Pages

Saturday, July 27, 2024

சாப்பாடு காஞ்சி பெரியவா

சாப்பாடு (போஜனம்) பத்தி காஞ்சி பெரியவர் - அருமையான விளக்கம்.

கல்யாணம்,  மத்த விசேஷம், சாதாரணமாக  வீடுகளில் போஜனம்  எப்படி சாப்பிடுறோம்?''  என்று பெரியவா கேட்டார்.

வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''

அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"

''ஓ அதை கேக்கறேளா  பெரியவா.  மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம், பட்சணம், கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.

"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?"

மகாபெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.    மௌனமாக இருந்தார்கள்.   தெரியும் அவரே பதில் சொல்வார்  என்று...

இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையான இருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு தண்ணிய தெளிக்கிறா. அப்பறம் பாயசம், அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா? பாயசத்தால பிறந்த ஸ்ரீராமனையும் தயிர் வெண்ணைப் பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நினைக்கனும் என்பதற்காகத்தான்... 

"மொதல்ல குழம்பு. இதுல, 'தான்' இருக்கு.  தான்  என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா  ஏதோ ஏதோ  இருக்குமே  அது தான் '' தான் '' என்பது இல்லையா.  நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் ''  என்கிற  அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம ''குழம்பி'' ப் போயிடறோம். அந்தத்  ''தானை''  கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்த  கட்டத்துக்குப் போறோம்.

அப்போ ''தான்'' இல்லாததால்   ஒரு தெளிவு வந்துடறது இல்லையா.  அதாவது ''ரச'' மான மன நிலை. அதுதான் ரசம். ''தான்'' இல்லாம தெளிவா இருக்கற மனசுல ''ரச'' மான எண்ணம் வருது. 

அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் ஆயிடறது..

கடோசியா மோர்.   மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது?  

பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய் வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது. 

அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.

இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரியறது? 

நாமளும் அகங்காரத்தை விட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு, யாருக்கும் எந்த உபத்ரவமும்  பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது 'நோ மோர்!"

சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம் பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப் பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம  வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான்  அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார்,

ஸ்ரீ மகா பெரியவா.

Thursday, July 18, 2024

ஹரியை காட்டிலும் ஹரி நாமமே

ஸர்வம் ஸ்ரீராம‌ மயம் 

ஜெய் ஸ்ரீராம் 

ஹரியை காட்டிலும் ஹரி நாமமே உயர்வானது என்று நெஞ்சில் விதைத்தவர்கள்

🍁🍁🍁🍁🍁🍁

1.நம்மாழ்வார்

2.திரு மங்கை ஆழ்வார்

3.பெரியாழ்வார்

4.ஆண்டாள்

5.தொண்டரடி பொடி ஆழ்வார்

6.ராமானுஜர்(மதில் மேல் ஏறி அஷ்டாச்சரம் போதித்தார்)

