

*ஸ்வேதவராஹ கல்பம்  என்றால் - இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன. இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.*

*வைவஸ்வத மன்வந்தரம் என்றால்  - நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது*.

*14 மன்வந்திரங்களாவன  என்பவை:-*

: 1.ஸ்வாயம்புவ மன்வந்திரம், 2.ஸ்வரோசிஷ மன்வந்திரம், 3.உத்தம மன்வந்திரம், 4.தாமச மன்வந்திரம், 5.ரைவத மன்வந்திரம், 6.சாக்ஷ¤ஷ மன்வந்திரம், 7.வைவஸ்வத மன்வந்திரம், 8.சாவர்ணிக மன்வந்திரம், 9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம், 10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம், 11.தர்ம சாவர்ணிக மன்வந்திரம், 12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம், 13.தேவ சாவர்ணிக மன்வந்திரம், 14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்.

*அதாவது நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிற ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் இருக்கின்றோம்.* அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே - (71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று கண்டோம் அல்லவா, ஆகவே வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில் 28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது).

இந்த்ஸ் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும். அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும்.*

*இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள். இவற்றைச் சற்றே சுருக்கமாகக் காண்போம்.*

*ஜம்பூத்வீபே - பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான். ஏழு தீவுகள் உள்ளன. (1. ஜம்பூ த்வீபம் (நாம் வசிப்பது - நீரால் சூழப்பட்டுள்ளது), 2. பிலக்ஷ த்வீபம், 3. சான்மலி த்வீபம், 4. குச த்வீபம், 5. க்ரௌஞ்ச த்வீபம், 6. சாக த்வீபம், 7. புஷ்கர த்வீபம்)*

*பாரத வர்ஷே - த்வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கின்றோம். (1. பாரத வர்ஷம், 2.ஹேமகூட வர்ஷம், 3. நைஷத வர்ஷத்ம், 4.இளாவ்ருத வர்ஷம், 5. ரம்ய வர்ஷம், 6. ச்வேத வர்ஷம், 7. குரு வர்ஷம், 8. பத்ராச்வ வர்ஷம், 9.கந்தமாதன வர்ஷம்)*

*பரத கண்டே - பாரத வர்ஷம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. (1.பரதகண்டம், 2. கிம்புருகண்டம், 3. அரிவருடகண்டம், 4. இளாவிரதகண்டம், 5. இரமியகண்டம், 6. இரணியகண்டம், 7. குருகண்டம், 8. கேதுமாலகண்டம், 9.பத்திராசுவகண்டம)*

*இதில் நாம் (பாரத தேசம்) பரத கண்டத்தில் வசிக்கின்றோம்.*

மேரோர் தக்ஷ¢ணே பார்ச்வே - பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்திலிருக்கின்றோம்.

எண்ணற்ற பிரம்மாக்களின் சிருஷ்டி வரிசைகளில், ஒரு பிரம்மாவின் படைப்பில், அவரின் இரண்டாவது காலத்தின், முதல் தினத்தில் (கோடிக்கணக்கான வருடங்களுக்கு இடையில்) வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

*மேலே சொல்லப்பட்டுள்ள கணித வகைகள் தமிழின் தொல்லிய நூலாகிய காரி என்பவர் எழுதிய கணக்கதிகாரத்தை மையமாகவும் கொண்டு சொல்லப்பட்டுள்ளது. கணக்கதிகாரம் மிக அற்புதமான நூல். கால கணிதம் மட்டுமன்றி, எடையறிதல், நீளமறிதல் போன்ற நுண்ணிய கணிதங்களைக் கொண்டது. அதில் கிடைக்கும் ஒரு செய்யுளில் ஒரு பலாப் பழத்தைப் பார்த்தே, அதைப் பிளக்காமலே அதில் உள்ள பலாச் சுளைகளை அறிய ஒரு கணித சமன்பாடு இருக்கின்றது. ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல் வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும். என்னே ஒரு கணிதம்!*

*ஒரு மரத்தை வெட்டினால் வெட்டுப்பட்ட பாகத்தில் உள்ள கோடுகளைக் கொண்டு மரத்தின் ஆயுளைக் கூறிவிட முடியும்.*

*இவ்விதம் காலமானம் பேசப்படுகிறது இது தான் சனாதன சமய கால கணக்கீட்டில் மிகச்சிறிய பகுதி, மேலும் வானசாஸ்திரத்தை (Astronomy) அறிய அதன் பெருமையை பேச நமக்கு 2021 வருடங்கள் போதாது.*

*நேரம் கிடைக்கும்போது உங்களின் கைத்தொலைப்பேசியில் இணையத்தில் இணைந்து  "கூகிள்" கணினி சாமிகளிடம் தமிழில் "கணக்கதிகாரம்" என்று தேடினால் இந்தப் நூல்/ புத்தகத்தைப்பற்றி பல விவரங்களை படித்து தெரிந்துகொள்ளலாம்.*

*மேலும் விவரங்களுக்கு எங்களோடு "வைஷாலி வாசகர் வட்டம்" என்கிற முகநூல் பக்கத்தில் உங்களையும் இணைத்துக்கொண்டு பயனடையலாம்.*


நன்றிகளுடன் 

"கோகி" என்னும் கோபால கிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி. ப

Saturday, November 20, 2021

No more doctor Visit

குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டால்...

Cramp, Cramp, Cramp.

Middleage, senior citizens க்கு பொதுவாக ஒரு problem வரும்.

பெரும்பாலும் இரவு நேரத்தில் வரும். கெண்டைக்கால் சதை, கால் விரல்கள், பாதங்கள், etc ,etc severe தசை பிடிப்பு

சதையும் நரம்புகளும் சேர்ந்து கட்டி போல் ஆகிவிடும். வலி உயிர் போய் விடும். எழுந்திருக்கவும் முடியாது படுக்கவும் முடியாது. யாராவது உதவ வேண்டும்.

அந்த கடின தசை பகுதியை மெல்ல அழுத்தமாக தடவி, சமநிலைக்கு கொண்டு வர வேண்டும். பின் Volini gel ஏதாவது தடவ வேண்டும். இரண்டு நாட்களுக்காவது அந்த வலி லேசாக இருக்கும்

Cramp வரும் போது, தூக்கத்தில் இருந்தாலும், அலறி அடித்துக் கொண்டு எழுந்து  அழ ஆரம்பித்து விடுவார்கள்.Pain Uncontrollable

பொதுவாக Evion tablets 10 நாட்கள் சாப்பிட சொல்வார்கள். அப்போதைக்கு சரியாகிவிடும். பின் மீண்டும் வரும்

ஆயுர்வேதம், வர்மம்  பயின்ற என் நண்பர் ,எளிமையான ஒரு தீர்வு கூறினார்

வலது பக்கத்தில் Cramp வந்தால், இடது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடம் அந்த positionலேயே இருங்கள். Cramp சரியாகிவிடும். வந்த சுவடே தெரியாது

அதே போல இடது பக்கத்தில் Cramp வந்தால் வலது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள்

படுத்திருக்கும் போது வந்தாலும், காதை ஒட்டியவாறு கைகளை நீட்டுங்கள். சரியாகிவிடும்.

நண்பர்கள், உறவுகள் பலரும் பயனடைந்தார்கள். நீங்களும் முயற்சித்து பார்க்கலாம்

Eye Dryness

இதுவும் அப்படித்தான். வலியும் இருக்கும். காலையில் கண்ணை திறப்பதே சிரமமாக இருக்கும்.

இரவு தூங்கும் போது கண்டிப்பாக Eye drops போட வேண்டும். இல்லாவிடில் தூக்கம் கெடும். காலையில் சிரமம்

இதற்கும் ஒரு எளிய மருத்துவம்

இரவு தூங்கும் போது தொப்புளை சுற்றி அரை அங்குலம் வரை தேங்காய் எண்ணையை தடவி, லேசாக தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள்

ஒரு வாரத்திலேயே, Eye drynessல் இருந்து பெரும் விடுதலை கிடைக்கும். இன்னும் சில உடல் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்

எனக்கு தெரிந்தவர் பத்து வருடங்களாக, Eye drops உபயோகித்தவர். அடிக்கடி Eye Checkup

இப்போது பெரிய Relief. முதலில்  இந்த சிகிச்சையை  சொன்னபோது சிரித்தார். உபயோகப்படுத்தியவுடன், நல்ல முன்னேற்றம்.Eye drops மிகவும் குறைத்து விட்டார். 

