Pages

Saturday, June 14, 2025

கோனேரி ராஜபுரம், கும்பகோணம்

 


புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…!

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.

அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.

பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.  

சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.

மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது.

திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.

படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.

இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது.

உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.

ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

அந்தப்பகுதி, அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.  

“வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.

கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!

உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் “என்று சீறினான் அரசன்.

அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.

இது ஆறாவது சிலை.  

ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, “என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு…! “என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.  

உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.

இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள்.  

“அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு” என்று கேட்டார் அந்தணர்.  

சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னிடம் போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.  

“அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன்.  

அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் “என்று சொன்னான்.

மறுபடியும் வேலையில் மூழ்கினான். வந்தவர் கைதட்டி அழைத்து “எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விடுவேன் என்று தோன்றுகிறது. எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு “என்றான்.

“நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது…?

கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்” என்று பதட்டத்தோடு சொல்ல.

“சரி அதையே குடித்துக் கொள்கிறேன்” என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்..

சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம்.

ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.  

கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை.

உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்…! யோசித்தார்கள்…!

வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.  

ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.

நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.

ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான்.

”உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது பார்” என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.

சிற்பி இல்லை என்று தலையாட்டினார், “என்ன சொல்ல வருகிறாய்?” மன்னன் மறுபடியும் சீறினான்.

”இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார்,” என்று சொல்ல….  

“இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே” என்று மறுபடியும் சீறினான்.

”இல்லை அரசே .இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல,” என்று பணிவாக சொல்ல, அரசன் கெக்கலித்து கிண்டலாகச் சிரித்தான்.

உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.

பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது! தரையை நனைத்தது.

மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.  

இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.

எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.

வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.  

கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர்  திருநல்லம். இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.

ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும்.

உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.

சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகி விடுவார்கள்!

கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான்.

அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர்!

தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.

தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால், வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.

இறைவி பெயர் தேகசௌந்தரி,  

ஸ்தலமரம் அரசு,  

தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.

கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கி வைத்துவிடவேண்டும். நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும்.

குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம்.  

எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள்!

கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்களேன்!

திருநல்லம் ஒரு முறையேனும் சென்று வாருங்கள்.சிவ அழகில் சொக்கிப் போய் வருவது கண்கூடான உண்மை.

திருச்சிற்றம்பலம்,

திருச்சிற்றம்பலம்,

திருச்சிற்றம்பலம்.

Monday, June 02, 2025

சோறே சொர்க்கம்

சகல சாப்பாட்டு பிரியர்களுக்கு சமர்ப்பணம்.

பல் முளைக்கா பிஞ்சுகளுக்கு பருப்பு சாதமே சொர்க்கம்.

மார்கழி மாத குளிரில் மணக்கும் வெண்பொங்கல் சொர்க்கம்

கார மிளகு தாளித்த பொங்கலுடன் கத்திரிக்காய் கொத்ஸ்சே சொர்க்கம்.

பூரிக்கு, உருளை கிழங்கு மசாலா, தோசைக்கு வெங்காய சட்னி, இட்லிக்கு மிளகாய் பொடி + நல்ல எண்ணெய், பிரியாணிக்கு தயிர் பச்சடி, வெண் பொங்கலுக்கு கத்தரிக்காய் கொத்சு, வாழைக்காய் பஜ்ஜிக்கு தேங்காய் சட்னி, சப்பாத்திக்கு  குருமா சொர்க்கம்.

பரங்கிக்காய் சாம்பாருக்கு - பீன்ஸ் பருப்பு உசிலி சொர்க்கம்

கதம்ப சாம்பாருக்கு - பொடியிடிச்ச கத்திரிக்காய் கறி சொர்க்கம்

குடைமிளகாய் சாம்பாருக்கு கோஸ் பட்டாணி கறி சொர்க்கம்

உலகிலுள்ள அத்தனை சாம்பாருக்கும் உருளைக் காரகறியே சொர்க்கம்

வெந்தய குழம்பிற்கு வெண்டைக்காய் கறி சொர்க்கம்.

சுண்டைக்காய் வத்த குழம்பிற்கு சுட்ட அப்பளமே சொர்க்கம்

பத்திய மிளகு குழம்பிற்கு பருப்பு துவையலே சொர்க்கம்.

மத்தியான தயிர் சாதத்திற்கு மாவடு இருந்தால் சொர்க்கம்

அடைக்கு வெல்லத்தோடு அவியல் இருந்தா சொர்க்கம்.

மீந்து போன அடைமாவில் Brilliant குணுக்கு சொர்க்கம்.

ஒருவாரமான தோசைமாவில் ஊத்தப்பமே சொர்க்கம்

பசியில் துடிப்பவனுக்கு பழைய சோறே சொர்க்கம்.

Friday, May 23, 2025

Canara Angel Account

கனரா வங்கி பெண்களுக்கென பிரத்யேகமாக புதிய சேமிப்புக் கணக்கை தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் தெரிவித்துக் கொள்வதற்காகவே இந்த செய்தி. இந்தியாவிலேயே முதன்முறையாக இதுபோன்ற சிறப்பு சேமிப்புக் கணக்கு வங்கி தொடங்கப்படுவது தான் இதில் பெருமைக்குரிய விஷயம். கனரா ஏஞ்சல் எனப்படும் இந்தக் கணக்கு மூன்று வகைகளைக் கொண்டது என்னவென்றால், இந்த கணக்கை நீங்கள் திறக்கும் போது அதனுடன் இலவச புற்றுநோய் கவரேஜ் கிடைக்கும். 

3 லட்சம் முதல் 10 லட்சம் வரை உங்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால் இந்தக் கணக்கு இருந்தால் சிகிச்சை கிடைக்கும்.

இந்தக் கணக்கைத் திறப்பதற்கான வயது வரம்பு 70 ஆண்டுகள் மற்றும் அந்த வயது வரை புற்றுநோய் காப்பீடு கிடைக்கும்). 

கணக்கு வைத்திருப்பவருக்கு 8 முதல் 26 லட்சம் விபத்து இறப்பு காப்பீடு, கணவருக்கு 2 லட்சம் விபத்து இறப்பு காப்பீடு, கணவருக்கு 4 லட்சம் விமான விபத்து காப்பீடு, இலவச பிளாட்டினம் ஏடிஎம் கார்டு (ஆண்டு கட்டணம் இல்லாமல்), இலவச லாக்கர் செயல்பாடு (வரம்பற்றது).

இந்தக் கணக்கைத் திறக்கும் பெண்களுக்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்தக் கணக்கின் பலன்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தற்போது வழக்கமான சேமிப்புக் கணக்குகளைப் பயன்படுத்தும் பெண்கள் கூடிய விரைவில் ஏஞ்சல் கணக்குகளுக்கு மாற வேண்டும். 

இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நிறுவனம் 10 பைசா இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தாமல் புற்றுநோய் காப்பீட்டு பாலிசியை வழங்குவதாகவும், இந்த இலவச சலுகையை அனைத்து குடும்பங்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.

கனரா ஏஞ்சல் கணக்கிற்கு மாறுவதற்கு இந்த நாட்களில் 2 புகைப்படங்கள், அசல் ஆதார், பான் (ஏதேனும் இருந்தால்) மற்றும் இவை ஒவ்வொன்றின் நகலுடனும் கனரா வங்கிக் கிளைக்குச் செல்லவும்.

உண்மையுள்ள, 

மேலாளர் கனரா வங்கி

Sunday, May 18, 2025

தாயுமானவர் சுவாமிகள்

தாயுமானவர் சுவாமிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

திருச்சிராப்பள்ளியில் விஜயரகுநாத மன்னரிடம், "தலைமை கருவூல அதிகாரியாக" பணிபுரிந்தவர் அவர். 

ஆன்மீகவாதியான அவர், தத்துவ பாடல்கள் பல பாடி உள்ளார். "தாமரையிலை தண்ணீராக" வாழ்ந்த ஒரு மகான் அவர்.    