7.சிவ பெருமான்

8.ஆதி சங்கரர்

9.போதேந்திரர்

10.ஸீதர ஐயர் வாள்

11.மருதா நல்லூர் ஸ்வாமி

12.தியாக ப்ரும்மம்

13.புரந்தர தாசர்

14.கனக தாசர்

15.கிருஷ்ண சைதன்யர்

16.ஜெய தேவர்

17.நிவ்ருத்தி நாதர்

18.ஞானேஸ்ரர்

19.சோபான தேவர்

20.நாம தேவர்

21.ஏக நாதர்

22.சமர்த்த இராம தாசர்

23.கோர கும்பார்

24.சோகாமேளர்

25.முக்தா பாய்

26.மீரா

27.ஜனா பாய்

28.கபீர் தாசர்

29.துக்காராம் மகராஜ்

30.சதா சிவப்ரேமைந்தர்

31.பீஷ்மாச்சார்யா

32.நர்சிம்ம மேத்தா

33.ரவி தாசர்

34.பானு தாசர்

35.பிரகலாதர்

36.ராக வேந்திரர்

37.ஜெய தீர்த்தர்

38.சூர் தாசர்

39.விஜய தீர்த்தர்

40..பூந்தானம்

41.துளசி தாசர்

42.வியாச பகவான்

43.வால்மீகி

44.சுகர்

45.அஜாமிளன்

46.அனுமன்

47.கத்திர பந்து

48.நர நாரயணன்

49.நாரதர்

50.சபரி

51.த்ரௌபதி

ஐம்பத்தி ஒரு நாம பீடங்கள்

நாமமே பலம் 

நாமமே சாதனம்

ராம கிருஷ்ண ஹரி

பாண்டுரங்க ஹரி

விட்டல விட்டல 

பாண்டுரங்கா 

ஹரே ராம ஹரே ராம 

ராம ராம ஹரே ஹரே  

ஹரே கிருஷ்ண ஹரே 

கிருஷ்ண கிருஷ்ண

கிருஷ்ண ஹரே ஹரே 

ஓம் நமோ நாராயணாய 

ஓம் நமோ வெங்கடேசாய 

Wednesday, July 17, 2024

கற்கிடமாஸம்

இராமாயண கற்கிடக மாஸம்.

அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேக நமஸ்காரங்கள்.

கற்கிடமாஸத்தின் ஆரம்பம் என்பது தக்ஷிணாயன காலம் ஆரம்பம் தேவன்மார்கள், இராத்திரி பொழுது.

இயற்கையானது, மழையால் நனைந்தும், குளிர்ந்தும், ஈரத்தோடுகூடி குளித்து நிற்கின்ற ப்ரகர்தி பூமி தான் கற்கிடகமாஸம், என்கிற ஆடிமாதம்.

பண்டைய காலகட்டங்களில், நிற்காத மழையும், அதனால் வெளியே வேலைக்கு செல்லமுடியாத க்ருஷிக்காரர்களும், அதனால் குடும்பத்தில் பட்டினியும், பசியும்கூடீ நிற்கின்ற காலம் கற்கிடகமாஸம்.

வாதம், ஆஸ்துமா, ஜுரம், வயிற்றுபோக்கு, போன்ற ரோகங்கள் பெருகுகின்ற காலமது.

மனுஷ்யன்மார்கள், எப்படியோ சகித்துகொண்டு வாழும், வாழ்ந்த காலகட்டங்கள் தான், அன்றைய கற்கிடகமாஸம்.

அன்றைய கால கற்கிடகமாஸம், நம், மூதாதையர்கள் கற்கிடக கஞ்சி, என்று ஒன்றை செய்து, அனைவருக்கும் கொடுப்பார்கள்.

அதில் பலதரப்பட்ட, ஆயூர்வேத மூலிகை ஔஷதங்கள் சேர்த்து அந்த கஞ்சி தயாரித்து அனைவருக்கும் கொடுப்பார்கள், இன்றைக்கும், தென்பாண்டியநாடு, கேரளீய நாடு, கர்நாடக மாநிலங்களில், கற்கிடகஞ்சி, கற்கிடகமாஸத்தில் தயார் செய்து கொடுத்து வருகிறார்கள்,இதனால் அன்றைய காலகட்ட மனுஷ்யன்மார்கள் ஆயுள் ஆரோக்கியம் கூடி வாழ்ந்து வந்தார்கள்.

அது, இன்றைய Morden generation youths. மறந்து போனார்கள்,

அன்றைய கர்க்கிடகம் மாஸத்தில், கற்கிடகஞ்சி மட்டுமில்லாமல், அவர்கள், இராமாயணம் பாராயணம் செய்யும் மாஸமாக கற்கிடகம் மாஸத்தை தொடங்கினார்கள்.

காரணம், பெருக்கெடுத்து, ஒடும் நதிகள், குளங்கள், குட்டைகள், எந்தவிதமான விவசாய க்ருஷி வேலைகளையும் செய்யமுடியாது, எங்கும், அந்த பெருமழைகாலத்தில், காளை பூட்டி யாத்ரா போக முடியாது, என்கிற காரணத்தால் கற்கிடகமாஸம், இராமாயண பாராயணம் செய்யும் மாஸம் என்று தீர்மானித்தார்.