No more doctor Visit

தூக்கமின்மை 

பலருக்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் வராது. Disturbed sleep due to worries,  etc etc

எளிய மருத்துவம் 

தூங்க போகுமுன்,  தேங்காய் எண்ணெய் மூன்று அல்லது நான்கு drops எடுத்து. வலது பாதத்திற்கு அடிபாகத்தில் (உள்ளங்காலில்) மென்மையாக தடவி மூன்று நிமிடம் லேசாக மஸாஜ் செய்யுங்கள். அதே போல இடது காலிலும் செய்யுங்கள். பின் படுத்து விடுங்கள். ஆழ்ந்த உறக்கம் கண்டிப்பாக வரும்.

நீங்களும் முயன்று பார்க்கலாம்.

Sleeping tablets கூட நாளடைவில் தவிர்த்து விடலாம்

ஒரு மருத்துவ நண்பர் சொன்னது

தொப்புள்  72000 நரம்புகள் குவியும் இடம்.

அங்கு தேங்காய் எண்ணயை தடவும் போது, நரம்புகளில் இருக்கும் குறைபாடுகளை சமன் செய்கிறது. அதே போலதான், உள்ளங்காலிலும்.

Acupressure பயிற்சிகளில் கூட உள்ளங்கால் முழுமையும் விரல்களால் அழுத்தி, உடலின் எல்லா உறுப்புகளிலும் உயிர் சக்தி தங்கு தடையில்லாம பயணிக்க செய்வார்கள்

உடல் நலத்தில் கவனம் தேவை.

ஆங்கில மருந்துகளை மெல்லகுறைத்து கொண்டு மாற்று மருத்துவத்தில் கவனம் செலுத்துதல் சிறப்பு.

Friday, October 15, 2021

இது கதை அல்ல நிஜம்

இந்த எழுபது வயதில் இதெல்லாம் தேவையா என்று உடல் கெஞ்சியது.  ஆனாலும் சிறு வயது தொட்ட நினைவுகள் பீறிட்டு எழ மனம் இருபது வயதாய் துள்ளியது.

அக்ரஹாரத்தில் ஒவ்வொரு வீடாக சென்று அழைத்து, பாட்டு பாடி, சுண்டல் வாங்கி சுவைத்த காலங்கள் மாறி, இல்லத்தரசியாக கொலு வைத்து மகிழ்ந்த நாட்கள் மனதில் மோத, ஆயிற்று இதோ எழுபது வருடங்கள்.

இரண்டு வருடம் வரை கணவரின் உதவியுடன் பொம்மைகளை இறக்கி படி அமைத்து வைத்தாகி விட்டது.  அவர் தவறியதால் போன வருடம் இல்லை.

இப்போது வைக்கலாமா? நான் அழைத்தால் வருவார்களா? என்கிற யோசனையும் வந்தது.  ஆனால் எதோ ஒரு சக்தி முடுக்கி விட ஆள் வைத்து பொம்மைகளை கீழ் இறக்கி, சுத்தம் செய்து படியும் அமைத்தாகி விட்டது. பொம்மைகளை வைக்கும் வேலை மட்டுமே பாக்கி.

வீட்டு வேலை செய்யும் அஞ்சலை "அம்மா என் பொண்ணை இட்டாரேன். உனக்கு ஒதவியா இருப்பா" என்று சொல்லி பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.

பெண் படு சுறுசுறுப்பு.  கிடு கிடுவென்று படிகளில் பொம்மைகளை அடுக்க நடுவில் அமர்ந்திருக்கும் அம்பாளின் சிலை பளபளப்பாக மின்ன கண்ணீருடன் அதன் நினைவுகளில் மூழ்கினார் காமாக்ஷி மாமி.

கல்யாணம் ஆன பின், முதல் வருட கொலுவுக்கு அவர் வாங்கி வந்தது. கொள்ளை அழகில் அம்பாள் ஜொலிக்க அதையே பார்த்துக் கொண்டு தன்னையே மெய்மறந்து நிற்பார் காமாக்ஷி மாமி.

மாமிக்கு நல்ல மனசு.  ஒவ்வொரு வருட கொலுவுக்கும் ஏழைகளுக்கு புடவையும் பணமும் கொடுத்து  அவர்கள் சந்தோஷப் படுவதைப் பார்த்து மனம் குளிர்வார்.

இந்த வருடமும் அஞ்சலைக்கும் அவள் பெண்ணிற்கும் வாங்கியாகி விட்டது.  புடவைகள் வாங்கும் போது அரக்கு கலரில் பச்சை நிற பார்டரில் இருந்த  பட்டுப் புடவையைக் கண்டதும் இதை வாங்கி யாருக்காவது வைத்துக் கொடுக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட அதையும் வாங்கிக் கொண்டு கிளம்பினார் காமாக்ஷி மாமி.

நான் கொலு வைக்கலாமா? நான் தாம்பூலம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களா? மனம் குழம்பி தவித்தது மாமிக்கு.

கொலுவுக்கு அஞ்சலையின் பெண் மூலம் தெரிந்தவர்கள் அனைவரையும் வரச் சொல்லி அழைத்தார்.  மேலும் போனிலும் பேசி அழைப்பு விடுத்தார்.

குளித்து மடியாக செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்த சுண்டலை அழகாக சிறு எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு வைத்தாகி விட்டது.

வருபவர்களுக்கு கொடுக்க வெற்றிலை பாக்கு, குங்குமம், பூ, ரவிக்கைத் துணி, வளையல்கள் என்று தாம்பாளத்தில் அடுக்கி வைத்து காத்திருந்தார்.

முன் மாதிரி இல்லாமல் இரண்டு, மூன்று பேர் மட்டும் வந்தது சற்று வேதனையை கொடுத்தாலும் அதை புறம் தள்ளி மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றார்.

தாம்பூலத்தை அஞ்சலையின் பெண்ணையே கொடுக்கச் செய்தார்.

அமெரிக்காவில் இருக்கும் பையனுக்கு வீடியோ எடுத்து அனுப்பினார்.

"ஏம்மா இந்த வயசுல பாடுபடறே, பேசாம இங்கே வந்துடேன்" என்று ஆசையாக மகன் அழைக்க "எனக்கு அங்கே ரொம்ப நாள் இருக்க பிடிக்கல.   இங்கே தான் மனசுக்கு நிறைவாய் இருக்கு" என்று மறுத்தார்.

இன்று வெள்ளிக் கிழமை.   சுவாமிக்கு சுண்டலோடு வடையும், சர்க்கரைப் பொங்கல் செய்யணும் என்று நினைத்துக் கொண்டு தலைக்கு குளித்து வடைக்கு ஊறப் போட்டு, சுண்டலும் சர்க்கரைப் பொங்கலையும் செய்யத் தொடங்கினார்.  ஒரு வழியாக பொங்கலும் வடையும் செய்து முடிப்பதற்குள் மூச்சு வாங்கியது.  ஆனால், ஏனோ மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.

மதிய நேரத்தில் தூறலாக பெய்த மழை மாலையில் கன மழையாக மாறி சக்கை போடு போட்டது.

"இனி எப்படி வருவார்கள்? அம்மா இதென்ன சோதனை?  செய்து வைத்த பிரசாதங்கள் எல்லாம் வீண்தானோ?" காமாக்ஷி மாமி தனக்குள்ளே புலம்பினார். சாப்பிடவும் பிடிக்கவில்லை.

எல்லாவற்றையும் எடுத்து வைத்து அஞ்சலையின் பெண்ணுக்கு சாப்பாடு போட்டு படுக்கச் சொன்னபோது யாரோ "மாமி, மாமி" என்று  கூப்பிட்டு வாசல் கதவை தட்டும் ஒலி கேட்டது, கதவை திறந்தால், அங்கே வயதான மாமி நிற்பதைக் கண்டு "யாரு நீங்க!" என்றார்.

"கொலுவுக்கு வந்திருக்கேன்.   உள்ளே வாங்கோன்னு கூப்பிடாம, வெளியிலே நிறுத்தி யாருன்னா கேட்பா?"

"உள்ளே வாங்கோ.  உங்களை இது வரைக்கும் பார்த்தது இல்லை.   அதான் அப்படி கேட்டுட்டேன், தப்புதான்."

"நான் அடுத்த தெரு மாலினியின் அம்மா.  காஞ்சிபுரத்தில் இருந்து வந்திருக்கேன். மாலினிக்கு கொலுவுக்கு வர முடியாத சந்தர்ப்பம்.  மாமி ஆசையா கூப்பிட்டிருக்கா.   நீ போய்ட்டு வந்துடேன்னு என்னை அனுப்பினா. மழையும் இப்ப நின்னிருக்கா அதான் வந்தேன்" என்று வந்த மாமி புன்னகையுடன் கூறினார்.

பெரிய குங்கும பொட்டும், தலையில் பூவும் சூட, காதுகளில் வைரத் தோடும்,. காசு மாலையும், மந்தஹாச புன்னகையுமாக எதிரில் நிற்கும் மாமியை நமஸ்கரித்து எழுந்தார் காமாக்ஷி மாமி.