ஒருநாள் மன்னரை காண, காஷ்மீரில் இருந்து ஒரு பண்டிதர் வந்தார். அவர் மன்னருக்கு ஒரு விலை உயர்ந்த, வேலைப்பாடு மிக்க, "சால்வை" ஒன்றை பரிசாக அளித்தார்.  மன்னரோ,  தாயுமானவருக்கு அதை பரிசாக வழங்கினார். 

அரண்மனையில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில், "பனிக்காலம்" என்பதால், குளிர் காற்று வீசியது. 

முதியவள் ஒருத்தி, குளிரில் நடுங்கியபடி, சாலையோரமாக அமர்ந்திருந்தாள். தனக்கு மன்னர் அளித்த சால்வையை, "அந்த முதியவளுக்கு" போர்த்திவிட்டு, வீட்டிற்கு சென்று விட்டார் தாயுமானவர்.  

அதைக்கண்ட சிலர், மன்னரிடம் சென்று, "விலைமதிப்பற்ற சால்வையை, தெருவோரத்தில் இருந்த முதியவளுக்கு கொடுத்துவிட்டார். அதுவும் "நீங்கள், அவருக்கு, "அன்பளிப்பாக" கொடுத்ததை இப்படி கொடுக்கலாமா? என புகார் கூறினர்.     

கோபம் கொண்ட மன்னர், உடனடியாக, தாயுமானவரை அழைத்து வர ஆள் அனுப்பினார். 

தாயுமானவர்தான் "ஞானி" ஆயிற்றே! 

நேரம் தவறிய நேரத்தில் "மன்னர்" அழைக்கும் போதே காரணத்தை புரிந்து கொண்டார். 

அன்று இரவு மன்னரை சந்தித்தார். "சால்வை எங்கே?" என நேரடியாக கேட்க முடியாது அல்லவா? 

ஆகவே, "சால்வையை குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் ரசித்தார்களா?" என மறைமுகமாகக் கேட்டார் மன்னர். 

அரண்மனையிலிருந்து வெளியே போனதும், அதை "திருவானைக்கா அகிலேண்டஸ்வரிக்கு  அர்ப்பணித்து விட்டேன்" என்றார் தாயுமானவர். 

மன்னர் திகைத்தாலும், "சரி. தங்களுடன் அர்த்த ஜாம தரிசனம் செய்ய விரும்புகிறேன். கோவிலுக்கு செல்வோமா? என்றார். 

தாயுமானவரும், தயக்கம் இன்றி, சம்மதித்தார். தேர் புறப்பட்டது. 

இருவரும் "திருவானைக்கா கோவிலுக்கு" சென்றனர். அம்மன் சன்னதி முன்னால் நின்றனர். 

தாயுமானவருக்கு அளித்த சால்வை, அம்மனின் திருமேனியை அலங்கரித்தது. சிலிர்த்து போய்த் தாயுமானவர் கால்களில் விழுந்தார் மன்னர்‌.            

ஆம் ஏழைத்தாயின் மீது போர்த்திய சால்வை, இங்கே எப்படி வந்தது? எல்லோருக்குள்ளும் கடவுளை காண்பவர்களுக்கு, இது ஒரு அதிசயமா என்ன?    

இல்லை அல்லவா!                 

Saturday, May 17, 2025

NO MORE NEET EXAM

அன்பு மாணவச் செல்வங்களே நீட் நீட் என்று அனைவரும் டாக்டராகி ஊசி போட வேண்டும் என்பது தான் உங்களது எதிர்கால திட்டமா புரியவில்லை...

சரி உங்களில் எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...?

அப்படித் தெரியவில்லை என்றால் இதோ தெரிந்துகொள்ளுங்கள்...!

தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென  "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன.

இது போக, 

அஸ்ஸாம் பல்கலைகழகம்,

சில்சார் அஸ்ஸாம் மாநிலம்,  

பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம்,

பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி,

காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம்,

சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என

பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

பொதுவாக இந்த  பல்கலைகழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை.

தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே இருக்கிறது. 

இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கான அட்மிஷன் தருகிறது. 

Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA EXONOMICS.

இது போக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸூகளும், எம்பிஏ கோர்ஸுகளும்,  பிஎச்டி கோர்ஸுகளும்* தனித்தனியே நடத்தப்படுகின்றன. 

இங்கே படிக்கும் மாணவர்களில் பாதி பேர் கேரளாவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மீதிப்பேரில் மற்ற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாடு உட்பட.

ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால் முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள் வருகிறது.

இது போக ஆண்கள், பெண்களுக்கு  தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது.

ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவே.

ஆனால் இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர்களுக்கு, மாணாக்கர்களுக்கு தெரியவே இல்லை என்பது வருத்தத்துக்குரிய விசயம்.

எப்படி இந்த பல்கலை கழகங்களில் சேர்ந்து படிப்பது...

18 மத்திய பல்கலை கழகங்ளில் எந்த பல்கலைகழகத்திலும் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்க

ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு தான் நடத்தப்படுகின்றது.  

(cucetexam) Central University common entrance exam. 

+2 முடித்து 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது.

நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு,  கவுன்ஸிலிங் மூலம் மாணாக்கர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றன.

நேற்று முதல் இந்த தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

www.cuet.samarth.ac.nic.in 

மேலும் எல்லா விவரங்களும் இந்த தளத்தில் இருக்கின்றன.

எந்தெந்த பல்கலை கழகங்களில், என்னென்ன கோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்பதை அறிய அந்தந்த பல்கலை கழகத்தின் இணைய தளத்தில் சென்று பார்க்கலாம்.  பல்கலை கழகங்களின் பெயர்களும் இணைய தள முகவரியுடன் மேற் சொன்ன தளத்திலேயே விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் குறித்த, கூடுதல் விவரங்களை அறிய விண்ணப்பிப்பது தொடர்பான தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு

 011- 40759000 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

படிப்புகள், கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு 

அசாம் - 9476897510, 9401847943 

ஆந்திரப்பிரதேசம் - 9640884806, 7598413970, 

குஜராத் – 079 - 23977446, 

அரியானா – 9212884894, 

ஜம்மு - 8082197957, 9796665505, 8178118948, 

ஜார்கண்ட் – 7070630510, 

கர்நாடகா – 9972191661, 9242355484, 

கேரளா - 0467 - 2309467, 0467 – 2309460, 

பஞ்சாப் - 9464269330, 

இராஜஸ்தான் – 7014588311, 

தெற்கு பீகார் - 0631-2229514, 2229518, 

தமிழ்நாடு - 04366 - 277337 எனும் மத்திய பல்கலைக்கழகங்களின் அலைபேசி / தொலைபேசி எண்களில் அலுவலக நாள்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.

cucet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.

நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.

தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. 

இதைப் படித்தால் Group-1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...

சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ.5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ.20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், 

ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.

அக்ரி(விவசாயம்) பாடம் பயில விரும்புபவர்கள்  திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயல்வது நன்மையளிக்கும்.

ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....

திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு.g

மேலும், இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...

இந்த தகவலை படியுங்கள்....

Neet, JEE எழுதும் மாணவர்கள் மற்றும் commerce students இதை அனைவருக்கும் உங்கள் வலைதளத்தில் பகிருங்கள்.

இது ஒரு வரப்பிரசாதம் தயவுசெய்து இதை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேருங்கள்

Wednesday, May 14, 2025

மிகப்பெரிய அன்னதான மண்டபம்

கோடீஸ்வரர் ஆக இருந்தாலும் தர்ம தரிசனம்...

ஆசியாவின் மிகப்பெரிய அன்னதான மண்டபத்திற்கு வித்திட்ட பக்தர்.

திருமலையில் நித்ய அன்னதானம் மிகச்சிறப்பாக கோடானு கோடி பக்தர்களுக்கு வயிறார சாப்பாடு போடப்பட்டு வருகிறது. 

ஆனால் ஒவ்வொரு முறையும் பக்தர்கள் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை ஏனெனில் முன் பந்தியில் குறைந்த அளவே மக்கள் அமர்ந்து சாப்பிடும் அளவில் மண்டபம் அமைந்து இருந்தது.

நம் கருணைக்கடல் திருவேங்கடவன் மெய் சிலிர்க்கும் ஓர் அற்புத நாடகத்தை நடத்தினார்.

