Pages

Sunday, June 29, 2025

புற்று நோய் மருந்து

புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!!

முடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்..

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

சோற்று கற்றாழை 400 கிராம்

சுத்தமான தேன் 500 கிராம்

whisky (or) brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)

தயாரிப்பு முறை:

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்

அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது.

மருந்தை உட்கொள்ளும் விதம்:

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும்.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும்.

மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.

முடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.

Friday, June 20, 2025

சதாபிஷேகம்

எமதர்மனின் நான்கு பற்கள் ஆபத்தானவை. அவை உக்ர ரதம், ருத்ர ரதம், பீம ரதம், விஜய ரதம். ரதம்’ என்பது பல்லைக் குறிக்கும். இவை ஒவ்வொன்றினாலும் குறிப்பிட்ட வயதில் கண்டம் ஏற்படுவதால் ஆயுள் செய்வது அவசியம். 59 வது வயதில் உக்ரரத சாந்தி, 69ல் ருத்ரரத சாந்தி, 70 ல் பீமரத சாந்தி, 75ல் விஜயரத சாந்தி ஹோமம் செய்வர்....

"1. பீம சாந்தி = 55ஆவது வயது ஆரம்பம்.

2. உக்ரரத சாந்தி = 60ஆவது வயது ஆரம்பம்,

3. ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி = 61ஆவது வயது ஆரம்பம்.

4. பீமரத சாந்தி = 70ஆவது வயது ஆரம்பம்.

5. ரத சாந்தி = 72ஆவது வயது ஆரம்பம்.

6. விஜய சாந்தி = 78ஆவது வயது ஆரம்பம்.

7. சதாபிஷேகம் = 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில்.

8. ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) = பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால்.

9. ம்ருத்யுஞ்ஜய சாந்தி = 85ஆவது முதல் 90க்குள்.

10. பூர்ணாபிஷேகம் = 100ஆவது வயதில் சுபதினத்தில்"

ஒருவருக்கு அறுபத்து ஒன்பது ஆண்டுகள் முடிந்து எழுபதாவது ஆண்டு தொடங்கும் பொழுது ஒரு ஆபத்து ஏற்படலாம். அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு, பிள்ளையின் மகனான பேரனது பிள்ளையை (ப்ரபௌத்ரனை) காண்பதற்காகவும், ஆயிரம் பூர்ண சந்திரனைக் கண்டு முடிப்பதற்காகவும், நூற்றாண்டு காலம் வாழ வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படும் சாந்தி ஹோமம் பீமரத சாந்தியாகும். இதில் மாங்கல்யதாரணம் விதிக்கப்படவில்லை. உக்ரர், பீமர் இவர்கள் ருத்ரமூர்த்திகள் ஆவர்.

எழுபத்தி எட்டாவது வயது தொடங்கும் பொழுது செய்யப்படுவது விஜயரதசாந்தி எனப்படும். இதனை செய்து கொள்வதால், ஒரு தசாப்தம் எனப்படுகிற ஒன்பது கிரகங்களின் முழுமையான காலதசையாகிய நூற்றிருபது ஆண்டுகள் நன்கு வாழ்வர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

எழுபத்து எட்டாவது வயதில் செய்யப் பட்ட விஜயரத சாந்திக்குப் பிறகு- அதாவது எண்பது ஆண்டுகளைக் கடந்து மேலும் எட்டு மாதங்கள் முடியும் காலகட்டத்தில் செய்யக்கூடியது ஸஹஸ்ர சந்திர தரிசன சாந்தியாகும். இங்கு சிலர் பிறைச் சந்திரனைக் காண்பதாகக் கூறுகின்றனர். 

முழுநிலவு தினமான மாதப் பௌர்ணமியே கண்டு தியானித்து வழிபடத்தக்கது. எனவே முழுநிலவைக் காண்பதாக கணக்கிடுவதே சிறந்ததாகும். சிலர் அன்றே சதாபிஷேகம் செய்துகொள்கின்றனர்.