ஒரு கொட்டுமழை காலத்தில், எதுவுமே செய்யாமல் போகின்ற காரணத்தாலும் பொருளாதார நெருக்கடிகள் வந்ததாலும், கற்கிடகமாஸத்தை, துர்க்கிடக மாஸம், என்று அழைத்தார்கள்.

கற்கிடகமாஸம் அது துர்க்கிடகமாஸம் ஆகி போனது, அதாவது பீடை மாஸம், என்று சொல்லப்பட்டது, பொதுஜனங்களால், இன்றளவும் கற்கிடகமாஸம் பீடை பிடித்த மாஸமாகவே கருதப்பட்டு வருகின்றது.

சூரியன், உத்திராயண காலம் கழிந்து, தக்ஷணாயன காலத்தில், அதாவது ஆடி மாஸத்தில் கற்கிடக இராசி க்ஷேத்ரத்தில் சஞ்சரிக்க ஆரம்பிக்கும் முதல் மாதம் பீடை மாதம்.

அதேபோல் சூரியபகவான், தக்ஷிணாயன காலம்முடிந்து, மகர இராசி க்ஷேத்ரத்தில் சஞ்சரிக்கும் முன் தனூக்ஷேத்ரத்தில், மார்கழிமாதம், தனூமாஸத்தையும், பீடை மாஸமாகவே, மக்கள் கருதப்பட்டு வருகின்றனர்,

கற்கிடமாஸம் இராமாயண பாராயணம் போல் புண்ணியம் வேறெதுவும், உண்டோ? வேறெந்த மதங்களிலும், உண்டோ?

மரியாதை புருஷோத்தமனாகிய, ஸ்ரீ இராமச்சந்திர சக்ரவர்த்தி, ப்ரஜைகளுக்கு இராஜன் ஆகவும், சம்ரக்ஷிக்கும், இரக்ஷகர்த்தா ஆகின்றார்! ஒவ்வொரு ஜன ப்ரதிகர்களுக்கும், ஆதர்ஷ்ண புருஷன் ஆகின்றார். 

உத்திராயமாஸத்தில் மகரமாஸம் தொடங்கி, மிதுன மாஸம் வரை  தேவன்மார்களுக்கு, பகல் பொழுது.

அதன்பிறகு கற்கிடகமாஸம் தொடங்கி, தனூமாஸம், மார்கழி முடிய தேவன்மார்களுக்கு, இரவுபொழுது ஆகும்.

பன்னிரண்டு மாஸங்கள் தேவன்மார்களுக்கு, ஒரு நாளாகும், அப்போது நம்முடைய, ஒருநாளானது தேவன்மார்கள், இரண்டு மணிநேரம் மட்டும்மே! 

அதனால்தான் தேவன்மார்கள், பகல்பொழுது ஆன, உத்திராயண காலகட்டம் சுபகார்யங்கள், மனுஷ்யன்மார்கள் நடத்தி கொள்ள அனுமதிக்கின்றார்கள்.

தேவக்ஷேத்ர ப்ரதிஷ்டைகள்,க்ஷேத்ர கலஸ நிர்மாணம், க்ஷேத்ர உற்ஸவங்கள், ஹோமகர்ம்மங்கள், விவாஹங்கள், கிரகப்ரவேஸம் போன்றவற்றை, தேவன்மார்கள் பகல்பொழுதில்தான் நடத்தப்படவேண்டும், என்பதுதான் ஸாஸ்த்ர விதி.

காலைப்பொழுது அக்னி சூரியபகவான், ஒளி தந்து ப்ரபஞ்சத்திலுள்ள துஷ்ட கிருமிகளை நாசம் செய்யும் கிருமிநாசினி ஆகின்றார், இரவுநேரம் ஆரம்பிக்கும் முன்பே த்ரிசந்ய மாலைபொழுது முடியும்நேரத்தில் நாம் நமது பவனங்களில் குத்துவிளக்கு மூலம் அக்னிபகவானை வரவைழைத்து, பவனங்களில், உள்ள துஷ்டசக்திகளை நாஸம் செய்கின்றோம், 

