Pages

Tuesday, November 26, 2024

மீனாக்ஷி

"அம்மாடி!! மீனாக்ஷி!! ராஜ உத்தரவு!! மடப்பள்ளில நிறைய நைவேத்யம் பண்ணனும்!! முடியல்லே!! சித்த தூங்கிக்கறேன்!! மறக்காத நேரத்துக்கு எழுப்பிடுடீ!! மறந்துடாதே" மீனலோசனையின் மீதுள்ள அதீதமான உரிமையால் ஶ்ரீநிவாஸர் *தேவிக்கே உத்தரவிட்டு*, மடப்பள்ளியை உள்பக்கமாய் தாழ் போட்டுக்கொண்டு உறங்கிப்போனார்.

தடதடவென சத்தம்!! "யார் மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது!!" கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் ராஜ ஸேவகர்கள்!!

"என்னங்கானும்!! நீர் கதவை அடைச்சுண்டு உள்ள என்ன பண்றீர்!! காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா!! குருக்கள் காத்துண்ட்ருக்கார்!! நைவேத்யம் எடுத்துண்டு வாங்கோ!!" ராஜ ஸேவகர்களோடு வந்த பட்டரின் குரல்.

"ஐயோ!! மீனாக்ஷி!! கைவிட்டுட்டியேடீ!! எழுப்பி விடுன்னு சொன்னேனே!! ஒரு நைவேத்யமும் தயாராகலையே!! நான் என்ன பண்ணுவேன்!! அம்மா!! ராஜ தண்டனை தான் எனக்கு இன்னிக்கு!!" பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தார் ஶ்ரீநிவாஸர்.

"நகருங்காணும்!!" பட்டரொடு நான்கைந்து பேர் நுழைந்தனர் உள்ளே!!

"ஆஹா!! சக்கரைப் பொங்கல்!! தேங்காய் சாதம்!! புளியஞ்சாதம்!! எலுமிச்சை சாதம்!! போளி!! வடை!! பால் பாயசம்!! ஒன்னு பாக்கியில்லையே ஓய்!! இத்தனையும் தனியாவா பண்ணேள்!! ஒன் சிஷ்யாள்ல்லாம் “அண்ணா கதவை சாத்திண்டார்!! எப்படி திறக்கறதுன்னு தெரியல்லேன்னு புலம்பிண்ட்ருந்தாளே!!" சொன்னவரின் கண்கள் சர்க்கரை பொங்கலிலும், போளியிலுமே இருந்தது.

மீனாக்ஷிக்கு நைவேத்யம் ஆனதும் ஸோமசுந்தரன் இதை சாப்டறானோ இல்லையோ, நாம சாப்டுடனும். அவர் மனது துடித்துக் கொண்டிருந்தது.

ஶ்ரீநிவாஸருக்கு ஒரே குழப்பம்!! "என்னதிது!! நாம தான் எழுந்துக்கவே இல்லையே!! யார் இதெல்லாம் பண்ணிருப்பா!!" நிகழ்வின் ப்ரமிப்பில் ஶ்ரீநிவாஸர் விலகவில்லை.

"உம் கைக்கு தங்க மோதரம் போடணும் ஓய்!! வாரும்!! மீனாக்ஷிக்கு தீபாராதனை ஆகப்போறது!! பார்ப்போம்!!" எல்லோரும் சிவ ராஜமாதங்கியின் ஸந்நிதிக்கு விரைந்தனர்.

குருக்கள் அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பின் தீபாராதனைக்கு திரையை விலக்கினார்.

"ஐயோ!! மாணிக்க மூக்குத்தி காணுமே!! அம்மா!! மீனாக்ஷி!! என்னடி சோதனை இது!!" குருக்களின் கதறல் மீனாக்ஷி கோவிலுக்கு வெளி வரை எதிரொலித்தது.

மீனலோசனையின் அழகையே மெருகூட்டும் மூக்குத்தி தொலைந்த துக்கம் ராஜாவிற்கும், மற்ற அனைவருக்கும்!! ஶ்ரீநிவாஸருக்கோ நடப்பதைக் கண்டு பயம்!! அபசாரம் நிகழ்ந்ததோ என்று!!

அசரீரி கேட்டது...

"அஞ்சற்க!! என் பிள்ளை ஶ்ரீநிவாஸன் சரீர களைப்பால் என்னை எழுப்பிவிடச் சொல்லி உறங்கிப்போனான்!! காலத்தில் எழுப்பிடத் தான் நானே சென்றேன்!! அயர்ந்து அவன் உறங்குவதைக் கண்ட நான் அவனை எழுப்ப மனமில்லாது மடப்பள்ளிக்குள் சென்றேன். துளி வெளிச்சமும் இல்லாத இம்மடப்பள்ளியில் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்து, அதன் ஒளியில் நானே எனது நைவேத்யங்களை சமைத்தேன்!! குழந்தை உறங்குவதைக் கண்ட தாய் அதனை எழுப்புவாளோ!! அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது!! மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள் !! மூக்குத்தி இருக்கும் !!" சட்டென நின்றது அசரீரீ.

நடப்பது கனவா நினைவா என யோசிப்பதற்க்குள் மீனாக்ஷி மூக்குத்தி மடப்பள்ளியிலிருந்து வந்தது.

"அம்மா!! மீனாக்ஷீ!!" ஶ்ரீநிவாஸர் கண்களில் ஜலம் பெருக கதறி மீனாம்பாளின் பாதத்தில் விழுந்தார். "அம்மா!! அம்மா!!ன்னு ஸதா கூப்பிட்டதற்கு நீயே எனக்காக நைவேத்யம் சமைச்சிருக்கியே!! தாயே!! நான் என்ன பாக்யம் பண்ணேன்!!" கண்ணீர் கண்களை மறைக்க கதறினார் ஶ்ரீநிவாஸர்.

"தாயே!! மீனாக்ஷீ!! தாயே!! மீனாக்ஷீ!!" லக்ஷக்கணக்கான ஜனங்கள் நடந்த அதிசயத்தைக் கண்டு திரண்டனர் கோவிலில்!!

ராஜனும் அமைச்சரும் ஶ்ரீநிவாஸரை ஸாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தனர் "ஸ்வாமீ!! நீரே மீனாக்ஷி!! மீனாக்ஷியே நீங்க!!" வேறொன்றும் சொல்லத் தோணவில்லை யார்க்கும்!!

"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" திக்கெட்டும் அம்மையின் நாமம் ஒலித்தது.

ராஜராஜேச்வரியான மாதங்கிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

"பாகம் செய்து என் நாவை பாடவும் செய்தாய் தாயே

ஊகமிலார்க்கு இன்னும் உதவினாய் சோகந்தீர் நாதநலம் நாட்டுகின்ற நான்மறையாம் தண்டை சேர்பாதநிழல் யான் தங்கப்பண்"

ஶ்ரீநிவாஸரின் நா பாடத்தொடங்கியது!! ஆம் கல்வியறிவு இல்லாத ஶ்ரீநிவாஸர் கவிஶ்ரீநிவாஸர் ஆனார்.

காமாக்ஷி பட்டாரிகை மூககவிக்கருளியது போல், அகிலாண்டநாயகி காளமேகத்திற்கு அருளியது போல், மீனாக்ஷம்மை ஶ்ரீநிவாஸர்க்கு அருளி விட்டாள்.

படிப்பறிவில்லா ஶ்ரீநிவாஸர் பராசக்தி கடாக்ஷத்தால் கவிமாரி பொழிந்தார்.

"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" நாமம் ஒன்று போதாதோ!! மோக்ஷமே கைமேல்!!

ஶ்ரீமாத்ரே நம:

வக்த்ரலக்ஷ்மீ பரிவாஹ சலன்மீனாப லோசனாயை நம:

காமாக்ஷ்யை நம:

லலிதாம்பிகாயை நம:

Monday, November 18, 2024

கிணறு

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு.

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு மிகவும் வியப்பாக இருக்கிறது.

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ:

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.

சரி நீரூற்று இருக்கும. ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை இறைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம். அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்த நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.

Tuesday, November 12, 2024

Sunday Story

Sunday Story

Guests who never came

A few days after the father and mother died, the children opened all  the boxes and cupboards they had used. 

Expensive shirts, sarees given by children and grandchildren on special occasions, utensils brought from the Gulf, spoons, bedsheets, curios bought when they went on tour and perfumes all sat there without being opened or used.

The flawed utensils in the kitchen of the house, the crumpled aluminium utensils, the faded plates for eating, the grey bedsheets in the bedroom all came to mind.  

If she was told to take it and use it, she would say, "It is all about taking a drop of water when someone comes up."

Most homes have ceramic items that are stored in glass cupboards on the wall.  For whom is all this waiting for?

The tablecloth with small blue flowers is folded to be rolled out when someone comes? For whom are the shining utensils and glasses sitting motionless? Do you expect someone to call your name and come into the house?

The ins and outs will disappear one day. Thoughtful and unexpected guests will also come that day. Your immobile body may not be able to accommodate the crowds that come to see you in expensive vehicles. The cupboards and tablecloths that you have kept like gold for distinguished guests for ages will remain in that cupboard.

The edges of the ceramic cup are dusty and dull. Yellow stains are seen in the folds of the tablecloth.

We need to understand the truth that no bigger guests are coming than us and that there is no bigger celebration than our life.  All the endless waiting is in vain. What we lose is our precious life that God has given us.

Time does not wait for anyone. In an instant, you will all become pictures on the wall. Our deferred hopes will change. We always need to remember that we are the only ones who can laugh for ourselves. Like a child who goes to school without good clothes on the day when he is likely to get beaten up, we are afraid of something and put aside our happiness. We do not laugh today waiting for the good days to come.