பாட்டு பாடி கிளம்பும் சமயம் " எனக்கு கொடுக்க என்ன வெச்சுருக்கே" என்று வந்த மாமி கேட்டதும் பீரோவில் இருந்த அரக்கு கலர் பட்டுப் புடவையையும், ரவிக்கை துணியையும் தாம்பூலத்தில் வைத்து அஞ்சலையின் பெண்ணைக் கொண்டு கொடுக்கச் சொன்னார் காமாக்ஷி மாமி.

"ஏன் நீ கொடுத்தா வாங்கிக் கொள்ள மாட்டேனா? நீயே கொடு' என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.  "சரி, சரி, இந்த புடவையை கட்டிக் கொண்டு வந்து காண்பிக்கிறேன்.உனக்கும் சந்தோஷமாக இருக்கும்" என்று சொல்லி பக்கத்து அறைக்கு சென்று புடவை மாற்றிக் கொண்டு வந்து நிற்கும் மாமியை "மடிஸாரில் மாமி எத்தனை தேஜஸ்" என்று வியந்து நோக்கினார் காமாக்ஷி மாமி.

"எனக்கு பசிக்குது, என்ன செஞ்சிருக்கே? கொண்டு வா சாப்பிடலாம்" என்று மாமி கேட்டவுடன் வடையையும், சர்க்கரைப் பொங்கலையும், சுண்டலையும் கொண்டு வந்து கொடுத்தார் காமாக்ஷி மாமி.

சாப்பிட்டு விட்டு முடிந்ததும் "சரி நான் கிளம்பறேன். பொண்ணு தேடுவா, உன் ஆத்துக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்" என்று சொல்லி கிளம்பி போன மாமியை நினைத்து மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது காமாக்ஷி மாமிக்கு.

நிம்மதியாக கண்ணயர்ந்து தூங்கினார்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மாலினிக்கு போன் செய்து "நீ நல்லா இருப்பேடி குழந்தே. உன்னால வர முடியாவிட்டாலும் உன் அம்மாவை அனுப்பி எனக்கு சந்தோஷத்தை கொடுத்து விட்டாய். அம்மா கிட்டே போனை கொடு" என்று காமாக்ஷி மாமி கூற, "அம்மாவா? என்னோட அம்மா இறந்து பத்து வருஷமாறது. நீங்க யாரையோ நினைச்சு இங்கே போன் செய்யறேள்"  என்று சொல்லி மாலினி போனை வைக்கவும் குழம்பி தலையை சுற்றுவது போல் இருந்தது காமாக்ஷி மாமிக்கு.

"அப்ப இங்கே வந்தது யார்? கொட்டும் மழையிலும் வந்து என்னை பரவசப்படுத்தியது யார்?" விடை தெரியாமல் கொலுவை நோக்க அங்கே அம்பாள் சிலை மந்தகாஸப் புன்னகையுடன். குளித்து தெளித்து பூக்கூடையுடன் கோவிலுக்கு புறப்பட்டாள் காமாக்ஷி மாமி. அன்று கோவிலில் கூட்டம் லைனில் நின்று, கால்வலி வேறு. அம்மன் சன்னிதி வந்ததும் காமாட்சி மாமியின் முகத்தில் அதிர்ச்சி. அப்படியே சரிந்து விழுந்து விட்டாள் மயக்கமடைந்து. அருகிலுள்ளவர்கள் மாமியைத் தூக்கி வெளி மண்டபத் தூணில் சாய்த்து தண்ணீர் கொடுத்தனர். சிறிது நேரத்தில் எழுந்து மறுபடியும் அம்மன் சன்நிதியில், அதே புடவை, நேற்றிரவு யாரோ ஒரு மாமிக்கு தான் வைத்துக் கொடுத்த புடவையில் அம்மன் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.  தன் ஆத்துக்கு நேற்று இரவு வந்தது அம்பாள் தான் என்று புரிந்தது. இப்படித்தான் உண்மையான பக்தி கொண்டுள்ள பலருக்கு யாரோ போல் காட்சி கொடுப்பா காமாக்ஷி.

Thursday, October 14, 2021

தெரிந்து கொள்ளலாம் (Swachhta @PetroPump App)


இந்தியாவில் ஹோட்டல்கள் மட்டுமல்லாது ஓவ்வொரு பெட்ரோல் பங்க்களும் சரியான பராமரிப்புள்ள குடிநீர் மற்றும் கழிவறை வசதியை பொது மக்களின் உபயோகத் திற்காக கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது மத்திய அமைச்சகத்தின் விதியாகும். 

நாம், அந்த பங்கிலோ வேறு பங்கிலோ ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற் றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும் கழிவறை பராமரிப்பு செலவுக்காகக் நம் கையிலிருந்து கொடுக்கி றோம்.அதனால் அடுத்த முறை அவசரம் எனில், உங்கள் கூகிள் மேப்பில் பக்கத்தி லுள்ள பெட்ரோல் பங்ககளை கண்டுபிடியுங்கள்.இந்த இலவசமாக  கழிவறை உபயோகப்படுத்தும் வசதி அங்கு இல்லை என்றாலோ, இருந்தும் நம்மை உபயோகப் படுத்த தடுத்தாலோ, பூட்டி வைத்து சாவி ஓனரிடம் உள்ளது என்று சிப்பந்திகள் மறுத்தாலோ, கழிப்பறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லையென்றாலோ, உங்கள் மொபைல் போனில் அந்த  பங்க்  மற்றும் கழிப்பறையின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, பங்கின் பெயர், முகவரியுடன் தேதி குறிப்பிட்டு கூகிள் பிளே ஸ்டோரில் (Google Play Store) - ல்  உள்ள ஸ்வஸ்தா மொபைல் ஆப் (Swachhta @PetroPump App) மூலம் புகார் பதிவு செய்யலாம்.

பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய அரசு (Ministry of Petroleum and Natural Gas, Government of India) மூலம் 3 நாள்களுக்குள் நேரடி நடவடிக் கை எடுக்கப்பட்டு உங்களுக்கு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள் கின்றோம்..

Thursday, October 07, 2021

ஸ்ரீரங்கம் 7-இன் சிறப்பு

 ஸ்ரீரங்கம் 7-இன் சிறப்பு.

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.

2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபரி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருலுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ரா உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.

17. திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார். (1) நவராத்ரி மண்டபம் (2) கருத்துரை மண்டபம் (3) சங்கராந்தி மண்டபம் (4) பாரிவேட்டை மண்டபம் (5) சேஷராயர் மண்டபம் (6) சேர்த்தி மண்டபம் (7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்

18. திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.

19. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப்பெற்றுள்ளன.

20. திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி உள்ளது. (1) ராமானுஜர் (2) பிள்ளை லோகாச்சாரியார் (3) திருக்கச்சி நம்பி (4) கூரத்தாழ்வான் (5) வேதாந்த தேசிகர் (6) நாதமுனி (7) பெரியவாச்சான் பிள்ளை

21. சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக ஏழு முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார். (1) விருப்பன் திருநாள், சித்திரை மாதம் (2) வசந்த உற்சவம் வைகாசி மாதம், (3) பவித்ரோத்சவம் ஆவணி மாதம், (4) ஊஞ்சல் உற்சவம் ஐப்பசி மாதம், (5) அத்யயன உற்சவம் மார்கழி மாதம், (6) பூபதி திருநாள் தை மாதம், (7) பிரம்மோத்சவம். பங்குனி மாதம்.

22. நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் வாகனங்கள் (1) யானை வாஹனம் – தை, மாசி, சித்திரை (2) தங்க கருடன் வாஹனம் – தை, பங்குனி சித்திரை (3) ஆளும் பல்லக்கு – தை, பங்குனி சித்திரை (4) இரட்டை பிரபை – தை, மாசி, சித்திரை (5) சேஷ வாஹனம் – தை, பங்குனி, சித்திரை (6) ஹனுமந்த வாஹனம் – தை, மாசி, சித்திரை (7) ஹம்ச வாஹனம் – தை, மாசி, சித்திரை

23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாகனங்களில் மட்டும் உலா வருவார்.

24. கற்பக விருட்சம், ஹனுமந்த வாஹனம், சேஷ வாஹனம், சிம்ம வாஹனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாகனங்கள் தங்கத்திலும் யாளி வாஹனம், இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் – ஆகிய ஏழு வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளி மற்றும் தங்கத்திலும் உள்ளன.

25. மற்ற கோவில்களில் காண முடியாதவை (1) தச மூர்த்தி (2) நெய் கிணறு (3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில் (4) 21 கோபுரங்கள் (5) நெற்களஞ்சியம் (6) தன்வந்தரி (7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி

கொடுக்கப்பட்டுள்ள 25ல் 2 மற்றும் 5 இரண்டையும் கூட்டினால் வருவது 7.

