Pages

Friday, May 23, 2025

Canara Angel Account

கனரா வங்கி பெண்களுக்கென பிரத்யேகமாக புதிய சேமிப்புக் கணக்கை தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் தெரிவித்துக் கொள்வதற்காகவே இந்த செய்தி. இந்தியாவிலேயே முதன்முறையாக இதுபோன்ற சிறப்பு சேமிப்புக் கணக்கு வங்கி தொடங்கப்படுவது தான் இதில் பெருமைக்குரிய விஷயம். கனரா ஏஞ்சல் எனப்படும் இந்தக் கணக்கு மூன்று வகைகளைக் கொண்டது என்னவென்றால், இந்த கணக்கை நீங்கள் திறக்கும் போது அதனுடன் இலவச புற்றுநோய் கவரேஜ் கிடைக்கும். 

3 லட்சம் முதல் 10 லட்சம் வரை உங்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால் இந்தக் கணக்கு இருந்தால் சிகிச்சை கிடைக்கும்.

இந்தக் கணக்கைத் திறப்பதற்கான வயது வரம்பு 70 ஆண்டுகள் மற்றும் அந்த வயது வரை புற்றுநோய் காப்பீடு கிடைக்கும்). 

கணக்கு வைத்திருப்பவருக்கு 8 முதல் 26 லட்சம் விபத்து இறப்பு காப்பீடு, கணவருக்கு 2 லட்சம் விபத்து இறப்பு காப்பீடு, கணவருக்கு 4 லட்சம் விமான விபத்து காப்பீடு, இலவச பிளாட்டினம் ஏடிஎம் கார்டு (ஆண்டு கட்டணம் இல்லாமல்), இலவச லாக்கர் செயல்பாடு (வரம்பற்றது).

இந்தக் கணக்கைத் திறக்கும் பெண்களுக்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்தக் கணக்கின் பலன்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தற்போது வழக்கமான சேமிப்புக் கணக்குகளைப் பயன்படுத்தும் பெண்கள் கூடிய விரைவில் ஏஞ்சல் கணக்குகளுக்கு மாற வேண்டும். 

இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நிறுவனம் 10 பைசா இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தாமல் புற்றுநோய் காப்பீட்டு பாலிசியை வழங்குவதாகவும், இந்த இலவச சலுகையை அனைத்து குடும்பங்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.

கனரா ஏஞ்சல் கணக்கிற்கு மாறுவதற்கு இந்த நாட்களில் 2 புகைப்படங்கள், அசல் ஆதார், பான் (ஏதேனும் இருந்தால்) மற்றும் இவை ஒவ்வொன்றின் நகலுடனும் கனரா வங்கிக் கிளைக்குச் செல்லவும்.

உண்மையுள்ள, 

மேலாளர் கனரா வங்கி

Sunday, May 18, 2025

தாயுமானவர் சுவாமிகள்

தாயுமானவர் சுவாமிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

திருச்சிராப்பள்ளியில் விஜயரகுநாத மன்னரிடம், "தலைமை கருவூல அதிகாரியாக" பணிபுரிந்தவர் அவர். 

ஆன்மீகவாதியான அவர், தத்துவ பாடல்கள் பல பாடி உள்ளார். "தாமரையிலை தண்ணீராக" வாழ்ந்த ஒரு மகான் அவர்.    

ஒருநாள் மன்னரை காண, காஷ்மீரில் இருந்து ஒரு பண்டிதர் வந்தார். அவர் மன்னருக்கு ஒரு விலை உயர்ந்த, வேலைப்பாடு மிக்க, "சால்வை" ஒன்றை பரிசாக அளித்தார்.  மன்னரோ,  தாயுமானவருக்கு அதை பரிசாக வழங்கினார். 

அரண்மனையில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில், "பனிக்காலம்" என்பதால், குளிர் காற்று வீசியது. 

