Pages

Wednesday, July 17, 2024

கற்கிடமாஸம்

இராமாயண கற்கிடக மாஸம்.

அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேக நமஸ்காரங்கள்.

கற்கிடமாஸத்தின் ஆரம்பம் என்பது தக்ஷிணாயன காலம் ஆரம்பம் தேவன்மார்கள், இராத்திரி பொழுது.

இயற்கையானது, மழையால் நனைந்தும், குளிர்ந்தும், ஈரத்தோடுகூடி குளித்து நிற்கின்ற ப்ரகர்தி பூமி தான் கற்கிடகமாஸம், என்கிற ஆடிமாதம்.

பண்டைய காலகட்டங்களில், நிற்காத மழையும், அதனால் வெளியே வேலைக்கு செல்லமுடியாத க்ருஷிக்காரர்களும், அதனால் குடும்பத்தில் பட்டினியும், பசியும்கூடீ நிற்கின்ற காலம் கற்கிடகமாஸம்.

வாதம், ஆஸ்துமா, ஜுரம், வயிற்றுபோக்கு, போன்ற ரோகங்கள் பெருகுகின்ற காலமது.

மனுஷ்யன்மார்கள், எப்படியோ சகித்துகொண்டு வாழும், வாழ்ந்த காலகட்டங்கள் தான், அன்றைய கற்கிடகமாஸம்.

அன்றைய கால கற்கிடகமாஸம், நம், மூதாதையர்கள் கற்கிடக கஞ்சி, என்று ஒன்றை செய்து, அனைவருக்கும் கொடுப்பார்கள்.

அதில் பலதரப்பட்ட, ஆயூர்வேத மூலிகை ஔஷதங்கள் சேர்த்து அந்த கஞ்சி தயாரித்து அனைவருக்கும் கொடுப்பார்கள், இன்றைக்கும், தென்பாண்டியநாடு, கேரளீய நாடு, கர்நாடக மாநிலங்களில், கற்கிடகஞ்சி, கற்கிடகமாஸத்தில் தயார் செய்து கொடுத்து வருகிறார்கள்,இதனால் அன்றைய காலகட்ட மனுஷ்யன்மார்கள் ஆயுள் ஆரோக்கியம் கூடி வாழ்ந்து வந்தார்கள்.

அது, இன்றைய Morden generation youths. மறந்து போனார்கள்,

அன்றைய கர்க்கிடகம் மாஸத்தில், கற்கிடகஞ்சி மட்டுமில்லாமல், அவர்கள், இராமாயணம் பாராயணம் செய்யும் மாஸமாக கற்கிடகம் மாஸத்தை தொடங்கினார்கள்.

காரணம், பெருக்கெடுத்து, ஒடும் நதிகள், குளங்கள், குட்டைகள், எந்தவிதமான விவசாய க்ருஷி வேலைகளையும் செய்யமுடியாது, எங்கும், அந்த பெருமழைகாலத்தில், காளை பூட்டி யாத்ரா போக முடியாது, என்கிற காரணத்தால் கற்கிடகமாஸம், இராமாயண பாராயணம் செய்யும் மாஸம் என்று தீர்மானித்தார்.

ஒரு கொட்டுமழை காலத்தில், எதுவுமே செய்யாமல் போகின்ற காரணத்தாலும் பொருளாதார நெருக்கடிகள் வந்ததாலும், கற்கிடகமாஸத்தை, துர்க்கிடக மாஸம், என்று அழைத்தார்கள்.

கற்கிடகமாஸம் அது துர்க்கிடகமாஸம் ஆகி போனது, அதாவது பீடை மாஸம், என்று சொல்லப்பட்டது, பொதுஜனங்களால், இன்றளவும் கற்கிடகமாஸம் பீடை பிடித்த மாஸமாகவே கருதப்பட்டு வருகின்றது.

சூரியன், உத்திராயண காலம் கழிந்து, தக்ஷணாயன காலத்தில், அதாவது ஆடி மாஸத்தில் கற்கிடக இராசி க்ஷேத்ரத்தில் சஞ்சரிக்க ஆரம்பிக்கும் முதல் மாதம் பீடை மாதம்.

அதேபோல் சூரியபகவான், தக்ஷிணாயன காலம்முடிந்து, மகர இராசி க்ஷேத்ரத்தில் சஞ்சரிக்கும் முன் தனூக்ஷேத்ரத்தில், மார்கழிமாதம், தனூமாஸத்தையும், பீடை மாஸமாகவே, மக்கள் கருதப்பட்டு வருகின்றனர்,

கற்கிடமாஸம் இராமாயண பாராயணம் போல் புண்ணியம் வேறெதுவும், உண்டோ? வேறெந்த மதங்களிலும், உண்டோ?

மரியாதை புருஷோத்தமனாகிய, ஸ்ரீ இராமச்சந்திர சக்ரவர்த்தி, ப்ரஜைகளுக்கு இராஜன் ஆகவும், சம்ரக்ஷிக்கும், இரக்ஷகர்த்தா ஆகின்றார்! ஒவ்வொரு ஜன ப்ரதிகர்களுக்கும், ஆதர்ஷ்ண புருஷன் ஆகின்றார். 