பொம்மைக்கார தெரு

இப்படி ஒரு இடம் காஞ்சிபுரத்தில் இருக்கிறது என்று இதுநாள் வரை தெரியாமல் போய்விட்டது.

ஒரு தெரு முழுதும் கொலு பொம்மை தயாரிக்கும் வீடுகள் இருக்கிறது.

புது இடம்,ஊரில் இருந்து கொலு பொம்மைகளை கொண்டு வரவில்லை அதனால் வேலூர் அல்லது வாலாஜாவில் சில பொம்மைகள் வாங்கிக் கொள்ளலாம் என எங்கு கிடைக்கும் என சக ஊழியரிடம் விசாரித்தேன்.

காஞ்சிபுரத்தில் இதற்கான தனி தெருவே இருக்கிறது.அங்கு கிடைக்காத பொம்மைகளே இல்லை சார் டிரை பண்ணி பாருங்களேன் என்றார்.

அஸ்தகிரி என்று அந்த வீதிக்கு பெயர். பொம்மை கார தெரு எனில் யாரும் சின்ன காஞ்சிபுரத்தில் வழி காட்டுவார்கள்.

குறுகலான வீதி.இரண்டு புறங்களிலும் வீதிகளில் வீட்டு வாசலில் எல்லா பொம்மைகளும் மாதிரி காட்சிக்கு அடுக்கப்பட்டு இருக்கிறது. விசாரித்தால் உள்ளே போங்கள் எல்லா பொம்மையும் இருக்கிறது என அனுப்பி வைக்கிறார்கள். சில இல்லங்களில் வீட்டின் உள்ளே, சில இல்லங்களில் வீட்டின் மாடி அறையில், என அடுக்கப் பட்டிருக்கும் அட்டை பெட்டிகள், கிடத்தப் பட்டிருக்கும் பொம்மைகளை சர்வ ஜாக்கிரதையாக தாண்டி போகிறோம்.

காணக்கிடைக்காத செட் பொம்மைகள் எல்லாம் அங்கு கொட்டிக் கிடக்கிறது. பேப்பர் மேஷ் பொம்மைகள் அளவில் பெரிதாகவும் நல்ல பினிஷிங் உடனும் இருந்தாலும் இவளுக்கு மண் பொம்மை மீது தான் அலாதி ஆர்வம்.

திருவிழாவுக்கு வந்த குழந்தைகள் போல எல்லா வீடுகளிலும் ஏறி இறங்கினோம்.

ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்த கைலாய செட் கிடைத்தது. 

விலை என்னுடைய அனுபவத்தில் மிக மிக சகாயம். மேலும் பேரம் பேசினால் நிறைய குறைக்கிறார்கள். நமக்குத்தான் பேச மனம் வரவில்லை. நீங்களே பார்த்து சொல்லுங்க என சொன்னால் சட்டென 200 , 300 குறைத்துக் கொள்கிறார்கள்.

தெருவெங்கும் திருவிழா போல இருக்கிறது  கார்களின் அணிவகுப்பால் மிளிர்கிறது. 

காவடி செட் இருக்கிறதா? பீமன் கர்வ பங்கம் செட் இருக்கா? ஶ்ரீரங்கம் விஸ்வரூப தரிசனம் செட் இருக்கிறதா? என நாங்கள் இருக்கும் போதே பலர் சொல்லித் தேடுகின்றனர். இருந்தால் எடுத்துக் கொடுக்கிறார்கள், இல்லையெனில் நாலாவது வீடு புளூ கலர் பெயிண்ட் அடிச்சிருக்கும் அங்கு கேளுங்க என வழி காட்டுகிறார்கள்.

இந்த தெரு நூறாண்டு களுக்கு மேலாக இந்த தொழிலை மேற்கொண்டு வருகிறது. குலாளர்கள் வம்சம் பெரும்பான்மை. இப்போது தொழில் கற்றுக்கொண்ட பலரும் இதை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.

பொம்மைகளை மடியில் சாய்த்து நாகாஸ் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரை பார்த்தேன். ஒரு குழந்தையை போல அதனை கைகளில் பிடித்துள்ளார்.என்ன ஒரு அழகு.

வாய்ப்புள்ளவர்கள் , பொம்மை பிரியர்கள், அவசியம் தரிசிக்க வேண்டிய புனித பூமி சின்ன காஞ்சிபுரம் , பொம்மைகார தெரு.

இராமாயணம், மகாபாரதம், பாகவதம், போன்ற புராண செட் பொம்மைகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.கிரிக்கெட், கல்யாணம், கடைவீதி, டான்ஸ் பொம்மைகள், தேசத் தலைவர்கள், போன்ற பொம்மைகளும் உள்ளன.

நான் பொம்மை வாங்கிய சில கடைகளின் உரிமையாளர்கள் கடந்த இரண்டு வருடமாக தொழில் முடங்கிப் போனது குறித்து மிகுந்த கவலை தெரிவித்தனர்.

ஒரு கடையில் பேசிக்கொண்டு இருந்த போது பிரபல ஓவியர் வேதா அவர்களின் மகளும் மருமகனும் தான் கடை உரிமையாளர்கள் என தெரிய வந்தது. கலைக்குடும்பம். கனடா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக கூறினார் திரு.பத்மநாபன்.

பயன்படுமே என்று நான் பொம்மை வாங்கிய கடையின் செல்போன் நம்பர்கள் கொடுக்கிறேன்.இது விளம்பரத்திற்கு அல்ல. நேரில் செல்ல முடியாதவர்கள் போனில் பேசி அனுப்ப முடியுமா என கேட்டுக் கொள்ளலாம். கனடாவுக்கு அனுப்புபவர்கள் இந்தியாவுக்குள் அனுப்ப மாட்டார்களா என்ன? 

srimathi art works 

(ஓவியர் வேதா அவர்களின் மருமகன் ) 9443690141

குருநாதன், 9994044065

ஜெயபால் 8870017300

Thursday, September 30, 2021

Centralized Public Grievance Redress & Monitoring System

 Hello. I am Arvind Nayak (Mumbai).

We had booked Kuwait Airways flight Mumbai-Milan-Mumbai from *MakeMyTrip* site in December 2019 for a Pharma conference. Our visit dates were from 11th October 2020 to 18th October 2020. But due to COVID, we had to cancel the tickets from the MakeMyTrip app in August 2020.

Kuwait Airways deducted a nominal amount and returned a large amount of our refund to MakeMyTrip in September 2020 itself. But, since then, we had to run from pillar to post between MakeMyTrip and Citibank since our Refund amount never got credited to the credit card account as promised. There was no response to numerous phone calls and mails sent to MakeMyTrip.

Then, on 09th July 2021, I discovered the CPGRAMS site. *CPGRAMS* means *Centralized Public Grievance Redress & Monitoring System*. From that I got Direct *PMO* - Prime Minister's Office site - https: //www.pmindia.gov.in/en/main/

From the site given above, in a few words, I wrote my Grievance to the PMO office, attached the relevant documents (there is such a facility on the site) and a miracle happened.

1. I immediately received a registration no. in my email with all details of my complaint.

2. I got the name, email ID and direct phone number of the officer to whom my complaint has been forwarded. It all happened in 1-2 days.

3. On 13th July I received an email from MakeMyTrip (on instructions of the Ministry of Tourism) asking for a few details.

4. Everyday, I could track the progress of my complaint myself by entering the registration number-complete Transparency!!

And then, another MIRACLE happened on *19th July 2021*. The refund amount was CREDITED to the bank account by NEFT from MakeMyTrip!!

Really COMMENDABLE!! No words to praise this fantastic initiative by the government- and it REALLY WORKS!!

It just shows the efforts of the government towards bringing full transparency in their working and their genuine concern for the citizens and their grievances! 

KUDOS to all concerned!!

*Putting up this post so that it can help genuinely aggrieved citizens!!*

*CPGRAMS* stands for *Centralized Public Grievance Redress & Monitoring System*

PMO site- https: //www.pmindia.gov.in/en/main/

*A Centralized* 

*Public Grievance* *Redress* *And Monitoring System* *(CPGRAMS)* has been established by the Government of India at http://www.pgportal.gov.in 

Can you imagine this is happening in INDIA ? 

The govt. wants people to use this tool to highlight the problems they faced while dealing with Government officials or departments like

1) Railways

2) Posts

3) Telecom

4) Urban Development

5) Petroleum & Natural Gas

6) Civil Aviation

7) Shipping , Road Transport & Highways

8) Tourism

9) Public Sector Banks 

10) Public Sector Insurance Companies

11) National Saving Scheme of Ministry of Finance

12) Employees' Provident Fund Organization

13) Regional Passport Authorities

14) Central Government Health Scheme

15) Central Board of Secondary Education

16) Kendriya Vidyalaya Sangathan

17) National Institute of Open Schooling

18) Navodaya Vidyalaya Samiti

19) Central Universities

20) ESI Hospitals and Dispensaries directly controlled by ESI Corporation under Ministry of Labour.