80 வயதுமுதல் 100 வயது வரையுள்ள காலகட்டத்தில், அத்தம்பதியை சிவன்- பார்வதியாகவே கண்டு, அவர்கள் தீட்சை பெறாதிருந்தாலும் கூட அதனை செய்து முடித்து, சிவசக்தி ஸ்வரூபமாகக் கருதி கலசநீரால் முழுக் காட்டி ஆசி பெறுவதே சதாபிஷேகம் எனப்படும். இது மற்றதைப்போல் சாந்தி வகை ஆகாது. சதாபிஷேகம் என்பது தம்பதிக்கு சிவனாரின் தகுதியை அங்கீகரித்து, சிவத்துவ சம்பாதக பட்டாபிஷேகமாக செய்யப் படுவதாகும்.

இத்தகைய வழிமுறைகளெல்லாம், மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்து பிறவிப் பயனை அடைவதற்காகவே வகுக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அறிய வேண்டும்.

Saturday, June 14, 2025

கோனேரி ராஜபுரம், கும்பகோணம்

 


புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…!

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.

அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.

பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.  

சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.

மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது.

திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.

படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.

இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது.

உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.

ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

அந்தப்பகுதி, அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.  

“வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.

கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!

உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் “என்று சீறினான் அரசன்.

அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.

இது ஆறாவது சிலை.  

ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, “என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு…! “என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.  

உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.

இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள்.  

“அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு” என்று கேட்டார் அந்தணர்.  

சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னிடம் போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.  

“அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன்.  

அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் “என்று சொன்னான்.

மறுபடியும் வேலையில் மூழ்கினான். வந்தவர் கைதட்டி அழைத்து “எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விடுவேன் என்று தோன்றுகிறது. எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு “என்றான்.

“நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது…?

கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்” என்று பதட்டத்தோடு சொல்ல.

“சரி அதையே குடித்துக் கொள்கிறேன்” என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்..

சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம்.

ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.  

கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை.

உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்…! யோசித்தார்கள்…!

வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.  

ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.

நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.

ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான்.

”உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது பார்” என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.

சிற்பி இல்லை என்று தலையாட்டினார், “என்ன சொல்ல வருகிறாய்?” மன்னன் மறுபடியும் சீறினான்.

”இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார்,” என்று சொல்ல….  

“இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே” என்று மறுபடியும் சீறினான்.

”இல்லை அரசே .இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல,” என்று பணிவாக சொல்ல, அரசன் கெக்கலித்து கிண்டலாகச் சிரித்தான்.

உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.

பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது! தரையை நனைத்தது.

மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.  

இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.

எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.

வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.  

கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர்  திருநல்லம். இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.

ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும்.

உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.

சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகி விடுவார்கள்!

கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான்.

அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர்!

தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.

தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால், வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.

இறைவி பெயர் தேகசௌந்தரி,  

ஸ்தலமரம் அரசு,  

தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.

கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கி வைத்துவிடவேண்டும். நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும்.

குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம்.  

எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள்!

கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்களேன்!

திருநல்லம் ஒரு முறையேனும் சென்று வாருங்கள்.சிவ அழகில் சொக்கிப் போய் வருவது கண்கூடான உண்மை.

திருச்சிற்றம்பலம்,

திருச்சிற்றம்பலம்,

திருச்சிற்றம்பலம்.

Monday, June 02, 2025

சோறே சொர்க்கம்

சகல சாப்பாட்டு பிரியர்களுக்கு சமர்ப்பணம்.

பல் முளைக்கா பிஞ்சுகளுக்கு பருப்பு சாதமே சொர்க்கம்.

மார்கழி மாத குளிரில் மணக்கும் வெண்பொங்கல் சொர்க்கம்

கார மிளகு தாளித்த பொங்கலுடன் கத்திரிக்காய் கொத்ஸ்சே சொர்க்கம்.

பூரிக்கு, உருளை கிழங்கு மசாலா, தோசைக்கு வெங்காய சட்னி, இட்லிக்கு மிளகாய் பொடி + நல்ல எண்ணெய், பிரியாணிக்கு தயிர் பச்சடி, வெண் பொங்கலுக்கு கத்தரிக்காய் கொத்சு, வாழைக்காய் பஜ்ஜிக்கு தேங்காய் சட்னி, சப்பாத்திக்கு  குருமா சொர்க்கம்.

