வெந்த சோத்த திங்கணும், விதி முடிஞ்சா சாகணும்.
ஒரு ப்ராம்ஹணரின் அங்கலாய்ப்பு..........Just a fun post !
எம்பாட்டுக்கு நன்னா சாப்ட்டு நன்னா தூங்கிண்டு ராமா க்ருஷ்ணான்னு நன்னா போய்ண்ட்ருந்த லைஃப்ல ஹெல்த்த பத்தி சொல்றேன்னு ஆளாளுக்கு கிளம்பி எல்லாரும் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சா பாருங்கோ....அன்னிக்கு பிடிச்ச சனி..சனியன் தான்...
ஏழரை நாட்டு சனியாவது மனுஷாளுக்கு ஆயிஸ்ல 3 தரத்க்கு மேல வரவேமாட்டான், அப்படியே மூணு தரம் வந்தாலும் எழரை வருஷம் முடிஞ்சு போய்ட்டு முப்பது வருஷம் கழிச்சுதான் திரும்ப வருவன்.
ஜலதோஷமும் மூணே நாள் தான்.
ஆனா இந்த ஹெல்த் அட்வைஸ்ங்கிற பேர்ல ஆளாளுக்கு அடிக்கற கூத்து இருக்கே..... அப்பாப்பா அது ஆய்ஸ்ஸுக்கும் அக்கப்போர்தான் போங்கோ...
ஒரு நா, பொழுது விடிஞ்சா அடையற வரைக்கும் நான் படற கஷ்டம் நாய்கூடப் படாது, (இதுவும் ப்டாதுதான்)... போங்கோ... நன்னா தெரிஞ்சுக்கோங்கோ...
சரி..கொஞ்சம் கேக்கறேளா, ரொம்ப தேங்க்ஸ்.
சரி, சொல்றேன் *சிரிக்காம கேளுங்கோ*, சரியா.
விடிகார்த்தாலே எழுந்தோடனே வெறும் வயத்லே முதல்ல ஒரு டம்ளர் ஜலம் குடிக்கணும்னு சொன்னா... சரி..குடிச்சேன்...அப்றம், இல்லே ரெண்டு டம்ளர் வெந்நீர் தான் குடிக்கணும்னா...சரி..குடிச்சேன்...அப்றம், இல்லை வெறும் வெந்நீர் இல்லை.. அதிலே அரைமூடி எலுமிச்சம்பழத்தை பிழிஞ்சு, ரெண்டு சொட்டு தேன் விட்டு குடிக்கணும்னா...சரி..குடிச்சேன்...அப்றம், அதிலே ஒரு துண்டு இஞ்சிய கொஞ்சம் தட்டி போட்டு குடிச்சா ரொம்ப நல்லதுன்னா... சரி...குடிச்சேன்...ஆக இப்போ கார்த்தால நான் ஜலம் குடிக்கறதையே நிறுத்தியாச்சு ..போங்கோ.
இது ஆச்சா - அப்றம் வாக்கிங் போகலாம்னு பார்த்தா.... முதலேயே வேகமா நடக்கப்டாது... மெதுவா நடந்து.. அப்புறம் வேகத்தை கூட்டி 🤔 மறுபடியும் முடிக்கறச்சே மொள்ள மொள்ள மொள்ள (டவர்லேர்ந்து ஒரு மணிக்கு ஒரு தரம் ஊர் முழுக்க கேக்றமாதிரி சங்கு ஊதரமாதிரி ) நடக்கணும்னா... சரி நடந்தேன்....வெறும் வாக்கிங்பண்ணா போறாது... எட்டு போட்டு நடக்கச்சொன்னா..சரி.. நடந்தேன்...அதனாலே பலன் பல மடங்கு பெருகும்ன்னு சொல்லி ஒழுங்கா நேரா நடந்துண்டு இருந்தவனை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி எப்போதும் எட்டுப் போட்டு தலை சுத்த வெச்சு....இப்போ எப்போ எங்கே நடந்தாலும் எட்டுக் கால் பூச்சி மாதிரி வட்ட வட்டமா வளைஞ்சு நெளிஞ்சு நடக்கறதே வழக்கமாயி....அப்றம் எல்லாரும் கேலி பண்ணி... அதனால வாக்கிங்க்கும் ஒரு ஃபுல் ஸ்டாப் வச்சாச்சு...