Many of us say that these things don't work in India . 

A few months back, the Faridabad Municipal Corporation laid new roads in an area and the residents were very happy about it. But 2 weeks later, BSNL dug up the newly laid roads to install new cables which annoyed all the residents. A resident used the above listed grievance forum to highlight his concern. To his surprise, BSNL and Municipal Corporation of Faridabad were served a show cause notice and the guy received a copy of the notice in one week. Government has asked the MC and BSNL about the goof up as it's clear that both the government departments were not in sync at all. 

So use this grievance forum and let all the country men/women/youth who don't know about this facility. 

This way we can at least raise our concerns instead of just talking about the 'System' in India . 

Invite your friends to register their grievances at this portal and ensure that citizens are heard and get the responses that are their due.

PLEASE SPREAD THIS MESSAGE IF U WANT OUR INDIA TO HAVE A BETTER TOMORROW & FORWARD THIS MESSAGE TO AS MANY AS POSSIBLE.

Very Useful Site for Any Grievances.

Monday, September 27, 2021

போகர்

கிருஸ்து பிறந்ததாக சொல்லப்பட்ட ஆண்டை விட பல்லாயிரம் ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும் சித்தர். 

இவரின் குறிப்புகளை திருடி வைத்து தான்  வெள்ளைக்காரன் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருப்பான் என தோன்றுகிறது.

ஆதாரம் 

இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார். பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை செய்தவரும் இவர்தான். இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும். அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலைப் படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன். இப்பேர்பட்ட தமிழனை உலகம் முழுவுதும் தெரியப்பபடுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். அவர் இயற்றிய அந்த நூலில் 1799, 1800 ஆம் பாடலில் விமான தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளதெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார்.

அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின்(steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் டிசைனிங்கையும் குறிப்பிட்டிருக்கிறா­ர். இதை 5000 ஆண்டுகள் முன்பே தமிழன் கண்டுபிடித்து விட்டான் என்பது நமக்கெல்லாம் பெருமை. ஆனால் அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம் என்பது வேதனையளிக்கிறது.

தமிழனின் புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின் முதல் இனமும் முதல்மொழியும் முதல் அறிவியல் விஞ்சானியும் முதல் மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும் தமிழனே. இப்படி தமிழனின் புகழை மறந்து நாத்திகம் பேசியும் மதமாற்றம் செய்தும் தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது.

https://www.facebook.com/groups/305917699863621/

சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் போகர். மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா.

அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான். போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள். ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள். ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர். உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.

பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால் பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனி முருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.

https://www.facebook.com/groups/305917699863621

மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.

தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.

இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால், நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செய்தி. அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.

பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது. இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.

போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது.

துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.

இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார்.

https://www.facebook.com/groups/305917699863621

மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது. அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.

ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'அமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள் முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.

இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே.. ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது? இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?

இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப் படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார். இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.

இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின. அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.

அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர். அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.

https://www.facebook.com/groups/305917699863621

தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார். போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவே செய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.

மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.

அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம், புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக் கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று. போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார். பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.

அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார். போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது. போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.

அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.

1. போகர் – 12,000

2. சப்த காண்டம் – 7000

3. போகர் நிகண்டு – 1700

4. போகர் வைத்தியம் – 1000

5. போகர் சரக்கு வைப்பு – 800

6. போகர் ஜெனன சாகரம் – 550

7. போகர் கற்பம் – 360

8. போகர் உபதேசம் – 150

9. போகர் இரண விகடம் – 100

10. போகர் ஞானசாராம்சம் – 100

11. போகர் கற்ப சூத்திரம் – 54

12. போகர் வைத்திய சூத்திரம் – 77

13. போகர் மூப்பு சூத்திரம் – 51

14. போகர் ஞான சூத்திரம் – 37

15. போகர் அட்டாங்க யோகம் – 24

16. போகர் பூஜாவிதி – 20

இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.

இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.

“தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.

போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.

https://www.facebook.com/groups/305917699863621

சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.

பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.

“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.

அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.

போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.

போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.

அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.

அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.

போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.

தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.

போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.

இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு. பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும் சதுரகிரி தலப்புராணத்தில் கூறப்பட்டவை.!

https://www.facebook.com/groups/305917699863621

**சித்தர் அறிவியல்**

நன்றி 

Ravi Lakshmanasami.

Saturday, September 25, 2021

திருப்பதி பெருமாளை தரிசிக்க முடியவில்லையே

இனிமேல் யாரும் திருப்பதி பெருமாளை 5 நிமிடம், 10 நிமிடம் என தரிசிக்க முடியவில்லையே என ஏமாற்றம் அடையாமல் இருங்கள்.

நேராக செங்கல்பட்டிற்கு செல்லுங்கள், 50ம் எண் கொண்ட திருப்போரூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி திருவடிசூலம் என்னும் மிக அழகிய குக்கிராமத்தில் இறங்குங்கள்.  2 கிலோமீட்டர் நடக்க வேண்டும். வழியில் மிகப் பழமையான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலமான இடைச்சுரநாதர்(சிவன்) ஆலயம் வரும். இவரையும் அம்பாளையும் தரிசித்து விட்டு இடது புறமாக மறுபடியும் நடங்கள். மலை ஒன்று ஆரம்பமாகும். அப்படியே வலது புறம் திரும்பி நடங்கள். நீங்கள் 7 அழகிய மலைகளைக் காண்பீர்கள். உங்கள் கண்களுக்கு இரு சிறிய கோயில்கள் தென்படும். இடதுபுறமாக ஒரு சாலை பிரியும், அதைப் பின்பற்றி சென்றீர்கள் என்றால்...

உலகிலேயே மிக உயரமான 51 அடி அற்புதமான தரிசனம் தரும் கருமாரி அம்மனை சேவிக்கலாம். அப்படி ஒரு அழகு, தெய்வாம்சம், காண கண்கள் கோடி வேண்டும். மிகவும் விஸ்தாரமான இடத்தில், கோழியும், கெளதாரியும், வான்கோழியும் சுற்றி திரியும் இயற்கை எழில் கொஞ்சும் அழகுள்ள இடத்தில் இந்த கருமாரி வீற்றிருக்கிறாள். நீங்கள் உங்களையே மறந்துவிடுவீர்கள்.

கருமாரி அன்னையின் பின்புறமே அவர் அண்ணன் பெருமாள் ஸ்ரீநிவாசனாக மிகப் பெரிய அளவில் வீற்றிருக்கிறார். திருப்பதி சென்று சரியாக கடவுளை காண முடியாத ஏக்கத்தில் இருப்பவர்கள் இங்கே நம்மூரிலேயே, சென்னைக்கு அருகிலேயே, செங்கல்பட்டிலிருந்து ஒரு 10 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த அதி அற்புத தரிசனம் செய்யலாம். அண்ணனையும், தங்கையையும் ஒரு சேர காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இவர்கள் இருவரையும் தரிசித்து விட்டு, இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் அஷ்டபைரவர் கோயிலைப் பார்க்காலாம். இங்கே உலகத்தில் வேறெங்கும் காணமுடியாத மிகப்பெரும் கோயிலினுள் அஷ்டபைரவர்களை தரிசிக்கலாம். கோயில் நுழைவு வாயிலில் பௌர்ணமி குகை கோயில் உள்ளது. ஆனால் இந்த குகை கோயிலில் இருக்கும் சிவனைக்காண நீங்கள் பௌர்ணமிக்கு 3 நாட்கள் அல்லது பூரட்டாதிக்கு 3 நாட்கள் முன்பே பதிவு செய்துவிட்டுத் தான் செல்ல முடியும். சிவனை இங்கு பாதாளத்தில் காணலாம். 

முக்கிய குறிப்பு - சிவனைப் பார்க்க வேண்டுமெனில் நீல நிற ஆடைஅணிந்து தான் செல்ல வேண்டும்.*

சிவனடியார்களே, சிவபக்தர்களே, தயவுசெய்து இந்தக் கோயிலைப் பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களிடத்தில் சொல்லவும். இந்தப் பதிவை அதிகம் பகிரவும்.

வசதியுள்ளவர்கள் கார், பைக், வேன் போன்ற வாகனங்களில் வருகிறார்கள்.