பரங்கிக்காய் சாம்பாருக்கு - பீன்ஸ் பருப்பு உசிலி சொர்க்கம்

கதம்ப சாம்பாருக்கு - பொடியிடிச்ச கத்திரிக்காய் கறி சொர்க்கம்

குடைமிளகாய் சாம்பாருக்கு கோஸ் பட்டாணி கறி சொர்க்கம்

உலகிலுள்ள அத்தனை சாம்பாருக்கும் உருளைக் காரகறியே சொர்க்கம்

வெந்தய குழம்பிற்கு வெண்டைக்காய் கறி சொர்க்கம்.

சுண்டைக்காய் வத்த குழம்பிற்கு சுட்ட அப்பளமே சொர்க்கம்

பத்திய மிளகு குழம்பிற்கு பருப்பு துவையலே சொர்க்கம்.

மத்தியான தயிர் சாதத்திற்கு மாவடு இருந்தால் சொர்க்கம்

அடைக்கு வெல்லத்தோடு அவியல் இருந்தா சொர்க்கம்.

மீந்து போன அடைமாவில் Brilliant குணுக்கு சொர்க்கம்.

ஒருவாரமான தோசைமாவில் ஊத்தப்பமே சொர்க்கம்

பசியில் துடிப்பவனுக்கு பழைய சோறே சொர்க்கம்.

Friday, May 23, 2025

Canara Angel Account

கனரா வங்கி பெண்களுக்கென பிரத்யேகமாக புதிய சேமிப்புக் கணக்கை தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் தெரிவித்துக் கொள்வதற்காகவே இந்த செய்தி. இந்தியாவிலேயே முதன்முறையாக இதுபோன்ற சிறப்பு சேமிப்புக் கணக்கு வங்கி தொடங்கப்படுவது தான் இதில் பெருமைக்குரிய விஷயம். கனரா ஏஞ்சல் எனப்படும் இந்தக் கணக்கு மூன்று வகைகளைக் கொண்டது என்னவென்றால், இந்த கணக்கை நீங்கள் திறக்கும் போது அதனுடன் இலவச புற்றுநோய் கவரேஜ் கிடைக்கும். 

3 லட்சம் முதல் 10 லட்சம் வரை உங்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால் இந்தக் கணக்கு இருந்தால் சிகிச்சை கிடைக்கும்.

இந்தக் கணக்கைத் திறப்பதற்கான வயது வரம்பு 70 ஆண்டுகள் மற்றும் அந்த வயது வரை புற்றுநோய் காப்பீடு கிடைக்கும்). 

கணக்கு வைத்திருப்பவருக்கு 8 முதல் 26 லட்சம் விபத்து இறப்பு காப்பீடு, கணவருக்கு 2 லட்சம் விபத்து இறப்பு காப்பீடு, கணவருக்கு 4 லட்சம் விமான விபத்து காப்பீடு, இலவச பிளாட்டினம் ஏடிஎம் கார்டு (ஆண்டு கட்டணம் இல்லாமல்), இலவச லாக்கர் செயல்பாடு (வரம்பற்றது).

இந்தக் கணக்கைத் திறக்கும் பெண்களுக்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்தக் கணக்கின் பலன்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தற்போது வழக்கமான சேமிப்புக் கணக்குகளைப் பயன்படுத்தும் பெண்கள் கூடிய விரைவில் ஏஞ்சல் கணக்குகளுக்கு மாற வேண்டும். 

இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நிறுவனம் 10 பைசா இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தாமல் புற்றுநோய் காப்பீட்டு பாலிசியை வழங்குவதாகவும், இந்த இலவச சலுகையை அனைத்து குடும்பங்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.

கனரா ஏஞ்சல் கணக்கிற்கு மாறுவதற்கு இந்த நாட்களில் 2 புகைப்படங்கள், அசல் ஆதார், பான் (ஏதேனும் இருந்தால்) மற்றும் இவை ஒவ்வொன்றின் நகலுடனும் கனரா வங்கிக் கிளைக்குச் செல்லவும்.