முதியவள் ஒருத்தி, குளிரில் நடுங்கியபடி, சாலையோரமாக அமர்ந்திருந்தாள். தனக்கு மன்னர் அளித்த சால்வையை, "அந்த முதியவளுக்கு" போர்த்திவிட்டு, வீட்டிற்கு சென்று விட்டார் தாயுமானவர்.  

அதைக்கண்ட சிலர், மன்னரிடம் சென்று, "விலைமதிப்பற்ற சால்வையை, தெருவோரத்தில் இருந்த முதியவளுக்கு கொடுத்துவிட்டார். அதுவும் "நீங்கள், அவருக்கு, "அன்பளிப்பாக" கொடுத்ததை இப்படி கொடுக்கலாமா? என புகார் கூறினர்.     

கோபம் கொண்ட மன்னர், உடனடியாக, தாயுமானவரை அழைத்து வர ஆள் அனுப்பினார். 

தாயுமானவர்தான் "ஞானி" ஆயிற்றே! 

நேரம் தவறிய நேரத்தில் "மன்னர்" அழைக்கும் போதே காரணத்தை புரிந்து கொண்டார். 

அன்று இரவு மன்னரை சந்தித்தார். "சால்வை எங்கே?" என நேரடியாக கேட்க முடியாது அல்லவா? 

ஆகவே, "சால்வையை குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் ரசித்தார்களா?" என மறைமுகமாகக் கேட்டார் மன்னர். 

அரண்மனையிலிருந்து வெளியே போனதும், அதை "திருவானைக்கா அகிலேண்டஸ்வரிக்கு  அர்ப்பணித்து விட்டேன்" என்றார் தாயுமானவர். 

மன்னர் திகைத்தாலும், "சரி. தங்களுடன் அர்த்த ஜாம தரிசனம் செய்ய விரும்புகிறேன். கோவிலுக்கு செல்வோமா? என்றார். 

தாயுமானவரும், தயக்கம் இன்றி, சம்மதித்தார். தேர் புறப்பட்டது. 

இருவரும் "திருவானைக்கா கோவிலுக்கு" சென்றனர். அம்மன் சன்னதி முன்னால் நின்றனர். 

தாயுமானவருக்கு அளித்த சால்வை, அம்மனின் திருமேனியை அலங்கரித்தது. சிலிர்த்து போய்த் தாயுமானவர் கால்களில் விழுந்தார் மன்னர்‌.            

ஆம் ஏழைத்தாயின் மீது போர்த்திய சால்வை, இங்கே எப்படி வந்தது? எல்லோருக்குள்ளும் கடவுளை காண்பவர்களுக்கு, இது ஒரு அதிசயமா என்ன?    

இல்லை அல்லவா!                 

Saturday, May 17, 2025

NO MORE NEET EXAM

அன்பு மாணவச் செல்வங்களே நீட் நீட் என்று அனைவரும் டாக்டராகி ஊசி போட வேண்டும் என்பது தான் உங்களது எதிர்கால திட்டமா புரியவில்லை...

சரி உங்களில் எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...?

அப்படித் தெரியவில்லை என்றால் இதோ தெரிந்துகொள்ளுங்கள்...!

தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென  "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன.

இது போக, 

அஸ்ஸாம் பல்கலைகழகம்,

சில்சார் அஸ்ஸாம் மாநிலம்,  

பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம்,

பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி,

காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம்,

சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என

பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

பொதுவாக இந்த  பல்கலைகழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை.

தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே இருக்கிறது. 

இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கான அட்மிஷன் தருகிறது. 

Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA EXONOMICS.

இது போக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸூகளும், எம்பிஏ கோர்ஸுகளும்,  பிஎச்டி கோர்ஸுகளும்* தனித்தனியே நடத்தப்படுகின்றன. 

இங்கே படிக்கும் மாணவர்களில் பாதி பேர் கேரளாவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மீதிப்பேரில் மற்ற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாடு உட்பட.

ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால் முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள் வருகிறது.

இது போக ஆண்கள், பெண்களுக்கு  தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது.

ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவே.