இது ஆச்சா - காபி, டீ, தொடப்டாதாம்.. பால் நிறைய சேர்த்துக்கப்டா டாதாம்..நாம ஆரோக்யமா, ஆயுஸோட இருக்கணும்னா கண்ராவி கசப்பா கடுங்காஃபியோ, இல்ல க்ரீன் டீயோ, *சக்கரையே போடாம* குடிக்கலாமாம், அதுக்கு நான் வெறுமனே இருந்த்ருவேன்...
அப்புறம் ப்ரேக்பா ஃஸ்ட் இட்லி தோசை, ப்டாது. ப்ரவுன் பிரட், கார்ன் பிளாஃஸ் தான் பெஸ்ட்.. பொங்கல் மாதிரி ஹெவியா சாப்டப்டாது... பூரி படாது..
இன்னும் ஏதேதோ ப்டாது ப்டாதுன்னு சொல்லிச் சொல்லியே அந்த அல்ப ப்ரேக்பா ஃஸ்ட்க்கும் அல்பாயுஸுல சடன் ப்ரேக் போட்டு நிறுத்தியாச்சு ..
ஆச்சா...இப்போ மத்யான போஜனம். நிறைய சாதம் சாப்டாதைக்கு அரைகுறையா வேக வெச்ச கறிகாய், கீரை இல்லேன்னா மைல்டா பொரித்த கூட்டு, அதிகமா உப்பு, புளி, காரம், எண்ணெய் சேர்க்காம நிறைய சூப், "வெஜ்டபிள் ஸலாட்" சேர்த்துக்கலாம்னு சொன்னா சரி... அப்படியே செய்தேன்... உருளக்ழங்கு ,வாழக்கா, சேனை, சேம்பு, ன்னு பூமிக்கு அடியில விளையற எந்த வஸ்த்வுமே ப்டாதாம்... 🤔.. தயிர் அதுவும் கெட்டியா ப்டாதவே ப்டாதாம்... ஐஸ் வாட்டர் ப்டாதாம்...
ஆச்சா, சரி சாயங்காலம் ஏதாவது "ஸ்நாக்ஸ்" சாப்டலாம்னா எல்லாருக்கும் பிடிச்ச கேசரி, பஜ்ஜி, போண்டா, ஆம/உளுந்து வடை வகைறா, முறுக்கு, தட்டை, உப்பு சீடை, தேங்குழல், ரிப்பன் பகோடா, அதிரசம், திராட்டுப்பால், அல்வா, வெல்லச்சீடை, "திருநவேலி தென்னமரவேர் பெரிய" மனோகரம், "பழைய மொறு மொறு மைசூர்ப்பா" (கோயமுத்தூர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ப்ராண்ட் காபிரைட் மொளகாப்டி எண்ணெய் கொழச்சா மாதிரி இருக்ற பல்லில்லாதவா சாப்டற மைசூர்ப்பா இல்ல ), திருநவேலி "கடலப்பருப்பு மாலாடு" (பொட்டு/பொரி கடலை மாவு இல்லை), பூந்தி லட்டு, குஞ்சாலாடு, குலாப் ஜாமூன், ஜாங்ரி, ரஸகுல்லா, எள்ளுருண்டை, மோதகம், உப்மா, உப்மா கொழக்கட்டை இத்யாதி, கடலைமாவு, எண்ணெய் பக்ஷண ஸமாசாரமெல்லாம் ப்டாதாம். கலர் கலரா வித விதமான பழங்களை அழகா நறுக்கி ஒரு பெரிய பௌல்ல வெச்சிண்டு, கொரங்கு, அணில், கிளி மாதிரி கொறிச்சு, ரசிச்சு ருசிச்சு, கொஞ்ச கொஞ்சமா கொஞ்சி கொஞ்சி சாப்பிடணுமாம்... எப்டியிருக்கு?... உப்பு போடாம அல்லது ரொம்ப கொஞ்சமா போட்டு சுண்டல் வேணா திங்கலாமாம்.