ஒருநாள் மதியம் 2.00 மணி அளவில் திருமலை E.O அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார்.

அங்கிருந்த உதவி செயலாட்சி தலைவரிடம் அய்யா ஒரு வேண்டுகோள், இங்கு ஸ்ரீனிவாசனை தரிசனம் செய்த பக்தர்கள் அன்னதான கூடத்தில் நீண்ட நேரம் காத்து இருக்கிறார்களே கொஞ்சம் பெரிய மண்டபம் இருந்தால் இன்னும் நிறைய பேர் சாப்பிட முடியும் அல்லவா என்று கூறினார்.

அதற்கு அவர் நீங்கள் வரிசையில் நின்று சாப்பிட முடிந்தால் சாப்பிடலாம் இல்லை என்றால் செல்லுங்கள் என்று சற்று கோபத்துடன் கூறினார்.

ஐயையோ ! 

நான் எனக்காக சொல்லவில்லை ஸ்ரீனிவாசனின் பக்தர்களுக்காகத்தான் கூறினேன் என்றார். 

அப்படி என்றால் நீங்களே ஒரு மண்டபம் கட்டி கொடுங்கள் அதில் நீங்கள் சொன்னபடி சாப்பாடு போடலாம் என்றார்.

உடனே அந்த பக்தர் சரி புதிய அன்னதான கூடம் கட்டுவதற்கு என்ன செலவு ஆகும் என்றார்.

அந்த அதிகாரி மிகுந்த கோபத்துடன் ஓஹோ அப்படியா ஒரு 25 கோடி கொடுங்கள் பெருசா மண்டபம் கட்டி உங்கள் பெயரிலேயே சாப்பாடு போடலாம் போய் வேலைய பாருங்க சார் என்றார்.

உடனே அந்த பக்தர் தான் வைத்திருந்த கைப் பையில் இருந்த காசோலை புத்தகத்தை எடுத்து 25 கோடிக்கு ஒரே காசோலையாக திருமலை தேவஸ்தானத்தின் பெயரில் எழுதி அந்த அதிகாரியிடம் கொடுத்தார்.

ஆனால் அந்த உதவி செயலாட்சி தலைவர் வாயடைத்து போய் மிகுந்த அதிர்சியுடன் வேர்த்து விருவிருக்க விரைந்து சென்றுசெயலாட்சி தலைவரை அழைத்து வந்து நடந்தவற்றை கூறினார்.

அவரும் ஆடிப்போனார்.

பின்னர் தாங்கள் யார் என்று மிகுந்த மரியாதையுடன் அவரை அமர வைத்து கேட்டார்.

அவர் அய்யா நான் ஆரம்ப காலத்தில் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டபட்ட குடும்பம் .

அப்படி இருந்தும் எழுமலை ஆண்டவன் மீது மிகுந்த பாசத்துடன் பக்தியும் வைத்து இருந்தேன் .

திருமலைக்கு ஒவ்வொரு முறையும் நடந்தே வருவேன். 

தர்ம தரிசனத்தில்எவ்வளவு நேரம் ஆனாலும் என் அப்பன் ஏழுமலையானை பொறுமையுடன்தரிசனம் செய்து, 

எனக்கு ஒருவழி காட்டி நேர்மையுடன் நான் வாழ ஒரு தொழில் வேண்டும் அதில் உனக்கு லாபத்தில் சரி பாதி உன்னிடம் சேர்க்கிறேன் தந்தையே என்று வேண்டி பின்னர் இலவச சாப்பாடு வரிசையில் நின்று என் வயிறார நான் சாப்பிட்டு செல்வேன்.

பின்னர் நடைபாதை வழியாக மலையிறங்கி வீட்டிற்கு செல்வேன்.

நாட்கள் செல்ல செல்ல பின்னர் என் தொழில் வளர்ச்சி அடைந்து இன்று மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தாலும் இது எல்லாம் என் அப்பன் எழுமலையான் சொத்து.

இன்று வரை நான் தனியாகவே ஒவ்வொரு முறையும் நடந்தே மலைக்கு வந்து தர்மதரிசனத்தில் நின்று தரிசனம் செய்து அவருக்கு சேர வேண்டிய பங்கை உண்டியில் போட்டு விட்டு அன்னதான கூடத்தில் வரிசையில் நின்று ஆனந்தமாய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு செல்வேன் .

நீங்கள் பலமுறை தினசரி பத்திரிக்கையில் அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் உண்டியலில் இரண்டு கோடி மூன்று கோடி ஒரே பண்டிலாக

போட்டுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளீர்கள் .

அதை நான் தான் போட்டேன் . 

ஏனென்றால் இதை தேவஸ்தான அதிகாரி வாயிலாக கொடுத்திருந்தால் என்னை மிகுந்த மரியாதை செய்து சிறப்பு தரிசனம் அளித்திருப்பார்கள் .

ஆனால் அதை நான் விரும்ப வில்லை.

எந்த சூழ் நிலையிலும் என்னுடைய தந்தைக்கும் எனக்கும் உள்ள அந்த ஆரம்ப கால நினைவுகள் மாறிவிடக்கூடாது . 

இந்த பணம் என்னை என் பழைய வாழ்க்கையை மாற்றினாலும் நான் என்னுடைய நன்றியை மறக்காமல் இன்றும் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் நான் எப்படி திருமலைக்கு வந்தேனோ அதை போலவே இன்றும் நடந்தே வந்து நடந்தே செல்கிறேன் .

என் நண்பர்களையோ என் உறவினர்களையோ நான் அழைத்து வந்தால்அவர்கள் எண்ணப்படி நான் மாற வேண்டும் .

இவ்வளவு வசதி இருந்தும் நடந்து செல்வதா , 

தர்ம தரிசனத்தில் காத்து இருப்பதா 

இலவச சாப்பாட்டிற்காக வரிசையில் நிற்பதா என்று புலம்பி தள்ளுவார்கள்.

அதனால் தான் எப்பொழுதும் தனியாகவே வருவேன் .

இன்று தரிசனம் முடிந்து அன்னதான கூடத்தில் வரிசையில் நிற்கும் போது

நிறைய பேர் வரிசையில் காத்து நிற்பதை பார்த்து இன்று திடீரெனஎன் மனதில் இதை விட பெரிய மண்டபம் இருந்தால் ஒரே நேரத்தில் நிறைய பக்தர்கள் அமர்ந்து சாப்பிட முடியும் அல்லவா?

இந்த எண்ணத்தை என்னில் உருவாக்கியதும் என் தந்தை திருவேங்கடவன் தான் .

அவர் சொல்ல சொல்ல அவரை சுற்றி இருந்த அதிகாரிகளின் கண்களில்நீர் அருவியாய் பெருகி பெருமாளின் லீலைகளையும் ,அவர் பக்தரின் பக்தியையும் பார்த்து வாயடைத்து அமைதியாய் நின்றிருந்தனர் 

அந்த அறையில் மின் விசிறியின் சப்தம் மட்டுமே இருந்தது.

பின்பு தான் அவர் ஆந்திரமாநிலத்தில் ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று அறிந்து ஆச்சர்யத்துடன் அவரிடம் உங்கள் விருப்ப படி புதிய அன்னதான கூடம் கட்டி உங்கள் பெயரையே அதற்கு வைத்து விடலாம் என்றனர்.

வேண்டாம்! வேண்டாம் ! சாதாரண ஏழை என்னை செல்வந்தனாக வாழவைத்தது இந்த திருமலை அப்பனே இந்த பணம் என்னுடையதல்ல எழுமலையானுக்கு சொந்தமானது.

தேவஸ்தானம் விரும்பும் பெயரில் நடக்கட்டும் என்றதும்,அதிகாரிகள் மெய்சிலிர்த்து போனார்கள்.

ஒரே வருடத்தில் கட்டப்பட்ட இந்த புதிய அன்னதான கூடம்ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு கட்டப்பட்டு அதற்கு "மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா" அன்னதான கூடம் என்று பெயரிடப்பட்டு உள்ளது . 

இது ஆசியாவிலேயே பெரிய அன்னதான கூடமாகும்.