It is just that we do not realize that a bigger day than today is yet to come. The moments lost without living will fade away forever.

You do not have to wait for anything.

Take out the best tablecloth for yourself today and spread it. Put up your new curtains. Wipe with a damp cloth, the shiny spoons and the best utensils and arrange on the shelf.

Place scented candles on the table. You are the star! Today is your biggest day. Celebrate as much as you can.

This does not mean throwing away money or forgetting duties. Start living for yourself from this day. Make a world for yourself with short trips, music, movies and books.

Drink more tea. One more laugh. Let the nerves come. Let the knee hurt.

Let us go ahead and celebrate. Isn't it a life?

May the days to come be more beautiful. Realize that you are the biggest guest in your life and enjoy every day of your life and live till death.

Reflection

Time will never wait for anyone. Today, it is the only truth. The poet sang, who knows who and what tomorrow will be like.

Tuesday, October 15, 2024

மகாபாரதத்தில் கண்ணன் ஏன் அழுதான்

மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்..

உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு. 

அது எந்த இடம் தெரியுமா?

கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனைக் காத்து நின்றது.

அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான். 

கண்ணனுக்கே தாங்கவில்லை. உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள் என்றான். 

அப்போதும் கர்ணன் மறு பிறவி என்று ஒன்று வேண்டாம். அப்படி ஒரு வேளை பிறக்க நேர்ந்தால், யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா என்று வேண்டினான். 

கண்ணன் அழுதே விட்டான். இப்படி ஒரு நல்லவனா என்று அவனால் தாங்க முடியவில்லை. 

கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான்.

கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கண்ணீரால் கர்ணனை நீராட்டினான்.

கர்ணன் கேட்டதோ இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான். 

கண்ணன் மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான் 

நீ எத்தனை பிறவி எடுத்தாலும், தானம் செய்து, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற்று, முடிவில் முக்தியும் அடைவாய் என்று வரம் தந்தான். 

இறைவனைக் காண வேண்டும், முக்தி அடைய வேண்டும் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ தவம் செய்வார்கள். எவ்வளவோ படிப்பார்கள். 

கர்ணன் இறைவனைக் காண வேண்டும் என்று தவம் செய்யவில்லை. முக்தி வேண்டும் என்று  மெனக்கெட வில்லை. 

இறைவன் அவனைத் தேடி வந்தான். கேட்காதபோதே விஸ்வரூப தரிசனம் தந்தான்.  அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.  கண்ணீர் விட்டான். செல்வம், ஈகை, முக்தி என்று எல்லாம் கொடுத்தான். 

இறைவனைத் தேட வேண்டாம். அவன் நாம் இருக்கும் இடம் தேடி வருவான். கேட்காதது எல்லாம் தருவான். நம்மைக் கட்டி அணைத்துக் கொள்வான்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

கர்ணன் தானம் செய்தான், 

செய் நன்றி மறவாமல் இருந்தான். 

எளியவர்களுக்கு உதவி செய்தான், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி மறக்காமல் இருந்தான். அவ்வளவுதான்.

உலகளந்த பெருமாள், அவனிடம் கை நீட்டி நின்றார்.

ஈகை எவ்வளவு பெரிய நற்செயல் !

இயன்றதைசெய்வோம் இல்லாதவர்க்கு.

Monday, October 14, 2024

மூடநம்பிக்கை

ரெண்டு நாளா பொழுது போகலை. அதனால கடவுள் மறுப்பு இயக்கத்தில் தீவிரமாய் இருக்கிற என் நண்பர் ஒருத்தருக்கு போன் போட்டு பேசினேன்.

'டேய்...! சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம்லாம் மூடநம்பிக்கைன்னு நிரூபிக்கிறதுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் வந்திருக்கு. பயன்படுத்திக்கிறியா..?'

நண்பர் ஆர்வமானார். 

'கண்டிப்பா பயன்படுத்திக்கிறேன்டா. அதுமட்டுமில்ல. அந்த சம்பவத்தை படம் பிடிச்சு youtube ல போட்டு உலகம் பூராவும் இந்து மதத்தையும் அதோட வழிமுறைகளையும் நாறடிச்சுடுறேன். நான் என்ன செய்யணும் சொல்லு'

நான் சொன்னேன்,

'இன்னைக்கு விஜயதசமி. வித்தியாரம்ப நாள். இந்த சங்கிப் பயலுக அவனுங்களோட பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கோவிலுக்கு கூட்டிட்டு போய், அந்தக் கோவில்ல இருக்கிற கல்லு சிலைக்கு முன்னாடி உட்கார்ந்து, ஒரு தட்டில் நெல் மணியை பரப்பி குழந்தை கையை பிடிச்சு அதுல ஆனா ஆவன்னா எழுத்து எழுதி கல்வியை தொடங்கி வைப்பானுங்க.

இதுல குரு தட்சணைன்னு அங்க இருக்கிற பார்ப்பனருக்கு துண்டு வேஷ்டி துட்டுன்னு காணிக்கை வேற கொடுப்பானுங்க'

நான் பேசப்பேச நண்பருக்கு குஷி தாங்கலை. ஆச்சரியமாய் என்னிடம் கேட்டார்,

'நீயாடா இப்படி அறிவுப்பூர்வமா பேசுற? சங்கி பயல்களுக்கு கொடூரமா முட்டுக் கொடுப்பியேடா. இந்த விஷயத்துல நான் என்ன செய்யணும்னு சொல்லு. உடனே செய்யுறேன்'.

நான் அவனிடம் கேட்டேன்,

'உனக்கு ஸ்கூலுக்கு போற வயசுல பேரப்பிள்ளைகள் இருக்கா?'

சடாரென பதில் சொன்னான்,

'ஆமா..! என் மகள் வயித்து பேரன் இருக்கான்'

நான் தொடர்ந்தேன்,

'நீ என்ன பண்ற..! உன் பேரனை தூக்கிக்கிட்டு சுடுகாட்டுக்கு போயி, அங்க கிடக்கிற பிணம் எரிச்ச சாம்பலை ஒரு தட்டுல பரப்பி, அரைகுறையா வெந்து கிடக்கிற எலும்பு துண்டை அவன் கையில கொடுத்து,

அங்க வச்சு அந்த சாம்பல்ல அவனுக்கு ஆனா ஆவன்னா எழுத சொல்லி தர்ற. 

சொந்தக்காரங்க எல்லாத்தையும் மறக்காம கூட கூட்டிட்டு போயிரு. அந்தப் பையன் எழுத ஆரம்பிக்கும் போது சொந்தக்காரங்கள ஒப்பாரி வைக்கச் சொல்லு.

அத படம் புடிச்சு யூடியூப்ல போட்டு,

கலைவாணி முன்னால் தான் என்றல்ல... கல்லறையில் எழுதினாலும் கல்வி அறிவு வரும்; வளரும்னு ஒரு பஞ்ச் டயலாக் போடுற.

இதுக்கு ஏகப்பட்ட லைக்ஸ்சும் வியூசும் கிடைக்கும். 

அதோடு மக்களுக்கு கோவில்ல வச்சு தான் எழுத்தறிவை ஆரம்பிக்கணும்ன்ற மூட நம்பிக்கையும் ஒழியும். உன்னோட கொள்கையும் உலகம் பூராவும் பரவும். 

அங்க இருக்கிற வெட்டியானுக்கு தட்சணையா சீயக்காய், எண்ணை, ஊதுவத்தி வாங்கி கொடுத்துடுவோம்.

சொல்லு எப்போ நாம சுடுகாட்டுக்கு போவோம்..?'

திடீரென நண்பருக்கு ஆறறிவில் ஓரறிவு அவுட் ஆகி போனது. காட்டுக்கத்து கத்தினார்,

'ஏன்டா நாயே..! உன் வாரிசுகள் மட்டும் நல்லா இருக்கணும். என் வாரிசுகள்லாம் நாசமா போகணுமா? இப்படி ஒரு யோசனையை சொன்னேன்னா என் மருமகன் விளக்கமாறால என்னை அடிச்சு என் மண்டையை பிளந்துருவாரு.

என் மகளையும் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டுருவாரு.

கடவுள் இல்லைன்னு நான் வீர வசனம் பேசுறதையெல்லாம் மேடையோடு நிறுத்திக்கலைன்னா எனக்கு வீட்டுக்குள்ள இடம் கிடையாது.

இந்த மாதிரி அபசகுனம் பிடிச்ச யோசனைய எவனுக்கும் சொல்லாத. இனி செத்தாலும் உன்னோடு பேசமாட்டேன்டா' னு சொல்லி போனை கட் பண்ணிட்டார்.

அப்போதான் புரிஞ்சது. மூடநம்பிக்கை ஒழிப்புன்றதே ஒரு மூடநம்பிக்கை தான்னு..!

பகுத்தறிவை பயன்படுத்தி கொஞ்சம் மாத்தி யோசிச்சா இந்த கதறு கதறுறானுங்களே!!

Thursday, October 03, 2024

Sri C. Radhakrishna Rao

Sri C. Radhakrishna Rao, Retired at the age of sixty and went to live with his daughter in America along with his grandchildren.    

There, at the age of 62, he became a professor of statistics at the University of Pittsburgh and at the age of 70 , he became the head of the department at the University of Pennsylvania.

US citizenship at the age of 75. 

National Medal For Science at the age of 82 , a White House honor.

Today, at the age of 102 , he received the Nobel Prize in Statistics.