உத்திராயமாஸத்தில் மகரமாஸம் தொடங்கி, மிதுன மாஸம் வரை  தேவன்மார்களுக்கு, பகல் பொழுது.

அதன்பிறகு கற்கிடகமாஸம் தொடங்கி, தனூமாஸம், மார்கழி முடிய தேவன்மார்களுக்கு, இரவுபொழுது ஆகும்.

பன்னிரண்டு மாஸங்கள் தேவன்மார்களுக்கு, ஒரு நாளாகும், அப்போது நம்முடைய, ஒருநாளானது தேவன்மார்கள், இரண்டு மணிநேரம் மட்டும்மே! 

அதனால்தான் தேவன்மார்கள், பகல்பொழுது ஆன, உத்திராயண காலகட்டம் சுபகார்யங்கள், மனுஷ்யன்மார்கள் நடத்தி கொள்ள அனுமதிக்கின்றார்கள்.

தேவக்ஷேத்ர ப்ரதிஷ்டைகள்,க்ஷேத்ர கலஸ நிர்மாணம், க்ஷேத்ர உற்ஸவங்கள், ஹோமகர்ம்மங்கள், விவாஹங்கள், கிரகப்ரவேஸம் போன்றவற்றை, தேவன்மார்கள் பகல்பொழுதில்தான் நடத்தப்படவேண்டும், என்பதுதான் ஸாஸ்த்ர விதி.

காலைப்பொழுது அக்னி சூரியபகவான், ஒளி தந்து ப்ரபஞ்சத்திலுள்ள துஷ்ட கிருமிகளை நாசம் செய்யும் கிருமிநாசினி ஆகின்றார், இரவுநேரம் ஆரம்பிக்கும் முன்பே த்ரிசந்ய மாலைபொழுது முடியும்நேரத்தில் நாம் நமது பவனங்களில் குத்துவிளக்கு மூலம் அக்னிபகவானை வரவைழைத்து, பவனங்களில், உள்ள துஷ்டசக்திகளை நாஸம் செய்கின்றோம், 

தக்ஷணாயனகற்கிடக மாஸத்தில் பாராயணம் செய்யும், இராமாயணத்தில்,

,, ரா மா,,

என்கிற இரண்டெழுத்துகள் கொண்ட சொல்லே, ஒரு ப்ரத்யேக தர சக்திகூடிய மந்திரமாகும்,

ஏகாக்ஷரி மந்திரமான,, ஓம்,,  காரம் (ப்ரணவம்) அடுத்ததாக த்துயாத்ரி இரண்டாவது மந்திரம்தான், ராமா,., என்கிற மந்திரம், 

பரமசிவன் புருஷத்தி, பரமேஸ்வரி தனது கெட்டியோனிடம் கேட்டாள், புருஷா, விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதாஸகஸ்ரநாமம், இரண்டையும் பாராயணம் செய்வதற்கு பதிலாக, எளிய மந்திரம், ஏதாவது, உண்டா? என்று கேட்டபொழுது,

அதற்கு பரமன். தனது கெட்டியோளிடம் சொன்னார், சிறந்த மந்திரம் ராமா, என்கிற, இரண்டெழுத்து மந்திரம்,

காரணம், நமசிவாயா, என்கிற பஞ்சாக்ஷிரி மந்திரத்திலிருந்து, இரண்டாவது, எழுத்தான,, ம,, என்கிற வார்த்தை, எடுத்துவிட்டால், நசிவாயா, என்று வந்துவிடும், நமசிவாயா, என்றால் மங்களகரமானது, என்று அர்த்தம்,

அந்த, இரண்டாவது, எழுத்தை, எடுத்துவிட்டு நசிவாயா, என்று சொன்னால் மங்களகரமானது அல்ல! என்று அர்த்தம்,

அதுபோல் நமோ  நாராயாணா என்கிற மந்திரத்தில் , ரா, என்கிற வார்த்தை, எடுத்துவிட்டால் மந்திரம் சக்தியற்று போய்விடும்,

காரணம்,ரா என்கிற, எழுத்திலும், ம, என்கிற மந்திரத்திலும், உல்பாதன பீஜசுக்ல சக்தி, கொண்டுள்ளது,

ஆகவே கற்கிடகமாஸம் ராமா, என்கிற மந்திரத்தை அதிகாலையில் ப்ரபாத சந்த்யா நேரத்தில் சொல்பவர்களுக்கு, அவர்கள் கிரகங்களில் துஷ்டதேவதை போய் நல்ல சம்பவிக்கும், என்கின்றார் பரமசிவன்

ஆகவே கற்கிடகமாஸம் முதல், ஒவ்வொரு வீட்டிலும், இராமாயண பாராயணம் ஆரம்பித்தால் நலம்.

No comments:

Post a Comment