🙏🙏🙏

Sunday, April 20, 2025

மூத்த குடிமக்களின் வசதிக்காக

மூத்த குடிமக்களின் வசதிக்காகஇந்தியன் இரயில்வேஸ்_ மூலம் வெளியிடப்பட்ட மையப்படுத்தப்பட்ட mobile எண்கள்.

 ----------------------------

 9760534983 : TTI,                    

 முன்பதிவு & உணவு

 ----------------------------

 9760500000 :

 சுத்தம் செய்தல்

 ----------------------------

 9760534057 : கோச்சில் சிக்கல், இடம் தர மறுத்தல் போன்ற பிரச்சினை

 ----------------------------

9760534060 : மின்சார பிரச்சனைகள் 

 ----------------------------

 9920142151 : விசாரணை சிக்கல்கள்

 ----------------------------

9760534063 : 

RPF & பாதுகாப்பு

 ----------------------------

 9760534069 : குடிநீர் ஏற்பாடுகள் பற்றி 

 ----------------------------

 9760534073 : மருத்துவ உதவிக்கு

 -------------------------


Tuesday, April 01, 2025

யார் "மடை"யர்கள்

ஏரியை  வடிவைமைத்த  பிறகு  அதிலிருந்து  தண்ணீர் வெளியேறத்  தமிழன் கண்டுபிடித்த  தொழில்நுட்பம்தான் "மடை". மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும். அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.

வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும்.

மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்து விடுவார். மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்த வரையும் இழுத்துச் செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள். மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு. இவர்கள்தான் "மடையர்கள்" என அழைக்கப்பட்டார்கள். வரலாற்றின் பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை. வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம் அல்லவா? எம் குழந்தைகளுக்கு இவ்வீரத் தமிழ்த்தியாகிகளின் வாழ்வு ஒரு ஊக்கத்தையும் தியாகத்தையும் ஊட்டும் அல்லவா? இனி எந்த ஒரு மாணவனையாவது  "மடையா" என்று அழைப்பது எனக்குச் சற்று மனநாணம் தான்.. உங்களுக்கு ?.

கர்மாவின் உண்மையான சாரம்.

நான் புனித சங்கமத்தில் முழுகி, திரிவேணி நதியிடம் கேட்டேன், "என் பாபங்களைச் சேகரித்துவிட்டாயா?"

நதி பதிலளித்தது, "ஆமாம்."

நான் கேட்டேன், "அதை என்ன செய்வாய்?"

திரிவேணி நதி நகைத்தது, "நான் பைத்தியமா அதை வைத்துக்கொள்ள? கடலுக்கு சேர்த்துவிடுவேன்."

ஆர்வத்துடன் கடலைக் கண்டேன், "திரிவேணியில் இருந்து என் பாபங்களைப் பெற்றாயா?"

கடல் சொன்னது, "ஆமாம்."

நான் மீண்டும் கேட்டேன், "அதை என்ன செய்வாய்?"

கடல் சிரித்தது, "நான் பைத்தியமா அதை வைத்துக்கொள்ள? மேகத்துக்கு சேர்த்துவிடுவேன்."

நான் மேகங்களிடம் சென்றேன், "கடலில் இருந்து என் பாபங்களைப் பெற்றிருக்கிறீர்களா?"

மேகங்கள் சொன்னது, "ஆமாம்."

நான் கேட்டேன், "அதை என்ன செய்வீர்கள்?"

மேகங்கள் மெல்லப் பேசின, "நாங்களும் பைத்தியமா அதை வைத்துக்கொள்ள? மழையாகப் பொழிவோம்."

நான் ஆச்சரியத்துடன் கேட்டேன், "யார் மேல்?"

மேகங்கள் சிரித்துக்கொண்டு பதிலளித்தது, "உன் மேல் தான்!

அந்தக் கணத்தில் ஒரு ஆழ்ந்த உணர்வு தோன்றியது: எங்கே சென்றாலும் கர்மா நம்மை தொடரும்.

நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ, நாம் செய்ததை நாமே அனுபவிக்க நேரிடும்.

அதனால் நன்மை செய்யுங்கள், நல்லவர்களாக இருங்கள்.

இதுவே கர்மாவின் உண்மையான சாரம்!

Thursday, March 20, 2025

Akhil Bharatiya Brahman Mahasangh

The country's first Brahmin Bhavan to be inaugurated in Delhi on the auspicious occasion of Gudi Padwa and  YouTube channel of Akhil Bharatiya Brahman Mahasangh (ABBM) being launched

ABBM has decided to set up Brahmin Bhavans in major cities of India. The first Brahmin Bhavan will be operational in the country's capital Delhi from Gudi Padwa.

There will be good accommodation facilities for the members of the Brahmin community coming to the capital of India from all over the country. This building will include,

• Career Guidance Center,

• Hostel for students,

• Meeting Hall

• ABBM's central office.

Pure Brahmin vegetarian food will be provided here. A banquet hall with a seating capacity of 300 people will be available for organizing conferences, meetings and get-togethers. The Brahmin community from all over the country will be able to hold their programs in Delhi.

ABBM has proposed to build such Brahmin Bhavans in Pune, Mumbai, Bengaluru, Varanasi and Ayodhya in the near future. 

Founded by Dr. Govindji Kulkarni in 2007, ABBM is a national level organization working through its 32 different sections (cells) and is touching almost every aspect of the society. 

With the aim of bringing all Brahmin industrialists and social leaders on one platform, ABBM has established a national platform called 'Brahmodyog Foundation'. It's a unique platform of visionary Brahmins who are committed to shaping the future of society. Brahmodyog National Conferences were successfully organized in Aurangabad, Pune and Delhi.

ABBM through Brahmodyog Foundation is working in six areas for the upliftment of the last segment of our society.

The future work of the organization is

1. Construction of Brahmin Bhavans and Hostels in selected metropolitan cities

2. Construction of Vocational Training Centers

3. Preparation Training for UPSC Examinations

4. Entrepreneurship Development:-Self-reliant Brahmin Project

5. Establishment of Veda Pathshalas and Gaushalas and providing assistance to them

6. Scholarships for Education to Brahmin Students

Affordable accommodation is a big problem for students from rural areas in big cities. This deprives deserving students of quality education. Therefore, it is planning to construct hostels for Brahmin students at very low fees. The buildings will be rented for this purpose. These hostels will accommodate about 500 students.

Along with this, now the Brahmin community's official YouTube channel will also be launched on the auspicious occasion of Gudi Padwa. Through this channel, the official response and opinion of ABBM will be conveyed. Along with this, interviews and guidance from dignitaries from various fields will be provided.

Congratulations to this first Brahmin Bhavan and the YouTube channel of ABBM.

contact no:  9840331427

Saturday, March 01, 2025

சார் நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க

பரீட்சை ஹாலில்  மாணவன் ஒருவனது  பேப்பர் மேல்  தற்செயலாக ஆசிரியரின் பார்வை பட்டது.

டேய் எழுந்திருடா....

என்னடா  இது?

பிள்ளையார் சுழி போடற இடத்துல திமுக துணைன்னு

எழுதி வைச்சிருக்கே.?

ஆமா சார் திமுக துணைதான்....

திமுக துணையா?

அறிவு கெட்டவனே....

கட்சி பெயரை எல்லாம் பரிட்சையில் எழுதினால் நீ  உருப்படுவியாடா...

எதுக்குடா எழுதினே....?

"சார் நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க....

திமுக துணைங்கிறது 

பிள்ளையார் சுழிதான். வேணும்னா  என் தம்பி பேப்பரை பாருங்க...

ஓஹோ... உன் தம்பி வேற எழுதியிருக்கானா...

யாருடா

இவன் தம்பி .....?

கொண்டாடா  உன் பேப்பரை.....

அடேய் ...நீ என்னடா

அ தி மு க துணை🙏🏻 ன்னு எழுதி வெச்சிருக்கே?

இதுவும் பிள்ளையார் 

சுழிதான் ஐயா..

ஐயா கொய்யான்னா 

பல்லை உடைப்பேன்....

ஒழுங்கா கட்சி பெயரை அழிச்சிட்டு 

எக்ஸாம் எழுத போறீங்களா .

இல்லை வெளியே

அனுப்பட்டுமா?