தக்ஷணாயனகற்கிடக மாஸத்தில் பாராயணம் செய்யும், இராமாயணத்தில்,

,, ரா மா,,

என்கிற இரண்டெழுத்துகள் கொண்ட சொல்லே, ஒரு ப்ரத்யேக தர சக்திகூடிய மந்திரமாகும்,

ஏகாக்ஷரி மந்திரமான,, ஓம்,,  காரம் (ப்ரணவம்) அடுத்ததாக த்துயாத்ரி இரண்டாவது மந்திரம்தான், ராமா,., என்கிற மந்திரம், 

பரமசிவன் புருஷத்தி, பரமேஸ்வரி தனது கெட்டியோனிடம் கேட்டாள், புருஷா, விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதாஸகஸ்ரநாமம், இரண்டையும் பாராயணம் செய்வதற்கு பதிலாக, எளிய மந்திரம், ஏதாவது, உண்டா? என்று கேட்டபொழுது,

அதற்கு பரமன். தனது கெட்டியோளிடம் சொன்னார், சிறந்த மந்திரம் ராமா, என்கிற, இரண்டெழுத்து மந்திரம்,

காரணம், நமசிவாயா, என்கிற பஞ்சாக்ஷிரி மந்திரத்திலிருந்து, இரண்டாவது, எழுத்தான,, ம,, என்கிற வார்த்தை, எடுத்துவிட்டால், நசிவாயா, என்று வந்துவிடும், நமசிவாயா, என்றால் மங்களகரமானது, என்று அர்த்தம்,

அந்த, இரண்டாவது, எழுத்தை, எடுத்துவிட்டு நசிவாயா, என்று சொன்னால் மங்களகரமானது அல்ல! என்று அர்த்தம்,

அதுபோல் நமோ  நாராயாணா என்கிற மந்திரத்தில் , ரா, என்கிற வார்த்தை, எடுத்துவிட்டால் மந்திரம் சக்தியற்று போய்விடும்,

காரணம்,ரா என்கிற, எழுத்திலும், ம, என்கிற மந்திரத்திலும், உல்பாதன பீஜசுக்ல சக்தி, கொண்டுள்ளது,

ஆகவே கற்கிடகமாஸம் ராமா, என்கிற மந்திரத்தை அதிகாலையில் ப்ரபாத சந்த்யா நேரத்தில் சொல்பவர்களுக்கு, அவர்கள் கிரகங்களில் துஷ்டதேவதை போய் நல்ல சம்பவிக்கும், என்கின்றார் பரமசிவன்

ஆகவே கற்கிடகமாஸம் முதல், ஒவ்வொரு வீட்டிலும், இராமாயண பாராயணம் ஆரம்பித்தால் நலம்.

Thursday, July 11, 2024

Essay On Thieves

The importance of thieves in a country's economy!

The teacher told the children to write an essay on __thieves__ for tomorrow.

Following is the essay of a seventh-grade student, Buddhi Prakash.

▪️ Thieves are the backbone of a country's economy.

▪️ People might think this is a joke or wrong, but it's actually a subject worth pondering.

▪️ Safes, cupboards, and locks are needed because of thieves. This gives work to the companies that make them.

▪️ Because of thieves, windows in homes have grills, there are doors, doors are locked, and not just that, there are additional doors for security outside. So many people get work.

▪️ Due to thieves, a compound is built around houses, shops, and societies; there are gates, a guard stays at the gate 24 hours, and there is also a uniform for the guard. So many people get work.

▪️ Because of thieves, not just CCTV cameras and metal detectors but also cyber cells exist.

▪️ Because of thieves, there are police, police stations, police posts, patrol cars, batons, rifles, revolvers, and bullets. So many people get work.

▪️ Because of thieves, there are courts, judges, lawyers, clerks, and bail bondsmen in the courts. So many people get work.

▪️ Because of thieves, there are jails, jailers, and police for the jails. So many people get work.

▪️ When things like mobile phones, laptops, electronic devices, bicycles, and vehicles are stolen, people buy new ones. This buying and selling strengthen the country's economy and give work to many people.

▪️ If a thief is highly recognized and famous, then media from home and abroad also get their livelihood.