உண்மையுள்ள, 

மேலாளர் கனரா வங்கி

Sunday, May 18, 2025

தாயுமானவர் சுவாமிகள்

தாயுமானவர் சுவாமிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

திருச்சிராப்பள்ளியில் விஜயரகுநாத மன்னரிடம், "தலைமை கருவூல அதிகாரியாக" பணிபுரிந்தவர் அவர். 

ஆன்மீகவாதியான அவர், தத்துவ பாடல்கள் பல பாடி உள்ளார். "தாமரையிலை தண்ணீராக" வாழ்ந்த ஒரு மகான் அவர்.    

ஒருநாள் மன்னரை காண, காஷ்மீரில் இருந்து ஒரு பண்டிதர் வந்தார். அவர் மன்னருக்கு ஒரு விலை உயர்ந்த, வேலைப்பாடு மிக்க, "சால்வை" ஒன்றை பரிசாக அளித்தார்.  மன்னரோ,  தாயுமானவருக்கு அதை பரிசாக வழங்கினார். 

அரண்மனையில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில், "பனிக்காலம்" என்பதால், குளிர் காற்று வீசியது. 

முதியவள் ஒருத்தி, குளிரில் நடுங்கியபடி, சாலையோரமாக அமர்ந்திருந்தாள். தனக்கு மன்னர் அளித்த சால்வையை, "அந்த முதியவளுக்கு" போர்த்திவிட்டு, வீட்டிற்கு சென்று விட்டார் தாயுமானவர்.  

அதைக்கண்ட சிலர், மன்னரிடம் சென்று, "விலைமதிப்பற்ற சால்வையை, தெருவோரத்தில் இருந்த முதியவளுக்கு கொடுத்துவிட்டார். அதுவும் "நீங்கள், அவருக்கு, "அன்பளிப்பாக" கொடுத்ததை இப்படி கொடுக்கலாமா? என புகார் கூறினர்.     

கோபம் கொண்ட மன்னர், உடனடியாக, தாயுமானவரை அழைத்து வர ஆள் அனுப்பினார். 

தாயுமானவர்தான் "ஞானி" ஆயிற்றே! 

நேரம் தவறிய நேரத்தில் "மன்னர்" அழைக்கும் போதே காரணத்தை புரிந்து கொண்டார். 

அன்று இரவு மன்னரை சந்தித்தார். "சால்வை எங்கே?" என நேரடியாக கேட்க முடியாது அல்லவா? 

ஆகவே, "சால்வையை குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் ரசித்தார்களா?" என மறைமுகமாகக் கேட்டார் மன்னர். 

அரண்மனையிலிருந்து வெளியே போனதும், அதை "திருவானைக்கா அகிலேண்டஸ்வரிக்கு  அர்ப்பணித்து விட்டேன்" என்றார் தாயுமானவர். 

மன்னர் திகைத்தாலும், "சரி. தங்களுடன் அர்த்த ஜாம தரிசனம் செய்ய விரும்புகிறேன். கோவிலுக்கு செல்வோமா? என்றார். 

தாயுமானவரும், தயக்கம் இன்றி, சம்மதித்தார். தேர் புறப்பட்டது. 

இருவரும் "திருவானைக்கா கோவிலுக்கு" சென்றனர். அம்மன் சன்னதி முன்னால் நின்றனர். 

தாயுமானவருக்கு அளித்த சால்வை, அம்மனின் திருமேனியை அலங்கரித்தது. சிலிர்த்து போய்த் தாயுமானவர் கால்களில் விழுந்தார் மன்னர்‌.            

ஆம் ஏழைத்தாயின் மீது போர்த்திய சால்வை, இங்கே எப்படி வந்தது? எல்லோருக்குள்ளும் கடவுளை காண்பவர்களுக்கு, இது ஒரு அதிசயமா என்ன?    

இல்லை அல்லவா!                 