"சார் நீங்க ரொம்ப பதட்டப்படறீங்க... 

முழுசா  கேட்டீங்கன்னா

கையெடுத்து கும்பிடு வீங்க.."

யாரு..... நான் ...?.

முதல்ல முழுசா நீ சொல்லு  அப்புறம் பார்க்கலாம் கையெடுக்கிறதையும் கழுத்தை பிடிச்சு தள்றதையும்.. .

சார்.. 

திமுக துணை என்றால்

திருச்செந்தூர்

முருக

கடவுள்

துணை..... 

என்னடா சொல்ற....!

கும்பிடுகிற பேரா இருக்கே..

நாமதான் தப்புபண்ணிட்டோமோ

தெரியலையே....

ஐயா...அதிமுக...

நீ என்ன சொல்லப்போறேன்னு

தெரியலையே....ராசா.

"ஐயா அமைதி.

நாங்கள் இருவரும் சகோதர்கள்.

தவிர ஒரு வீட்டுக்குள்

இரண்டு கடவுளை துதிப்பது சரியாகாது

என்பதால் ஒருமுகமாகவே இருக்கிறோம்

"சஸ்பென்ஸ் வைக்காமல் தயவு செய்து அ தி மு க விற்கு விளக்கம் சொல்லுங்கள் ஐயா..."

"புரிய வில்லையா!

அருள்மிகு 

தி ருச்செந்தூர்

முருக

கடவுள் துணை."

ஐயோ.... கைகள் என்னையறியாமல்

கும்பிடுகின்றனவே....

முருகா......என்னை இனி

ம தி மு க துணை

என்று சொல்ல வைத்துவிட்டாயே....

சார்  ....என்ன சொல்றீங்க.? 

ம தி மு க துணை யா?

ஆமாப்பா ஆமாம்!

ம தி மு க துணைதான்

முழுசா சொல்றேன் கேளுங்க மாணவ மணிகளே.....

ம னம் திருந்திய எனக்கு முருகனே கடைசிவரை துணைஎன்பதை சுருக்கி 

ம தி மு க துணை என்று சொன்னேன் பாலகர்களே..... 

Wednesday, February 19, 2025

9 முத்தான கருத்துக்கள்

சுமார் ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தை வெறும் ஒன்பதே ஒன்பது வாக்கியங்களில் புரிந்து கொள்ளுங்கள்.!!

நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி,

நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி,

நீங்கள் உங்கள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி,

சுருக்கமாக, ஆற்றியுள்ள மனிதராக நாம் இருப்பதால்,  கீழே உள்ள [மகாபாரதத்திலிருந்து எடுத்து  தொகுத்த..., மதிப்பு மிக்க] "9 முத்தான  கருத்துகளை" படித்து புரிந்து கொள்வோம்;  முடிந்தவரை, நம் வாழ்வில், கடைபிடிப்போம்.!!!

1. உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நீங்கள் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகிவிடுவீர்கள்... "கௌரவர்கள்"

2. நீங்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால், உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்...  "கர்ணன்"

3. உங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி மொத்த அழிவை ஏற்படுத்தும் அளவுக்கு அலட்சியம் செய்யாதீர்கள்...  "அஸ்வத்தாமா"

4. “அறமற்ற அநியாயக்காரர்களிடம் ... அதிகாரத்திற்கு பணிந்து ஏற்க வேண்டும்” என்பதற்க்காக, எது போன்ற வாக்குறுதிகளையும் ஒருபோதும் கொடுக்காதீர்கள்.. 

"பீஷ்ம பிதாமஹர்"

5. செல்வம், பதவி, அதிகாரம் மற்றும் தவறு செய்பவர்களின் ஆதரவு ஆகியவற்றின் துஷ்பிரயோகம் இறுதியில் மொத்த அழிவுக்கு வழிவகுக்கிறது...  "துரியோதனன்"

6. ஒரு குருடனிடம் அதிகாரக் கடிவாளத்தை ஒருபோதும் ஒப்படைக்காதீர்கள் !! [அதாவது சுயநலம், செல்வம், பெருமை, அறிவு, பற்று அல்லது காமத்தால் குருடனாக இருப்பவர்], அது அழிவுக்கு வழி வகுக்கும்... "திரிதராஷ்டிரன்"

7. அறிவுடன் ஞானமும் இறைவன் துணையும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்."அர்ஜுனன்".

8. வஞ்சகமும் , சூதும் உங்களை எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் வெற்றிக்கு அழைத்துச் செல்லாது...  "சகுனி"

9. நீங்கள் நெறிமுறைகள், நீதி மற்றும் கடமையை வெற்றிகரமாக நிலைநிறுத்தினால், உலகில் எந்த சக்தியும் உங்களைத் தீங்கு செய்யாது...  "யுதிஷ்டிரர்"

இந்த கட்டுரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Friday, January 31, 2025

வெந்த சோத்த திங்கணும்

வெந்த சோத்த திங்கணும், விதி முடிஞ்சா சாகணும்.

ஒரு ப்ராம்ஹணரின் அங்கலாய்ப்பு.......‌...Just a fun post ! 

எம்பாட்டுக்கு நன்னா சாப்ட்டு நன்னா தூங்கிண்டு ராமா க்ருஷ்ணான்னு நன்னா போய்ண்ட்ருந்த லைஃப்ல ஹெல்த்த பத்தி சொல்றேன்னு ஆளாளுக்கு கிளம்பி எல்லாரும் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சா பாருங்கோ....அன்னிக்கு பிடிச்ச சனி..சனியன் தான்...

ஏழரை நாட்டு சனியாவது மனுஷாளுக்கு ஆயிஸ்ல 3 தரத்க்கு மேல வரவேமாட்டான், அப்படியே மூணு தரம் வந்தாலும் எழரை வருஷம் முடிஞ்சு போய்ட்டு முப்பது வருஷம் கழிச்சுதான் திரும்ப வருவன்.

ஜலதோஷமும் மூணே நாள் தான். 

ஆனா இந்த ஹெல்த் அட்வைஸ்ங்கிற பேர்ல ஆளாளுக்கு அடிக்கற கூத்து இருக்கே..... அப்பாப்பா அது ஆய்ஸ்ஸுக்கும் அக்கப்போர்தான் போங்கோ... 

ஒரு நா, பொழுது விடிஞ்சா அடையற வரைக்கும் நான் படற கஷ்டம் நாய்கூடப் படாது, (இதுவும் ப்டாதுதான்)... போங்கோ... நன்னா தெரிஞ்சுக்கோங்கோ...

சரி..கொஞ்சம் கேக்கறேளா, ரொம்ப தேங்க்ஸ்.

சரி, சொல்றேன் *சிரிக்காம கேளுங்கோ*, சரியா.

விடிகார்த்தாலே எழுந்தோடனே வெறும் வயத்லே முதல்ல ஒரு டம்ளர் ஜலம் குடிக்கணும்னு சொன்னா... சரி..குடிச்சேன்...அப்றம், இல்லே ரெண்டு டம்ளர் வெந்நீர் தான் குடிக்கணும்னா...சரி..குடிச்சேன்...அப்றம், இல்லை வெறும் வெந்நீர் இல்லை.. அதிலே அரைமூடி எலுமிச்சம்பழத்தை பிழிஞ்சு, ரெண்டு சொட்டு தேன் விட்டு குடிக்கணும்னா...சரி..குடிச்சேன்...அப்றம், அதிலே ஒரு துண்டு  இஞ்சிய கொஞ்சம் தட்டி போட்டு குடிச்சா ரொம்ப நல்லதுன்னா... சரி...குடிச்சேன்...ஆக இப்போ கார்த்தால நான் ஜலம் குடிக்கறதையே நிறுத்தியாச்சு ..போங்கோ.