▪️ After reading all this, you must also be convinced that thieves are the backbone of the entire government system and a means of livelihood for the people in society.

Wednesday, July 10, 2024

முதியவர்கள் எலும்பு

முதியவர்கள் அனைவருக்கும் (60-100 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்...)

எலும்பியல் மருத்துவரிடமிருந்து ஒரு கடிதம்:

எலும்பு அடர்த்தியை தீர்மானிப்பதை இனி நான் பரிந்துரைக்கவில்லை, ஏனென்றால் வயதானவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் இருக்கும், மேலும் வயது அதிகரிக்கும் போது, ​​ஆஸ்டியோபோரோசிஸ் அளவு கண்டிப்பாக மேலும் மேலும் தீவிரமடையும், மேலும் எலும்பு முறிவு அபாயமும் பெரிதாகும். 

ஒரு சூத்திரம் உள்ளது:

எலும்பு முறிவு அபாயம்= வெளிப்புற சேத சக்தி/எலும்பு அடர்த்தி.

முதியவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள், ஏனெனில் டினாமினேட்டர் மதிப்பு (எலும்பு அடர்த்தி) சிறியதாகி வருகிறது, எனவே எலும்பு முறிவு ஆபத்து நிச்சயமாக அதிகரிக்கும்.

எனவே, எலும்பு முறிவுகளைத் தடுப்பதற்கு வயதானவர்களுக்கு மிக முக்கியமான நடவடிக்கை, விபத்துக் காயங்களைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்வதாகும்.

விபத்து காயங்களை குறைப்பது எப்படி?

நான் தொகுத்த இரகசியம் என்று அழைக்கப்படும் பன்னிரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன, அவை:

“கவனமாக இரு, கவனமாக இரு, மீண்டும் கவனமாக இரு”!

குறிப்பிட்ட நடவடிக்கைகள் அடங்கும்:

1. ஒரு நாற்காலியில் அல்லது ஸ்டூலில் எதையாவது பெறுவதற்கு ஒருபோதும் நிற்காதீர்கள், குறைந்த ஸ்டூல் கூட.

2. மழை நாட்களில் வெளியே செல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

3. குளிக்கும்போது அல்லது கழிப்பறையைப் பயன்படுத்தும்போது, ​​​​நழுவுவதைத் தடுக்க சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

4. மிக முக்கியமானது, குறிப்பாக பெண்களுக்கு - குளியலறையில் உள்ளாடைகளை அணியாதீர்கள், சுவர் அல்லது பிற பொருட்களைத் தாங்க வேண்டாம் ... இடுப்பு மூட்டு நழுவுதல் மற்றும் எலும்பு முறிவுக்கான பொதுவான காரணம்... குளித்த பிறகு, உங்கள் உடை மாற்றும் அறைக்கு திரும்பவும். ஒரு நாற்காலியில் அல்லது உங்கள் படுக்கையில் வசதியாக உட்கார்ந்து பின்னர் உள்ளாடைகளை அணிந்து கொள்ளுங்கள்.

5. கழிப்பறைக்குச் செல்லும்போது, ​​குளியலறையின் தளம் வழுக்காமல் வறண்டு இருப்பதை உறுதிசெய்யவும் கமோட் மட்டும் பயன்படுத்தவும்.. அதே நேரத்தில், கமோட் இருக்கையில் இருந்து எழும்பும் போது பிடித்துக் கொள்ள ஒரு ஹேண்ட் ரெஸ்டை பொருத்தவும்... பாத் ஸ்டூலில் அமர்ந்து குளிக்கும்போதும் இது பொருந்தும்.

6. படுக்கைக்குச் செல்வதற்கு முன் வீட்டின் தரையில் உள்ள ஒழுங்கீனத்தை சுத்தம் செய்ய வேண்டும், மேலும் தரை ஈரமாக இருக்கும்போது இருமுறை கவனியுங்கள்...

7. நள்ளிரவில் எழுந்திருக்கும் போது, ​​3-4 நிமிடங்கள் படுக்கையில் உட்கார்ந்து, எழுந்து நிற்க வேண்டும்; முதலில் விளக்கை ஆன் செய்து, பிறகு எழுந்திருங்கள்.