ஆனால் இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர்களுக்கு, மாணாக்கர்களுக்கு தெரியவே இல்லை என்பது வருத்தத்துக்குரிய விசயம்.

எப்படி இந்த பல்கலை கழகங்களில் சேர்ந்து படிப்பது...

18 மத்திய பல்கலை கழகங்ளில் எந்த பல்கலைகழகத்திலும் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்க

ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு தான் நடத்தப்படுகின்றது.  

(cucetexam) Central University common entrance exam. 

+2 முடித்து 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது.

நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு,  கவுன்ஸிலிங் மூலம் மாணாக்கர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றன.

நேற்று முதல் இந்த தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

www.cuet.samarth.ac.nic.in 

மேலும் எல்லா விவரங்களும் இந்த தளத்தில் இருக்கின்றன.

எந்தெந்த பல்கலை கழகங்களில், என்னென்ன கோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்பதை அறிய அந்தந்த பல்கலை கழகத்தின் இணைய தளத்தில் சென்று பார்க்கலாம்.  பல்கலை கழகங்களின் பெயர்களும் இணைய தள முகவரியுடன் மேற் சொன்ன தளத்திலேயே விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் குறித்த, கூடுதல் விவரங்களை அறிய விண்ணப்பிப்பது தொடர்பான தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு

 011- 40759000 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

படிப்புகள், கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு 

அசாம் - 9476897510, 9401847943 

ஆந்திரப்பிரதேசம் - 9640884806, 7598413970, 

குஜராத் – 079 - 23977446, 

அரியானா – 9212884894, 

ஜம்மு - 8082197957, 9796665505, 8178118948, 

ஜார்கண்ட் – 7070630510, 

கர்நாடகா – 9972191661, 9242355484, 

கேரளா - 0467 - 2309467, 0467 – 2309460, 

பஞ்சாப் - 9464269330, 

இராஜஸ்தான் – 7014588311, 

தெற்கு பீகார் - 0631-2229514, 2229518, 

தமிழ்நாடு - 04366 - 277337 எனும் மத்திய பல்கலைக்கழகங்களின் அலைபேசி / தொலைபேசி எண்களில் அலுவலக நாள்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.

cucet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.

நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.

தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. 

இதைப் படித்தால் Group-1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...

சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ.5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ.20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், 

ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.

அக்ரி(விவசாயம்) பாடம் பயில விரும்புபவர்கள்  திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயல்வது நன்மையளிக்கும்.

ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....

திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு.g

மேலும், இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...

இந்த தகவலை படியுங்கள்....

Neet, JEE எழுதும் மாணவர்கள் மற்றும் commerce students இதை அனைவருக்கும் உங்கள் வலைதளத்தில் பகிருங்கள்.

இது ஒரு வரப்பிரசாதம் தயவுசெய்து இதை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேருங்கள்

Wednesday, May 14, 2025

மிகப்பெரிய அன்னதான மண்டபம்

கோடீஸ்வரர் ஆக இருந்தாலும் தர்ம தரிசனம்...

ஆசியாவின் மிகப்பெரிய அன்னதான மண்டபத்திற்கு வித்திட்ட பக்தர்.

திருமலையில் நித்ய அன்னதானம் மிகச்சிறப்பாக கோடானு கோடி பக்தர்களுக்கு வயிறார சாப்பாடு போடப்பட்டு வருகிறது. 

ஆனால் ஒவ்வொரு முறையும் பக்தர்கள் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை ஏனெனில் முன் பந்தியில் குறைந்த அளவே மக்கள் அமர்ந்து சாப்பிடும் அளவில் மண்டபம் அமைந்து இருந்தது.

நம் கருணைக்கடல் திருவேங்கடவன் மெய் சிலிர்க்கும் ஓர் அற்புத நாடகத்தை நடத்தினார்.

ஒருநாள் மதியம் 2.00 மணி அளவில் திருமலை E.O அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார்.