இது ஆச்சா - அப்றம்  வாக்கிங் போகலாம்னு பார்த்தா.... முதலேயே வேகமா நடக்கப்டாது... மெதுவா நடந்து.. அப்புறம் வேகத்தை கூட்டி 🤔 மறுபடியும் முடிக்கறச்சே மொள்ள மொள்ள மொள்ள (டவர்லேர்ந்து ஒரு மணிக்கு ஒரு தரம் ஊர் முழுக்க கேக்றமாதிரி சங்கு ஊதரமாதிரி ) நடக்கணும்னா... சரி நடந்தேன்....வெறும் வாக்கிங்பண்ணா போறாது... எட்டு போட்டு நடக்கச்சொன்னா..சரி.. நடந்தேன்...அதனாலே பலன் பல மடங்கு பெருகும்ன்னு சொல்லி ஒழுங்கா நேரா நடந்துண்டு இருந்தவனை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி எப்போதும் எட்டுப் போட்டு தலை சுத்த வெச்சு....இப்போ எப்போ எங்கே நடந்தாலும் எட்டுக் கால் பூச்சி மாதிரி வட்ட வட்டமா வளைஞ்சு நெளிஞ்சு நடக்கறதே வழக்கமாயி....அப்றம் எல்லாரும் கேலி பண்ணி... அதனால வாக்கிங்க்கும் ஒரு ஃபுல் ஸ்டாப் வச்சாச்சு...

இது ஆச்சா - காபி, டீ, தொடப்டாதாம்.. பால் நிறைய சேர்த்துக்கப்டா டாதாம்..நாம ஆரோக்யமா, ஆயுஸோட இருக்கணும்னா கண்ராவி கசப்பா கடுங்காஃபியோ, இல்ல க்ரீன் டீயோ, *சக்கரையே போடாம* குடிக்கலாமாம், அதுக்கு நான் வெறுமனே இருந்த்ருவேன்...

அப்புறம் ப்ரேக்பா ஃஸ்ட் இட்லி தோசை, ப்டாது. ப்ரவுன் பிரட், கார்ன் பிளாஃஸ் தான் பெஸ்ட்.. பொங்கல் மாதிரி ஹெவியா சாப்டப்டாது... பூரி படாது..

இன்னும் ஏதேதோ ப்டாது ப்டாதுன்னு சொல்லிச் சொல்லியே அந்த அல்ப ப்ரேக்பா ஃஸ்ட்க்கும் அல்பாயுஸுல சடன் ப்ரேக் போட்டு நிறுத்தியாச்சு ..

ஆச்சா...இப்போ மத்யான போஜனம். நிறைய சாதம் சாப்டாதைக்கு அரைகுறையா வேக வெச்ச கறிகாய், கீரை இல்லேன்னா மைல்டா பொரித்த கூட்டு, அதிகமா உப்பு, புளி, காரம், எண்ணெய் சேர்க்காம நிறைய சூப், "வெஜ்டபிள் ஸலாட்" சேர்த்துக்கலாம்னு சொன்னா சரி... அப்படியே செய்தேன்...  உருளக்ழங்கு ,வாழக்கா, சேனை, சேம்பு, ன்னு பூமிக்கு அடியில விளையற எந்த வஸ்த்வுமே ப்டாதாம்... 🤔.. தயிர் அதுவும் கெட்டியா ப்டாதவே ப்டாதாம்... ஐஸ் வாட்டர் ப்டாதாம்...

ஆச்சா, சரி சாயங்காலம் ஏதாவது "ஸ்நாக்ஸ்" சாப்டலாம்னா எல்லாருக்கும் பிடிச்ச கேசரி, பஜ்ஜி, போண்டா, ஆம/உளுந்து வடை வகைறா, முறுக்கு, தட்டை, உப்பு சீடை, தேங்குழல், ரிப்பன் பகோடா, அதிரசம், திராட்டுப்பால், அல்வா, வெல்லச்சீடை, "திருநவேலி தென்னமரவேர் பெரிய" மனோகரம், "பழைய மொறு மொறு மைசூர்ப்பா" (கோயமுத்தூர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ்  ப்ராண்ட் காபிரைட் மொளகாப்டி எண்ணெய் கொழச்சா மாதிரி இருக்ற பல்லில்லாதவா சாப்டற மைசூர்ப்பா இல்ல ), திருநவேலி "கடலப்பருப்பு மாலாடு" (பொட்டு/பொரி கடலை மாவு இல்லை), பூந்தி லட்டு, குஞ்சாலாடு, குலாப் ஜாமூன், ஜாங்ரி, ரஸகுல்லா, எள்ளுருண்டை, மோதகம், உப்மா, உப்மா கொழக்கட்டை இத்யாதி, கடலைமாவு, எண்ணெய் பக்ஷண ஸமாசாரமெல்லாம் ப்டாதாம். கலர் கலரா வித விதமான பழங்களை அழகா நறுக்கி ஒரு பெரிய பௌல்ல வெச்சிண்டு, கொரங்கு, அணில், கிளி மாதிரி கொறிச்சு, ரசிச்சு ருசிச்சு, கொஞ்ச கொஞ்சமா கொஞ்சி கொஞ்சி சாப்பிடணுமாம்... எப்டியிருக்கு?... உப்பு போடாம அல்லது ரொம்ப கொஞ்சமா போட்டு சுண்டல் வேணா திங்கலாமாம். 

ஆகமொத்தம் ஸாயங்கால நொறுக்குத்தீனிக்கும்  "கோவிந்தா கோவிந்தா" போட்டாச்சு..  திருப்தியாச்சா ...

அப்றம்,... ராத்ரி ரொம்ப பசிச்சா மட்டும் ஏதாவது லைட்டா சாப்டலாமாம்.. அதுவும் சாதம் ப்டாதவே ப்டாதாம்.. ஓய். (Not why ஓய்) சரியாப்போச்சுங்காணும்...  போனாப்போறது வேணுமானா ரெண்டு சுக்கா ரொட்டி, "தால்ல" (பருப்பு) முக்கி முக்கி சாப்டலாமாம்... எப்படியிருக்கு?. 

அப்றம்,....ராத்ரி பால் குடிக்கப்டாதாம்.. வேணும்னா ஒரு டம்ளர் வெந்நீர்/வெண்ணை எடுத்த மோர் குடிக்கலாமாம் எப்டியிருக்கு?

அதுக்கப்றம் தூங்றதுக்கும் தடா.. 

இடது பக்கம் தான் ஒருக்கிளுச்சு படுக்கணும்... அப்போதான் இதயம் இயல்பா இருக்கும்னு சொன்னா.. சரி.. படுத்தேன்... 

அப்றம் வலது பக்கம் ஒருக்கிளுச்சு படுத்தாத்தான் கொழுப்பு ஜீரணமாகும்னு சொன்னா..சரி.. படுத்தேன்... 

அப்றம்,... மல்லாக்கா படு அப்போதான் பார்கின்சன், அல்சைமர் எல்லாம் வராதுன்னா...சரி.. படுத்தேன்...

இல்லேயில்லே குப்ற படுத்தால்தான் நல்லது.. தொப்பை வராது.. ஒபிசிட்டி வராதுன்னு சொன்னா.. சரி.... படுத்தேன்.

ஆக மொத்தம் ஆறு மணிநேர அரகுற தூக்கமும் அப்படியே அம்போன்னு போயே போச்சு.

அடேய்ய்...! அடங்குங்கடா எல்லாரும்... 

இப்படி எதுவுமே சாப்டாம ஆரோக்யமா ஆய்ஸோட இருந்து ஒண்ணும் கிழிக்க வேணாம்.

வெந்த சோத்த திங்கணும், விதி முடிஞ்சா சாகணும்ன்னு எனக்கு  பிடிச்சதை எப்பவேணா, எவ்ளவு வேணா சாப்ட்டு.. சந்தோஷமா எப்போதும் போல 'ஜாலிலோ ஜிம்கானா' ன்னு ப்ரிய கானன சஞ்சரனா* தின்னு கெட்டானே திருநவேலிப்பாப் னேன்னு (எனக்குப் (பிடித்த பாட்டை பாடிக்கொண்டு திரிபவன் என்று  ப்ரிய கானன சஞ்சரனுக்கு தமிழ்ல நேர் அர்த்தம்) பாடிண்டு போயிண்டே இருக்கேன்டாப்பா .. 

போடா போ போக்கத்தவா...!

நீயும் உன்னோட உருப்படாத ஹெல்த் அட்வைஸும் யாருக்கு வேணும்?....