வசதியில்லாதவர்கள் நடந்துதான் வரவேண்டும். இது ஒரு குக்கிராமம் என்பதால் ஆட்டோவோ, ஷேர் ஆட்டோவோ இல்லை.

ஆள் அரவவமற்ற பகுதி என்பதால் காலையில் சென்று மதியமோ அல்லது மாலை இருட்டுவதற்குள் திரும்பி வந்து விடுவது போல் உங்கள் பிரயாணம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

சைவமும், வைணவமும் ஒன்றாக கலந்து ஒரு சுற்றுலா சென்ற மகிழ்ச்சியும் கிடைக்கும்.

Thursday, September 16, 2021

நட்பு உடைந்து

 நட்பு உடைந்து முகநூலானது ...

சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது ...

வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது ...

உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது ...

குளக்கரை உடைந்து குளியலறை ஆனது ...

நெற்களம் உடைந்து கட்டடமானது ...

காலநிலை உடைந்து வெப்ப மயமானது ...

வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ...

துணிப்பை உடைந்து நெகிழியானது ...

அங்காடி உடைந்து அமேசான் ஆனது ...

விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ...

ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ...

கடிதம் உடைந்து இமெயிலானது ...

விளையாட்டு உடைந்து வீடியோகேம் ஆனது ...

புத்தகம் உடைந்து  இ-புக் ஆனது ...

சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது...

இட்லி உடைந்து பர்கர் ஆனது ...

தோசை உடைந்து பிட்சாவானது ...

குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ...

பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ...

வெற்றிலை உடைந்து பீடாவானது ...

தொலைபேசி உடைந்து கைபேசியானது ...

வங்கி உடைந்து பே டி எம் ஆனது ...

நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ...

புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ...

மனிதம் உடைந்து மதவெறியானது ...

அரசியல் உடைந்து அருவெறுப்பானது ...

பொதுநலம் உடைந்து சுயநலமானது ...

பொறுமை உடைந்து அவசரமானது ...

ஊடல் உடைந்து விவாகரத்தானது ...

காதல் உடைந்து காமமாய்ப் போனது ...

நிரந்தரம் உடைவது நிதர்சனம் ஆகையால் உடைவது உலகினில் நிரந்தரமானது ..!

Thursday, August 19, 2021

அர்ச்சகர்கள் விஷயம்

அர்ச்சகர்கள் விஷயம்

இது பலருக்கு பிடிக்கமால் போகலாம். ஆனால் இது யதார்த்த நிலை.

எழுத்து பிடிக்காதவர்கள் என்னை மன்னிக்கவும்

நான் அந்த கோவிலுக்கு 25 வருடம் கழித்து போயிருந்தேன். 

பெரிய மாற்றம் அந்த கிராமத்தில் இல்லை. ஆனால் மண் சாலை இல்லாமல் தார் சாலை போடப்பட்டிருந்தது. 

நாகரீக வளர்ச்சியின் முழு அடையாளம் தெரியவில்லை என்றாலும் அலைபேசியை கையில் வைத்து பேசியபடி ஒரிருவர்  என்னை கடந்தனர்.

கோயிலுக்குள் நுழைந்தேன். கடைசியாக எப்பொழுது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை ஆனால் சுத்தமாக இருந்தது. பெருமாள் சன்னதியில் திரை போடப்பட்டிருக்க, பொறுமை இல்லாமல் மனம் தவித்தது. 

சிறிது நேரத்தில் உள்ளேயிருந்து பட்டாச்சாரியர் வெளியே வர, அவருக்கு வயது நிச்சயம் 70 ஆவது இருக்கும். கன்னத்தில் பழுதடைந்த தார் சாலைப் போல சிறு குழிகள், நெற்றியில் நீண்ட திருமண் சகிதம் வாங்கோ இதோ சித்த நேரம் முடிஞ்சுடும் அப்புறம் பெருமாளை சேவிக்கலாம்.

நடையில் தளர்வு இருந்தாலும் உறுதி இருந்தது. தனி ஒரு மனிதராக அந்த கோயில் நிர்வாகம் அவர் தானென்று புரிந்தது. 

மடப்பள்ளியில் இருந்து ப்ரசாதம் கொண்டு வந்து சாற்றுமறை முடித்து பெருமாள் சேவை முடிந்தது. 

தயிர்சாதம் ப்ரசாதமாக கொடுக்க, திவ்யமாக இருந்தது.

எங்கே இருந்து வரேள்? 

ஸ்வாமின் அடியேன் சென்னை, சொந்த ஊர் பக்கத்தில் இருக்கு, இந்த பெருமாளை சேவிக்கனுமென்று நீண்ட நாள் ஆசை, இன்னிக்குத்தான் நிறைவேறுச்சு.

ரொம்ப சந்தோஷம், ரொம்ப விஷேஷமான பெருமாள் இவர், இங்க வந்து போனாலே ஒரு பெரிய நிம்மதி கிடைக்கும் எல்லார்க்கும். ப்ரார்த்தனையே வேண்டாம். வரவா எல்லாருக்கும் நிம்மதியை கொடுக்கும் பெருமாள் இவர். 

அவரின் பேச்சில் ஒரு மகனை பாராட்டும் தந்தையின் நோக்கமும் பெருமையும் எனக்கு தெரிந்தது. 

நிச்சயம் பெருமாளை ஒரு குழந்தையை போல இவர் பார்த்துக்கிறவர் என்பது நன்றாக புரிந்தது. 

பெரிய கோயிலில் இருக்கும் பட்டாசாரியர் போல இவரிடம் பொருளாதார வளமை இருப்பதாக தெரியவில்லை.

நிறைய பேசினேன். நிறைய கேட்டேன், ஆழ்வார் அமுதம் கூடவே நிறைவான ப்ரசாதமாகவும் கிடைத்தது. 

எதாவது திருக்கோயிலுக்கு செய்யனும் என்று பிரியப்படறேன் என்று சொன்னேன். 

அவர் உடனே எதுவும் சொல்லவில்லை. சற்று கண்களை மூடிக் கொண்டார். பின் மெதுவாக சொன்னார்.

நேக்கு ஒரு ஒத்தாசை செய்யுங்கோ, தினம் பெருமாளுக்கு விளக்கு ஏற்ற எண்ணெய் வேண்டும். மளிகை கடைக்கு போய் வாங்கிண்டு வந்து கொடுக்கிறேளா?

எனக்கு பகீரென்று தூக்கி வாரி போட்டது. தினம் விளக்கேற்ற வேண்டும். அதற்கு எண்ணெய் வேண்டும். ஆனால் இது ஒரு கிராமக் கோயில், இவருக்கு பெரிய வருமானமும் கிடையாது. சம்பளம் என்ன வரும் இவருக்கு?

எனக்கு வர 3300 சம்பளத்தில் நான் தான் வாங்கிறேன் தினமும். ரொம்ப கஷ்டமா இருக்கு. நேக்கு வேறு சம்பாத்தியமும் இல்லை. பசங்க யாரும் நேக்கு கிடையாது. நேக்கும் என் ஆம்படையாளுக்கும் இந்த பெருமாள் தான் பிள்ளை. அவனுக்கு தினம் கொஞ்சம் ப்ரசாதம் , தினம் விளக்கேற்றனும். அதான் கேட்டுட்டேன் , தயவு செய்து தப்பா நினைக்காதீங்க.. அவர் குரல் கம்மிப் போய் என்னிடம் கேட்க என் கண்களில் நீர் முட்டி நின்றது. 

இதோ வரேன் ஸ்வாமி என்று சொல்லி வெளியே வந்தேன், அருகில் இருக்கும் மளிகை கடைக்கு போய்….

இந்தாங்கோ, இரண்டு லிட்டர் எண்ணெய், வாங்கிண்டு வந்திருக்கேன், 

அவர் முகத்தில் பெரிய திருப்தி. ரொம்ப சந்தோஷம் ,நீங்க நன்னா பேஷா இருப்பேள் என்று மனமார வாழ்த்தினார்.

நான் சொன்னேன் அவரிடம், அந்த மளிகை கடைக்காரிடம் சொல்லி இருக்கேன். மாதம் இரண்டு லிட்டர் அல்லது எத்தனை லிட்டர் எண்னெய் வேண்டுமென்று நீங்க கேட்டாலும் கொடுக்கச் சொல்லியிருக்கேன். பத்து கிலோ அரிசி மாதம் கொடுக்கச் சொல்லியிருக்கேன் மாதா மாதம் ப்ரசாத நேவித்யத்துக்கு. ஒரு வருடத்துக்கு தேவையான பணம் அவர்கிட்ட கொடுத்துட்டேன் ஸ்வாமின். என் போன் நம்பரையும் கொடுத்திருக்கேன், பணம் தேவையென்றால் என்னிடம் கேக்கச் சொல்லியிருக்கேன், நீங்க கோயில் கைங்கரியத்துக்கு தேவையான எதுவும் அவரிடம் வாங்கிக்கோங்க!!