அங்கிருந்த உதவி செயலாட்சி தலைவரிடம் அய்யா ஒரு வேண்டுகோள், இங்கு ஸ்ரீனிவாசனை தரிசனம் செய்த பக்தர்கள் அன்னதான கூடத்தில் நீண்ட நேரம் காத்து இருக்கிறார்களே கொஞ்சம் பெரிய மண்டபம் இருந்தால் இன்னும் நிறைய பேர் சாப்பிட முடியும் அல்லவா என்று கூறினார்.

அதற்கு அவர் நீங்கள் வரிசையில் நின்று சாப்பிட முடிந்தால் சாப்பிடலாம் இல்லை என்றால் செல்லுங்கள் என்று சற்று கோபத்துடன் கூறினார்.

ஐயையோ ! 

நான் எனக்காக சொல்லவில்லை ஸ்ரீனிவாசனின் பக்தர்களுக்காகத்தான் கூறினேன் என்றார். 

அப்படி என்றால் நீங்களே ஒரு மண்டபம் கட்டி கொடுங்கள் அதில் நீங்கள் சொன்னபடி சாப்பாடு போடலாம் என்றார்.

உடனே அந்த பக்தர் சரி புதிய அன்னதான கூடம் கட்டுவதற்கு என்ன செலவு ஆகும் என்றார்.

அந்த அதிகாரி மிகுந்த கோபத்துடன் ஓஹோ அப்படியா ஒரு 25 கோடி கொடுங்கள் பெருசா மண்டபம் கட்டி உங்கள் பெயரிலேயே சாப்பாடு போடலாம் போய் வேலைய பாருங்க சார் என்றார்.

உடனே அந்த பக்தர் தான் வைத்திருந்த கைப் பையில் இருந்த காசோலை புத்தகத்தை எடுத்து 25 கோடிக்கு ஒரே காசோலையாக திருமலை தேவஸ்தானத்தின் பெயரில் எழுதி அந்த அதிகாரியிடம் கொடுத்தார்.

ஆனால் அந்த உதவி செயலாட்சி தலைவர் வாயடைத்து போய் மிகுந்த அதிர்சியுடன் வேர்த்து விருவிருக்க விரைந்து சென்றுசெயலாட்சி தலைவரை அழைத்து வந்து நடந்தவற்றை கூறினார்.

அவரும் ஆடிப்போனார்.

பின்னர் தாங்கள் யார் என்று மிகுந்த மரியாதையுடன் அவரை அமர வைத்து கேட்டார்.

அவர் அய்யா நான் ஆரம்ப காலத்தில் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டபட்ட குடும்பம் .

அப்படி இருந்தும் எழுமலை ஆண்டவன் மீது மிகுந்த பாசத்துடன் பக்தியும் வைத்து இருந்தேன் .

திருமலைக்கு ஒவ்வொரு முறையும் நடந்தே வருவேன். 

தர்ம தரிசனத்தில்எவ்வளவு நேரம் ஆனாலும் என் அப்பன் ஏழுமலையானை பொறுமையுடன்தரிசனம் செய்து, 

எனக்கு ஒருவழி காட்டி நேர்மையுடன் நான் வாழ ஒரு தொழில் வேண்டும் அதில் உனக்கு லாபத்தில் சரி பாதி உன்னிடம் சேர்க்கிறேன் தந்தையே என்று வேண்டி பின்னர் இலவச சாப்பாடு வரிசையில் நின்று என் வயிறார நான் சாப்பிட்டு செல்வேன்.

பின்னர் நடைபாதை வழியாக மலையிறங்கி வீட்டிற்கு செல்வேன்.

நாட்கள் செல்ல செல்ல பின்னர் என் தொழில் வளர்ச்சி அடைந்து இன்று மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தாலும் இது எல்லாம் என் அப்பன் எழுமலையான் சொத்து.

இன்று வரை நான் தனியாகவே ஒவ்வொரு முறையும் நடந்தே மலைக்கு வந்து தர்மதரிசனத்தில் நின்று தரிசனம் செய்து அவருக்கு சேர வேண்டிய பங்கை உண்டியில் போட்டு விட்டு அன்னதான கூடத்தில் வரிசையில் நின்று ஆனந்தமாய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு செல்வேன் .