ராமராம🙏 ராமராம🙏 ராமராம 🙏

Tuesday, January 21, 2025

அம்பாள்

வெற்றி பெறச் சொல்ல வேண்டிய மூன்று ரதங்களின் பெயர்கள்

மூன்று ரதங்களின் பெயர்கள்

அம்பாளைப் பற்றிய சகல விவரங்களையும் லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் 1000 நாமங்கள் தருகின்றன.

அதில் மூன்று ரதங்களின் பெயரைச் சொன்னாலேயே நமக்கு வெற்றி கிடைக்கும் என்கின்ற ரகசிய செய்தி ஒன்றும் உண்டு.

யாருடைய ரதங்கள் அந்த  மூன்று?

அம்பாள், மந்த்ரிணீ மற்றும் வாராஹீ.

அம்பாளுடைய ரதம்- சக்ரராஜ ரதம்.

மந்த்ரிணீயுடைய ரதம் - கேய சக்ர ரதம்

வாராஹியினுடைய ரதம் - கிரி சக்ர ரதம்.

இந்த மூன்று ரதங்களின் பெயரைச் சொன்னாலேயே சொன்னவருக்கு வெற்றி தான்! கேட்டாலும் கேட்டவருக்கு வெற்றியே!

சக்ரராஜ ரதோயத்ர தத்ர கேய ரதோத்தம: |

யத்ர கேய ரதஸ் தத்ர  கிரி சக்ர ரதோத்தம: ||

ஏதத் ரத த்ரயம் தத்ர த்ரை லோக்யமிவ ஜங்கமம் |||

ஸம்பத்கரீ

66வது நாமமாக ஸஹஸ்ர நாமத்தில் வருவது இது:

ஸம்பத்கரீ சமாரூட சிந்துவ்ரஜ சேவிதா

இதன் பொருள்:

ஸம்பத்கரீ தேவியின் ஆக்ஞைக்கு உட்பட்ட யானைகளின் கூட்டத்தால் வணங்கப்படுபவள்.

ஸம்பத்கரீ தேவியானவள் அம்பாளின் சதுரங்க சேனை பலத்தில் யானை சைன்யத்திற்கு அதிகாரி.

அம்பாளின் ஆயுதங்களில் அங்குசத்திலிருந்து உருவானவள் இவ்ள்.

ஸம்பத்கரியின் வாகனமான யானைக்கு ரணகோலாஹலம் என்று பெயர்.

சுகசம்பத்யமான சித்த விருத்திக்கு ‘ஸம்பத்கரீ’ என்று பெயர். 

அதற்கு ஆதாரமான சப்தாதி விஷயங்களை யானைகளுக்கு சமமாக சொல்லப்பட்டிருக்கிறது.  அவைகளால் வணங்கப்படுபவள் என்பது பொருள்.

சுக சம்பத்கரீ என்றால் என்ன?

ஞானம் (அறிவு) ஞாத்ரு (அறிகின்றவன்), ஞேயம் (அறியப்படும் பொருள்)

 ஆகிய இந்த மூன்றுக்கும் த்ரிபுடீ என்று பெயர்.

இந்த மூன்றின் வித்தியாசங்களைத் தெரிந்து கொண்டு அவற்றை சம்பந்தப்படுத்தும் ஞான ரூபமான சித்தவிருத்திக்கு ‘‘சுக சம்பத்கரீ’ என்று பெயர்.

அஸ்வாரூடா

67வது நாமமாக வருவது இது:

அஸ்வாரூடாதிஷ்டிதாச்வ கோடி கோடிபிராவ்ருதா

அஸ்வாரூடா தேவியின் ஆக்ஞைக்கு உட்பட்ட கோடி கோடிக் கணக்கான குதிரைகளைக் கொண்டவள்.

அம்பாளுடைய சதுரங்க சேனா பலத்தில் அஸ்வாரூடா தேவி குதிரை சைனியங்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டவள்.

அம்பாளுடைய ஆயுதங்களில் பாசத்திலிருந்து ஆவிர்பவித்ததால் அஸ்வாரூடா தேவியின் குதிரைக்கு அபராஜிதம் என்று பெயர்.

மந்த்ரிணீ, தண்டிணீ

அம்பாளுடைய சக்திகளில் மிக முக்கியமாக அருகிலேயே இருப்பவர்கள் இருவர்.

1) மந்த்ரிணீ 

2) தண்டிணீ

மந்த்ரிணீ, தண்டிணீயைத் தாண்டி அவர்கள் உத்தரவு இல்லாமல் யாரும் அம்பாளை அணுக முடியாது.

இவர்களே மிக முக்கியமானவர்கள்.

ஸம்பத்கரீ, அஸ்வாரூடா போன்றவர்கள் இவர்களுக்கு உட்பட்டுத்தான் இருப்பர்.

இந்த இருவரும் எப்போதும் அம்பாளின் சந்நிதியில் இருப்பதாகவும் அம்பாளின் சேவையில் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மந்த்ரிணீ தேவதை அம்பாளுக்கு பிரதான மந்திரி ஸ்தானம் வகிப்பவர். சங்கீதத்திற்கு அதிஷ்டான தேவதை ராஜ ச்யாமலை மற்றும் ஸங்கீத ச்யாமலை என்று பெயர்.

மந்த்ரிணீயிடம் அம்பாள் தனது ராஜ்ய பொறுப்பு அனைத்தையும் தந்து விட்டதாக 786வது நாமத்தின் மூலமாக நாம் அறிய முடிகிறது. (மந்த்ர்ணீ ந்யஸ்த ராஜ்ய தூ:- 786)

சக்ரராஜ ரதம்

சக்ரராஜ ரதாரூட ஸ்ர்வாயுத பரிஷ்க்ருதா (68வது நாமம்)

இதன் பொருள்:

சக்ரராஜ ரதத்தில் ஆரூடமாயிருக்கும்படியான சம்ஸ்த ஆயுதங்களினால் அலங்கரிக்கப்பட்டவள்.

யுத்த காலத்தில் தேவிக்கு சமீபத்தில் சகல விதமான ஆயுதங்களும் சக்ர ராஜ ரதத்தில் தயாராக வைக்கப்பட்டிருக்கும்.

அம்பாளின் ரதத்தின் கொடிக்கு ‘ஆனந்த த்வஜம்’ என்று பெயர்.

இந்த ரதத்திற்கு 9 தட்டு உண்டு. 10 யோஜனை உயரம், 4 யோஜனை அகலம் கொண்ட ரதம் இது.

சக்ர ராஜ ரதம் என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதாவது இதுவே ஶ்ரீ சக்கரம் ஆகும்.

ஶ்ரீ சக்கரத்திலும் 9 பீரிவுகள் உண்டு.

1) த்ரைலோக்ய மோஹனம்

2) சர்வாசா பரிபூரகம்

3) சர்வசம்சேக்ஷாபணம்

4) சர்வ சௌபாக்யதாயகம்

5) சர்வார்த்தசாதகம்

6) சர்வரக்ஷாகரம்

7) சர்வரோகஹரம்

8) சர்வஸித்திப்ரதம்

9) சர்வானந்தமயம்

ஶ்ரீ சக்கரத்தில் உள்ள பிந்துவே அம்பாளின் இருப்பிடம்.

இதில் இருக்கும் ஆயுதங்கள் ஆத்ம ஞானம் அடைவதற்கான சாதனங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஆதமஞானம் அடைவது நிச்சயம். சக்தரஸித்தி ஏற்படுகிறது. அதுவே யோகம் என்று கூறப்படுகிறது.

சக்ர ராஜம் என்பது ஆறு அதாவது ஷட் சக்கரங்களை, ரத - ஆதாரமாகக் கொண்டது சக்ர ராஜ ரதம்.

இதை சக்ரேசத்வம் என்றும் கூறுவர்.

சகல ஆயுதங்களையும் கொண்டு அந்த ஷட் சக்கரங்களை அடக்க முடியும். இதை சுத்த வித்யா என்று கூறுவர்.

கேய சக்ர ரதம்

அடுத்து 69வது நாமம் இது:

கேய சக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா

இதன் பொருள்:

கேய சக்ரம் என்ற ரதத்தில் ஆரோஹணம் செய்திருக்கும் மந்த்ரிணீ தேவியால் வலம் வந்து சேவிக்கப்பட்டவள்.