Saturday, May 17, 2025

NO MORE NEET EXAM

அன்பு மாணவச் செல்வங்களே நீட் நீட் என்று அனைவரும் டாக்டராகி ஊசி போட வேண்டும் என்பது தான் உங்களது எதிர்கால திட்டமா புரியவில்லை...

சரி உங்களில் எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...?

அப்படித் தெரியவில்லை என்றால் இதோ தெரிந்துகொள்ளுங்கள்...!

தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென  "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன.

இது போக, 

அஸ்ஸாம் பல்கலைகழகம்,

சில்சார் அஸ்ஸாம் மாநிலம்,  

பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம்,

பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி,

காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம்,

சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என

பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

பொதுவாக இந்த  பல்கலைகழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை.

தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே இருக்கிறது. 

இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கான அட்மிஷன் தருகிறது. 

Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA EXONOMICS.

இது போக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸூகளும், எம்பிஏ கோர்ஸுகளும்,  பிஎச்டி கோர்ஸுகளும்* தனித்தனியே நடத்தப்படுகின்றன. 

இங்கே படிக்கும் மாணவர்களில் பாதி பேர் கேரளாவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மீதிப்பேரில் மற்ற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாடு உட்பட.

ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால் முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள் வருகிறது.

இது போக ஆண்கள், பெண்களுக்கு  தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது.

ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவே.

ஆனால் இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர்களுக்கு, மாணாக்கர்களுக்கு தெரியவே இல்லை என்பது வருத்தத்துக்குரிய விசயம்.

எப்படி இந்த பல்கலை கழகங்களில் சேர்ந்து படிப்பது...

18 மத்திய பல்கலை கழகங்ளில் எந்த பல்கலைகழகத்திலும் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்க

ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு தான் நடத்தப்படுகின்றது.  

(cucetexam) Central University common entrance exam. 

+2 முடித்து 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது.

நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு,  கவுன்ஸிலிங் மூலம் மாணாக்கர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றன.

நேற்று முதல் இந்த தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

www.cuet.samarth.ac.nic.in 

மேலும் எல்லா விவரங்களும் இந்த தளத்தில் இருக்கின்றன.

எந்தெந்த பல்கலை கழகங்களில், என்னென்ன கோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்பதை அறிய அந்தந்த பல்கலை கழகத்தின் இணைய தளத்தில் சென்று பார்க்கலாம்.  பல்கலை கழகங்களின் பெயர்களும் இணைய தள முகவரியுடன் மேற் சொன்ன தளத்திலேயே விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் குறித்த, கூடுதல் விவரங்களை அறிய விண்ணப்பிப்பது தொடர்பான தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு

 011- 40759000 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

படிப்புகள், கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு 

அசாம் - 9476897510, 9401847943 

ஆந்திரப்பிரதேசம் - 9640884806, 7598413970, 

குஜராத் – 079 - 23977446, 

அரியானா – 9212884894, 

ஜம்மு - 8082197957, 9796665505, 8178118948, 

ஜார்கண்ட் – 7070630510, 

கர்நாடகா – 9972191661, 9242355484, 

கேரளா - 0467 - 2309467, 0467 – 2309460, 

பஞ்சாப் - 9464269330, 

இராஜஸ்தான் – 7014588311, 

தெற்கு பீகார் - 0631-2229514, 2229518, 

தமிழ்நாடு - 04366 - 277337 எனும் மத்திய பல்கலைக்கழகங்களின் அலைபேசி / தொலைபேசி எண்களில் அலுவலக நாள்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.

cucet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.

நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.

தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. 

இதைப் படித்தால் Group-1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...

சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ.5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ.20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், 

ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.

அக்ரி(விவசாயம்) பாடம் பயில விரும்புபவர்கள்  திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயல்வது நன்மையளிக்கும்.

ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....

திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு.g

மேலும், இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...

இந்த தகவலை படியுங்கள்....

Neet, JEE எழுதும் மாணவர்கள் மற்றும் commerce students இதை அனைவருக்கும் உங்கள் வலைதளத்தில் பகிருங்கள்.

இது ஒரு வரப்பிரசாதம் தயவுசெய்து இதை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேருங்கள்