In India, the government has already honored him with Padma Bhushan (1968) and Padma Vibhushan (2001).

Rao says: No one asks after retirement in India.

Colleagues also respect power and not scholarship. 

At the age of 102 , receiving a Nobel while in good physical condition, it is probably the first example.

An event that should be taken into account by all of us !

Age is just a number. 

Willingness to work and excel always matter.

 


Tuesday, October 01, 2024

மாவீரன் பிருத்விராஜ் சௌஹான்

1999 ம் ஆண்டு நமது நாட்டு விமானம் நேபாளத்திலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. 

அப்போது செய்தி சேகரிப்பதற்காக இங்குள்ள பத்திரிகைகள் சில தனது நிறுபர்களை ஆப்கனுக்கு அனுப்பி வைத்தது..

அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த நிருபர்கள் கந்தகார் நகரை சுற்றி பார்க்க கிளம்பினார்கள்...

அவர்கள் நடந்து சென்ற தெருவின் ஓரிடத்தில் ஒரு மண்மேடு காணப்பட்டது.

அந்த வழியாக வந்த ஒருவர் அந்த மண்மேட்டை பார்த்ததும் காரி உமிழ்ந்துவிட்டு சென்றார்.

மற்றொருவர் மண்மேட்டின் மீது சிறுநீர் கழித்துவிட்டு சென்றார்..

அந்தப்பக்கமாக வந்த இரண்டு பெணகள் செருப்பை கழற்றி மண்மேட்டை அடித்துவிட்டு சென்றார்கள்.

இதைப்பார்த்துக்கொண்டிருந்த நிருபர்கள் என்னவென்று புரியாமல் நேராக ஹோட்டலுக்கு வந்தார்கள்.

அங்கு ஹோட்டலில் ரிஷப்ஷனில் இருந்தவரிடம் தாங்கள் பார்த்த சம்பவத்தை ஆங்கிலத்தில் கூறி ஏன் என்று விசாரித்தார்கள்..!!

அந்த ரிஷப்ஷனிஸ்ட், அது ஒரு ஹிந்து மன்னனின் சமாதியென்றும்.. அம்மன்னனின் மீதுள்ள ஆத்திரத்தை இங்குள்ள மக்கள் இவ்வாறு தீர்த்துக்கொள்கிறார்கள் என்றும் கூறினார்..!!

அம்மன்னன் வேறுயாருமல்ல...

மாமன்னர்_ஸ்ரீ_ப்ருத்திவிராஜ்_சௌஹான்

இப்போது பாகிஸ்தானிலுள்ள சிந்துநதி பாயும் சிந்து மாகானத்தை ஆட்சிசெய்த இரஜபுத்திர மாவீரன் தான் பிருத்விராஜ் சௌஹான்..

தன் பதினோராம் வயதிலேயே அரியணை ஏறிய பிரித்திவிராஜ் குதிரை ஏற்றத்திலும் வில்வித்தையிலும் சிறந்த வீரன்..

தான் மிகவும் அழகாக இருப்பதாக தன் நன்பன் கூறியதால் வீரர்கள் அழகாக இருக்கக்கூடாதென்று தன் முகத்தில் தன் வாள் கொண்டு தளும்பை உண்டாக்கிக் கொண்டவர்..

பக்கத்து நாட்டை ஆண்டு கொண்டிருந்த தன் தாய்மாமன் ஜெயச்சந்திரன் முன்பகை காரணமாக தன் மகள் சுயம்வரத்திற்கு பிருத்விராஜ் ஜை அழைக்க மறுத்துவிட்டார்..

இதனால் கோபம் கொண்ட பிருத்விராஜ் சௌஹான் தன் தாய்மாமன் மகளின் மனதில் தான் இருக்கிறோம் என்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்டார்.

மறுநாள் தன் குதிரையில் ஏறி தன்னந்தனியாக சென்று தன் மாமனின் அரண்மனைக்குள் நுழைந்து தன் காதல் மனைவி பட்டத்தரசி சம்யுக்தாவை புரவியில் கவர்ந்துகொண்டு வந்தார்..

இதனால் ஆத்திரமடைந்த ஜெயச்சந்திரன் பழிதீர்க்க காத்துக் கொண்டிருந்தார்..

இந்நிலையில் மேற்கிலிருந்து படையெடுத்து வந்த முஹம்மது கோரி என்ற துருக்கிய திருடனை இரண்டுமுறை தோற்கடித்து விரட்டினார்..

மூன்றாவது முறையாக சிந்து நதிக்கரையில் வேட்டையாடிக்கொண்டிருந்த பிரித்திவிராஜ் சௌஹானை... தன் தாய்மாமன் ஜெயச்சந்திரன் உதவியால் இரவில் உறங்கிக்கொண்டிருக்கும் போது முஹம்மது கோரி கைது செய்தான்..

கைது செய்ததும் பிருத்விராஜ் மீதுள்ள பயத்தில் அவர் கண்களை குருடாக்கினான்..

குருடாக்கி  தன் நாட்டுக்கு அழைத்துச்செல்லும் வழியில் ஆப்கானிஸ்தான் காந்தகரில் ஒர் இரவு தங்கினான்.

அப்போது பிருத்விராஜ் ஜின் நன்பர் ...

தன் மன்னர் கண் தெரியவில்லையென்றாலும் அர்ச்சுனன் போன்று வில்விடுவதில் சிறந்தவரென்று  கூறினார் 

சோதிக்க விரும்பிய கோரி பிருத்விராஜ் ஜிடம் வில்லையும் அம்பையும் கொடுத்து சப்தம் வரும் திசையை நோக்கி அம்பு விடச் சொன்னான்.. 

தன் வீரர்களையும் ஒலி எழுப்பச்சொன்னான்..

கண் தெரியாத சூழ்நிலையிலும் மிகத்துல்லியமாக அம்பை விட்டார் பிரித்திவிராஜ் ..

அசந்துபோன கோரி ஒரு கட்டத்தில் சந்தோஷத்தின் உச்சத்தில் சபாஷ் என்று கத்தினான்..

இந்த சப்தத்திற்காக காத்துக்கொண்டிருந்த பிருத்விராஜ் சௌஹான் சப்தம் வந்த திசையை நோக்கி அம்பை விட்டார்...

கணப்பொழுதில் அம்பு பாய்ந்து முஹம்மது கோரி மாண்டுபோனான்..

கோரி மாண்டு போனதை கண்ட சகவீரகள் பிருத்விராஜ்ஜையும் அவர் நண்பரையும் கொன்று அங்கேயே புதைத்தனர்..

இன்றும் அவர்களை கொன்று புதைத்த மண்மேடு காந்தகர் நகரில் உள்ளது...

இஸ்லாமியனை எதிர்த்து துரோகத்தால் உயிர்நீத்த முதல் ஹிந்து மன்னன் மாவீரன்_பிருத்விராஜ்_சௌஹான்...

ஹிந்துக்கள் வீரத்தால் தோற்றவர்கள் அல்ல..!!

துரோகத்தால்_தோற்றவர்கள்..

ஒவ்வொரு ஹிந்து மன்னனின் வரலாறும் நமக்கு இதையே உணர்த்தும்..

நமது வாஜ்பாய் அரசு இவர் நினைவாக உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் ஏவுகனைக்கு ப்ருத்திவி என பெயர் சூட்டியது..

Thursday, September 26, 2024

ராம் ராம்

இப்படியும் நடக்குமா  என ஆச்சர்யமாக உள்ளது !!

நேற்று மாலை காய்கறி, பழம் வாங்க மார்க்கெட் போனேன். வழக்கமாக பழம் வாங்கும் கடையில் ஆளில்லை . ஆனால் அங்கிருந்த போர்டில்" என் தாய் உடல் நலமில்லாமல் இருப்பதால் வீட்டில் அவளை கவனித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அவளுக்கு மருந்து வாங்கி கொடுக்க வேண்டும். தராசில் உங்களுக்கு வேண்டிய அளவு பழங்களை அளந்து பணத்தை அருகிலுள்ள டப்பாவில் போடவும். பணம் இல்லாவிட்டால் நாளை கொடுக்கலாம்"

நான் எனக்கு தேவையான பணத்தை தராசில் நிறுத்து எடுத்துக் கொண்டு பணத்தை டப்பாவில் போட்டுவிட்டு கிளம்பினேன்.

மறுநாள் அதே கடைக்குச் சென்ற போது கடையில் கடையின் சொந்தக்காரன் அமர்ந்திருந்ததை கண்டேன்.

"ஐயா இன்று பழங்கள் விற்றுப் போய்விட்டது " என்றான்.

அவனை எதிரிலிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன். டீ அருந்தியவாறு பேச்சுக் கொடுத்தேன்.

உன் பெயரை தெரிந்து கொள்ளலாமா ? என்றேன்

"சீதா ராம்" என்றான். " போர்ட் தொங்குவது எனக்கு புதிதாக படுகிறது. இதன் பின்னணியை விளக்க முடியுமா" என்று கேட்டேன்.

அவன் பேச ஆரம்பித்தான்,"நானும் அம்மாவும்தான் வீட்டில். மனைவி இறந்து விட்டாள். குழந்தைகள் இல்லை. அம்மா படுத்த படுக்கையாக விட்டாள். என்னால் வேலைக்கும் போக முடியவில்லை.

ஒருநாள் அம்மாவின் கால்களை நீவி விட்டவாறு சொன்னேன். அம்மா பணப்பற்றாக்குறை வந்து விட்டது. என்னால் உன்னை தனியாக விட முடியவில்லை. கடையில் ஆளில்லாவிட்டால் எவர் வாங்குவர்? நீயும் தனியாக இருக்க பயப்படுகிறாய்? என்ன செய்வது" என்றேன்.