இந்த ரதத்திற்கு 7 தட்டுகள் உண்டு.

கேய - பிரசித்தமான

சக்ர - சக்கரத்தை உடைய

ரதம் - ரதமான சூர்ய மண்டலம்

இதில் ஆரூடர்களாக இருக்கும்படியான மந்த்ரிணீ ஶ்ரீ வித்யா உபாசகர்களால் வணங்கப்படுபவள்.

இன்னொரு பொருள்

கேய - முக்கியமான

சக்ர ரதா - சக்ராகாரமான ரதத்தில் வீற்றிருக்கும் அம்பாளை

ஆரூட - புத்தியில் அநுசந்தானம் செய்யும்

மந்த்ரிணீ - மந்திர சித்தி உடையவர்களால் வணங்கப்படுபவள்.

கிரி சக்ர ரதம்

அடுத்த 70வது நாமம் கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா

இதன் பொருள்:

கிரி சக்ரம் என்கின்ற ரதத்தில் ஆரோஹணம் செய்திருக்கும் தண்டநாதையை முன்னிட்டிருப்பவள்.

கிரி என்றால் வராஹம் என்று பொருள். தண்டநாதையின் ரதம் வராஹ வடிவத்தில் இருப்பதால் அதற்கு கிரி சக்ர ரதம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

வாராஹிக்கு தண்டநாதை என்று பெயர்.

கிரி - கிரணங்கள் அதாவது சிருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகியவற்றின்

சக்ரம் - சமூகமாகிய ரதத்தில்

ஆரூட - ஏறி இருந்தவளாக இருப்பினும்

தண்டநாத - யமனால்

அபரஸ்க்ருதா - ஸ்வாதீனம் செய்யப்படாதவள்.

அதாவது ஒரு யோகியானவன் சிருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகியவற்றில் அகப்பட்டிருந்தாலும் கூட அவன் யம வாதனைக்கு உட்பட்டவன் அல்ல என்பது பொருள்.

வெற்றிக்கு வழி :: 

அம்பாளின் ரதம் மற்றும் முக்கிய இரு தேவதைகளின் ரதம் ஆகியவற்றின் பெயரை தினமும் கூறுவோம்; வெற்றியைப் பெறுவோம்.

மேற்கண்ட வியாக்யானங்கள் திரு ஜி.வி.கணேச ஐயர் அவர்களால் ஆர்யதர்மம் பத்திரிகையில் எழுதப்பட்டவை.

லலிதா சஹஸ்ரநாமத்தை பாஸ்கரராயரின் பாஷ்யத்திற்கு இணங்க அவர் அற்புதமாக விரிவுரை ஒன்றை ஆயிரம் நாமங்களுக்கும் எழுதினார்.

இது 1938ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி புத்தகமாக வெளி வந்தது.

அதில் தரப்பட்ட விளக்கத்தையே இந்தக் கட்டுரை மாறுதலின்றி தற்கால நடையில் தருகிறது. ஶ்ரீ ஜி.வி. கணேச ஐயருக்கு நமது அஞ்சலியும் நன்றியும் உரித்தாகுக!

Friday, January 10, 2025

ஸ்ரீரங்கம் பரமபத வாசல்

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் தகப்பனார் வேளுக்குடி வரதாச்சாரியரும் மிகச் சிறந்த வைஷ்ணவப் பேரறிஞர். இந்தியாவில் இவரது சொற்பொழிவு நடக்காத ஊரே இல்லை. 

இவரிடம் ஒரு விசேஷம்... என்ன பேச வேண்டும் என்று முன்கூட்டியே தலைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை இவருக்கு. 

அந்தச் சமயத்தில் என்ன தலைப்பு கொடுக்கிறார்களோ, அதற்கேற்பச் சரளமாகவும், விஷய ஞானத்துடனும் சுவையாகப் பேசி அசத்துவதில் மன்னனாகத் திகழ்ந்தார் இவர். அத்தனைப் பாண்டித்யம்!

ஒரு முறை, "இப்போது வேளுக்குடி வரதாச்சாரியர் ஸ்வாமி அவர்கள், 'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்' என்பது பற்றிப் பேசுவார்கள்" என்று ஒரு மேடையில் எகிடுதகிடாக அறிவித்துச் சிக்கலில் மாட்டிவிட்டார் நிகழ்ச்சி அறிவிப்பாளர். 

ஆனாலும், அசரவில்லை வரதாச்சாரியர். மடை திறந்தது போல், அதே தலைப்பிலேயே சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.

"தலையை மொட்டை அடித்துக் கொள்வது எதற்குத் தெரியுமா? நான் துளியும் அகங்காரம் இல்லாதவன் என்று காண்பிப்பதற்காகத்தான். ஒருவன் ஒரு பந்தயத்தில் தோற்று விட்டால் மொட்டையடித்துக் கொள்வான். இவன் அவனிடத்தில் தோற்று விட்டான் என்பதற்கான அடையாளம் அது. 

திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்களே, எதற்கு? ‘என் அகங்காரம் அழிந்து விட்டது. நான் உனக்கு அடிமைப் பட்டவன்’ என்று பகவானிடம் தெரிவிப்பதற்கு.

அப்படிச் செய்து விட்டானானால், அவனுக்குப் பிறவிப் பெருங்கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும். இதைத் தெரிவிக்கத்தான், 

திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாசன், வலது திருக் கரத்தால் தனது வலது திருவடிகளைச் சுட்டிக் காட்டி, ‘அகங்காரம் அற்றவனாக எனது திருவடிகளில் விழு’ என்றும், இடது திருக் கரத்தால் தனது முழங்காலைத் தொட்டு, ‘நீ அப்படிச் செய்தால், உனது பிறவியாகிய கடல் முழங்கால் அளவுக்கு வற்றி விடும்’ என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்...’ என்கிற ரீதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கி விட்டார்.

இப்படி ஓர் அசாத்தியத் திறமை இருந்ததால்தான், அவருக்கு ‘வாகம்ருத வர்ஷீ’ (சொல் அமுதக் கடல்) என்கிற பட்டம் கிடைத்தது.

நம்மாழ்வார் பிறந்த தலமான ஆழ்வார் திருநகரியில், அவர் அருளிச் செய்த திருவாய்மொழியின் 1000 பாடல்களைப் பற்றியும் தொடர்ந்து ஒரு வருட காலத்துக்கு உபன்யாசம் செய்துள்ளார் வரதாச்சாரியர். 

இது ஒரு சாதனை!

இதிலேயே இன்னொரு சாதனையையும் செய்தார் அவர். ஒரே நாளில் இடைவிடாமல் 24 மணி நேரத்துக்கு, திருவாய்மொழியின் பொருளை உபதேசித்தார். அப்போது அவருக்கு வயது 60.

சொற்பொழிவின் இடையே, விடியற்காலை 3 மணிக்கு, வயதின் காரணமாக அவருக்குச் சற்றே தளர்ச்சி ஏற்பட்டது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உபன்யாசம் செய்து கொண்டு இருந்தார். மேலே தொடர முடியாமல், தொண்டை கட்டிக் கொண்டது. உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் வரதாச்சாரியரைப் பரிசோதித்து விட்டு, ‘உபன்யாசத்தை உடனே நிறுத்திvவிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என்று அறிவுறுத்தினார்கள்.

ஆனாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல், உபன்யாசத்தைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி காலை 6 மணிக்குதான் நிறைவு செய்தார்.

1991-ஆம் ஆண்டு, சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில், மார்கழி 30 நாட்களும் திருப்பாவை உபன்யாசம் செய்தார் வரதாச்சாரியர். அதை முடித்து விட்டு நேரே ஸ்ரீரங்கம் போனார். அங்கே ஸ்ரீ ரங்கநாதனுக்குத் திருவாராதனம் நடந்து கொண்டு இருந்தது. அதை ஒரு மணி நேரம் போல் கண்டு களித்து விட்டு, பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு, கோயிலைப் பிரதட்சணம் வந்தார். ஸ்ரீரங்கம் பரமபத வாசலை அடைந்த போது, மயங்கி விழுந்தவர்தான்; அப்படியே ஸ்ரீரங்கனின் திருவடிகளை அடைந்து விட்டார்.