மனிதர் எழுந்து நின்னுட்டார், அவருக்கு பேச்சே வரலை. பெருமாளே என்று அரற்றினார். 

கண்ணீர் மல்க, என் கையை பிடித்து என் கண்ணை வெகு அருகில் பார்த்து நல்லா இருப்பேள் என்று தன் கைகளால் என் தலை மீது வைத்து, 

“ நீங்காத செல்வம் நிறைந்தேளோர் எம்பாவாய்” என்றார்.

இது தான் யதார்த்தம், எத்தனை கோயில்கள் இப்படி பராமரிக்கப்படுகின்றன என்று அரசுக்கு தெரியுமா? 

இப்படி இருக்கும் கோயிலை தேர்ந்தெடுத்து, அங்கு புது அர்ச்சகர்களை அனுப்ப வேண்டும்.

 அவர்களுக்கும் அப்படி ஒரு பக்தி வர வேண்டும். நிச்சயம் வரும். அப்பொழுது தான் இறை நம்பிக்கை அதிகம் உணரப்பட, ஒரு பெரும் ஒற்றுமை இந்த சமுதாயத்தில் ஏற்படும். 

இப்படி 3300 ரூ சம்பளம் வாங்கி ப்ராமணர்கள் என்ன பெரிதாக சுகம் கண்டார்கள்? 

வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் என்றும் இறைப்பணியில் இருந்து குடும்பத்துக்கு பெரிதாக எதுவும் சம்பாதித்து வைக்க முடியாமல் கஷ்டப்பட வேண்டாமே?

எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக வருவது என்பதும் வரவேற்க வேண்டிய ஒன்று தான். 

ஆனால் இந்த தியாகம் பொறுமை பக்குவம் நேர்த்தி, ஆகம விதிகள் அனைத்தும் சரியாக அமைவர்களை தேர்ந்தெடுத்தால், ஆலயம் இருக்கும் இறைவன் ஜாதி பார்த்தா தன் பூஜையை நிறைவேற்றிக் கொள்ளப் போகிறான். 

சோ சாரின் "எங்கே ப்ராமணன்" கதை படித்தவர்களுக்கு நிச்சயம் வாழ்வியல் முறை தெரிந்திருக்கும். இதை ப்ராமணர்களுக்கு எதிராக நடத்தப்படும் விஷயம் என்பதைச் சொல்லுவதையே நான் எதிர்க்கிறேன், அப்படிச் சொல்லுவதால் இன்னமும் விரோதம் தான் வளரும். 

இந்து மதம் என்பது ப்ராமணர்கள் என்ற எண்ணம் தான் திராவிட சித்தாந்த அரசியல்வாதிகளுக்கு அடிப்படை.. அதை தகர்க்க இது வளர்க்கப்பட வேண்டும். 

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக இறை பக்தி வளர, இந்து மத ஒற்றுமை ஒங்க, அதில் ப்ராமணர்களுக்கான அங்கம் இருக்கவே இருக்க, எதற்காக இதற்கு பெரும் கூச்சல் போட வேண்டும்?

விடுங்கள். இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் தான், வம்சாவழி தொழில் செய்ய எத்தனை குருக்கள் அல்லது பட்டாசாரியார் வாரிசுகள் தயாராக இருக்கிறார்கள்?

 இப்படி அரசு நேரிடையாக அர்ச்சகர் நியமிக்க, அப்படியாவது கோயில் விளக்குக்கு எண்ணெய் கிடைக்குதா என்று பார்க்கலாம்? 

வரக்கூடியவர் எந்த ஜாதியாக இருந்தாலும், மேலே சொன்ன கதையில் அமைந்த பெரியவர் போன்ற மன நிலை உடையவராக அமைந்தால், அது தான் இறை நம்பிக்கைக்கும் இந்த மத ஒற்றுமைக்கும் இந்த அரசு செய்திருக்கக் கூடிய ஒரு பெரிய உதவியாகும்.

Tuesday, June 22, 2021

நவ நரசிம்மர்கள்

 நவ நரசிம்மர்கள்...

1. அகோபில நரசிம்மர்: உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே.

2. பார்க்கவ நரசிம்மர்: மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.)

3. யோகானந்த நரசிம்மர்: மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள்ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர்.

4. சத்ரவத நரசிம்மர்: 

கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம்.

5. க்ரோத (வராக) நரசிம்மர்: பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ளனர்.

இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.

6. கராஞ்ச (சாரங்க)நரசிம்மர்: மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளார். கராஞ்ச மரத்தடியில் கோவில் கொண்டு, கையில் வில்லேந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றார்.

7. மாலோல நரசிம்மர்: "மா' என்றால் லட்சுமி."லோலன்” என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார்.

அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார்.

8. பாவன நரசிம்மர்: 

பவனி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.

9. ஜ்வாலா நரசிம்மர்: 

மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.

சிங்க முகமும், மனித உடலுமுள்ள நரசிம்மருக்குப் பொதுவாக இருப்பது ஒரு தலை, நான்கு கைகளே.

இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர்.

அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.

இவற்றில் பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன !

Monday, June 07, 2021

பாண்டிச்சேரியில் மணக்குள விநாயகர்

பாண்டிச்சேரியில்  மணக்குள விநாயகர்,,,

1. இந்திய நாட்டிலேயே விநாயகருக்கு தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இத்தலத்தில் மட்டும்தான்உள்ளது 

2. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பெரும்பாலும் பிரம்மச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர், இத்தலத்தில் சித்தி, புத்தி என்னும் மனைவிகளும் காட்சியளிக்கிறார்.

3. பாண்டிச்சேரி நகரின் பழமையான வரலாற்று சம்பவங்களோடு மணக்குள விநாயகர் பின்னி பிணைந்துள்ளார். எனவே புதுச்சேரி வரலாற்றோடு மணக்குள விநாயகருக்கு முக்கிய பங்கு உண்டு. பாண்டிச்சேரிநகரின் நம்பர்-ஒன் ஆன்மீகத் தலமாக மட்டுமின்றி நம்பர்-ஒன் சுற்றுலாத் தலமாகவும் மணக்குள விநாயகர் ஆலயம் திகழ்கிறது.

4.  இந்தக் கோயில்   8,000 சதுர அடி பரப்பில்  அமைந்துள்ளது.

5. மணக்குள விநாயகர் தலத்தின் மூலவர் இருக்கும் இடம் ஒரு கிணறு ஆகும். பீடத்தின் , இடப்பக்கம் மூலவருக்கு அருகிலேயே ஓர் சிறைய குழி ஒன்று உள்ளது. இது மிகவும் ஆழமான குழியாகும். இதன் ஆழத்தை தற்போது வரை யாராலும் கண்டறிய முடியவில்லை. மேலும், இதில் வற்றாத நீர் எப்போதுமே இருக்கும்.

6. 1923-ம் ஆண்டு வாக்கில் பாண்டிச்சேரியில் அச்சுகாபி விருத்தினிஎன்றபத்திரிகையைஒர்லையான்பேட்டையைச் சேர்ந்த வெங்கடாசல நாயக்கர் நடத்தி வந்தார். அந்த பத்திரிகையில் மணக்குள விநாயகர் பற்றி நிறைய தகவல்கள் வெளியிடப்பட்டன.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கந்தையாபிள்ளை 1936-ம் ஆண்டு பாண்டிச்சேரி வந்து மணக்குள விநாயகர் மீது பல பாடல்கள் பாடினார்.

பாண்டிச்சேரியைச் சேர்ந்தபெரியசாமி பிள்ளை, மாணிக்கப்பிள்ளை, ரத்தினப் பிள்ளை, ஸ்ரீலஸ்ரீ நாகலிங்க சுவாமிகள், சாமிபொன்னுப்பிள்ளை, பண்டிதர் சுப்புராய பக்தர், சோம சுந்தரம் பிள்ளை, கந்தசாமி உபாத்தியாயர், ராமானுஜ செட்டியார், பங்காரு பக்தர், நா.வேங்கடாசல நாயக்கர், வரதப்பிள்ளை உள்பட ஏராளமானவர்கள் மணக்குள விநாயகர் மீது பதிகங்களும், பாடல்களும் இயற்றியுள்ளனர்.

பாண்டிச்சேரியில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த முண்டாசுக் கவிஞர் பாரதி, இந்த விநாயகரை போற்றிநான்மணிமாலை என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார். மணக்குள விநாயகரை நெசவாளர்கள் எப்படி யெல்லாம் போற்றி பாதுகாத்தனர் என்பதை சிவமதி சேகர் தனது புதுவையும் மணக்குள விநாயகரும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

7. மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலே யர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்றபெயரும் ஏற்பட்டது.

