Pages

Saturday, March 08, 2014

விஷ்ணு விநாயகர்

விஷ்ணு விநாயகர்
 
திருமாலின் நரசிம்ஹ அவதாரத்திற்குக் கருத்துரை கூறியவர் விநாயகப் பெருமான்.
காசிப பெருமாளின் இரு மனைவியர்கள் அதிதி – திதி ஆவர்.  திருமாலே தமக்கு மகனாகப் பிறக்க வேண்டும் எனத் திதி பெருந்தவம் புரிந்து வந்தாள்.  அதிதியோ, தேவர்களையும் மூவர்களையும் கூடி வலிமை உள்ள மகனை வேண்டினாள்.  அவள் காசிப முனிவரைக் கூடியதால் இரணியன், இரணியாட்சன் எனும் இரு பிள்ளைகள் பிறந்தார்கள்.
இரணியன் தன்னையே சர்வ வல்லமை படைத்த கடவுளாக அனைவரும் போற்ற வேண்டும் என்று கட்டளை இட்டான்.  சிவபெருமானிடம் இரணியன் சாகாவரம் பெற்றிருந்தான். அவனைச் சாய்க்கும் வழி காணத் திருமால் வன்னி மரத்தடியில் விநாயகரை வழிபாட்டு வந்தார்.
நரசிம்ஹ அவதாரம் விநாயகர் கூறிய வழிதான்.
உயர்திணை, அஹ்ரினை இரண்டாலும் தனக்குச் சாவு வரக்கூடாது என வரம் பெற்றிருந்தான் இரணியன்.  பகலிலும் இரவிலும், உள்ளேயும், வெளியேயும் தனக்குச் சாவு நேரக்கூடாது என வேண்டியிருந்தான். அந்த இரணியனை நரசிம்ஹ அவதாரம் எடுத்துப் பகலும்-இரவும் இல்லாத அந்த நேரத்தில், இருப்பிடத்தில் உள்ளேயும்-வெளியேயும் இல்லாமல், வாயிற்படியில் வானமும்-பூமியும் இல்லாத மடியில், ஆயுதத்தாலும், சசுத்திரத்திரத்தாலும் இல்லாமல் கூரிய நகங்களால் மார்பினைப் பிளந்து குருதியைத் தரையில் சிந்தவிடாமல் உறிஞ்சிக் குடித்து உயிரைக் குடிக்கத் திருமாலுக்கு வழி காட்டியவர் விநாயகர்.

அந்த விநாயகர் விஷ்ணு விநாயகர் எனப்பட்டார்.

No comments:

Post a Comment