சுருங்கிய கைகளால் என் தலையை வருடிக் கொடுத்த அம்மா சொன்னாள்," கடைக்கு சென்றவுடன் ராமனின் பெயரை மூன்று முறை சொல்லவும். பழங்கள் அடுக்கி விட்டு வா, அதன்பின் அவன் பொறுப்பு. பார்த்துக் கொள்வான். போர்டில் உன் நிலமையை சுருக்கமாக எழுதி பணம் போட ஒரு டப்பாவை வைத்து விடு .ஆனால் என்றாவது நஷ்டம் வந்தால் அந்த ராமனை தூஷிக்காதே" என்றாள்.

அதன்படியே செய்து வருகிறேன் 3 வருடங்களாக. தினமும் மாலையில் டப்பா நிரம்பி வழியும்!

சிலர் அம்மாவிற்கு மலர் கொத்து வைத்துவிட்டு போவர்.

நேற்று ஒரு சிறுமி அம்மாவிற்கு கேக் வைத்திருந்தாள்.

டாக்டர் ஒருவர் அம்மாவிற்கு தேவைபட்டால் தனக்கு போன் பண்ண சொல்லி நம்பர் எழுதி வைத்திருந்தார். 

ஸ்ரீராமன் அநுகிரஹத்தில் இன்றுவரை எல்லாம் நல்லபடியாக போகிறது என்கிறாள் அம்மா"

இதுதான் நான் போர்ட் எழுதின கதை என முடித்தான்!!!

கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!

Tuesday, September 24, 2024

வாழ்க்கை அனுபவம்

60 வயதைக் கடந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் என்னுடைய நண்பர் ஒருவரிடம், "உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் உங்களுக்குள் நீங்கள் என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்?" என்று கேட்டேன். 

அதற்கு அவர் " உங்களுடைய கேள்விக்கான பதிலை நான் வீட்டிற்குப் போய் உங்களுக்கு அனுப்புகிறேன்" என்றார். அவ்வாறே அவர் ஒரு நீண்ட பட்டியலை வாட்ஸ்அப் மூலம் அனுப்பினார். அவர் ஆங்கிலத்தில் அனுப்பியதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்துக் கீழே தந்துள்ளேன். 

1) என் பெற்றோரிடம், என் உடன்பிறந்தோரிம், என் இணையரிடம், என் குழந்தைகளிடம், என் நண்பர்களிடம் அன்பும், பாசமும், காதலும் கொண்டிருந்த நான், இப்போது என்னை நானே விரும்பத் தொடங்கியுள்ளேன். 

2) இந்த உலகத்தை நான் என் தோள்களில் தாங்கிப் பிடித்திருக்க வில்லை என்பதை உணர்கிறேன். 

3) இப்போதெல்லாம் காய்கறிக்காரரிடம், பூக்காரியிடம், தள்ளுவண்டிப் பழ வியாபாரியிடம் பேரம் பேசுவதை நிறுத்தியுள்ளேன். பேரம் பேசாமல் நான் தரும் உபரித் தொகை அவருடைய குடும்பத்திற்கு ஏதாவது ஒருவகையில் உதவும் என்று கருதுகிறேன். 

4) நாள் முழுதும் உழைக்கும் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு மீதிச் சில்லறைக் காசுக்காகக் காத்திராமல் திரும்புகிறேன். இதனால் அவர் முகத்தில் அரும்பும் புன்னகையை விரும்புகிறேன். 

5) என்னைவிட முதியவர்கள் ஒரு செய்தியை - நிகழ்வை - கதையைத் திரும்பத்திரும்பக் கூறினாலும், 'இதை நீங்கள் முன்பே கூறிவிட்டீர்கள்' என்று முகத்தில் அடித்தால் போல் கூறாமல், முதல்முறை கூறுவதாகவே கருதிக் கேட்டுக்கொள்கிறேன். 

6) நமக்காக உழைக்கும் வீட்டு வேலையாட்களிடம் விவாதம் செய்வதையோ சத்தம் இடுவதையோ முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். நிறைவைவிட அமைதியே விலைமதிப்பற்றது (Peace is more precious than perfection) என்பதை உணர்ந்துகொண்டேன். 

7) ஒவ்வொருவரையும் அவர்களின் செயற்பாடுகளில் மனமுவந்து பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என் சட்டையில் காணப்படும் சிறுசிறு கறைகளையெல்லாம் இப்போது நான் பொருட்படுத்துவது இல்லை. 

8) தோற்றத்தைவிட ஆளுமையே சிறந்தது என்பதை உணர்ந்துள்ளேன். (personality speaks louder than appearances.) 

9) என்னை மதிக்காதவர்களை விட்டு நானே விலகிச் சென்று விடுகிறேன். 

10) தேவையற்ற - முடிவற்ற தொடர் ஓட்டத்தில் என்னை முந்துபவர்களைப் பற்றி நான் கவலை கொள்வதில்லை. நான் பந்தயத்தில் இருப்பதாகவே என்னை நினைத்துக் கொள்வதில்லை. 

11) இப்போதெல்லாம் நான் எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படுவதோ அடிமையாவதோ இல்லை. 

12) உறவுகளை முறித்துக் கொள்வதைவிட என்னுடைய egoவைக் கைவிடுவதே சிறந்தது என்னும் முடிவுக்கு வந்துள்ளேன். 

13) இந்த நாள்தான் வாழ்வின் இறுதிநாள் என்ற நினைப்பிலேயே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறேன். 

14) எனக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையிலும், மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வகையிலும் முடிந்தவரை என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளேன். 

15) மற்றவர்களைக் குறைசொல்வதையும், புறங்கூறுவதையும் முற்றிலுமாகத் தவிர்த்துள்ளேன். 

16) என்னால் மற்றவர்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில் முடிந்தவரை வாழ்ந்து வருகிறேன். 

17) தேவையின்றிப் பிறர் விஷயங்களில் தலையிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்துள்ளேன். 

18) யாரும் என்னை அணுகிக் கேட்டாலொழிய வலியச் சென்று ஆலோசனை வழங்குவதை நிறுத்தியுள்ளேன். 

19) என்னுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் முடிந்தவரை குறைத்துக்கொண்டுள்ளேன். 

20) அரசியல், ஆன்மீகம், மதம் தொடர்பான செய்திகளைப் பகிர்வதையோ, அவை தொடர்பாக மற்றவர்களிடம் விவாதிப்பதையோ முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டேன்.

ஏன் வயதாகும் வரை காத்திருக்க வேண்டும்? எந்த வயதினராயினும் இவற்றைப் பின்பற்றலாமே! அமைதியான - பயனுள்ள - வெற்றி வாழ்க்கைக்குக் கைகொடுக்குமே.

அனைவருக்கும் பகிருங்கள். டாக்டர் நர்மதா . நன்றி!

Thursday, September 05, 2024

மஹாளய பித்ரு பக்ஷ கேள்விகள்

மஹாளய பித்ரு பக்ஷ கேள்விகள்

18/09/24 - 03/10/24

தர்ம ஶாஸ்த்ரம்

கேள்வி 1: தினமும் செய்யும்பொழுது மஹாளய தர்பணம் 15 நாட்களா அல்லது 16 நாட்களா?

பதில் 1 : ஶாஸ்த்ரங்கள்  இரண்டையுமே ஒத்துக் கொண்டுள்ளது. தங்களின் குடும்பப் பழக்கப்படி 15 அல்லது 16 நாட்கள் செய்யலாம். நீங்கள் புதிதாக ஆரம்பிப்பதாக இருந்தால், குடும்பப் பழக்கம் தெரியாத நிலையில் 16 நாட்கள் செய்வது உத்தமம். மஹாளயத்தில் 16 நாட்கள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. 

கேள்வி 2: என்னால் எல்லா நாளும் தொடர்ந்து தர்பணம் செய்ய முடியவில்லை என்றால் என்ன செய்வது? 

பதில் 2 : ஒரு நாள் ஶ்ராத்தமும் தர்பணமும் செய்யவும். மஹாளயத்தில் ஒரே ஒரு நாள் செய்யும் ஶ்ராத்தத்தை ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தம் என்று கூறுவார்கள்.  “ஸக்ருத்” என்றால் “ஒன்று” என ஸம்ஸ்க்ருதத்தில் பொருள். 

கேள்வி 3: நான் ஒரு நாள் ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தமும் தர்பணமும் செய்வதென்றால் அதைச் செய்வதற்கு ஏதாவது முக்கியமான நாட்கள் உண்டா ?

பதில் 3 : முக்கியமான நாட்கள்

1) பரணி நக்ஷத்ரம் உள்ள நாள் (மஹாபரணி) - 21/09/24

2) வ்யதீபாத யோகம் உள்ள நாள் (மஹாவ்யதீபாதம்) - 24/09/24

3) அஷ்டமி திதி  (மத்யாஷ்டமி) - 25/09/24

4) த்ரயோதசி உள்ள நாள் (கஜச்சாயை) - 30/09/24

இந்த நாட்களில் ஶ்ராத்தமும் தர்பணமும் செய்தால், இதை கயா க்ஷேத்திரத்தில் செய்ததற்குச் சமம். 

கேள்வி 4: அனைத்து 15 அல்லது 16 நாட்களில் தர்பணம் செய்வதற்குப் பதிலாக ஏதாவது 2 அல்லது 3 முக்கியமான நாட்களில் செய்யலாமா?

