Pages

Wednesday, April 19, 2017

16 வகை பூஜைகள்

பூஜையில் இறைவனுக்கு செய்யயப்படும் 18 உபசாரங்கள், ஷோடச உபசாரங்கள் எனப்படும்.  அவை:

1. ஆவாஹனம்: இறைவனை வரவேற்று கொடியேற்றம் செய்தல்.

2. ஸ்தாபனம்: இறைவனை விக்ரகத்தில் எழுந்தருள வேண்டுமென பிரார்த்தித்தல்.

3. சன்னிதானம்: விக்கிரகமாக பூஜிக்கப்படும் மூர்த்தி நமக்கு அனுக்கிரகம் செய்யும் முறையும் பூஜை செய்பவர்கள் அருள் பெரும் முறையாகும்.

4. சந்நிரோதனம்: பூஜை முடியும்வரை சாந்நித்யம் செய்யுமாறு இறைவனைப் பணிந்து கேட்டுக் கொள்ளுதல்.

5. அவகுண்டனம்: விக்ரகத்தைச் சுற்றிக் கலச மந்திரத்தால் மூன்று அகழ் உண்டாக்கி தடைகள் வராமல் அம்மந்திரத்தாலேயே அதனை மூடுதல். 

6. அபிஷேகம்: எண்ணெய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சை சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம் , பத்ரோதகம், கும்போதகம், ஆகியவற்றால் அபிஷேகம் செய்தல்.  

7. பாத்யம்: சந்தானம், அருகு, வெண்கடுகு, விளாமிச்சை, இந்த நான்கு பொருள்களையும் நீரில் கலந்து இறைவன் திருப்பாதத்தில் விடல்.

8. ஆசமநீயம்: நீரில் ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம், நாவற்பழம், ஜாதிக்காய், குங்குமப்பூ போன்ற பொருள்களை இட்டு சம்ஹிதா மந்திரம் சொல்லுதல்.

9. அர்க்கியம்: இறைவனுக்குரிய மூலமந்திரம் கூறி, தர்ப்பை நுனி, பால், அரிசி, புஷ்பம் முதலியவை கலந்த நீரால் அர்க்கியம் கொடுத்தல்.

10. மாலை சாத்தல்: புஷ்பமாலைகளை சாத்துதல்.

11. தூபம்: அகில், கீழாநெல்லி, சாம்பிராணி, குங்கிலியம் முதலியவற்றால் தூபமிடுதல்.

12. தீபம்: மணி அடித்து மந்திரங்கள் கூறி கிரீடம் முதல் பாதம் வரை நெய் தீபம் காட்டுதல்.

13. நைவேத்தியம்: சுத்த அன்னம், சக்கரைப் பொங்கல், வெண்பொங்கல் இவற்றில் ஏதாவது ஒன்றினை நைவேத்தியம் செய்தல்.

14. பாநீயம்: வாசனை உள்ள நீரை சமர்ப்பித்தல்.

15. ஜப சமர்ப்பணம்: மூல மந்திரத்தை 108 தடவை சொல்லுதல்.

16. தீபாராதனை: இது 16 வகைப்படும். தூபம் காட்டுவதில் இருந்து கண்ணாடி காட்டுவது, விசிறி வீசுவது வரை.
தீபாராதனையின் தத்துவம்: பஞ்ச பூதங்கள் ஒன்றில் ஒன்று ஒடுங்கி இறுதியில் கற்பூர தீபம் போல் எரிந்து எவ்வித மிச்சமும் இன்றி இறைவனோடு ஒன்றி விடுதல் ஆகும்.



 




 
  


No comments:

Post a Comment