Pages

Thursday, September 10, 2020

ஸ்ரார்த்த/திதி சாப்பாடு

 ஸ்ரார்த்த/திதி சாப்பாடு


ஒருமுறை தன் முன்னோர் ஸ்ரார்த்தத்துக்கு [திவஸம்/திதி] தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வஸிஷ்டர் அழைத்தார்.


"அதற்கென்ன வந்தால் போச்சு.! ஆனால் 1008 வகை காய்கறி செய்து படைக்க வேண்டும்" என்றார்.


உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா.? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா.? அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச்சாப்பிட யாரால் முடியும்.?


விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டி வைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச்செய்கிறார் என்பது வஸிஷ்டருக்குத் தெரியாதா என்ன.?


இருந்தபோதிலும் விட்டுக்கொடுக்காமல், "ஆஹா.! 1008 வகை கறியமுது வேண்டுமா? அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன்" என்றார்.


ஸ்ரார்த்தச்சாப்பாடு நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார்.


பாகற்காய்கறி., பலாப்பழம்., பிரண்டைத்துவையல் இவைகளோடு., ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன.


1008 காய்கறிகள் இல்லை.


விஸ்வாமித்திரர் கோபத்துடன் "என்ன இது.? 1008 வகை காய்கள் எங்கே.?" என்று வஸிஷ்டரை வினவினார்.


அவரோ "நான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே! அவளையே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றார்.


இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த உலகம் போற்றும் உத்தமி அருந்ததி., தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தை கூறிவிட்டு., "இதுதானே ஸ்ராத்தகால விதி உங்களுக்கு தெரிந்திருக்குமே.!" என்றாள்.


விஸ்வாமித்திரர் வாயடைத்துப் போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்தி விட்டுப்போனார். அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம் என்ன.?


காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம் பனஸம் ஷட் ஸதம்சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே


कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते


"ஒரு ஸ்ராத்தத்திதியன்று சமைக்கப்படும் சமையலில்., 

பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம்., 

பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம், 

பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் 

என்று பாடல் கூறுகிறது.


ஆயிரம் காய்கள் ஆயிற்றா.?


மீதி இலையில் எண்ணிப்பாருங்கள்., எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன். 

ஆக மொத்தம் 1008.! " என்றாள்.


சாஸ்த்திரப்படி விளக்கம் சொன்ன அருந்ததியின் பதில் ஞாயம் தானே.?


ஸமயோசித புத்தியும்., இல்லற தர்மமும் அறிந்தவர்களாக., நம் பாரதத்தில் அன்றைய பெண்கள் இருந்திருக்கிறார்கள்.!


இதைப்போன்ற நாம் தெரிந்து கொள்ளவேண்டிய நல்ல விஷயங்கள் ஏராளமாக உள்ளது.

No comments:

Post a Comment