Pages

Wednesday, October 25, 2023

மூக்கிரட்டை கீரை

பெரும்பாலும் மக்கள் அறியாத கீரை... அவ்வளவாக பயன்படுத்தப்படாத கீரை.. அதுதான் மூக்கிரட்டை கீரை.. 


நம் கண் முன்பேயே, வீட்டை சுற்றியும், சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் தரையிலேயே இந்த கீரை படர்ந்திருக்கும்..

ஆனாலும், இந்த கீரைக்குள் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதை பலரும் அறிந்திருக்கவில்லை.. இதற்கு மூக்கரட்டை கீரை என்றும் சொல்வார்கள்.

சிறுநீரகம் + மூலம் இந்த 2 பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டுமானால், மூக்கிரட்டையை மட்டும் விடாமல் பயன்படுத்த வேண்டும்.

சிறுநீரக கோளாறு: மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து அம்மியில் மை போல அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வாயில் போட்டு விழுங்கி வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். இப்படி தினமும் 2 வேளை காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். மூலக்கட்டி இருந்தாலும் அவை சுருங்கி பூரணமாக குணமாகும்.

இந்த கீரையுடன் சேர்த்து, அதன் தண்டுகளையும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது ஒரு டம்ளர் வரும்வரை காய்ச்சி குடித்தால், சிறுநீரகத்துக்கு அவ்வளவும் நல்லது..

கல்லீரல்: சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், அதை கரைத்துவிடும்.. அதேபோலசிறுநீரகத்தில் தொற்றுநோய்கள் இருந்தாலும், இந்த கீரை குணப்படுத்திவிடும். மஞ்சள் காமலை இருப்பவர்களுக்கு கீழாநெல்லியுடன் இந்த கீரையையும் சேர்த்து தருவார்கள்.

இந்த இலைகளை பேஸ்ட் ஆக்கி கண்களின் மேல் தடவி வந்தால் இமை வீக்கங்கள் குணமாகும்... இந்த செடியின் வேர்கூட மருத்துவ குணம் நிறைந்தது.. இந்த வேரினை காயவைத்து, அரைத்து பொடித்து வைத்து கொண்டு, சுடுநீரில் கலந்து குடித்தால், கண்கள் சம்பந்தமான நோய்கள் தீரும்.. கண்பார்வையும் கூர்மைப்படும்..

உடல் எடை குறைய: உடல்எடை குறைபவர்கள் இந்த மூக்கிரட்டை கீரையை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிடும்போது, சில மாதங்களில் உடல் எடையில் மாற்றம் காணலாம்.. மூக்கிரட்டை பொடியானது, உடல் பருமனை எதிர்த்து போராடி இதய செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.புற்றுநோய் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடியது.

கல்லீரல்: சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், அதை கரைத்துவிடும்.. அதேபோலசிறுநீரகத்தில் தொற்றுநோய்கள் இருந்தாலும், இந்த கீரை குணப்படுத்திவிடும். மஞ்சள் காமலை இருப்பவர்களுக்கு கீழாநெல்லியுடன் இந்த கீரையையும் சேர்த்து தருவார்கள்.

இந்த இலைகளை பேஸ்ட் ஆக்கி கண்களின் மேல் தடவி வந்தால் இமை வீக்கங்கள் குணமாகும்... இந்த செடியின் வேர்கூட மருத்துவ குணம் நிறைந்தது.. இந்த வேரினை காயவைத்து, அரைத்து பொடித்து வைத்து கொண்டு, சுடுநீரில் கலந்து குடித்தால், கண்கள் சம்பந்தமான நோய்கள் தீரும்.. கண்பார்வையும் கூர்மைப்படும்..

உடல் எடை குறைய: உடல்எடை குறைபவர்கள் இந்த மூக்கிரட்டை கீரையை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிடும்போது, சில மாதங்களில் உடல் எடையில் மாற்றம் காணலாம்.. மூக்கிரட்டை பொடியானது, உடல் பருமனை எதிர்த்து போராடி இதய செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.புற்றுநோய் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடியது இந்த மூக்கிரட்டை..

இளமையை தக்க வைக்கும்.. வயிறு செரிமானத்துக்கும், ஜீரணி சக்திக்கும் இந்த கீரை உதவுகிறது.. மலட்டுத்தன்மையை நீக்கும்.. இது ஆண்மைக்குறைவு மற்றும் விறைப்புத்தன்மை குணப்படுத்தும். மேலும் சில வகையான புற்றுநோய்கள் தீவிரமாவதையும் குறைக்க உதவும். ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் உணவுக்கு முன் இந்த இலை சாறு 10 மில்லி அளவு குடித்துவந்தால் நிவாரணம் கிடைக்கும்.

பொரியல்: இந்த கீரையை பெரும்பாலும் கூட்டு செய்வார்கள்.. எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உ.பருப்பு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.. பிறகு, கீரை சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு வேகவைத்தால் மூக்கிரட்டை பொரியல் ரெடி..

அல்லது மூக்கிரட்டை கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாக செய்து சாப்பிடலாம். இதனால், ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்... உடலுக்கு பலம் கொடுக்கும். உடலில் வாத நோய்கள் இல்லாமல் செய்யும்.

மூக்கிரட்டை கீரை எடுத்துகொள்ளும் போது அதிக காரம் உணவில் சேரக்கூடாது. உடலுக்கு குளிர்ச்சித்தரும் உணவுகள் தான் எடுக்க வேண்டும் என்பார்கள்.. ஆனால், எவ்வளவுதான் மருத்துவ குணம் இருந்தாலும், டாக்டர்களின் அறிவுரையோடு இந்த கீரையை எடுப்பது கூடுதல் பாதுகாப்பானது.. அந்தவகையில், நடைமுறை வாழ்வில் தவிர்க்கவே முடியாத கீரைதான், மூக்கிரட்டை கீரை.

No comments:

Post a Comment