8. குறைந்தபட்சம் இரவில் அல்லது பகலில் கூட (சாத்தியமானால்), தயவுசெய்து, கழிப்பறை கதவை உள்ளே இருந்து மூடாதீர்கள்.. முடிந்தால், கழிப்பறையில் அலாரம் மணியை பொருத்தி, அதை அழுத்தி, ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், குடும்ப உறுப்பினர்களின் உதவியை வரவழைக்கவும்...

9. முதியவர்கள் பேன்ட் போன்றவற்றை அணிய ஒரு நாற்காலி அல்லது படுக்கையில் உட்கார வேண்டும்.

10. வீழ்ச்சி ஏற்பட்டால், தரையில் இருந்து ஆதரவைப் பெற உங்கள் கைகளை நீட்ட வேண்டும். இடுப்பு மூட்டில் தொடை கழுத்து உடைபடுவதை விட முன்கை மற்றும் மணிக்கட்டை உடைபடுவது நல்லது.

11. உங்களால் இயன்றவரை உடற்பயிற்சி செய்ய வேண்டும், குறைந்தபட்சம் நடக்க வேண்டும் என்று நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன்..

12. குறிப்பாக பெண்களுக்கு.. உங்கள் எடையை அனுமதிக்கப்பட்ட வரம்பில் வைத்துக்கொள்ள மிக மிக தீவிரமாக இருங்கள்... உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியமானது...எஞ்சிய உணவை உண்பது, பெண்களின் பொதுவான நடத்தை... அதிலிருந்து விடுபடுங்கள்... எஞ்சியவற்றைத் திரியும் பசுக்களுக்கு உணவளிக்கவும்... உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது உங்கள் தலையிலும் மனதிலும் உள்ளது, "எப்பொழுதும் பாதி வயிற்றில் சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது. , வயிறு நிரம்பியிருப்பதற்காக ஒரு திருப்தி வரும் வரை சாப்பிடுவதை விட.

எலும்புத் திணிவை அதிகரிப்பது தொடர்பாக, மருத்துவச் சப்ளிமெண்ட்டுகளுக்குப் பதிலாக, உணவுப் பொருட்களை (பால் பொருட்கள், சோயா பொருட்கள் கடல் உணவுகள், குறிப்பாக கால்சியம் அதிகம் உள்ள சிறிய இறால் தோல்கள்) பரிந்துரைக்கிறேன்.

மற்றொன்று வெளிப்புறச் செயல்பாடுகளைச் சரியாகச் செய்வது, ஏனென்றால் சூரிய ஒளி (UV ஒளியின் கீழ்) சருமத்தில் உள்ள கொழுப்பை வைட்டமின் D ஆக மாற்றுகிறது.

குடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை ஊக்குவிப்பது நன்மை பயக்கும் மற்றும் ஆஸ்டியோபிளாஸ்ட் செயல்பாடு ஆஸ்டியோபோரோசிஸை தாமதப்படுத்தும் விளைவைக் கொண்டுள்ளது.

குளியலறையின் வழுக்காத தரையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். படிக்கட்டுகளில் ஏறிச் செல்லும்போது கைப்பிடிகளைப் பயன்படுத்துங்கள், விழாமல் இருக்கவும். அனைவரும் கவனமாக இருங்கள்.

எனவே, வயதானவர்கள் சறுக்கல் மற்றும் வீழ்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு வீழ்ச்சிக்கு பத்து வருட வாழ்க்கை செலவாகும். ஏனெனில் அனைத்து எலும்புகளும் தசைகளும் அழிக்கப்படுகின்றன. எனவே கவனமாக இருங்கள்.

அதிக நேரம் நிற்பதை தவிர்க்கவும்

செய்தி நீளமாகத் தோன்றலாம், ஆனால் குறிப்பாக முதியவர்கள் மற்றும் மூத்தவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் இதைப் படிப்பது மதிப்பு.

டாக்டர். ஷ்ருஜல் ஷா

எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்