நீங்கள் பலமுறை தினசரி பத்திரிக்கையில் அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் உண்டியலில் இரண்டு கோடி மூன்று கோடி ஒரே பண்டிலாக

போட்டுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளீர்கள் .

அதை நான் தான் போட்டேன் . 

ஏனென்றால் இதை தேவஸ்தான அதிகாரி வாயிலாக கொடுத்திருந்தால் என்னை மிகுந்த மரியாதை செய்து சிறப்பு தரிசனம் அளித்திருப்பார்கள் .

ஆனால் அதை நான் விரும்ப வில்லை.

எந்த சூழ் நிலையிலும் என்னுடைய தந்தைக்கும் எனக்கும் உள்ள அந்த ஆரம்ப கால நினைவுகள் மாறிவிடக்கூடாது . 

இந்த பணம் என்னை என் பழைய வாழ்க்கையை மாற்றினாலும் நான் என்னுடைய நன்றியை மறக்காமல் இன்றும் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் நான் எப்படி திருமலைக்கு வந்தேனோ அதை போலவே இன்றும் நடந்தே வந்து நடந்தே செல்கிறேன் .

என் நண்பர்களையோ என் உறவினர்களையோ நான் அழைத்து வந்தால்அவர்கள் எண்ணப்படி நான் மாற வேண்டும் .

இவ்வளவு வசதி இருந்தும் நடந்து செல்வதா , 

தர்ம தரிசனத்தில் காத்து இருப்பதா 

இலவச சாப்பாட்டிற்காக வரிசையில் நிற்பதா என்று புலம்பி தள்ளுவார்கள்.

அதனால் தான் எப்பொழுதும் தனியாகவே வருவேன் .

இன்று தரிசனம் முடிந்து அன்னதான கூடத்தில் வரிசையில் நிற்கும் போது

நிறைய பேர் வரிசையில் காத்து நிற்பதை பார்த்து இன்று திடீரெனஎன் மனதில் இதை விட பெரிய மண்டபம் இருந்தால் ஒரே நேரத்தில் நிறைய பக்தர்கள் அமர்ந்து சாப்பிட முடியும் அல்லவா?

இந்த எண்ணத்தை என்னில் உருவாக்கியதும் என் தந்தை திருவேங்கடவன் தான் .

அவர் சொல்ல சொல்ல அவரை சுற்றி இருந்த அதிகாரிகளின் கண்களில்நீர் அருவியாய் பெருகி பெருமாளின் லீலைகளையும் ,அவர் பக்தரின் பக்தியையும் பார்த்து வாயடைத்து அமைதியாய் நின்றிருந்தனர் 

அந்த அறையில் மின் விசிறியின் சப்தம் மட்டுமே இருந்தது.

பின்பு தான் அவர் ஆந்திரமாநிலத்தில் ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று அறிந்து ஆச்சர்யத்துடன் அவரிடம் உங்கள் விருப்ப படி புதிய அன்னதான கூடம் கட்டி உங்கள் பெயரையே அதற்கு வைத்து விடலாம் என்றனர்.

வேண்டாம்! வேண்டாம் ! சாதாரண ஏழை என்னை செல்வந்தனாக வாழவைத்தது இந்த திருமலை அப்பனே இந்த பணம் என்னுடையதல்ல எழுமலையானுக்கு சொந்தமானது.

தேவஸ்தானம் விரும்பும் பெயரில் நடக்கட்டும் என்றதும்,அதிகாரிகள் மெய்சிலிர்த்து போனார்கள்.

ஒரே வருடத்தில் கட்டப்பட்ட இந்த புதிய அன்னதான கூடம்ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு கட்டப்பட்டு அதற்கு "மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா" அன்னதான கூடம் என்று பெயரிடப்பட்டு உள்ளது . 

இது ஆசியாவிலேயே பெரிய அன்னதான கூடமாகும்.

🙏🙏🙏