பதில் 4: மஹாளயத்தில் இரண்டு வகையான தர்பண முறைகள்தான் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  ஒன்று ப்ராம்ஹணர்களை வீட்டுக்கு ஒரு நாள் அழைத்து ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தமும் தர்பணமும் செய்வது . இரண்டாவது, அனைத்து 15 அல்லது 16 நாட்களும்  தொடர்ந்து தர்பணம் செய்து, மற்றும் ஏதாவது ஒரு நாளில் ப்ராம்ஹணர்களை வீட்டிற்கு அழைத்து ஶ்ராத்தம் செய்வது.  உங்கள் விருப்பப்படி சில முக்கியமான நாட்களில் மட்டும் தர்பணம் செய்யக்கூடாது. 

கேள்வி 5: ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தம் தாய் அல்லது தந்தை இறந்த திதியில்தான் செய்யவேண்டும் என்று கட்டாயம் உண்டா? 

பதில் 5 : இந்த 15 நாட்களில் ஒரு நாள் ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தம் செய்யவேண்டும் என்பது கட்டாயம். மற்றும் அதை தாய், தந்தை இறந்த திதியில் பண்ணலாம். ஆனால் அது கட்டாயமல்ல.  நீங்கள் மூன்றாவது பதிலில் சொல்லியபடி ஏதாவது ஒரு சுப அதிகத் தகுதிகள் உள்ள நாட்களை எடுத்துக் கொள்ளலாம். 

கேள்வி 6: ஏதாவது ஒரு நாளில் ஸக்ருன்மஹாளய ஶ்ராத்தமும் தர்பணமும் செய்த பிறகு அமாவாசை அன்று மறுபடியும் மஹாளய தர்பணம் செய்யவேண்டுமா?

பதில் 6 : ஒரு நாள் ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தமும் தர்பணமும் செய்த பிறகு அமாவாசை அன்று மஹாளய தர்பணம் செய்யவேண்டாம்..அமாவாசை தர்பணம் செய்தால் மட்டும் போதுமானது.  அனைத்து 15 அல்லது 16 நாட்கள்  மஹாளய தர்பணம் செய்பவர்கள் அமாவாசை அன்றும் மஹாளய தர்பணமும் மற்றும் அமாவாசை தர்பணமும் செய்யவேண்டும்.  இவர்கள் முதலில் அமாவாசை தர்பணம் முடித்துவிட்டு மஹாளய தர்பணத்தைச் செய்யவேண்டும். 

கேள்வி 7: ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தம் செய்ய உசிதமான நாட்களைத் தேர்ந்தெடுக்க வரைமுறைகள் உள்ளதா?

பதில் 7: நீங்கள் ஒரு நாள் ஸக்ருன் மஹாளயம் செய்வதற்குப் ப்ரதமை முதல் சதுர்த்தி வரை உள்ள திதிகளைத் தவிர்க்க வேண்டும். உங்கள் பெற்றோரின் இறந்த நாட்கள் ப்ரதமை அல்லது சதுர்த்தி திதிகளில் இருந்தால் மற்றும் பதில் 3ல் கொடுத்துள்ள நாட்களில் இருந்தால் தவிர்க்கவேண்டியதில்லை.   கட்டாயமாகச் சதுர்த்தசியில் செய்யக் கூடாது. 

கேள்வி 8: ஏன் சதுர்த்தசியில் செய்யக் கூடாது?

பதில் 8 : இயற்கைக்கு மாறான மரணம் எய்தியவர்கள், ஆயுதத்தாலோ, விபத்திலோ, தற்கொலையிலோ, விஷத்திலோ துர்மரணம் அடைந்தவர்கள், ஆகிய இவர்களுக்காக சதுர்த்தசி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கேள்வி 9: என்னுடைய பெற்றோர்கள் பஞ்சமியிலோ, சஷ்டியிலோ அல்லது மற்ற திதிகளிலோ இயற்கைக்கு மாறான துர்மரணம் அடைந்திருந்தால் (பதில் 8ன் படி) என்று நான் மஹாளய ஶ்ராத்தம் செய்யவேண்டும்?

பதில் 9 : நீங்கள் சதுர்த்தசி அன்றுதான் செய்யவேண்டுமே தவிர அவர்கள் இறந்த திதியில் செய்யக் கூடாது.  இது போன்ற இயற்கைக்கு மாறான துர்மரணம் அடைந்தவர்களுக்காகவே சதுர்த்தசி ஒதுக்கப்பட்டுள்ளது.  ஆகவே இறந்த திதியைப் பொருட்படுத்த வேண்டாம். 

கேள்வி 10: இயற்கைக்கு மாறான துர்மரணம் எய்திவர்களுக்குச் சதுர்த்தசியில் மஹாளய ஶ்ராத்தம் செய்வதற்கு முன் ஏதாவது முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டுமா? 

பதில் 10: ஆமாம். இந்த ஶ்ராத்தத்தை “ஏகோதிஷ்ட விதானம்” முறைப்படி செய்யவேண்டும்.  இந்த  மஹாளயம்  இயற்கைக்கு மாறான துர்மரணம் எய்தியவர்களுக்கு மட்டுமே செய்யவேண்டும். இதில் மற்ற மூதாதையர்கள், காருணிக பித்ருக்கள் (அவர்களுடைய தந்தை, தாத்தா, தாய், ஆகியோர்) பங்கு ஏற்க மாட்டார்கள். மேலே குறிப்பிட்ட மூதாதையர்களுக்கு மற்ற வேறொரு நாளில்தான் மஹாளயம் செய்யவேண்டும். 

கேள்வி 11: நான் அனைத்து 15 அல்லது 16 நாட்கள் தர்பணம் செய்யும்பொழுது ஏதாவது திதிகளைத் தவிர்க்கவேண்டுமா? 

பதில் 11 : இந்த சிறப்பு வரைமுறைகள் அல்லது சில நாட்களைத் தவிர்ப்பது போன்றவை ஒரு நாள் ப்ராம்ஹணர்களை வீட்டிற்கு அழைத்து ஹிரண்ய ஶ்ராத்தமும் தர்பணமும் (ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தம்) செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.  அனைத்து நாட்களிலும் மஹாளய தர்பணம் மட்டும் செய்பவர்கள் எல்லா 15 அல்லது 16 நாட்களும் செய்யவேண்டும் 

கேள்வி 12: நான் மஹாளயத்தில் ஹிரண்ய ஶ்ராத்தம் செய்வதற்கு எத்தனை ப்ராம்ஹணர்களை அழைக்கவேண்டும்.

பதில் 12: ஆறு ப்ராம்ஹணர்கள் மிகவும் ஏற்றதாகும் 

அவர்கள்:

1. விஶ்வே தேவர் (இந்த தேவதைகள் நமது பித்ருக்களை அவர்களுடன் பூமிக்கு அழைத்து வருகிறார்கள்)

2. தந்தை வழி (3 தலைமுறை)

3. தாய் வழி (3 தலைமுறை)

4. தாயின் தாய் மற்றும் தந்தையர் வழி (3+3 தலைமுறை)

5. காருணிக பித்ருக்கள் (நெருங்கிய உறவினர்கள்)

6. மஹாவிஷ்ணு (ஶ்ராத்தத்தைப் பாதுகாப்பவர்) 

தற்பொழுது பல இடங்களில் 5 ப்ராம்ஹணர்கள் மட்டுமே வருவது பழக்கமாக உள்ளது. இந்த மஹாளய நேரத்தில் ப்ராம்ஹணர்கள் கிடைக்காத காரணத்தினால் மஹாவிஷ்ணுவுக்குப் பதிலாக விஷ்ணு பாதம்/ஶாலிக்ராமம் அல்லது கூர்ச்சம் வைக்கிறார்கள். 

கேள்வி 13: யாரெல்லாம் காருணிக பித்ருக்கள்?

பதில் 13: இறந்துபோன உங்கள் தந்தை மற்றும் தாய் வழி உறவினர்கள் – மாமா, தந்தை , தாய் சகோதரர்கள், சகோதரிகள், ஆகியோர்.  இவர்களுக்குத் தர்பணம் செய்து, த்ருப்திப்படுத்தி அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு இந்த மஹாளயம் ஒரு சிறப்பான நேரமாகும். 

கேள்வி 14: என் தந்தை உயிரோடு இருந்து என் தாய் உயிரோடு இல்லை என்றால் மஹாளயம் எனக்கு பொருந்துமா?* 

பதில் 14 : இல்லை.  உங்களது தந்தைக்குத்தான் அதைச் செய்யும் உரிமை உள்ளது. 

அவிதவா நவமி (மஹாளய பக்ஷத்தில் வரும் நவமி-26/09/24) அன்று சுமங்கலிகளை அகத்திற்கு வரவழைத்துப் புடவை வாங்கி கொடுத்துச் சாப்பிடச் செய்யலாம்.

கேள்வி 15: எனது தாய் உயிரோடு இருந்து தந்தை இல்லை என்றால் நான் என்ன செய்யவேண்டும்?

பதில் 15 : தந்தை இறந்த ஒரு வருஷம் வரை மஹாளயமோ, அமாவாசை தர்பணமோ கிடையாது.  இறந்து ஒரு வருஷம் முடிந்த பிறகு மஹாளயம் அல்லது அமாவாசை தர்பணம் ஆரம்பிக்கவேண்டும். எனவே ஒரு வருஷம் கழித்து நீங்கள் ஆரம்பிக்கலாம். 

கேள்வி 16: சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் மஹாளய ஶ்ராத்தம்/தர்பணம் இந்த 15 நாட்களில் செய்யமுடியவில்லை என்றால் என்ன செய்வது?

