Pages

Saturday, March 08, 2014

திருப்தியா

அமுதனார் என்பவர் திருவரங்கத்துக் கோயில் அதிகாரி.  கோயில் சாவிகள் அவரிடம் இருந்தன.  திருவரங்கம் வந்தார் ராமானுஜர்.  ஊர் மக்கள் எல்லோரும் அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர்.  ஆனால் அமுதனார் கோயிலை அவரிடம்  ஒப்படைக்கவில்லை.  திருக்கோயிலை யாரிடமும் தர மனமில்லாதவராய் இருந்தார்.  யாரும் அமுதனாரிடம் சென்று சாவிகளைத் தரும்படி சொல்லவும் முடியவில்லை.
இந்த நிலையில் அமுதனாரின் அம்மா ராமானுஜரிடம் மிகுந்த பக்தி கொண்டார்.  அந்த அம்மையார் இறக்கும் போது “என் ஈமச் சடங்குகளில் ராமானுஜருடைய சீடர்களுக்குக் கால் அலம்பிச் சாதம் போடு, அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும்” என்று சொல்லிக் கண் மூடிவிட்டார்.
எனவே, அமுதனாரும் ராமானுஜரிடம் அவருடைய சீடர்களை அனுப்பும்படி வேண்டினார்.  ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வார் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டார்.  சிரார்த்தங்களில் பிராமணர்கள் உணவு உண்டபின் “திருப்தியா”? என்று சிரார்த்தம் செய்பவர் கேட்பார்.  பிராமணார்த்தமாகச் சாப்பிட்டவர் “திருப்தி” என்று பதில் சொன்னாலே சிரார்த்தம் பலிதமாகும், ஆன்மா நிறைவு அடையும் என்பது நம்பிக்கை.
எனவே கூரத்தாழ்வார் சாப்பிட்டு முடித்ததும் அமுதனாரும் வழக்கப்படி, திருப்தியா என்று கேட்க, இல்லை என்றார் கூரத்தாழ்வார்.  இன்னும் என்ன வேண்டும் என்று கேட்டார் அமுதனார்.  திருவரங்கத்துத் திருக்கோவிலின் சாவிகள் வேண்டும் என்றார் கூரத்தாழ்வார்.  அமுதனார் மறுக்காமல் சாவிகளை எடுத்து வந்து கூரத்தாழ்வாரிடம் கொடுக்க, அவர் அவற்றைத் தம் குரு ராமானுஜரிடம் கொடுத்து வணங்கினார்.
இவ்வாறு திருவரங்கம் கோயில் ராமானுஜரிடம் வந்தது.

பொன்பரப்பியில் நாதமுனிகள்


பொன்பரப்பியில் நாதமுனிகள்
நாதமுனிகள்  உய்யக் கொண்டாரைத் தம் வாரிசு என நியமித்து அதனை அறிவித்த பின் தம் இல்லப் பணிகளில் மூழ்கினார்.

ஒருநாள் வேடன் ஒருவன் தன் மனைவியையும் குரங்கு ஒன்றையும் கூட்டிக்கொண்டு நாதமுனிகளைத் தேடிக் கொண்டு  வந்தான்.   அவன் முனிவரை சேவித்துச் செல்ல விரும்பி அவருடைய  திருமாளிகை வந்தான். ஆனால், முனிகள் அப்போது ஊரில்  இல்லை.  வேடன் அவரைக் காண முடியாமல் மேற்குப் பக்கம் திரும்பிச் சென்றான்.
அவர்கள் சென்ற சில நேரத்தில் முனிகள் வீடு  திரும்பினார். 

அவருடைய மகள் வேடுவத் தம்பதிகள் வந்து தேடிவிட்டு மேற்குத் திசை நோக்கிச் சென்றுவிட்டதைக் கூறினாள்.  வந்தவன் ராமபிரானே என்று முனிகள் உணர்ந்தார்.   துணுக்குற்று அந்த வேடன் சென்ற திசை நோக்கித் தேடி பொன்பரப்பி எனும் ஊர் வரை போய்   விட்டார்.

வேடுவத்தம்பதிகளைக்  காணவில்லை. யாரும் கண்டதாகக் கூறவும் இல்லை.  அலைந்த களைப்பும், காண முடியவில்லையே என்ற சோர்வும் ஏற்பட்டு மண் மேல் தடாலென மயங்கி  விழுந்தார்.   தலையில் பலமாக அடிபட்டது.

அவரைச் சீடர்கள் இல்லம் கொண்டு வந்தனர்.  இரெண்டொரு நாளாக மயக்கம் தெளியவே இல்லை.  ஏகாதசி அன்று அவருடைய உயிர் பிரிந்தது.

பொன்பரப்பியில் அவரை அடக்கம் செய்வித்தனர்.





