Pages

Monday, November 13, 2023

டெல்லியிலிருந்து பஞ்சாப் அமிர்தசஸ்

நாங்கள் குடும்பத்தோட டெல்லியிலிருந்து பஞ்சாப் அமிர்தசஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு ஸ்சிலீப்பர் கோச்சில் ஏறினோம்..(காரணம் ;- AC COACH FULL BOOKING ) அந்த ரயில் பல ஊர்களை கடந்து தான் டெல்லி வருகிறது.. வட மாநிலங்களில் புக் செய்திருந்தாலும் அவர்கள் படுத்து கொண்டு வரும் போது நம்மால் எழுப்பி நம் சீட் என கூறவே முடியாது.. நமக்கு மொழி பிரச்சனை வேற..ஹிந்தி எனக்கு சுத்தமா தெரியாது.. அவிய்ங்களுக்கு ஹிந்தி தவிர வேற எதுவும் தெரியாது.. இரவு 9 மணி குழந்தைகளோடு நானும் எவ்வளவோ போராடினேன்.. ஏற்கனவே மதுரையிலிருந்து 42 மணி நேரம் டிராவல் செய்து புதுடெல்லி வந்த அலுப்பு வேறு.. மதுரை டூ டெல்லி இரவு 7 மணிக்கு இறங்கி அடுத்து இந்த ரயிலில் ஏறி நிம்மதியாய் தூங்கலாம் என்றால் வடநாட்டுக்காரன் மனிதாபிமானமின்றி சிறிதும் இடம் தராமல் ஹிந்தியிலேயே எதேதோ பேசிட்டே இருக்கானுக.. .கொடுமை என்னன்னா டிடிஆர் அங்கே வரவே இல்லை... எனவே என்ன செய்வதென யோசித்த போது ரயில்வே புகார் வெப்சைட் ஞாபகத்திற்கு வர உடனே தாமதிக்காமல் நான் போனை எடுத்து வெப்சைட் உள்ளே போய் PNR நம்பரை பதிவிட்டு என்னோட இடத்தை தராமல் அராஜகம் செய்வதை பதிவிட்டேன்..அடுத்த மூன்று நிமிடத்தில் IRCTC யிலிருந்து போன் வந்தது. 

ஹிந்தி Or ஆங்கிலத்தில் பேசனும்..நாம் பேச நினைக்குற சொல்லும் விஷயத்தை உடனே பதிவிட்டு அடுத்த சில நிமிடத்தில் *RPF POLICE* உடனே நம் பெட்டியில் வந்து நம் குறையை கேட்டதுமே அவர்கள் உடனே செயலில் இறங்கியதும் அங்கே பெட்டியில் இருந்தவன் எல்லாம் எங்கிட்டு போறானே தெரியல.. Rpf police க்கு வட நாட்டான் செமையா பயப்படுறான். நமக்கு அடுத்து எந்த தொந்தரவு இல்லாம நம்ம பயணம் மிக சுமூகமாக அமையும்.

தொலை தூர பயணம் செய்வோர் நிச்சயமாக இதை தெரிந்து கொள்ளவே இப்பதிவு.

புகார் பதிவு மிக எளிது

குரோம்ல *RAILMADAD* என பதிவிட்டதும் உங்க மொபைல் நம்பரை என்டர் செய்யவும் மொபைல் நம்பருக்கு OTP வரும். அதை என்டர் செய்ததும் உங்க பயணம் செய்து கொண்டிருக்கும் TRAIN PNR NUMBER பதிவு செய்ததும் அதிலே உங்க ட்ரெயின் நம்பர் உங்க கோச் பெட்டி நம்பர் எத்தன பேர் நீங்க பயணிக்கிறீங்க என அனைத்து தகவலும் வரும்.. அதன் கீழே உங்க புகாரை பதிவிட COMMENT BOX இருக்கும்.. அதிலே ரத்ன சுருக்கமா நீங்க உங்க குறையை பதிவிட்டால் போதும்

உதாரணமாக *"MY SEATS OCCUPIED OTHERS* " என பதிவிட்டால் போதும்.

உடனே அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்ளே உங்க பிரச்சனை தீரும்.

நிம்மதியாக குடும்பத்தோடு பயணம் செய்யலாம்.

என் அனுபவத்தை பகிர்ந்தேன்.. உங்களில் பலருக்கு எப்போதாவது இது தேவைப்படும் . பதிவு செய்து வைத்துக் கொள்ளவும். 


No comments:

Post a Comment