பதில் 16: சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் மஹாளய ஶ்ராத்தம்/தர்பணம் செய்யத் தவறிவிட்டால் நமது ஶாஸ்திரங்கள் மற்றுமொரு காலத்தையும் கொடுத்திருக்கிறது..  இது வரும் மாதத்தில் உள்ள அடுத்த க்ருஷ்ண பக்ஷத்தில் , அதாவது, தமிழில் ஐப்பசி மாதம், சாந்த்ரமான நாட்காட்டிபடி ஆஶ்வீனம் அல்லது ஸௌரமான நாட்காட்டிப்படி துலா மாதத்தில் செய்யவேண்டும். 


Monday, September 02, 2024

யுகங்களின் கணக்கு

இந்து மத சாஸ்திரங்களில் காலத்தை மிக சிறிய அளவாகிய பரம மகா காலம் முதல் மிகப்பெரிய அளவாகிய பிரம்மாவின் ஆயுள் ஆன இரு பரார்தங்கள் வரை கணக்கிட்டுள்ளனர்.

இதற்கிடையே உள்ள காலத்தை பல்வேறு யுகங்களாகவும் , மன்வந்திரங்களாகவும் பிரித்துள்ளனர். அவற்றின் கால அளவு பற்றிய விவரங்கள் கீழே..  

 பரம மகா காலம் முதல் வருடம் வரை : 

பிரபஞ்சத்தில் சிறுதுளி அவத்தையின் காலமே ஒரு பரமாணு அல்லது ஒரு பரம மகா காலமாகும்.

மூன்று பரமாணுக்களின் காலமே ஒரு திரேசிரேணு ஆகும்.

மூன்று திரேசிரேணுகளின் காலம் ஒரு துருடி ஆகும்.

நூறு துருடிகளின் காலம் ஒரு வேதகாலம் எனப்படும்.

மூன்று வேதகாலம் கூடினால் ஒரு லவம் ஆகும்.

மூன்று லவ காலம் ஒரு நிமிஷம் .

மூன்று நிமிஷம் ஒரு ஷணம் ஆகும்.

ஐந்து ஷணம் ஒரு காஷ்ட்டை .

பதினைந்து காஷ்ட்டை ஒரு இலகு.

பதினைந்து லகுக்கள் ஒருநாழிகை.

இரண்டு நாழிகை ஒரு முகூர்த்தம்.

ஏழு நாழிகை ஒரு ஜாமம் .

மனிதருக்கு இரவு நாலு ஜாமம் ஆகும்.

எட்டு ஜாமம் ஒரு நாள் ஆகும்.

பதினைந்து நாள் ஒரு பஷம் ஆகும்.

இரண்டு பஷம் ஒரு மாதம் ஆகும்.

இது பிதுர்களின் ஒரு நாளாகும்.

இரண்டு மாதங்கள் ஒரு ருது.

ஆறு மாதங்கள் ஒரு அயனம் ஆகும்.

தட்சிணாயனம், உத்திராயணம் என்ற இரு அயனங்கள் சேர்ந்தது ஒரு வருடம் ஆகும்.

இது தேவர்களின் ஒரு நாளாகும். 

யுகங்கள், மன்வந்திரம், கல்பம், பரார்த்தம்  

1728000 ஆண்டுகள் கிருத யுகத்தின் காலமாகும்.

1296000 ஆண்டுகள் த்ரேதா யுகத்தின் காலமாகும்.

864000 ஆண்டுகள் துவாபர யுகத்தின் காலமாகும்.

432000 ஆண்டுகள் கலி யுகத்தின் காலமாகும்.

இந்த நான்கு யுகங்களும் சேர்த்து ஒரு மகா யுகம்(சதுர் யுகம்) எனப்படும்.

இது போல 71 சதுர் யுகங்கள் சேர்ந்தது 

ஒரு மன்வந்திரம் எனப்படும்.

ஒவ்வொரு மன்வந்திரத்திலும் ஒரு இந்திரன்  ஆட்சியை செய்து கொண்டிருப்பார்.

அந்த மன்வந்திரம் முடிந்ததும் அடுத்த இந்திரன் ஆட்சிக்கு வருவார்.

மன்வந்திரம் பற்றிய சிறு குறிப்பு இடையில்..

இந்து மத சாஸ்திரங்களில் ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்த காலம் ஒரு கல்பம் என்று கூறப்படுகிறது.

இந்த ஒரு கல்ப காலத்தில் 14 மனுக்கள்

தங்கள் ஆட்சியை நடத்துவர் என்று கூறப்படுகிறது.

ஒரு மனு தன் ஆட்சியை நடத்தும் காலம் ஒரு மன்வந்திரம் ஆகும்.

ஒரு மன்வந்திர காலம் முடிந்தவுடன் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிந்து விடும்

 என்றும் பின் புதிய மனு(மனு என்பவர் மனித குலத்தின் முதல் மனிதர் ஆவார்.)

 தோன்றி மானிட குலம் மீண்டும் உதயமாகும் என்றும் கூறப்படுகிறது.

இப்போது நடைபெறும் கல்பத்தில் 6 மன்வந்திரங்கள் ஏற்கனவே முடிந்து விட்டதாகவும் இப்போது நடைபெறும் ஏழாவது மன்வந்திரத்தில் வைவஸ்த மனு மனுவாகவும் புரந்தரன் இந்திரனாகவும் இருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

இப்போது நடைபெறும் கல்பத்தில் ஆட்சி செய்யும் மனுக்கள் மற்றும் இந்திரர்கள் பெயர்கள் பாகவத புராணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

மன்வந்திரம் / மனு இந்திரர் 

1 சுயம்பு / இந்திரன் 

2 . ச்வாரோசிஷன் / ரோசன்

3 . உத்தமன்/ சத்யஜித்

4 . தபாசன்/ திரிசிகன் 

5 . ரைவதன், விபு 

6. சாசூசன்/ மந்திரதுருமன் 

7 . வைவஸ்த மனு/ புரந்தரன் 

8 . சாவர்ணி/ மகா பலி

9 . தசாசாவர்ணி/ சுரதன் 

10 . பிரம்மா சாவர்ணி / சம்பு 

11 . தர்மசாவர்ணி / வைதிருதி 

12 . ருத்ர சாவர்ணி / ருது சாமவே 

13 . தேவ சாவர்ணி / திவஸ்பதி 

14 . இந்திரசாவர்ணி / சுகி ]

இவ்வாறு 14 மன்வந்திரங்களும் அதன் சந்திகளும் சேர்ந்தது ஒரு கல்பம் ஆகும்.

ஒரு கல்பம் ஆயிரம் சதுர் யுகங்கள் கால அளவை கொண்டிருக்கும்.

இந்த ஒரு கல்பம் பிரம்மாவின் ஒரு பகல் ஆகும். அதே கால அளவு அவரின் இரவாகும்.

இது போல 720 கல்பங்கள் அவரின் ஒரு ஆண்டாகும்.

பிரம்மாவின் 50 ஆண்டுகள் ஒரு பரார்த்தம் ஆகும்.

பிரம்மாவின் வயது நூறு ஆண்டுகள் ஆகும்

இந்த நூறு ஆண்டுகள் முடிந்ததும் மகா பிரளயம் ஏற்பட்டு பிரம்மா முதல் அனைத்து தேவர்கள், உயிரினங்களும் பரமாத்மாவில் கலந்து விடுவர்.

இதே கால அளவு பரமாத்மா சயனத்தில் இருப்பார். பின் புதிய பிரம்மாவை தோற்றுவித்து படைப்புகளை தொடர்வார். 

ஒரு சதுர் யுகம் 4320000 வருடங்கள் 

71 சதுர் யுகம் 306720000 வருடங்கள்

சந்தி 1728000 வருடங்கள் 

சந்தியுடன் ஒரு மன்வந்திரம் 308448000 வருடங்கள்

 ஒரு கல்பம் 4320000000 வருடங்கள்

பிரம்மாவின் ஒரு வருடம் 3110400000000 வருடங்கள் 

 பிரம்மாவின் ஆயுள் 311040000000000 வருடங்கள்

என்ன தலை சுற்றுகிறதா..?

இணையத்தில் படித்தது..

நீங்களும் அறிந்திருக்க இங்கே பகிர்கிறேன்..

Monday, August 12, 2024

மாடு மேய்ப்பதற்கு தான் லாயக்கு

முன்பெல்லாம் படிப்பு வராத மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அடிக்கடி சொல்லும் வாக்கியம், 

 ‘உனக்குப் படிப்பு  வராது, நீ மாடு மேய்ப்பதற்கு  தான் லாயக்கு என்பதாகும்.

ஒரு மாணவனிடம் ஆசிரியர் வழக்கமான அந்த வாக்கியத்தைச் சொன்னார். 

துரதிஷ்டவசமாக, அந்த மாணவன்  நிஜமாகவே அவ்வப்போது மாடு மேய்த்துக் கொண்டிருந்தான்! படிப்பிலே வீக்.

‘மாடு மேய்க்கிறது ஈஸியா?’ என்று ஆசிரியரிடம் கேட்டான் 

‘இல்லையா பின்னே? படிப்பறிவு இல்லாதவந்தானே மாடு மேய்க்கிறான்?’ 

என்றார் ஆசிரியர்.

‘அம்பது மாடுல எது கன்னியப்பச் செட்டியார் மாடு, எது பாண்டிய நாடார் மாடுன்னு உங்களாலே கண்டுபிடிக்க முடியுமா?’

ஆசிரியர் அதிர்ந்தார்.

‘எல்லா மாடும் ஒரே இடத்துலதான் மேயுமா?’