UYYAKONDAR’S THANIAN:
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே

விஷ்ணு விநாயகர்

விஷ்ணு விநாயகர்
 
திருமாலின் நரசிம்ஹ அவதாரத்திற்குக் கருத்துரை கூறியவர் விநாயகப் பெருமான்.
காசிப பெருமாளின் இரு மனைவியர்கள் அதிதி – திதி ஆவர்.  திருமாலே தமக்கு மகனாகப் பிறக்க வேண்டும் எனத் திதி பெருந்தவம் புரிந்து வந்தாள்.  அதிதியோ, தேவர்களையும் மூவர்களையும் கூடி வலிமை உள்ள மகனை வேண்டினாள்.  அவள் காசிப முனிவரைக் கூடியதால் இரணியன், இரணியாட்சன் எனும் இரு பிள்ளைகள் பிறந்தார்கள்.
இரணியன் தன்னையே சர்வ வல்லமை படைத்த கடவுளாக அனைவரும் போற்ற வேண்டும் என்று கட்டளை இட்டான்.  சிவபெருமானிடம் இரணியன் சாகாவரம் பெற்றிருந்தான். அவனைச் சாய்க்கும் வழி காணத் திருமால் வன்னி மரத்தடியில் விநாயகரை வழிபாட்டு வந்தார்.
நரசிம்ஹ அவதாரம் விநாயகர் கூறிய வழிதான்.
உயர்திணை, அஹ்ரினை இரண்டாலும் தனக்குச் சாவு வரக்கூடாது என வரம் பெற்றிருந்தான் இரணியன்.  பகலிலும் இரவிலும், உள்ளேயும், வெளியேயும் தனக்குச் சாவு நேரக்கூடாது என வேண்டியிருந்தான். அந்த இரணியனை நரசிம்ஹ அவதாரம் எடுத்துப் பகலும்-இரவும் இல்லாத அந்த நேரத்தில், இருப்பிடத்தில் உள்ளேயும்-வெளியேயும் இல்லாமல், வாயிற்படியில் வானமும்-பூமியும் இல்லாத மடியில், ஆயுதத்தாலும், சசுத்திரத்திரத்தாலும் இல்லாமல் கூரிய நகங்களால் மார்பினைப் பிளந்து குருதியைத் தரையில் சிந்தவிடாமல் உறிஞ்சிக் குடித்து உயிரைக் குடிக்கத் திருமாலுக்கு வழி காட்டியவர் விநாயகர்.

அந்த விநாயகர் விஷ்ணு விநாயகர் எனப்பட்டார்.

RANCHOD RAI - இரண்சோட்ராய்


இரண்சோட்ராய்
தக்கோர் என்னும் டங்காபுரத்தில் கோயில் கொண்டு இருப்பவர் துவாரகையில் உள்ள கண்ணனே ஆவார். இது எப்படி? கண்ணன் மீது பக்தி கொண்ட விஜயசிம்மன் என்பவரும் அவர் மனைவி கங்காபாய் என்பவரும் துவாரகையில் ராமபக்தர் என்று அழைக்கப்பட்ட அவர் ஆண்டுக்கொரு முறை துவாரகை சென்று கண்ணனைத் தொழத் தவறமாட்டார். விஜயசிம்மர் எண்பது வயது ஆன போதிலும் அந்நியமத்தை விடவில்லை.
அவருடைய கனவில் தோன்றி துவாரகநாதன் தன்னை அழைத்துச் செல்லக் கூறினார். இரவில் விஜயசிம்மன் துவாரகை சென்றபோது கருவறைத் திறந்தது. அவர் கண்ணனை எடுத்துக் கொண்டு டங்காபுரம் சென்றார். தம் வீட்டிலேயே எழுந்தருளச் செய்தார்.
துவாரகனாதனிடம் தமக்கு ஏற்பட்ட துன்பத்தை அவர் கூறத் தம்மைப் புஷ்கரணியில் போட்டுவிட்டு அங்கு வரும் வீரர்களுடன் வைகுண்டம் வரச் செய்தார் துவாரகநாதன். ஆனால் விஜயசிம்மரைத் துவாரகை வீரர்கள் குத்திக் கொன்றனர். விஜயசிம்மரின் மனைவி தம் கணவருக்கு ஈமக்கடன் செய்தாள். புஷ்கரணியில் போடப்பட்ட துவாரகநாதன் வெளியே கிளம்ப மறுத்தார். விஜயசிம்மரின் மனைவி கங்காபாயே வெளிக் கொணர்ந்தார்.  வெளி வந்த துவாரகைநாதனைப் பார்த்தால், அவர் திருமேனி எல்லாம் இரத்தக் காயமாக இருந்தது. விஜயசிம்மரைக் குத்திய காயங்கள் எல்லாம் துவாரகைநாதன் உடம்பில் இருந்தன. துவாரகைநாதனின் எடைக்குத் தங்கம் தரச் சொல்லி எல்லோரும் கங்காபாயை வற்புறத்த, மூக்குத்தியைத் தவிர வேறு எதுவுமில்லாமல் போனதால் துலாக்கோலின் ஒருதட்டில் மூக்குத்தியை வைத்து மற்றறொரு தட்டில் துவாரகைநாதனை வைக்க, மூக்குத்தி தட்டு உயர்ந்த்தது. எல்லோரும் பெருமாளை வேண்டினர். இதனால் ஒரு நாளில் ஐந்து நாழிகை மட்டும் துவாரகையில் இருப்பேன், மற்ற நேரமெல்லாம் டங்காபுரத்தில் இருப்பேன் என்றார்.
 
இதனால் அவருக்கு இரண்சோட்ராய் என்ற பெயர் ஏற்பட்டது.