ஆகமொத்தம் ஸாயங்கால நொறுக்குத்தீனிக்கும் "கோவிந்தா கோவிந்தா" போட்டாச்சு.. திருப்தியாச்சா ...
அப்றம்,... ராத்ரி ரொம்ப பசிச்சா மட்டும் ஏதாவது லைட்டா சாப்டலாமாம்.. அதுவும் சாதம் ப்டாதவே ப்டாதாம்.. ஓய். (Not why ஓய்) சரியாப்போச்சுங்காணும்... போனாப்போறது வேணுமானா ரெண்டு சுக்கா ரொட்டி, "தால்ல" (பருப்பு) முக்கி முக்கி சாப்டலாமாம்... எப்படியிருக்கு?.
அப்றம்,....ராத்ரி பால் குடிக்கப்டாதாம்.. வேணும்னா ஒரு டம்ளர் வெந்நீர்/வெண்ணை எடுத்த மோர் குடிக்கலாமாம் எப்டியிருக்கு?
அதுக்கப்றம் தூங்றதுக்கும் தடா..
இடது பக்கம் தான் ஒருக்கிளுச்சு படுக்கணும்... அப்போதான் இதயம் இயல்பா இருக்கும்னு சொன்னா.. சரி.. படுத்தேன்...
அப்றம் வலது பக்கம் ஒருக்கிளுச்சு படுத்தாத்தான் கொழுப்பு ஜீரணமாகும்னு சொன்னா..சரி.. படுத்தேன்...
அப்றம்,... மல்லாக்கா படு அப்போதான் பார்கின்சன், அல்சைமர் எல்லாம் வராதுன்னா...சரி.. படுத்தேன்...
இல்லேயில்லே குப்ற படுத்தால்தான் நல்லது.. தொப்பை வராது.. ஒபிசிட்டி வராதுன்னு சொன்னா.. சரி.... படுத்தேன்.
ஆக மொத்தம் ஆறு மணிநேர அரகுற தூக்கமும் அப்படியே அம்போன்னு போயே போச்சு.
அடேய்ய்...! அடங்குங்கடா எல்லாரும்...
இப்படி எதுவுமே சாப்டாம ஆரோக்யமா ஆய்ஸோட இருந்து ஒண்ணும் கிழிக்க வேணாம்.
வெந்த சோத்த திங்கணும், விதி முடிஞ்சா சாகணும்ன்னு எனக்கு பிடிச்சதை எப்பவேணா, எவ்ளவு வேணா சாப்ட்டு.. சந்தோஷமா எப்போதும் போல 'ஜாலிலோ ஜிம்கானா' ன்னு ப்ரிய கானன சஞ்சரனா* தின்னு கெட்டானே திருநவேலிப்பாப் னேன்னு (எனக்குப் (பிடித்த பாட்டை பாடிக்கொண்டு திரிபவன் என்று ப்ரிய கானன சஞ்சரனுக்கு தமிழ்ல நேர் அர்த்தம்) பாடிண்டு போயிண்டே இருக்கேன்டாப்பா ..
போடா போ போக்கத்தவா...!
நீயும் உன்னோட உருப்படாத ஹெல்த் அட்வைஸும் யாருக்கு வேணும்?....
ராமராம🙏 ராமராம🙏 ராமராம 🙏