அடுத்த கேள்வி இன்னும் அதிகமாகத் தாக்கியது.

‘எது எங்கே மேயும்ன்னு பாத்து ஓட்டிக்கிட்டு போவீங்களா?’

இப்போது ஆசிரியர் பாண்டியராஜன் போல விழித்தார்.

‘மாடு எப்ப சாணி போடும்ன்னு தெரியுமா?’

இப்போது விழி ஆடு திருடின கள்ளன் போல் ஆயிற்று.

‘சாணி மொத்தத்தையும் கூடைல பிடிப்பீங்களா? 

வரட்டி தட்டத் தெரியுமா? 

வரட்டியில ஏன் வைக்கோல் போடணும்ன்னு தெரியுமா? 

அது ராடு வச்ச கான்க்ரீட்போல ஸ்ட்ராங்குன்னு தெரியுமா?’

கேள்விகள் சரமாரி ஆயின.

‘எனக்கு மாடு மேய்க்க வரல்லைன்னு தான் எங்கப்பா படிக்க அனுப்பிச்சார் தெரியுமா?!!

நீ மாடு மேய்க்க லாயக்கில்லை, பேசாம படிச்சி வாத்தியார் ஆயிடுன்னு அனுப்புச்சாரு’.

அதற்கப்புறம்,  வாத்தியார்கள் யாரையுமே நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று சொன்னதே இல்லை!

Saturday, August 10, 2024

தீர்க சுமங்கலி பவா ...!

தீர்க சுமங்கலி பவா ...!

என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம்

5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

திருமணத்தில் ஒன்று,

60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,

70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,

80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,

96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!.

இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம் ;

ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. 

பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது. 

இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன. 

 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. 

உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.

நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும். 

பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. 

இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு ⚜சூரியனுக்கு ஓர் ஆண்டும்,

⚜செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்,

⚜சந்திரனுக்கு ஒரு மாதமும்,

⚜புதனுக்கு ஒரு வருடமும்,

⚜வியாழனுக்கு 12 வருடங்களும்,

⚜வெள்ளிக்கு ஒரு வருடமும்,

⚜சனி பகவானுக்கு 30 வருடங்களும்,

⚜ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும்,

⚜கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன. 

இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். 

மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும். 

ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். 

அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது. 

பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும். 

அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன? 

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம். 

இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...

⚜அக்னி,

⚜சூரியன்,

⚜சந்திரன்,

⚜வாயு,

⚜வருணன்,

⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,

⚜அமிர்த கடேஸ்வரர்,

⚜நவநாயகர்கள்..

சேர்த்து குறிப்பதற்காகத் தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம். 

 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும் அதிபதிகள் ஆவார்கள். 

தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும். 

தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும். 

தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். 

காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும். 

70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். 

ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும் 

இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.

தீர்கசுமங்கலி பவா ...!என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம்... ஐந்து மாங்கல்யம் பெற வேண்டும்!.


Saturday, July 27, 2024

சாப்பாடு காஞ்சி பெரியவா

சாப்பாடு (போஜனம்) பத்தி காஞ்சி பெரியவர் - அருமையான விளக்கம்.

கல்யாணம்,  மத்த விசேஷம், சாதாரணமாக  வீடுகளில் போஜனம்  எப்படி சாப்பிடுறோம்?''  என்று பெரியவா கேட்டார்.

வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''

அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"

''ஓ அதை கேக்கறேளா  பெரியவா.  மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம், பட்சணம், கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.

"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?"

மகாபெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.    மௌனமாக இருந்தார்கள்.   தெரியும் அவரே பதில் சொல்வார்  என்று...

இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையான இருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு தண்ணிய தெளிக்கிறா. அப்பறம் பாயசம், அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா? பாயசத்தால பிறந்த ஸ்ரீராமனையும் தயிர் வெண்ணைப் பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நினைக்கனும் என்பதற்காகத்தான்... 

"மொதல்ல குழம்பு. இதுல, 'தான்' இருக்கு.  தான்  என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா  ஏதோ ஏதோ  இருக்குமே  அது தான் '' தான் '' என்பது இல்லையா.  நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் ''  என்கிற  அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம ''குழம்பி'' ப் போயிடறோம். அந்தத்  ''தானை''  கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்த  கட்டத்துக்குப் போறோம்.

அப்போ ''தான்'' இல்லாததால்   ஒரு தெளிவு வந்துடறது இல்லையா.  அதாவது ''ரச'' மான மன நிலை. அதுதான் ரசம். ''தான்'' இல்லாம தெளிவா இருக்கற மனசுல ''ரச'' மான எண்ணம் வருது. 

அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் ஆயிடறது..

கடோசியா மோர்.   மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது?  

பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய் வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது. 

அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.

இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரியறது? 

நாமளும் அகங்காரத்தை விட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு, யாருக்கும் எந்த உபத்ரவமும்  பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது 'நோ மோர்!"

சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம் பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப் பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம  வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான்  அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார்,

ஸ்ரீ மகா பெரியவா.

Thursday, July 18, 2024

ஹரியை காட்டிலும் ஹரி நாமமே

ஸர்வம் ஸ்ரீராம‌ மயம் 

ஜெய் ஸ்ரீராம் 

ஹரியை காட்டிலும் ஹரி நாமமே உயர்வானது என்று நெஞ்சில் விதைத்தவர்கள்

🍁🍁🍁🍁🍁🍁

1.நம்மாழ்வார்

2.திரு மங்கை ஆழ்வார்

3.பெரியாழ்வார்

4.ஆண்டாள்

5.தொண்டரடி பொடி ஆழ்வார்

6.ராமானுஜர்(மதில் மேல் ஏறி அஷ்டாச்சரம் போதித்தார்)

7.சிவ பெருமான்

8.ஆதி சங்கரர்

9.போதேந்திரர்

10.ஸீதர ஐயர் வாள்

11.மருதா நல்லூர் ஸ்வாமி

12.தியாக ப்ரும்மம்

13.புரந்தர தாசர்

14.கனக தாசர்

15.கிருஷ்ண சைதன்யர்

16.ஜெய தேவர்

17.நிவ்ருத்தி நாதர்

18.ஞானேஸ்ரர்

19.சோபான தேவர்

20.நாம தேவர்

21.ஏக நாதர்

22.சமர்த்த இராம தாசர்

23.கோர கும்பார்

24.சோகாமேளர்

25.முக்தா பாய்

26.மீரா

27.ஜனா பாய்

28.கபீர் தாசர்

29.துக்காராம் மகராஜ்

30.சதா சிவப்ரேமைந்தர்

31.பீஷ்மாச்சார்யா

32.நர்சிம்ம மேத்தா

33.ரவி தாசர்

34.பானு தாசர்

35.பிரகலாதர்

36.ராக வேந்திரர்

37.ஜெய தீர்த்தர்

38.சூர் தாசர்

39.விஜய தீர்த்தர்

40..பூந்தானம்

41.துளசி தாசர்

42.வியாச பகவான்

43.வால்மீகி

44.சுகர்

45.அஜாமிளன்

46.அனுமன்

47.கத்திர பந்து

48.நர நாரயணன்

49.நாரதர்

50.சபரி

51.த்ரௌபதி

ஐம்பத்தி ஒரு நாம பீடங்கள்

நாமமே பலம் 

நாமமே சாதனம்

ராம கிருஷ்ண ஹரி

பாண்டுரங்க ஹரி

விட்டல விட்டல 

பாண்டுரங்கா 

ஹரே ராம ஹரே ராம 

ராம ராம ஹரே ஹரே  

ஹரே கிருஷ்ண ஹரே 

கிருஷ்ண கிருஷ்ண

கிருஷ்ண ஹரே ஹரே 

ஓம் நமோ நாராயணாய 

ஓம் நமோ வெங்கடேசாய 

Wednesday, July 17, 2024

கற்கிடமாஸம்

இராமாயண கற்கிடக மாஸம்.

அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேக நமஸ்காரங்கள்.

கற்கிடமாஸத்தின் ஆரம்பம் என்பது தக்ஷிணாயன காலம் ஆரம்பம் தேவன்மார்கள், இராத்திரி பொழுது.

இயற்கையானது, மழையால் நனைந்தும், குளிர்ந்தும், ஈரத்தோடுகூடி குளித்து நிற்கின்ற ப்ரகர்தி பூமி தான் கற்கிடகமாஸம், என்கிற ஆடிமாதம்.

பண்டைய காலகட்டங்களில், நிற்காத மழையும், அதனால் வெளியே வேலைக்கு செல்லமுடியாத க்ருஷிக்காரர்களும், அதனால் குடும்பத்தில் பட்டினியும், பசியும்கூடீ நிற்கின்ற காலம் கற்கிடகமாஸம்.

வாதம், ஆஸ்துமா, ஜுரம், வயிற்றுபோக்கு, போன்ற ரோகங்கள் பெருகுகின்ற காலமது.

மனுஷ்யன்மார்கள், எப்படியோ சகித்துகொண்டு வாழும், வாழ்ந்த காலகட்டங்கள் தான், அன்றைய கற்கிடகமாஸம்.

அன்றைய கால கற்கிடகமாஸம், நம், மூதாதையர்கள் கற்கிடக கஞ்சி, என்று ஒன்றை செய்து, அனைவருக்கும் கொடுப்பார்கள்.