8. மணக்குள விநாயகர், டச்சுக்காரர்கள், போர்ச்சுக் கீசியர்கள், டேனீஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக் காரர்கள் என 5 வெளிநாட்ட வர்களின் ஆட்சி முறைகளை கண்டவர் ஆவார்.

9. பாண்டிச்சேரி நகரைகைப்பற்றவெளிநாட்டுக்காரர்கள் நான்கு தடவை படையெடுத்து வந்து போரிட்டனர். அந்த நான்கு முற்றுகையின் போதும் மணக்குள விநாயகர் ஆலயம் எந்த சேதமும் அடையாமல் தப்பியது.

10. கோவில் கொடி மரத்துக்கு 1957-ம் ஆண்டு வடநாட்டு தொழில் அதிபர் ஒருவர் தங்க முலாம் பூசிய தகடு போர்த்தினார்.

11. நடேச குப்புசாமிபிள்ளை என்பவர் 1909-ம் ஆண்டு சித்திரை மாதம் முதல் நாள் முதல் அபிஷேகம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அவர் இந்த அபிஷேகத்தை தொடர்ந்து நடத்தினார். 100 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் அவர் மகன் நடேச.கு.அர்த்தநாதன் பிள்ளை இந்த அபிஷேக ஆராதனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

12. மணக்குள விநாயகர் கோவிலில் ஆவணி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது செங்குந்த மரபினர், ஆரிய வைசிய மரபினர், வேளாளர்கள், பிராமணர்கள், வன்னியர்கள், கவரா நாயுடுகள், விஸ்வகர்மமரபினர்,யாதவர்கள்,சேனைத்தலைவர் மரபினர், சான்றோர் குல மரபினர், ரெட்டியார் மரபினர், நாட்டுக்கோட்டை நகரத்தார், வணிக வைசிய மரபினர் என அனைத்துஇனத்தவர்களும் சுவாமி வாகன ஏற்பாடுகளைசெய்கிறார்கள்.

13. மணக்குள விநாயகர் இடம்புரி விநாயகர்ஆவார். இவர்கிழக்குதிசைநோக்கிஅருள்பாலித்துவருகிறார்.

14. கருவறையில் தொள்ளைக்காது சித்தர் அரூப முறையில் பூஜைகள் செய்வதாகக்கூறப்படுகிறது.

15. விநாயகர் இந்து மதக் கடவுளாக இருந்தாலும், சுற்றுவட்டார, வெளிநாட்டு கிருத்துவ, முஸ்லிம் பயணிகள்கூடஅதிகளவில்இங்கேவருவதுவழக்கம். மணக்குள விநாயகரின் அருள்பெறுவதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

16. இத்தலத்தில் மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று 4 கால அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று பூஜையில் பங்கேற்றால் மிகுந்த பலன் கிடைக்கும்.

17. மணக்குள விநாயகர் ஆலயம் உலக அளவில் புகழ்பெற்றிருந்தாலும் அதன் ராஜகோபுரம் இன்னமும் இரு நிலைகளிலேயே உள்ளது.

18.மணக்குளவிநாயகர்மன்னர்கள்ஆட்சிக்காலத்திலேயே தோன்றி விட்ட போதும், எந்த மன்னரும்பெரிய அளவில் திருப்பணி செய்யவில்லை. மக்களால் மட்டுமே இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

19. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி அன்று பிள்ளையாரை வேண்டி, அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கொழுக்கட்டை படையலிட்டு விரதத்தை முடித்தால் எல்லாத் தடைகளும் நிவர்த்தியடைந்து திருமணம் நடைபெறும் என புதுச்சேரி மக்கள் நம்புகிறார்கள்.

20. மணக்குள விநாயகர் கோவிலுக்கு தனிகுளம் எதுவும் இல்லை. எனவே பிரம்மோற்சவ நாட்களில் அருகில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலய குளத்தில் தெப்பல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.

21. மணக்குள விநாயகர் ஆலயத்தின் தங்கத்தகடு போர்த்தப்பட்ட கொடிக்கம்பத்தின் உயரம் 18 அடியாகும்.

22. கோவில் உள்ளே இருக்கும் சுதை சிற்பங்களில் ஒன்றில் மயிலில் பறக்கும் முருகருடன் விநாயகரும் இருக்கிறார். இது போன்ற சிற்பம் அருப்புக்கோட்டை தாதன்குளம் விநாயகர் ஆலயத்திலும் உள்ளது.

23. மணக்குள விநாயகர் ஆலயம் கானாபத்திய ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.

24. மணக்குள விநாயகரின் உற்சவ மூர்த்திக்கு தயாரிக்கப்பட்டுள்ள தங்க கவசம் 5 கிலோ தங்கத்தில் 91.66 தரத்தில் ஹால்மார்க் சான்றிதழுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

25. இத்தலத்தில் பக்தர்களுக்கு தினமும் மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

26. பாண்டிச்சேரி கடற்கரையை ஒட்டிய பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இக்கோவில் விநாயகரை புவனேச கணபதி என்றும் சொல்கிறார்கள்.

27. இத்தலத்து விநாயகர் கற்பக விருட்சம் போல கருதப்படுவதால், இங்கே நடத்தப்படும் எல்லாவித பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.

28. விநாயகருக்கு இத்தலத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக எண்ணெய், பஞ்சாமிர்தம், பழவகைகள், தேன், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். மேலும் சொர்ணா அபிசேகம், 108 கலசாபிசேகம், சங்காபிசேகம் ஆகியவற்றையும் செய்கிறார்கள். 29. உலகில் உள்ள எல்லா விதமான விநாயகர் ரூபங்களையும் சுதையாக இங்கு செய்து வைத்துள்ளனர் என்பது சிறப்பான அம்சம்.

30. விநாயகர் சதுர்த்தி இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

31. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தில் பிரம்மாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவார்கள். புதுவருடம் பிறக்கும் அந்த நாளில் மணக்குள விநாயகரின் திருமுகத்தை தரிசிக்க அவரின் ஆசியோடு அந்த புது வருடத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஆவலில் இத்திருத்தலத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கமாக இருக்கிறது.

32. பிரம்மோற்சவம் ஆவணி 25 நாட்கள் திருவிழாவாக நடக்கிறது.

33. பவித்திர உற்சவம் 10 நாட்கள் திருவிழா விழாவாக கொண்டாடப்படுகிறது.

34. மாதந்தோறும் சங்கடஹரசதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிசேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்.

35. வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ் புத்தாண்டு தினம், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் மூலவருக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.

36. திருமணவரம்,குழந்தைவரம்உள்ளிட்டஅனைத்து   விதமான வழிபாடுகளும் இங்கே நடத்தப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குவோர், வாகனவழிபாடு என இத்தலத்திற்கு பக்தர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர்.

37. குடும்பத்தோடு வரும் பக்தர்கள் பாண்டிச்சேரி நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில்தங்கிகொண்டு கோயிலுக்கு சென்று வசதி உள்ளது.

38. பாண்டிச்சேரி நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வர வசதி உள்ளது.

39. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் வயிற்றில் காசு அல்லது நகை அணிவித்து பின்னர் உபயோகித்தால் நன்மை பிறக்கும்.

பாண்டிச்சேரியில் மிகவும் பிரபலமான கோயில்களில் மணக்குள விநாயகர் கோயிலும் ஒன்று. புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து 3கி.மீட்டர்தொலைவில் இந்தக் கோயில் உள்ளது. புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் குடியேறுவதற்கு முன்பிருந்தே இந்தக் கோயில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான கோயில். புதுச்சேரி மக்கள் இந்த விநாயகரை வெள்ளைக்காரன் விநாயகர் என்றுதான் அழைக்கின்றனர்.

இந்தக் கோயிலை இடிப்பதற்கு பல முறை பிரான்ஸ் தூதர்கள் முயன்றார்கள் என்று கூறப்படுவது உண்டு. ஒவ்வொரு முறையும் உள்ளூர் மக்கள் இந்தக் கோயிலை காப்பாற்றி வந்துள்ளனர்.

வங்கக் கடலை ஒட்டி கிழக்கு நோக்கி அமைந்து இருக்கும் இந்தக் கோயில் முன்பு பவனேஸ்வர் விநாயகர் என்று அழைக்கப்பட்டு தற்போது மணக்குள விநாயகர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். 8,000 சதுர அடி பரப்பில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் 18 அடி உயர தங்கத் தகடு வேயப்பட்ட கொடிக்கம்பம்நாட்டப்பட்டுள்ளது. இதுஇந்தக்கோயிலின்சிறப்புக்களில்ஒன்றுகோயிலின் வெளிப்புறச் சுவற்றில் பல்வேறு விதமான விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தங்க விமானம் இந்தக் கோயிலின் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது!!!