அதில் பலதரப்பட்ட, ஆயூர்வேத மூலிகை ஔஷதங்கள் சேர்த்து அந்த கஞ்சி தயாரித்து அனைவருக்கும் கொடுப்பார்கள், இன்றைக்கும், தென்பாண்டியநாடு, கேரளீய நாடு, கர்நாடக மாநிலங்களில், கற்கிடகஞ்சி, கற்கிடகமாஸத்தில் தயார் செய்து கொடுத்து வருகிறார்கள்,இதனால் அன்றைய காலகட்ட மனுஷ்யன்மார்கள் ஆயுள் ஆரோக்கியம் கூடி வாழ்ந்து வந்தார்கள்.

அது, இன்றைய Morden generation youths. மறந்து போனார்கள்,

அன்றைய கர்க்கிடகம் மாஸத்தில், கற்கிடகஞ்சி மட்டுமில்லாமல், அவர்கள், இராமாயணம் பாராயணம் செய்யும் மாஸமாக கற்கிடகம் மாஸத்தை தொடங்கினார்கள்.

காரணம், பெருக்கெடுத்து, ஒடும் நதிகள், குளங்கள், குட்டைகள், எந்தவிதமான விவசாய க்ருஷி வேலைகளையும் செய்யமுடியாது, எங்கும், அந்த பெருமழைகாலத்தில், காளை பூட்டி யாத்ரா போக முடியாது, என்கிற காரணத்தால் கற்கிடகமாஸம், இராமாயண பாராயணம் செய்யும் மாஸம் என்று தீர்மானித்தார்.

ஒரு கொட்டுமழை காலத்தில், எதுவுமே செய்யாமல் போகின்ற காரணத்தாலும் பொருளாதார நெருக்கடிகள் வந்ததாலும், கற்கிடகமாஸத்தை, துர்க்கிடக மாஸம், என்று அழைத்தார்கள்.

கற்கிடகமாஸம் அது துர்க்கிடகமாஸம் ஆகி போனது, அதாவது பீடை மாஸம், என்று சொல்லப்பட்டது, பொதுஜனங்களால், இன்றளவும் கற்கிடகமாஸம் பீடை பிடித்த மாஸமாகவே கருதப்பட்டு வருகின்றது.

சூரியன், உத்திராயண காலம் கழிந்து, தக்ஷணாயன காலத்தில், அதாவது ஆடி மாஸத்தில் கற்கிடக இராசி க்ஷேத்ரத்தில் சஞ்சரிக்க ஆரம்பிக்கும் முதல் மாதம் பீடை மாதம்.

அதேபோல் சூரியபகவான், தக்ஷிணாயன காலம்முடிந்து, மகர இராசி க்ஷேத்ரத்தில் சஞ்சரிக்கும் முன் தனூக்ஷேத்ரத்தில், மார்கழிமாதம், தனூமாஸத்தையும், பீடை மாஸமாகவே, மக்கள் கருதப்பட்டு வருகின்றனர்,

கற்கிடமாஸம் இராமாயண பாராயணம் போல் புண்ணியம் வேறெதுவும், உண்டோ? வேறெந்த மதங்களிலும், உண்டோ?

மரியாதை புருஷோத்தமனாகிய, ஸ்ரீ இராமச்சந்திர சக்ரவர்த்தி, ப்ரஜைகளுக்கு இராஜன் ஆகவும், சம்ரக்ஷிக்கும், இரக்ஷகர்த்தா ஆகின்றார்! ஒவ்வொரு ஜன ப்ரதிகர்களுக்கும், ஆதர்ஷ்ண புருஷன் ஆகின்றார். 

உத்திராயமாஸத்தில் மகரமாஸம் தொடங்கி, மிதுன மாஸம் வரை  தேவன்மார்களுக்கு, பகல் பொழுது.

அதன்பிறகு கற்கிடகமாஸம் தொடங்கி, தனூமாஸம், மார்கழி முடிய தேவன்மார்களுக்கு, இரவுபொழுது ஆகும்.

பன்னிரண்டு மாஸங்கள் தேவன்மார்களுக்கு, ஒரு நாளாகும், அப்போது நம்முடைய, ஒருநாளானது தேவன்மார்கள், இரண்டு மணிநேரம் மட்டும்மே! 

அதனால்தான் தேவன்மார்கள், பகல்பொழுது ஆன, உத்திராயண காலகட்டம் சுபகார்யங்கள், மனுஷ்யன்மார்கள் நடத்தி கொள்ள அனுமதிக்கின்றார்கள்.

தேவக்ஷேத்ர ப்ரதிஷ்டைகள்,க்ஷேத்ர கலஸ நிர்மாணம், க்ஷேத்ர உற்ஸவங்கள், ஹோமகர்ம்மங்கள், விவாஹங்கள், கிரகப்ரவேஸம் போன்றவற்றை, தேவன்மார்கள் பகல்பொழுதில்தான் நடத்தப்படவேண்டும், என்பதுதான் ஸாஸ்த்ர விதி.

காலைப்பொழுது அக்னி சூரியபகவான், ஒளி தந்து ப்ரபஞ்சத்திலுள்ள துஷ்ட கிருமிகளை நாசம் செய்யும் கிருமிநாசினி ஆகின்றார், இரவுநேரம் ஆரம்பிக்கும் முன்பே த்ரிசந்ய மாலைபொழுது முடியும்நேரத்தில் நாம் நமது பவனங்களில் குத்துவிளக்கு மூலம் அக்னிபகவானை வரவைழைத்து, பவனங்களில், உள்ள துஷ்டசக்திகளை நாஸம் செய்கின்றோம், 

தக்ஷணாயனகற்கிடக மாஸத்தில் பாராயணம் செய்யும், இராமாயணத்தில்,

,, ரா மா,,

என்கிற இரண்டெழுத்துகள் கொண்ட சொல்லே, ஒரு ப்ரத்யேக தர சக்திகூடிய மந்திரமாகும்,

ஏகாக்ஷரி மந்திரமான,, ஓம்,,  காரம் (ப்ரணவம்) அடுத்ததாக த்துயாத்ரி இரண்டாவது மந்திரம்தான், ராமா,., என்கிற மந்திரம், 

பரமசிவன் புருஷத்தி, பரமேஸ்வரி தனது கெட்டியோனிடம் கேட்டாள், புருஷா, விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதாஸகஸ்ரநாமம், இரண்டையும் பாராயணம் செய்வதற்கு பதிலாக, எளிய மந்திரம், ஏதாவது, உண்டா? என்று கேட்டபொழுது,

அதற்கு பரமன். தனது கெட்டியோளிடம் சொன்னார், சிறந்த மந்திரம் ராமா, என்கிற, இரண்டெழுத்து மந்திரம்,

காரணம், நமசிவாயா, என்கிற பஞ்சாக்ஷிரி மந்திரத்திலிருந்து, இரண்டாவது, எழுத்தான,, ம,, என்கிற வார்த்தை, எடுத்துவிட்டால், நசிவாயா, என்று வந்துவிடும், நமசிவாயா, என்றால் மங்களகரமானது, என்று அர்த்தம்,

அந்த, இரண்டாவது, எழுத்தை, எடுத்துவிட்டு நசிவாயா, என்று சொன்னால் மங்களகரமானது அல்ல! என்று அர்த்தம்,

அதுபோல் நமோ  நாராயாணா என்கிற மந்திரத்தில் , ரா, என்கிற வார்த்தை, எடுத்துவிட்டால் மந்திரம் சக்தியற்று போய்விடும்,

காரணம்,ரா என்கிற, எழுத்திலும், ம, என்கிற மந்திரத்திலும், உல்பாதன பீஜசுக்ல சக்தி, கொண்டுள்ளது,

ஆகவே கற்கிடகமாஸம் ராமா, என்கிற மந்திரத்தை அதிகாலையில் ப்ரபாத சந்த்யா நேரத்தில் சொல்பவர்களுக்கு, அவர்கள் கிரகங்களில் துஷ்டதேவதை போய் நல்ல சம்பவிக்கும், என்கின்றார் பரமசிவன்

ஆகவே கற்கிடகமாஸம் முதல், ஒவ்வொரு வீட்டிலும், இராமாயண பாராயணம் ஆரம்பித்தால் நலம்.

Thursday, July 11, 2024

Essay On Thieves

The importance of thieves in a country's economy!

The teacher told the children to write an essay on __thieves__ for tomorrow.

Following is the essay of a seventh-grade student, Buddhi Prakash.

▪️ Thieves are the backbone of a country's economy.

▪️ People might think this is a joke or wrong, but it's actually a subject worth pondering.

▪️ Safes, cupboards, and locks are needed because of thieves. This gives work to the companies that make them.

▪️ Because of thieves, windows in homes have grills, there are doors, doors are locked, and not just that, there are additional doors for security outside. So many people get work.

▪️ Due to thieves, a compound is built around houses, shops, and societies; there are gates, a guard stays at the gate 24 hours, and there is also a uniform for the guard. So many people get work.

▪️ Because of thieves, not just CCTV cameras and metal detectors but also cyber cells exist.

▪️ Because of thieves, there are police, police stations, police posts, patrol cars, batons, rifles, revolvers, and bullets. So many people get work.

▪️ Because of thieves, there are courts, judges, lawyers, clerks, and bail bondsmen in the courts. So many people get work.

▪️ Because of thieves, there are jails, jailers, and police for the jails. So many people get work.

▪️ When things like mobile phones, laptops, electronic devices, bicycles, and vehicles are stolen, people buy new ones. This buying and selling strengthen the country's economy and give work to many people.

▪️ If a thief is highly recognized and famous, then media from home and abroad also get their livelihood.

▪️ After reading all this, you must also be convinced that thieves are the backbone of the entire government system and a means of livelihood for the people in society.